Saturday, June 18, 2016

சாத்தான்களின் சட்டத்தரணிகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, பிரித்தானிய தமிழர் பேரவை, உலகத்தமிழர் பேரவை, நாடு கடந்த தமிழீழம் போன்ற வலதுசாரிப் பிற்போக்கு தமிழ்த்தேசியவாதிகள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இந்தியா போன்ற உலக மகா அயோக்கியர்களினால் தமிழ் மக்களின் பிரச்சனைகளிற்கு தீர்வு கிடைக்கும். பாதிக்கப்பட்ட எம் மக்களிற்கு இந்த மலைவிழுங்கி மகாதேவன்கள் நீதி பெற்றுத் தருவார்கள் என்று இன்றைக்கு வரைக்கும் கூசாமல் பொய் சொல்கிறார்கள். இவர்கள் எல்லோரும் தான் இலங்கை அரசுடன் சேர்ந்து எம்மக்களை கொன்றார்கள் என்ற உண்மையை, ஆயிரக்கணக்கான எம்மக்களின் மரணங்களை தூசியை தட்டி விட்டு போவது போல போய் தம் பிழைப்புவாதங்களை தொடரலாம் என்று நாக்கை தொங்க போட்டுக் கொண்டு பதவிகளிற்காகவும், பணத்திற்காகவும் பொய் சொல்கிறார்கள்.

அண்மையில் பிரித்தானிய ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தின் (B.B.C) செய்தி அறிக்கையில் பிரித்தானிய அரசின் வெளிநாட்டு புலனாய்வு பிரிவான (MI6. Military Intelligence, Section 6) அமெரிக்க கொலைகாரர்களான (C.I.A) உடன் சேர்ந்து இரு லிபிய குடும்பங்களை தாய்லாந்தில் இருந்து லிபியாவிற்கு 2004 இல் கடத்திய செய்தி வெளியானது. அப்துல் கக்கிம் பெல்கஜ் (Abdel Hakim Belhaj), அந்த நேரத்தில் ஆறு மாதக் கர்ப்பணியாக இருந்த அவரது மனைவி பாத்திமா பூட்சார் (Fatima Boudchar) மற்றும் சாமி அல் சாடி (Sami al-Saadi) அவரது குடும்பம் என அந்த நேரம் லிபியாவில் அதிகாரத்தில் இருந்த மும்மார் கடாபியின் எதிர்ப்பாளர்களை பாங்கொக்கில் வைத்து கடத்தி லிபியாவிற்கு அனுப்பி வைத்தார்கள்.

2004 இல் மும்மார் கடாபி அமெரிக்காவினாலும், மேற்கு நாடுகளினாலும் சர்வாதிகாரியாகவும், உலகப் பயங்கரவாதிகளின் தலைவனாகவும் காண்பிக்கப்பட்டவர். 21.12.1988 அன்று ஜேர்மனியில் இருந்து பிரித்தானியா ஊடாக அமெரிக்கா செல்லவிருந்த பான் அமெரிக்கா 103 விமானம் குண்டு வைக்கப்பட்டு ஸ்கொட்லாந்தின் லொக்கர்பி நகரத்திற்கு அருகாமையில் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் இருந்த 243 பயணிகள், 16 விமானசேவையாளர்களுடன் விழுந்த இடத்தில் இருந்த 11 லொக்கர்பி நகரத்தைச் சேர்ந்தவர்களும் உயிரிழந்தனர். இக் குண்டுவெடிப்பிற்காக அமெரிக்காவினாலும், பிரித்தானியாவினாலும் அழுத்தம் கொடுக்கப்பட்டு லிபியா மேல் ஐக்கிய நாடுகள் சபையினால் பொருளாதாரத்தடை விதிக்கப்பட்டது.

இவ்வாறு லிபியாவை பயங்கரவாத நாடாக, தமது பரம எதிரியாக தமது நாட்டு மக்களிற்கும், உலகத்திற்கும் படம் காட்டிக் கொண்டிருந்த அதே நேரத்தில் தான் கடாபியிற்கு எதிராக இயங்கி கொண்டிருந்த இவர்கள் இருவரையும் கடத்தி அனுப்பி வைத்து கடாபியுடன் ஒப்பந்தம் போட்டார்கள். இதன் பிறகு தான் 2004 இல் ஜோர்ஜ் புஸ்சின் வளர்ப்புப் பிராணியான பிரித்தானிய பிரதமர் ரொனி பிளேயர் கடாபியை லிபியாவில் வைத்து சந்தித்தார். பொருளாதார ஒப்பந்தங்கள் போடப்பட்டன. மேற்கு நாடுகளின் டீல்களிற்கு கடாபி ஒத்துக் கொண்டதால் வில்லனாக இருந்த கடாபியை "இவன் ரொம்ப நல்லவன்டா" என்று புஸ்சும், பிளேயரும் பாராட்டினார்கள்.

பின்பு "அரபு வசந்தம்" என்று அழைக்கப்பட்ட அரபு நாடுகளின் அரசுகளிற்கு எதிரான போராட்டங்களின் போது 2011 மாசி மாதத்தில் லிபியாவிலும் போராட்டங்கள் எழுந்தன. ஐக்கிய நாடுகள் சபை "மக்களைப் பாதுகாப்பதற்காக தேவையான எல்லா நடவடிக்கைகளையும் " எடுக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டது. (B.B.C, 16.12.2013, Arab Uprising country by country - Libya). கடாபியுடன் ஒப்பங்கள் போட்ட அமெரிக்காவும், பிரித்தானியாவும் அங்கம் வகிக்கும் நேட்டோ (NATO) அமைப்பின் விமானங்கள் அதே கடாபியின் அரசபடைகளிற்கு எதிராக குண்டுகள் போட்டன. மறுபடியும் வில்லனாக்கப்பட்ட கடாபி மேற்கு நாடுகளின் ஆதரவு சக்திகளினால் கொல்லப்பட்டார்.

கடாபியின் வீழ்ச்சிக்குப் பின்பு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பெல்கச்சும், அல் சாடியும் பிரித்தானிய அரசிற்கும், பெயர் குறிப்பிடப்பட்ட புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர்களிற்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்தார்கள். லிபிய அரச ஆவணங்கள் பல அவர்களினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. "மார்க்" என்பவர் கையெழுத்திட்டு கடாபியின் புலனாய்வு பிரிவின் தலைவராக இருந்த மூசாவிற்கு அனுப்பப்பட்ட கடிதம் ஒன்றில் "கடாபியையும், ரொனி பிளேயரையும் சந்திக்க உதவியதற்கு நன்றி தெரிவித்திருந்தார். மேலும் அதில் பெல்கச் லிபியாவிற்கு போய்ச் சேர்ந்ததை குறிப்பிட்டு "அது எங்களால் உங்களிற்கும், லிபியாவிற்கும் செய்ய முடிந்த சிறிய உதவி" என்றும் குறிப்பிட்டிருந்தார்.

பிரித்தானியாவின் அரச வழக்கு தொடரும் சேவை (Crown prosecution Service) பிரித்தானியாவின் உளவு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் இவ்வாறான கடத்தல்களைச் செய்யும் தனிப்பட்டவர்களுடன் தொடர்பில் இருப்பதை ஒத்துக் கொண்டாலும் இந்த வழக்கில் எதுவிதமான ஆதாரங்களும் இல்லையென்றும் மேலும் அவர்கள் குறிப்பிட்ட பிரித்தானிய உளவுப்பிரிவைச் சேர்ந்த அதிகாரி தமது நடவடிக்கைகளிற்கு அரச ஒப்புதல் பெற்றிருந்தாலும் அது முறையான வழிகளில் கொடுக்கப்பட்டிருக்கவில்லை என்ற விஞ்ஞான விளக்கத்தையும் கொடுத்து வழக்கு தொடர எந்த விதமான காரணங்களும் இல்லை என்று முடிவு செய்தது. பிறகு என்ன கடத்துபவன் கோர்ட்டில் உத்தரவு வாங்கியா கடத்துவான். "வருமானத்திற்கு மேல் சொத்து சேர்ப்பதில் என்ன தவறு இருக்கிறது" என்ற இந்திய நீதிபதிகளின் பொருளாதாரப் புலமையை மிஞ்சி விட்டார்கள்.

பிரித்தானிய அரச வழக்கு தொடரும் சேவையின் முடிவை எதிர்த்து அவர்கள் இருவரும் குடியியல் உரிமை (civil claims) வழக்கு தொடர்ந்த போது ஆதாரங்கள் இல்லை என்று சொன்ன அதே வழக்கிற்கு அல் - சாடியிற்கு நீதிமன்றத்திற்கு வெளியில் தீர்வு காண்பதற்கு பிரித்தானிய அரச வழக்கு தொடரும் சேவை முடிவு செய்தது. அப்துல் கக்கிம் பெல்கச்சின் வழக்கு தொடர்கிறது. ("Tortured" rendition couple angry over failure to charge MI6, B.B.C, 09.06.2016).

இது தான் அமெரிக்காவினதும், மேற்கு நாடுகளின் அரசியல். அவர்களிற்கு தங்களது கொள்ளைகள் தடையில்லாது நடக்க வேண்டும். தங்களிற்கு பணியாத நாடுகளை பயங்கரவாத நாடுகள் என்பார்கள். ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி ஆட்சியை கவிழ்க்கப் பார்ப்பார்கள்; அல்லது தாங்களே நேரில் போய் ஆக்கிரமிப்பார்கள். தங்களது அடிமைகள் அதிகாரத்தில் இருக்கும் நாட்டில் அவர்களிற்கு எதிராக மக்கள் போராடினால் அப்போராட்டங்களை தமது அடிமைகளுடன் சேர்ந்து முறியடிக்கப் பார்ப்பார்கள். அப்போராட்டங்களை ஒடுக்க முடியாவிட்டால் தமது அடிமைகளை பலி கொடுத்து விட்டு தாம் போராடும் சக்திகளுடன் சேர்ந்து கொண்டு ஜனநாயக காவலர் வேசம் போடுவார்கள். மேற்கு நாடுகளின் அடிமையான எகிப்தின் கொஸ்னி முபாரக்கின் வீழ்ச்சியின் போது இந்த நாடகத்தைத் தான் போட்டார்கள்.

இந்த சர்வதேச பயங்கரவாதிகளை நம்பச் சொல்லி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நாடு கடந்த தமிழீழம் போன்ற "வக்கீல் வண்டு முருகன்கள்" தமிழ் மக்களிடம் வக்காலத்து வாங்குகிறார்கள். தமிழ் மக்கள் தமது பிரச்சனைகளிற்காக ஒன்று திரண்டு போராடக் கூடாது என்பதற்காகத் தான் ஐக்கிய நாடுகள் சபையிற்கு போய் குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கி வருவோம், மக்கள் எங்களிற்கு வாக்கு போட்டால் போதும் என்று கதை விடுகிறார்கள்.

"லிபியாவில் மக்களைப் பாதுகாப்பதற்காக தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்" என்று தீர்மானம் போட்டு நேட்டோவை படையிறக்கிய ஐக்கிய நாடுகள் சபை எம்மக்கள் மரணித்த போது ஏன் வாய் மூடி இருந்தது? தாய் இறந்தது தெரியாமல் அவளின் மார்பில் பால் குடித்த எம் குழந்தைகளின் அவலம் ஏன் அவர்களிற்கு கேட்கவில்லை? சாத்தான்களின் சட்டத்தரணிகள் ஏன் இதற்கெல்லாம் மறுமொழி சொல்வதில்லை?

Read more...

Thursday, June 16, 2016

விடுதலைப் புலிகளின் கொள்கைகளை அழிக்காமல் ஓயமாட்டாராம் மைத்திரி!!

ஈழக் கனவு பற்றிய விடுதலைப் புலிகளின் கொள்கைகளை சர்வதேசத்திலிருந்து அழிக்காமல் ஓயமாட்டேன் என்று இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆவேசமாக தெரிவித்து உள்ளார்.

இலங்கையின் கொழும்பு நகருக்கு அருகே தெஷிவளையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அதிபர் மைத்திரிபால சிறிசேன, ”ஒரு நாடு, ஒரு இனம் என்ற ரீதியில் சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய சமூக அமைப்பினை நிலை நாட்டுவதற்காக, சமயத் தலைவர்களினதும் வழிகாட்டல் சிறப்பாக கிடைக்கப் பெற்று வருகிறது

யுத்த ரீதியாக விடுதலைப் புலிகள் தோல்வியுற்ற போதிலும், கொள்கை ரீதியில் அவர்கள் இன்னும் தோல்வி அடையவில்லை. விடுதலைப் புலிகளின் கொள்கைகளை உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் பலர் இன்னும் பின்பற்றி வருகின்றனர்.

அதனால், விடுதலைப் புலிகளின் கொள்கைகளை அழித்தொழிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விடுதலைப் புலிகளின் கொள்கைகள் உலகின் எந்தப்பகுதியில் இருந்தாலும், அவற்றை அழிக்காமல் விடப்போவதில்லை.

நான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், உலகத் தலைவர்களுடன் நல்லுறவைப் பேணி வருகிறேன். அதைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகளின் கொள்கைகளை ஒழிக்கப்போகிறேன்” என்று ஆவேசமாக தெரிவித்து உள்ளார்.

Read more...

Monday, June 13, 2016

தேசிய மனித உரிமை ஆணைக்குழுவின் வழிகாட்டலை பின்பற்றுமாறு வலியுறுத்தல்.

இலங்கை அரசாங்கம் கைது செய்தல் மற்றும் தடுத்து வைத்தல் போன்றன தொடர்பில், தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டும் என, மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், கூறப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் என 2015ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்த போதிலும், அச் சட்டத்தின் கீழ் நபர்களை கைது செய்து தடுத்து வைப்பது தொடர்ந்து வருவதாகவும், கண்காணிப்பகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பரந்தளவில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களுக்கு எதிராக இது பயன்படுத்தப்பட்டதாகவும், தற்போது வரை கைதானவர்களின் மொத்த விபரங்கள் தெரியவரவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இரத்துச் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இந்த நடவடிக்கையானது மிகவும் மந்த கதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியத்திற்கான பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

Read more...

Sunday, June 12, 2016

புதிய தேர்தல் முறை தொடர்பில் NFGG நடாத்திய விசேட செயலமர்வு.

உத்தேசிக்கப்படும் புதிய தேர்தல் முறையில் சிறுபான்மை மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பது தொடர்பான விஷேட செயலமர்வொன்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யின் ஏற்பாட்டில் கடந்த 8.6.2016 அன்று கொழும்பில் நடைபெற்றது. கொழும்பு ஹார்ட்டி நிலையத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேர்தல் முறைகள் குறித்த சர்வதேச நிபுணரான கரே வோலன் அவர்கள் கலந்து கொண்டு விரிவான ஆலோசனைகளை முன்வைத்தார்.

NFGGயின் பொதுச்செயலாளர் நஜா முஹம்மட் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதன் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், கலாநிதி சுஜாதா கமகே, கலாநிதி சுசந்த லியனகே, 'கபே' அமைப்பின் தலைவர் கீர்த்தி தென்னகோன், சட்டத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் ஹக்கீம், சட்டத்தரணி YLS.ஹமீட் உட்பட NFGG தலைமைத்துவ சபை உறுப்பினர்களும் ஏனைய பல சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.

உத்தேச புதிய யாப்பில் முக்கிய பகுதிகளில் ஒன்றான புதிய தேர்தல் முறை உருவாக்கத்தின் போது, சிறுபான்மை சமூகத்தினதும் சிறிய கட்சிகளினதும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை எவ்வாறு உத்தரவாதம் செய்வது என்ற விடயம் முக்கிய பேசு பொருளாக இன்று மாறியிருக்கின்றது. தற்போது நடைமுறையிலுள்ள விகிதாசார முறை மாற்றப்பட்டு, தொகுதிவாரி தேர்தல் முறையும் விகிதாசார முறையும் கலந்த ஒரு புதிய தேர்தல் முறை உருவாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே தேசிய ரீதியிலான கலந்துரையாடல்களும் விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. மாவட்ட ரீதியிலான விகிதாசார தெரிவு முறையாகக் காணப்படும் தற்போதைய தேர்தல் முறையும் கூட தேசிய ரீதியில் ஒவ்வொரு கட்சிகளும் பெற்றுக்கொள்ளும் மொத்த வாக்கு விகிதாசாரத்திற்கு ஏற்ப பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொடுக்கவில்லை என்பது பாரிய குறைபாடாக சுட்டிக்காட்டப்படுகிறது. உதாரணமாக கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தேசிய ரீதியில் 4.6 வீதமான வாக்குகளை பெற்றுக்கொண்ட ஒரு கட்சி பாராளுமன்றத்தில் 7 வீதமான ஆசனங்களைப் பெற்றுள்ள அதே வேளை, தேசிய ரீதியில் 4.9 வீதமான வாக்குகளைப்பெற்ற மற்றுமொரு கட்சி 2.7 வீதமான பாராளுமன்ற ஆசனங்களையே பெற்றுக்கொண்டுள்ளது.

அந்த வகையில் தொகுதிவாரி மற்றும் விகிதாசார தேர்தல் முறைகளை உள்ளடக்கிய கலப்பு தேர்தல் முறையாக உருவாக்கப்படும் புதிய தேர்தல் முறையானது ஒவ்வொரு கட்சிகளும் பெற்றுக்கொள்ளும் மொத்த வாக்கு விகிதாசாரத்தினை பாராளுமன்றத்தில் பிரதிபலிக்கும் வகையில் எவ்வாறு அமைய முடியும் என்ற பல முற்போக்கான முன்மொழிவுகளை வோலன் அவர்கள் இக்கலந்துரையாடலின் போது முன்வைத்தார். குறிப்பாக சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை எவ்வாறு உத்தரவாதப்படுத்த முடியும் என்ற யோசனைகளை அவர் உதாரணங்களுடன் முன்வைத்து விளக்கினார்.

தேசிய ரீதியில் அல்லது மாகாண ரீதியில் விகிதாசார முறையும் தொகுதிவாரி தேர்தல் முறையும் பொருத்தமான முறையான விகிதத்தில் கலந்ததாக புதிய தேர்தல் முறை அமைய வேண்டும் என்ற தனது திட்ட முன்மொழிவுகளை அவர் சமர்ப்பித்தார். அத்தோடு தற்போது நடைமுறையிலுள்ள வெட்டுப்புளளி முறையினை முற்றாக ஒழிக்கவேண்டும் அல்லது கணிசமாக குறைக்க வேண்டும் என்பதும் வோலன் அவர்களின் முக்கியமான ஆலோசனைகளில் ஒன்றாகவும் இருந்தது. இது போன்ற தேர்தல் முறைகள் ஜேர்மன்,சுவிட்சலாந்து போன்ற நாடுகளில் எவ்வளவு தூரம் வெற்றிகரமாக அமைந்துள்ளது என்ற தனது சொந்த அவதானங்களையும் அவர் இதன்போது பகிர்ந்து கொண்டார்.இந்த யோசனைகளை ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட அரசாங்க உயர்மட்டத்தினருக்கு தான் சமர்ப்பித்திருப்பதாகவும் அவை தொடர்பில் அரசு சாதகமாக பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

















Read more...

பா.உ அங்கஜன் இராமநாதன் 10.06.2016 அன்று பாராளுமன்றத்தில்.. ஆற்றிய உரை முழுமையாக

கௌரவ சபாநாயகர் அவர்களே :-

வடக்குக் கிழக்கு மக்கள் முகம் கொடுத்து வரும் பிரச்சனைகள் பற்றி பேசுவதற்கு நேரத்தை ஒதுக்கி தந்தமைக்கு எனது நன்றிகள். நான் யாழ்ப்பாணத்தையும் கிளிநொச்சியையும் பிரதிநித்துவப்படுத்துகின்றேன். ஏனைய மாவட்டங்களை போன்று இந்த மாவட்டங்களிலும் மக்கள் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வந்தாலும் இவர்களின் பிரச்சனைகள் சற்று தனித்துவமானவை. காரணம் 30 வருட யுத்தித்தினால் இவர்களின் சாதாரணவாழ்கை மற்றும் வாழ்வாதாரங்கள் சேதமடைந்தமையால் ஆகும். போருக்கு பின்னர் எமது சாதாரண வாழ்க்கைக்கு திரும்புவதற்கு மிகக் கஷ்டப்பட்டு 3 தசாப்த போரினால் பல கோடிக்கணக்கான, கசப்பான அனுபவங்களை மறந்து எமது மக்கள் சமாதானத்தையும் சுதந்திரத்தையும் பெற்றுக்கொண்டிருக்கின்றார்கள். நாம் எல்லோரும் ஒன்றிணைந்து சம்மதித்து நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் தான் இதனை நாம் அடைய முடியும். நான் வடக்கில் இருந்து வந்து சில விசேட பிரச்சனைகளை அதாவது வடக்கு மக்கள் நாளாந்தம் முகம்கொடுத்து வரும் பிரச்சனைகளை நான் கையாள்வதால் அவர்களுக்கு சில பிரச்சனைகள் உண்டு எனவும் அவை தீர்க்கப்பட வேண்டும் எனவும் உணர்கின்றேன். இம் மக்கள் சாதாரண நிலைக்கு திரும்புவதற்கு உதவுவது மட்டுமல்லாமல் அவர்களின் பிரச்சனைகளை இனம் கண்டு அவற்றைத் தீர்த்துவைக்க வேண்டும் என நம்புகின்றேன்.

உள்ளுரில் இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றமே மிகவும் அழுத்திக்கொண்டிருக்கும் பிரச்சனையாகும் 3 தசாப்த காலமாக பெரும்பாலான வடக்குக் கிழக்கு மக்கள் இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களிலும் சிலர் வாடகை வீடுகளிலும் உறவினர்களுடனும் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் அல்ல 30 வருடங்களாக இடம்பெயர்ந்த மக்களே இவர்கள். ஏறக்குறைய 1300 குடும்பங்கள் இன்னமும் சரியான வீடுகளிலோ சிறந்த சுகாதார வசதிகள் மற்றும் வழ்வாதரங்களுடனோ வாழ்ந்து வரவில்லை, இவர்களில் பெரும்பாலனவர்கள் கரையோர மக்கள். இவர்களின் வாழ்வாதாரம் மீன்பிடித் தொழில் நீண்ட 30 வருடங்களாக நலன்புரி முகாம்களில் வாழ்ந்து வருவதால் இவர்களின் தரம் மற்றும் தராதரம் என்பன குறைந்து கொண்டே போகின்றது.

கௌரவ சபாநாயகர் அவர்களே…….!

யாழ்மாவட்டத்தில் ஆரம்பத்தில் உயர் பாதுகாப்பு வலயமாக 27259.31 ஏக்கர் காணியில் 2009ல் இருந்து 20408.40 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு மீதியாக 6850.91 ஏக்கர் காணி மட்டுமே விடுவிக்கவேண்டியுள்ளது. இது யாழ்மாவட்டத்தின் காணி தொகையில் அண்ணளவாக 2.36 வீதமாகும். இந்த 2.36 வீத காணியும் 9680 காணிச் சொந்தக்காறருக்கு திருப்பி கொடுக்கப்பட வேண்டியவை இவை அரச காணிகள் அல்ல.
ஆயினும் அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கும் பாதுகாப்புப் படையினரும் 2015ம் ஆண்டில் இருந்து இந்த முயற்சியை துரிதப்படுத்தி வருவதற்கு நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளேன். கடந்த டிசெம்பர் மாதம் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த போது நலன்புரி முகாமில் உள்ள எமது மக்களை காண்பித்த போது அதனை பார்த்த அதிமேதகு ஜனாதிபதி 6 மாதங்களுக்குள் இவர்கள் மீள் குடியேற்றப்படுவர் என நம்பிக்கை தெரிவித்தார். புதிய நம்பிக்கை ஒளி இவர்கள் மனதில் எழுந்து ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ஏற்கனவே ஜனாதிபதி அவர்கள் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளர் எனவும் விரைவில் இதனை மக்களுக்கு தெரியப்படுத்துவார் என்பதில் மகிழ்ச்சி அடைக்றேன். மீள்குடியேற்றம் முடிக்கும் போது வடக்கு கிழக்கில் உள்ள பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கை அங்கு வாழ்ந்து வரும் மக்களுடன் ஒப்பிடும் போது மிக அதிகம். அண்மையில். சலாவ முகாமில் ஏற்பட்ட துக்ககரமான நிகழ்வினைக் கேட்டு நானும் எனது மக்களும் மிகவும் மனவருத்தம் அடைந்ததோடு இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எனது ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.

வடக்குக் கிழக்கில் இத்தகையதோர் சந்தர்ப்பம் ஏற்பட்டால் ஏற்படும் விளைவு மிகப் பாரதூரமானதாகவும் தாங்கிக்கொள்ள முடியாத்ததாகவும் இருக்கும். நான் தயவாகக் கேட்டு கொள்வது யாதெனில் வடக்குக் கிழக்கில் மட்டுமல்லாது வேறு எந்த பிரதேசத்திலும் மக்களுக்கு அபாயம் விளைவிக்கக்கூடிய பாதிப்பினை ஏற்படுத்தக் கூடிய அனைத்து போர்க் கருவிகளையும் அகற்றிவிடும்படியாகும்.

கெளரவ சபாநாயகர் அவர்களே :-

போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீள் நிலைமைக்கு கொண்டுவருவதற்கு அரசியல் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரில் விசேட கவனம் செலுத்த வேண்டும். படிப்படியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் இது மந்தகதியாகவே காணப்படுகிறது. இதனை துரிதப்படுத்த வேண்டும். நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு மனிதவிமான ரீதியில் பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும்.
கரையோர மக்கள் தங்கள் தெரிவிற்கேற்ப தமது வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்ப வேண்டும். எமது வளங்களை இந்திய மீனவர்கள் சுறண்டுவதாலும் எதிர்கால எமது வளங்களை நாசப்படுத்துவதாலும் அவர்களின் வாழ்வாதாரம் பயங்கரமாக உள்ளது. ஆயினும் எமது அரசாங்கம் முன்னைய காலத்துடன் ஒப்பிடும் போது ஓரளவிற்கு குறைத்து வந்திருந்தாலும் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்து வரும் இந்த நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மீனவசமாசங்கள் தம் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் தமது பிள்ளைகளின் கல்வியை முன்னேற்றுவதற்கும் ஊக்கப்படுத்தபட வேண்டும்.

கெளரவ பிரதம மந்திரி அவர்கள் எதிர்காலத்தில் 10 லட்சம் தொழில் வாய்ப்புக்களை எற்படுத்தித் தருவதாக இளைஞர்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார். இதில் கணிசமான சதவிகிதத்தினை புனர்வாழ்வு அளிக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட இளைஞர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

கெளரவ சபாநாயகர் அவர்களே :-

எதிர்காலத்தை வழமைக்கு திருப்பி தேசிய பாதுகாப்பினை உறுதி செய்வதோடு அவர்களின் பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய அரச வேலை வாய்ப்புக்கள், தனியார் தொழில் வாய்ப்புக்கள் அல்லது சுயதொழில் ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற சந்தர்பங்களை முன்னைநாள் L T T E உறுப்பினர்கள் மற்றும் போரினால் விதவியாக்கப்பட்டவர்களை அரச தொழில் வாய்ப்பு நிகழ்சித்திட்டத்தில் உள்வாங்குவதன் மூலம் இது ஏற்படும்.

சிவில்சமூகம் மற்றும் தனியார்துறையினரும் வடக்குக் கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கு அவர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும்புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள், விதவைகள், மற்றும் அநாதைகளின் பிரச்சனைகளும் மிகப்பரதூரமானவை. இந்த மாவட்டங்களில் வேலைத்திட்டங்கள் ஏற்படுத்தப்படும்போது இவர்களின் வாழ்வாதாரம் முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டும்.

இந்த மாவட்டங்களில் காணப்படும் மொத்த வெற்றிடங்களை கணக்கில் எடுத்து ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிட்டு ஏதாவது வித்தியாசம் காணப்பட்டால் அவற்றை ஏனைய மாவட்டங்களுடன் சரிசெய்யப்பட வேண்டும். ஆனால் வடக்குக் கிழக்கில் வேலைவாய்ப்பின்மை வீதம் உயர்ந்து கொண்டிருக்கின்றது தகுதியானவர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்குவதன் மூலம் இந்த பிரச்சனையை முடிவுறுத்தலாம்.

அண்மைக்காலங்களில் சரியான வழிகாட்டல் இல்லது பெருந்தொகையான இளைஞர்கள் சட்டத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை கண்கின்றோம். இந்த வெற்றிடங்கள் இந்த இளைஞர்கள் மூலம் நிரப்பிவிடுவோமாயின் விசேடமாக யாழ்ப்பாணத்தில் ஏற்படும் பிரச்சனைகள் நிச்சயம் விலகிவிடும். வடக்கு மக்களுக்குப் போதைபொருள் பாவனை பெரும் தொல்லையாக கணப்படுகின்றது. இளைஞர்களுக்கு பொருத்தமான வேலைவாய்ப்புக்களும், பொருத்தமான வாழ்க்கை எண்ணங்களும் இருக்குமாயின் இது இலகுவில் தீர்ந்துவிடும்.

கௌரவ சபாநாயகர் அவர்களே…. !

வடக்கு மக்களின் முக்கிய வருமானமூலமாக விவசாயம் நீண்ட காலமாக காணப்படுகின்றது. சேதனஉரங்களை பாவிப்பதோடு பூச்சிக்கொல்லி மருந்துகளையும் இரசாயனப் பொருட்களையும் பாவிக்கவேண்டாமென விவசயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பல மக்கள் விவசாயத்தை நாடிச்செல்கின்றனர். ஒரு சிறிய அளவு அரசாங்க ஊக்குவிப்புக்கள் கூட படித்த இளைஞர்களை விவசாய நாட்டத்திற்குள் செலுத்தி விடும்
ஆயினும் புகையிலை செய்கை எதிர்காலத்தில் தடை செய்யப்பட இருப்பதால் அவர்களுக்கு மாற்று பயிர்ச் செய்கையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அதே போல் எமது உருளைகிழங்கு அறுவடை செய்யும் காலங்களில் அவற்றை வெளிநாடுகளில் இருந்து இருக்குமதி செய்யும் போது எமது சந்தை வாய்ப்பு அருகி விடுகின்றது. சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு இது ஏற்கனவே தெரியப்படுத்தி இருந்தும் கூட இந்த உற்பத்திகளுக்கான வரி அதிகரிப்பு கடந்த காலங்களில் இருந்துகொண்டே இருக்கின்றது. இந்த உற்பத்திகளை பாதுகாத்து வைப்தற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் தாண்டிகுளம் பொருளாதர மத்திய நிலையம் சகல மாகாண விவசாயிகளுக்கும் தமது உற்பத்தியினை சந்தைபடுத்துவதற்கும் வாய்ப்பளிப்பதோடு பயிர்ச்செய்கைபண்ணப்படாத நிலங்களும் பாவிக்க்கப்படும் நிலைஏற்படும். இது அதி மேதகு ஜனாதிபதியின் திட்டமும் ஆகும். இதே விவசாயப் புரட்ச்சியை முன்னரும் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையார் காலத்திலும் மேற்கொள்ளப்பட்டது. இதே புரட்சியை அதிமேதகு ஜனாதிபதி அவர்களும் மேற்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணக்குடாநாட்டில் பெரிய நீர் விநியோக அபிவிருத்திகள் எதுவும் காணப்படவில்லை. மணல்ப்பாங்கான தரைகளில் அமைக்கப்பட்ட மலசலக் கான்கள், கிணறுகள் மற்றும் குடிநீர் நிலைகள் காணப்படுகின்றன. நிலத்தடி நீர் இதனால் மாசடைந்து நச்சு தன்மை அடைகின்றது.

கெளரவ சபாநாயகர் அவர்களே.....!

இந்த மக்களின் பிரச்சனைகள் பற்றி நான் அறிந்தவற்றை தங்கள் கவனத்திற்கு கொண்டு வரும் போது மீள் குடியேற்றத்தை துரிதப்படுத்தியமைக்காக இச் சந்தர்ப்பத்தில் அதி மேதகு ஜனாதிபதி அவர்களுக்கும் கெளரவ பிரதம மந்திரி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மிள் குடியேற்றம் பற்றிய உத்தியோக அறிக்கைகளும் இவற்றை தெளிவுபடுத்தும். வடக்கு மக்கள் நாளாந்தம் முகம்கொடுத்துவரும் பிரச்சனை பற்றி நாம் யாவரும் அறிவோம். இந்தச் சந்தர்ப்பத்தில் எம்முடன் கைகோர்த்து செயற்படுமாறு கெளரவ எதிர்கட்சி தலைவர் அவர்களையும் பிரச்சனைகளை தீர்பதற்கான பயணத்தில் ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சிறிது முன்னோக்கி செல்வோமாயின் அவசரதேவைகளுக்கு மேலாக சில குறுகிய காலத்தில் தீர்க்கப்படவேண்டியவற்றை காண்கிறோம். கல்வி, வருமானம் மற்றும் தொழில் வாய்ப்புடன் பிணைந்துள்ள சமூகப் பொருளாதாரப் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும்.

சமூகப் புரள்வினை வேலையின்மை ஏற்படுத்துகிறது. இதுவே இளஞர்களை பாதிக்கின்றது. இத்தகைய பாதிப்பினை தெற்கிலும் வடக்கிலும் எவ்வாறு சமனிலைத் தன்மையினை குறைத்தது என்பதை வரலாறு கூறும். எனவே இதனை நீடித்து நிலைக்கும் வகைகளில் தீர்த்துவைப்பது எமது கடமை.

கெளரவ சபாநாயகர் அவர்களே.....!

நீண்டகாலமாக நாம் அபிவிருத்தி அடைந்த உலக நாடுகள் போல் மிளிர்வதற்கு விரும்பினோம். இது வெறும் கதையாகவே மாறியுள்ளது. கடந்த 20-50 வருடங்களாக நாங்கள் மேற்கொண்டு வந்த நடவடிக்கைகளூடாக இவற்றை நாம் பெற்றுக்கொள்ள முடியாது. எமது புதிய தந்திரோபாயங்கள் புதிய கைத்தொழில்கள் என்பன தேவை.

4வது கைத்தொழில் புரட்சி யுகத்தில் நாம் இருக்கிறோம் என நம்புகிறேன். பொருளாதார அதிகாரம் சிறிது சிறிதாக மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி செல்கிறது என நினைக்கிறேன். விஞ்ஞானப் புரட்சிகள் அதிகாரப்பகிர்வுத் தொடர்பு என்பன பல புதிய கைத்தொழில்களையும் வர்த்தக ஈடுபாடுகளையும் ஏற்படுத்துகின்றன. முன்னைய கால கைதொழில் புரட்சி போல் அல்லாது 4வது புரட்சி மிக முன்னேற்றகரமானது. பல்வேறு கண்டங்ளில் இருந்து பல மில்லியன் மக்கள் கையடக்கத்தொலைபேசி போன்ற பல ஊடகங்களூடாக அறிவுகளைக் கற்றுக்கொண்டு அவர்களின் சந்தை வாய்புக்களை பெற்றுக்கொள்வது போன்ற நிலைமை வியக்கத்தக்க விதத்தில் உள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் இலங்கையில் சிறந்த புதிய சந்தர்பங்களை எற்படுத்திக் கொள்ளலாம். எதிர்காலத்தை எண்ணி எமது நாட்டையும் எமது மக்களையும் எமது உட்கட்டமைப்புகளையும், கல்விக்கொள்கை என்பவற்றினையும் முதலீடுகள் மற்றும் தொழிற்சாலைகளை வடக்கிலோ அல்லது வேறு பகுதிகளிலோ ஏற்படுத்த முடியும் என்று தீர்மானிக்க முடியாது.
சில அரசியல்வாதிகள் இது இளஞர்களில் பிரச்சனை என்று கூடச் சொல்லலாம். ஏன் கற்றவர்கள் வெளியில் செல்கிறார்கள்?. தங்கள் கல்வியை முடிப்பதற்கு முன்னறே நாம் ஏன் எமது பிள்ளைகளை வெளியில் அனுப்ப முயற்சிக்கிறோம்.

கெளரவ சபாநாயகர் அவர்களே.....!

கல்வி கற்றவர்கள் ஏற்கனவே வெளியில் சென்றிருக்கிறார்கள் இன்னமும் சென்றுகொண்டிருக்கிறார்கள் இது எமது பொருளாதாரத்தில் பாரிய இழப்பாகும். இரண்டாம் நிலை, மூன்றாம் நிலைக் கல்வி வழங்குவதற்கு அரசாங்கம் அதிக நிதியை செலவிடுகிறது. சந்தர்ப்பங்கள் இல்லாததாலும் அதாவது ஆரம்பத்தில் யுத்தம் காரணமாகவும் இவர்கள் செல்வதால் இவர்களின் பயனை அந்த நாடுகள் அறுவடை செய்கின்றன. நாம் புதிய வாழ்க்கை நிலைமையை அதிகரிக்க வேண்டும் புதிய சந்தர்பங்களையும், வசதிகள் மற்றும் வர்த்தகத்தை உருவாக்க வேண்டும்.

ஏன் கல்விகற்றவர்கள் செல்கிறார்கள் என்பதை ஆராய்ந்து அவர்களை தடுப்பதற்கு ஆவணை செய்யவேண்டும். ஒரு மனிதன் கற்றதும் அவனுக்கு முதற்படியாக தேவைப்படுவது ஒரு சிறந்த தொழில் அல்லது வசதியாக வாழ்வதற்கான வாழ்வாதரம்.

இந் நாட்டில் சந்தர்ப்பங்கள் காணப்படாத போதும் தங்கள் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு படித்தவர்கள் விரும்பமாட்டார்கள். பொருளாதர வளர்ச்சி மூலம் சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்படலாம். இதன் மூலம் நாம் வளர முடியும். புதிய கைத்தொழில்கள் புதிய அறிவுரைகளைப் பெற்று வளர முடியும். தற்கால கேள்வியில் காணப்படும் அறிவுடன் மக்களை உபையோகிக்க வேண்டும்பு திய தொழில் நுட்பத்துடனும் புதிய அறிவுடனும் எதிர்கால கைத்தொழில் அமைய வேண்டும் என இணங்கினால் முதல் பணியாக இன்றைய புதிய சந்ததியினரை புதிய அறிவு மற்றும் திறன்களில் ஈடுபடுத்த வேண்டும் உட்கட்டமைப்பு மீள் குடியேற்றம் , தற்போதைய பிரச்சனைகளையும் தீர்வுகளையும் உரையாடிநேம் அனால் நீண்ட கால திட்டங்கள் மற்றும் நடைமுறைகள் பற்றியும் ஆராய வேண்டும்.

கடந்த காலங்களில் எமது வடக்கு கல்வியில் முன்னணியில் காணப்பட்டதை அறிவோம் இது தற்போது வெறும் வரலாறாகவே காணப்படுகின்றது இதனை நாம் மீண்டும் ஏற்படுத்த வேண்டும் வடக்கு இளைஞர்களின் கல்வி மற்றும் வளர்ச்சிக்கு எமது கல்வி எத்தகைய பாரிய பங்களிப்பினை வழங்கியது என்பதை இட்டு பெருமையாக உள்ளது போர் காரணமாக எமது கல்வி பின்தங்கி உள்ளதோடு எமது கல்வி கலாச்சாரமும் பொலிவிளந்துள்ளது இளைஞர்கள் தாங்கள் மாணவர்கள் என்ற எண்ணம் ஏற்படவும் கல்வியில் முன்னேற்றம் ஏற்படவும் எமது கவனத்தை செலுத்த வேண்டும விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் சில கல்வி நிலையங்கள் திறக்கப்படாதுள்ளன உதாரணம் பலாலி பயிற்சி கலாசாலை போருக்கு பின்னரான காலத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி இளைஞனர்கள் தொழிற் கல்வி பெறுவதிலே ஆர்வம் காட்டுகின்றனர் பாடசாலை யால் நின்றவர்களும் பல்கலைக்கழகம் கிடைக்கபெறாதவர்களும் இத்தகைய கல்வியையே நாடுகின்றனர் .

ஆயினும் அடுத்த மாதம் அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ள ஜேர்மன் தொழில் நுட்ப கல்லுரிக்காக நாம் அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேம் ஆயினும் எல்லா விண்ணப்ப தாரிகளையும் சேர்த்துக்கொள்ள கூடிய அளவில் இங்கு நிலையங்கள் காணப்பட வில்லை தென்மராட்சி பிரதேசத்தில் இத்தகைய தொரு தொழில் நுட்ப நிலையம் அமைப்பதற்கான பேச்சுவார்த்தையை கௌரவ திறன் விருத்தி அமைச்சர் ஏற்கனவே ஆரம்பித்துள்ளமைக்கு அவருக்கு நன்றி கூற கடமைபட்டுள்ளோம்.

கௌரவ சபானயக்கர் அவர்களே....

சிறந்த முறையிலான உட்கட்டமைப்பை கொண்ட அறிவு அடிப்படையிலான தொழில்சாலைகள் மிக முக்கியம் இரண்டாம் நிலைக்கல்வி கற்காதவர்கள் கூட இதன் மூலம் பயன் பெறக்கூடிய வாய்ப்பு ஏற்படும் கல்வி முறையில் இருந்து விலகியும் பல்கலை கழகங்களுக்கு தெரிவாகாமல் இருப்பவர்களும் இதன் மூலம் பயன் பெறலாம் நாட்டின் உட் கட்டமைப்பு மற்றும் சமுக பொருளாதார நிலைமைகள் மேம்படுத்தப்பட்டால் வாழ்க்கை நிலைமையும் உயர்வடையும் சிறந்த தொழில் சான்றுகளுக்கு சிறந்த கல்வி தேவைப்படுமிடத்து சிறந்த தொழில்சாலைகளை உருவாக்க முடியும் இதனால் வெளிநாடு செல்வதை தடுக்கலாம் இவை யாவும் ஒன்றை ஓன்று பின்னி பிணைந்தவை அனால் எதிர்காலத்திற்க்காக நிறைவேற்றப்பட வேண்டும் இன்றைக்கே முதலீடு செய்யப்பட வேண்டும் நாளந்த பிரச்சனைகள் தீர்க்கப்படுவது நீடித்து நிலைக்கும் பெறுபேற்றினை எமக்கு வழங்கும்


Read more...

"ஏன் இப்படி பூச்சியமானது?"

தமிழினி தனது கூர்வாளில் "ஏன் இப்படி பூச்சியமானது?" என கேள்வி எழுப்பி, அவர் தனது அரசியல் நம்பிக்கைக்குள் அதற்கு விடை காணவும் பதிலிறுக்கவும் முனைகின்றார். புலிப்பாசிசம் தான் விடுதலைப் போராட்டம் என்று நம்பி, அதற்காகவே வாழ்ந்த தமிழினி, புலிகளை என்றும் யாராலும் தோற்கடிக்கவே முடியாது என்ற நம்பிக்கையில் தன் எண்ணங்களையும், செயற்பாடுகளையும் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட உணர்ச்சிகள் எல்லாம் சிதைந்த போது, ஏன் இப்படி நடந்தது என்ற சுய அனுபவவாதத்தை காரணமாகக் காட்டி எழுதியதே "கூர்வாள்".

தமிழினி தன்னுரையில் இந்த நூலின் நோக்கம் குறித்து "எதற்காக இதனை எழுத வேண்டும் என என்னிடம் பல தடவை கேட்டுக் கொண்டேன். ஒரு பதில் தான்; என்னை உந்தியது. நான் உயிராக நேசிக்கும் மக்களிடம் சில உண்மைகளைச் சொல்ல வேண்டும். ஓர் இனத்தின் அரசியல் அபிலாசைகளை மீட்டெடுப்பதற்காகக் கருக் கொண்ட போராட்டம், இலட்சோப லட்சம் உயிர்களின் மீது கட்டியெழுப்பப்பட்டது. இறுதியில் அதன் போக்கிடம் ஏன் இப்படிப் பூச்சியமானது? உலகம் அதிர்ந்து போன கேள்வி இது" இந்தக் கேள்விக்கு அவரின் சுய அனுபவம் சார்ந்த விமர்சனமாக வெளிவந்த "கூர்வாள்" விடை தந்து இருக்கின்றதா எனின், இல்லை.

புலிகளில் இருந்த பின் இன்று தங்களை "முற்போக்காளராக - அறிவுஜீவியாக" வெளிப்படுத்திக் கொள்ளும் பலரும், தமிழினி போல் ஒரேவிதமான காரணங்களையே முன்வைக்கின்றனர். தமிழினி விதிவிலக்காக கடந்த நிகழ்வுக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் வெளிப்படை தன்மையுடன் - எல்லோரையும் போல் தமிழ் இனவாதக் குட்டைக்குள் நின்று "ஏன் பூச்சியமானது" என்று காட்ட முனைகின்றார்.

இப்படி காரணத்தைக் கண்டறிய முடியாத வண்ணம், தொடர்ந்து புலிகள் கொண்டிருந்த அதே சமூகப் பொருளாதார உலகக் கண்ணோட்டத்தைக் கொண்டே தமிழினி விடை தேடுகின்றார். தமிழினி தன் அகநிலையிலான அனுபவவாதம் சார்ந்த எதார்த்தத்தில் தீட்டிய "கூர்வாள்", புறநிலையான சமூகப் பொருளாதார எதார்த்தத்தைக் கொண்டதல்ல. நிலவும் சமூக பொருளாதார அமைப்பு சார்ந்த எதார்த்தம் முழு உண்மையாகவோ, குறித்த சூழலை ஆராய போதுமான அடிப்படையைக் கொண்டிருப்பதில்லை என்பதே உண்மை.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் நிலை குறித்து, யுத்தம் - யுத்தத்துக்கு பிந்தைய அனுபவவாதம் சார்ந்து தமிழினி சொல்லும் உண்மைகள், தனிச் சிறப்பாக "கூர்வாள்" மூலம் வெளி வந்திருக்கின்றது. பெண்களை இழிவாக சமூகம் ஏன் கையாளுகின்றது என்ற கேள்விக்கு, தமிழினி தன் அனுபவவாதத்தால் அவர்கள் மேலான அனுதாபத்தையே ஏற்படுத்த முடிந்துள்ளது.

"ஏன் இப்படிப் பூச்சியமானது?" என்று அனைத்துக் கேள்விகளுக்கும், "கூர்வாள்" மூலம் தமிழினி தீட்டிக் காட்டியவை

1. கேள்விக்கு உள்ளாக்க முடியாத "தலைவரின் - அண்ணரின்" அதிகாரமும் தனித்த முடிவுகளும்,

2. அதிகாரத்தைக் கொண்டு "தம்பி" (பிரபாகரனின் மகன்) இட்ட கட்டளைகள்

3. இயக்கத்தின் கண் மூடித்தனமானதும், பிழைக்கத் தெரிந்தவர்களாலும் "அண்ணை" மற்றும் "தலைவர்" வழிபாடு,

4. கட்டாய ஆட்சேர்ப்பும், அதற்காகக் கையாண்ட கெடுபிடிகளும்

5. கண் மூடித்தனமான வரி அறவீடுகளும், அதற்காகக் கையாண்ட வன்முறைகளும்

6. ஆயுத வழிபாடும், அது சார்ந்து எடுத்த முடிவுகளும்

7. இயக்கத்தின் ஆள் பிடிக்கும் அரசியலும், அதற்கு ஏற்ப மக்கள் மற்றும் பெண்கள் இயக்கம்,

8. அரசியல் ராஜதந்திரமற்ற - இராணுவவாத முடிவுகள்,

9. உள்ளியக்க (மாத்தையா, கருணா..) முரண்பாடுகளைக் கையாண்ட முறையும் - படுகொலைகளும்

10. மக்களை யுத்தமுனையில் கட்டாயப்படுத்தி வைத்திருந்ததும், சுட்டுக் கொன்றதும்

11. இயக்கத்தில் உள்ளவர்கள் பற்றிய உளவு பிரிவின் (பொட்டரின்) ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் தண்டனைகளும் - யுத்தம் பற்றி ஓரு தலைப்பட்சமான திணிப்புகளும்

இப்படி தமிழினி தன் சொந்த அனுபவம் சார்ந்து கண்டறியும் பல உண்மைகளா புலிகளின் தோல்விக்கு காரணமெனின் இல்லை. மாறாக இவை எல்லாவற்றுக்கும் காரணமாக இருந்தது புலிகளின் அரசியல் என்பதும் அந்த அரசியல் தான் தோல்விக்கான காரணமுமாகும்.

தமிழினி தன் அனுபவவாதம் சார்ந்து வெளிப்படுத்தும் உண்மைகள் அனைத்தும், புலிகளின் வெற்றிகளும், அதிகாரமும் உச்சத்தில் இருந்த காலத்திலேயே புலிகள் கொண்டிருந்தனர். தமிழினியை இயக்கத்தில் உள்வாங்கியதும், இயங்க வைத்ததும் இதே கூறுகள் தான். புலிகள் பற்றிய போலிப் பிரமைகள் எதார்த்தமாக இருந்த காலத்தில், "உண்மைகளற்று" காணப்பட்ட உண்மைகள், தோல்வியே எதார்த்தமாக மாறிய சூழலில் "உண்மையாக" மாறி விடுவதையே, "தமிழினி" புதிய எதார்த்தத்துக்கு ஏற்ப பிரதிபலித்து இருக்கின்றார். இது தான் "கூர்வாள்".

குறிப்பாக போராட்ட வெற்றிக் காலத்தில் குடும்பத்தை கைவிட்டு போராடச் செல்வதை பெரிதாக அலட்டிக் கொள்ளாத எதார்த்தம், தோற்ற போது என்னத்தைக் குடும்பத்துக்கு கொடுத்தோம் என்ற எதிர்நிலையான மனநிலையை தமிழினி பிரதிபலிக்கின்றார். மாறிவிட்ட சூழலில், இருவிதமான எதார்த்தத்திற்குமான அகநிலை முரண்பாடே "கூர்வாளாக" பிரதிபலிக்கின்றது.

மக்களின் சமூக பொருளாதார வாழ்வில் இருந்து போராட்டமே விலகிப் பிரிந்து இருந்தது என்ற உண்மையை, கூர்வாளில் காணமுடியவில்லை. ஆனால் வாழ்க்கையின் எதார்த்தத்தில் பிரதிபலிக்கும் வண்ணம் உறைக்கின்றது. "கூர்வாள்" அரசியல் ரீதியான தவறை இனங்கண்டு காட்டுவதற்கு பதில் தனிமனித உணர்ச்சிக்கு ஊடாக காட்டுகின்ற முந்தைய அதே தவறை தொடருகின்றார்.

தமிழினி இயக்கத்தின் அரசியல் வழியில் முரண்படாது, பொது மற்றும் தனிப்பட்ட சொந்த அதிருப்தியைக் கொண்டு இவைதான் காரணம் என்று முன்வைக்கின்றார். சம்பவங்கள், புலிகளின் நடத்தைகள் தொடர்பாக தமிழினி "கூர்வாள்" மூலம் முன்வைத்தவை அனைத்தும், புலிகள் தொடர்பாக புலிகளின் காலத்தில் வெளிவந்த விமர்சனத்தில் காண முடியும். இவை எவையும் புதிய விடையங்கள் அல்ல.

இதேபோன்று யுத்தங்கள் குறித்து அவரின் வருணனைகளில் அவரின் தனிப்பட்ட அனுபவங்களைத் தவிர, புலிகள் யுத்தகாலத்தில் வெளியிட்ட நூல்களின் காணமுடியும். புலிகளின் நடத்தை குறித்தான விமர்சனங்களில் தனிப்பட்ட அனுபவங்களைத் தவிர புலிக்கு எதிரான கடந்தகால விமர்சனத்தில் பொதுவாக வெளிவந்தவையே.

இவை யாருக்குப் புதியவை என்றால் புலிப் பாலைக் குடித்துக் கொண்டு கண்ணை மூடி வாழ்ந்து கொண்டு இருந்த இருக்கின்ற புலிக் குட்டிகளுக்கே. இதைப் போன்று தான் சாத்திரியின் உண்மைகள், "ஆயுத எழுத்து" மூலம் வெளிவந்தது. சாத்திரி புலியாக நின்று அதை நியாயப்படுத்திச் சொல்ல, தமிழினி புலியாக நின்று தன் அனுபவத்தை நியாயப்படுத்தி சொல்ல முடியவில்லை.

புலிக்கு புலியைப் பற்றி, புலித் தாய் கூறும் விடையங்கள் ஆச்சரியமாகவும், அதிர்வாகவும், எதிர்ப்பாகவும் இருப்பது வியப்பானதல்ல. மக்கள் சார்ந்த அரசியலைக் கொண்டிராத புலியெதிர்ப்பு அரசியலுக்கு, உகந்த விபரங்களாக இருப்பதிலும் ஆச்சரியமல்ல. இங்கு புலி - புலி எதிர்ப்பு என்ற இரு முனையில் எதிர்ப்பும், ஆதரவும், கூர்வாளுக்கு ஏற்படுகின்றது. "ஏன் இப்படிப் பூச்சியமானது?" என்ற தமிழினியின் அடிப்படையான கேள்விக்கும், விவாதத்துக்கும் பதில் கிடைக்கவில்லை என்பதே, சமூகப் பொருளாதார முரண்பாடுகளற்ற சமூகத்தை முன்னோக்காகக் கொண்ட அரசியலின் விமர்சனமாகும். "ஏன் இப்படிப் பூச்சியமானது?" என்பது அரசியல் ரீதியானது என்ற உண்மையை, தமிழினி கண்டு கொள்ளவில்லை. அந்த அரசியல் என்னவென்பதை இந்த நூல் கண்டறியவில்லை.

1970 களில் புலிகளின் உடைவு, 1980களில் மாற்று இயக்கப் படுகொலைகள் என அனைத்து புலிகளின் மக்கள் விரோத வரலாற்றின் தொடர்ச்சியில், இதற்கான கேள்விகளும் பதில்களும் கூடவே இருந்து வந்துள்ளது என்பதே வரலாற்று இயங்கியல் உண்மையாகும்.

தமிழினியோ புலித் தலைவர்கள், தலைவிகளில் ஒருவர். புலிகளின் மகளிர் அணியின் தலைவி. புலிகளின் அரசியல் பிரிவைச் சேர்ந்த தலைவர்களில் ஒருவர். தமிழ் மக்களுடன், பிற இன மக்களுடன் உறவாடிய, எல்லா உண்மைகளையும் தெரிந்த அறிவுஜீவியாக தன்னை முன்னிறுத்திய ஒருவர். எல்லாவற்றையும் நியாயப்படுத்தி, அனைத்துத் தவறுகளுக்கும் வக்காளத்து வாங்கிய அந்த அரசியலுக்கு பொறுப்பக் கூற வேண்டிய ஒருவர். வெறும் பொம்மையாக தான் இயங்கிய பின்னணியைக் கூறும் "கூர்வாள்" அதற்கான தன்னிலையான அகக் காரணத்தை ஆராயவில்லை.

உண்மைகள் தெரிந்த போதும், முரண்பாடுகள் தோன்றிய போதும், அதை அடக்கிக் கொள்ளக் காரணம் உயிர்ப் பயம் தான். அதுவே எதிர்நிலையான வழிபாடாக, காரணங்களைக் கற்பிக்கின்ற நியாயப்பாட்டை கொண்டு தவறுகளை பலப்படுத்தி விடுவதை தமிழினி தவறாக முன்வைக்கவில்லை. மக்களுக்கான “அர்ப்பணிப்பு தியாகம்” அனைத்தையும் கொண்ட போராட்டம், மக்களை ஒடுக்கியும், கொன்றும் குவித்த போது இவரை மௌனமாக்கியது எது? அதையே செய்யத் தூண்டியது எது? மக்களுக்காக "அர்ப்பணிப்பு தியாகத்தை" செய்ய தயாரற்ற, சமூகப் பொருளாதார அரசியல் ஏற்படுத்திய சுயநலம் சார்ந்த, வர்க்க ரீதியான உணர்வு சார்ந்த பயம் தான். புலிகளுக்குள் எதையும் தங்களால் செய்ய முடியாது என்று கூறுகின்ற பின்னணியில், வர்க்க ரீதியான பயவுணர்வு தான் முதன்மை பெற்று இருந்தது என்பதே உண்மை.

தமிழினியின் தனித்துவத்தை "கூர்வாள்" வெளிப்டுத்துகின்றதா?

தமிழினியின் தனிப்பட்ட தலைமைத்துவ ஆளுமைகள், பால்ரீதியாக பெண்களின் துயரங்கள் மீதான அவரின் தனிப்பட்ட அக்கறைகள், சாதிரீதியான இழிவுக்கு எதிரான தனிப்பட்ட குமுறல்கள் இவை அனைத்தையும் இழந்து, "தலைவருக்கும் - அண்ணைக்கும்" (பிரபாகரனுக்கு) அடிமைகளாக மாறி, செக்கு மாடுகளாக வாழ்ந்த தன் (புலிகளின்) கதையைத் தான் தமிழினி "ஒரு கூர்வாளின் நிழலில்" ஊடாக திரும்பிப் பார்ப்பதையே தன் வரலாறாகக் கூறுகின்றார்.

தன் வரலாறாக முன்வைக்கும் தமிழினி, தன்னைச் சுற்றிய சம்பவங்களும், புலிகளின் பொது நடத்தை சார்ந்த பொது "உண்மை" என்னும் ஒளியில் நின்று முன்வைக்கப்பட்டு இருக்கின்றது. புலிகள் காலத்தில் தனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அதிருப்தியைக் கொண்டு, அதை முன்வைக்கின்றாரே ஓழிய, அவரே "கூர்வாளில்" முன்வைக்கும் "புரட்சிகரமான" வழியில் ஆராயவில்லை. "புரட்சிகரமாகச்" சிந்திப்பது பற்றி தமிழினியே பேசுகின்றதால், இந்த நூல் மீதான விமர்சனமாக இருக்கின்றது.

தமிழினி பெண்கள் குறித்து பேசும் போது "புரட்சிகரமான புதிய சிந்தனை மாற்றத்துக்கு உட்பட்டார்கள் என்று கூற முடியாது" என்று கூறுகின்ற அவர், தன் அளவில் "புரட்சிகரமான புதிய சிந்தனை"யைக் கொண்டு இந்த நூல் வெளிவரவில்லை என்பதே கசப்பான உண்மை. "புரட்சிகரமான புதிய சிந்தனை"யாக தமிழினி எதைக் கருதுகின்றார்?

"புரட்சிகரமான புதிய சிந்தனை"யானது என்ன? சமூகப் பொருளாதார முரண்பாடுகளைக் களைவதை அடிப்படையாகக் கொண்டதே புரட்சிகர சிந்தனை. சமூகப் பொருளாதார முரண்பாடுகளைப் பாதுகாக்கின்ற, தக்க வைக்கின்ற எந்தச் சிந்தனையும், நடைமுறையும் புரட்சிகரமாக ஒருநாளும் இருப்பதில்லை.

சமூகப் பொருளாதாரத்தில் உள்ள ஒரு முரண்பாட்டை முன்னிறுத்திய செயற்பாடுகள், புரட்சிகரமானதாகவோ, மக்கள் இயக்கமாகவோ ஒரு நாளும் இருப்பதில்லை.

இயல்பாகவே பிற்போக்கான தனியுடமை மற்றும் தனிமனிதத் தன்மையை கொண்டதாகவே இருக்க முடியும். என்ன வேஷம் போட்டாலும், எந்தச் சொல்லைக் கொண்டு மூடிமறைத்தாலும், அனைத்தும் தனிவுடமை, தனிமனித கோட்பாடுகளைக் கடந்தவையல்ல. இந்த வகையில் அரசியல் இலக்கியத்தில் "புரட்சிகரமான புதிய சிந்தனை" மறுதளிக்கப்பட்டு வருகின்ற பொதுச் சூழலில், தமிழினியிடம் அதைக் காணமுடியாதுள்ளது. அவர் "புரட்சிகரமாகக்" கருதியது மேம்போக்கான புரிதல் மற்றும் தனிப்பட்ட அதிருப்தியைத்தான். அதாவது சொந்த அனுபவவாதத்தைத்தான்.

பெண்கள் மீதான தமிழினியின் அக்கறை சொல்லிமாளாது

தமிழினி பெண்ணாக இருந்ததால் ஆணாதிக்க இயக்கத்தில் பெண்கள் சந்தித்த பிரச்சனையை அணுகும் விதம் மிகவும் நுட்பமானது தனித்தன்மையானது. இந்த வகையில் பெண்கள் பிரச்சனை தொடர்பாக சமூகத்தின் மேல் அவர் கொண்டிருந்த அதிருப்தியை பல முனையில் வெளிப்படுத்துகின்றார்.

இயக்கத்தில் பெண்கள் இருந்த நிலையை "..கட்டுக்கோப்பான குடும்பப் பெண்ணாக வீட்டில் வளர்க்கப்பட்டோமோ.. அதேபோல் கட்டுக்கோப்பான மகளிர் படையணிப் போராளிகளாகவே இயக்கத்திலும் வளர்க்கப்பட்டோம்" மிகவும் துல்லியமான மிகவும் சரியான, ஓப்பீட்டுரீதியான உண்மையாகும்.

யாழ் மையவாத வெள்ளாள சாதிய ஆணாதிக்கத்தின் இறுக்கமான சமூகக் கட்டமைப்பை, புலிகள் தங்கள் அமைப்பு வடிவமாக்கினர். அதே ஏற்றத்தாழ்வு, அதே படிநிலை வடிவத்தில் சமூகத்தை உறைநிலைக்கு கொண்டுவந்து, அதைத் தலைமை தாங்கினர். இந்த வகையில் நிலவிய ஆணாதிக்க வக்கிரத்தையே, தமிழினி மிக அழகாக தன் தனிப்பட்ட சுய அனுபவத்தில் இருந்து ஒப்பிட்டுச் சொல்ல முடிந்திருக்கின்றது.

பெண்கள் தொடர்பாக ஆணாதிக்க சமூக கட்டமைப்பு சார்ந்த புலிகள் இயக்கம் எடுத்த முடிவுகளை, பெண்ணாக நின்று ஏற்க முடியாதவராகவும், அதேநேரம் அதையே முன்னின்று அமுல் செய்பவராக தமிழினி இருந்துள்ளார்.

சாதியம், ஆணாதிக்கம் என அனைத்து சமூக பொருளாதார முரண்பாடுகளையும் உறை நிலையில் வைத்திருக்கும் புலிகளின் அரசியல் செயற்பாடு போரை நடத்துவற்கு ஆட்களை திரட்டுவதை மட்டும் நோக்கமாகக் கொண்டிருந்தது. உறைநிலையைக் கடந்து இன்று விசுவரூபம் எடுத்து வெளிப்படுகின்ற இன்றைய சாதிய ஆணாதிக்க எதார்த்தத்தைப் பேணுவது தான் புலிகளின் அன்றைய அரசியல் கொள்கையாகும்.

ஆண் மேலாதிக்க இயக்கத்தினது அதிகாரம் குறித்து தன் அனுபவத்தை தமிழினி "பல வயது வந்த ஆண் போராளிகள் தம்மைவிட மிகவும் வயது குறைந்த பெண் போராளிகளைத் திருமணம் செய்வதற்கான அனுமதியைக் கேட்கும் போது தர்மசங்கடமான பிரச்சனைகள் எழுவது வழக்கம்" என்கின்றார். வயது குறைந்த இளம் பெண்களைக் கோருவது, அடங்கி நடப்பார்கள் என்பதால்தான். ஆணை விட பெண்ணினது வயது குறைவாக இருக்க வேண்டும் என்பதே திருமணம் தொடர்பான சமூக நடைமுறை. புலிகள் இயக்கத்தில் அதிகாரத்தைக் கொண்டு, கேட்பாரற்ற மிகக் குறைந்த வயது பெண்களைக் கோரிய போது முரண்பாடாக மாறுகின்றது. ஆணாதிக்க அதிகாரம், தலைமைத்துவம் என்ற இடத்தில் இருந்து கொண்டு, பெண்களை குடும்பம் என்னும் ஆணாதிக்க வடிவத்துக்குள் பலியிடுகின்ற இணக்கமான சங்கடங்களையே, தமிழினி இங்கு எடுத்துக் காட்டுகின்றார்.

இந்த ஆணாதிக்கம் குறித்து பாலசிங்கம் முன்வைத்த கருத்தை, தமிழினி தனது கருத்தாக மீள கூர்வாளில் முன்வைக்கும் போது ".. தங்களோடு சண்டைக் களத்தில் நின்று போராடிய பெண் போராளிகளைக் கலியாணம் கட்டுவம் என்று யோசிக்காமல், அழகான, நல்ல உத்தியோகம் பார்க்கின்ற அல்லது வெளிநாட்டில் சொந்தக்காரராக இருக்கிற பொம்பிளைகளைத் தேடித் திரிகினம்" என்கிறார். இந்த உண்மையானது அர்ப்பணிப்பு தியாகம் என அனைத்தும் யாழ் மேலாதிக்க சாதியம் வர்க்கம் கடந்தல்ல என்ற உண்மையையே உணர்த்தி நிற்கின்றது. இங்கு யுத்தக் கருவிகளாகவே மனிதர்கள் பயன்படுத்தப்பட்ட அதேநேரம், பெண்களை உணர்ச்சியற்ற மந்தையாக இருக்குமாறு போராட்டம் வழிநடத்தி இருக்கின்றது.

இதற்கு உதாரணம் தான் தமிழினி எடுத்துக்காட்டுகின்ற, மூன்று பெண்கள் இயக்கமல்லாத வெளியாருடன் பாலியல் தொடர்பைக் கொண்டு இருந்தாகக் கூறி, அனைத்துப் பெண்களையும் கூட்டி அவர்கள் முன் மரணதண்டனை வழங்கிய ஆணாதிக்கம், குறித்த ஆண்களுக்கு மக்கள் முன் வைத்து மரண தண்டனையை வழங்கியது. புலி ஆண்கள் புலி இல்லாத வெளிப் பெண்களுடன் பாலியல் ரீதியாக உறவாடுவதையும், திருமணம் செய்வதையும் தடுக்கவில்லை. பிரபாகரனின் திருமணம் உட்பட எத்தனையோ சம்பவங்கள் புலிகள் வரலாற்றில் உண்டு. புலி ஆணாதிக்கம் ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி வழங்குகின்றது. இதுதான் ஆணாதிக்க புலிக் கோட்பாடாகவும், புலிக் கட்டுப்பாடாகவும், அதன் ஒழுக்கக்கேடுகள் "ஒழுக்கமாகவும்" இருந்து இருக்கின்றது. விபச்சாரம் செய்யும் பெண்ணை தண்டிக்கும் உலகளாவிய ஆணாதிக்கச் சட்டங்கள், விபச்சாரம் செய்யும் ஆணைத் தண்டிப்பதில்லை. இதை இங்கு ஒப்பிட்டு புரிந்து கொள்ள முடியும்.

புலிக்கு பின் பெண்களின் நிலை குறித்து தமிழினி


பாலியலை முன்னிறுத்தி ஆணாதிக்க இனவாத அரசியல் செய்கின்ற போக்கு, புலிகளின் ஆரம்ப காலம் முதல் தொடருகின்றது. இருந்தபோதும் தமிழினி யுத்தத்திற்கு பிந்தைய தமிழ் இனவாத அரசியலும், தமிழ் ஊடகங்களும் பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி பிழைப்பதை எதிர்த்து எழுதும் போது, இராணுவம் போல் "விடுதலைக்காகப் போராடப் புறப்பட்ட இயக்கங்களில் இருந்தவர்கள் கூட பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டிருக்கின்றார்கள்" என்ற உண்மையை போட்டு உடைத்து விடுகின்றார். இராணுவம், புலி ஊடகவியல் எதுவும், ஆணாதிக்க சிந்தனை முறைக்கும், அதன் பொது நடத்தைக்கும் விதிவிலக்கல்ல.

தமிழினி தொடர்ந்து இந்தப் போக்கை அம்பலப்படுத்தும் போது "..விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டால் அந்தப் பெண்ணை மானமிழந்து போனவர்களாகக் கருதி ஒதுக்கி வைக்கும் மோசமான மனப்பாங்கு கொண்ட மனிதர்கள் சமூகத்தில்" இருப்பது போல் "... தமிழ்ப் பெண்களின் மானத்தைக் காற்றிலே பறக்கவிட்டு அரசியல் நலன் தேடும் சுயநலமிகளும்..." இருக்கவே செய்கின்றனர். இந்த வகையில் "இடதுசாரியம் மார்க்சியம்" பேசும் இனவாத தமிழ் தேசியம் பேசும் சாக்கடைக் கூட்டம் வரை இதற்குள் அடங்கும். இலங்கையில் ஒரு நிகழ்வு என்றால், அதை அரசு ஆதரவாகக் காட்டுவது முதல் பெண் இலங்கை இராணுவத்தில் இணைந்தாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோ அவளை "மானம்கெட்டவளாக" காட்டுவது தமிழ் அரசியலாக இருக்கின்றது. கொலைகாரனும், பெண்களை பாலியல் வன்முறைக்குள்ளாக்கிய சிவராமை (தராகியை) ஊடகவியலாளனாக கொண்டாடும் ஊடகங்கள், பெண்களை பாலியல் ரீதியாக சொற்களால் வன்புணர்ந்து கொச்சைப்படுத்தி காட்டுவதே அதன் பிழைப்பாக இருக்கின்றது.

இதைத்தான் தமிழினியும், சகபெண்களும் எதிர்கொள்கின்றனர். அது குறித்து தமிழினி "போராட்டத்திற்குப் பின்னரான வாழ்வைக் கொச்சைப்படுத்தி பார்க்கின்றது. பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களின் உடல்களை விளம்பரப்படுத்தி அரசியல் பிழைப்பு நடத்துகின்றது. போராட்டத்தில் பங்குபெற்று உயிர்மீண்ட பெண்கள் அனைவருமே மானமிழந்து போய்தான் வந்திருக்கின்றார்கள் என்ற கருத்துகளைப் பரப்புவது..." ஊடகங்களினதும், தமிழ் அரசியல்வாதிகளினதும், இனத்தைச் சொல்லிப் பிழைக்கும் "இடதுசாரிகளினதும்" நடத்தையாக ஒழுக்கமாக மாறியிருக்கின்றது. இதற்கு எதிராக என்ன செய்யப் போகின்றீர்கள் என்பதையே - தமிழினி சமூகத்திற்கு முன் கேள்வியாக விட்டுச்சென்று இருக்கின்றார்.

புலிகளின் போராடும் மனநிலையைத் தகர்த்தது எது?

புலிகளின் முக்கிய யுத்த தளபதியும் தலைவருமான விதுசா, தமிழினியிடம் "இந்தச் சண்டையில் நாங்கள் வெல்லுவம் எண்டு நீ நினைக்கிறியா?" என்று கேட்டு "எங்களுக்கு மட்டும் ஏனடியப்பா இப்படி ஒரு வாழ்க்கை? உலகம் எங்கேயோ போயிட்டுது, நாங்கள் மட்டும் காட்டுக்குள்ளும், சேத்துக்குள்ளேயும் செத்துக் கொண்டிருகின்றோம்" என்று கூறுகின்ற மனநிலை தான், பெரும்பாலான புலித்தலைவர்களின் நிலையும் கூட என்று தமிழினி தன்னையும் சேர்த்துக் கூறுகின்றார்.

யுத்தத்தை வலிந்து தொடங்கி அதைச் செய்தவர்கள், யுத்தம் செய்யும் மனநிலையில் இருக்கவில்லை. புலிகளின் தலைவரும், அவரை அண்டிப் பிழைத்த தளபதிகளும், யுத்தம் மூலம் செல்வத்தை பெற்ற (புலம்பெயர் புலி மாபியாக்கள் வரை) புலிக் கூட்டமும், யுத்தம் ஊடாக பிழைப்பை நடத்திய ஊடகங்களுமே யுத்தத்தை விரும்பி அதை திணித்தன.

"அண்ணை - தலைவர்" "ஆயுதத்தை" முன்னிறுத்தி யுத்தத்தில் ஊன்றி நிற்க மற்றவர்கள் பணத்தை சம்பாதிக்க யுத்தம் அவர்களுக்கு அவசியமாக இருந்தது. புலிகளில் இருந்து என்னத்தைக் கண்டோம் என்று தமிழினி சொந்த அவலம், மறுபக்கத்தில் யுத்தத்தை நடத்தி புலியை அழித்ததன் மூலம் புலிக் கோடீஸ்வரர்களை உருவாக்கி இருக்கின்றது என்பதே எதார்த்தம்.

யுத்தமற்ற அமைதிக் காலமானது, உண்மையில் பொருட்களை சந்தைப்படுத்திய காலம். யுத்த பிரதேசத்திற்குள் நவீன பொருட்கள் சென்றதுடன், அதை அனுபவிக்கின்ற குறுகிய நுகர்வுப் பண்பாட்டையும் கொண்டு சென்றது. பணப்புழக்கம் அதிகரிக்க வாழ்க்கை முறையே தலைகீழாக மாறியது.

இந்தப் பின்னணியில் யுத்தப் பிரதேசத்தினுள் புலம்பெயர் சமூகத்தின் ஆடம்பரமான நகர்வுகள், புலித் தலைவர்களுக்கு கொடுத்த உயர்ரகமான அன்பளிப்புகள், தன்னார்வ நிறுவனங்களும் மேற்குநாடுகளும் புலிக்கு கொடுத்த அன்பளிப்புகள், இவை அனைத்தும் விரும்பியோ விரும்பாமலோ யுத்த மனநிலையில் இருந்து தளபதிகளை நுகர்வு மனநிலைக்கு மாற்றி விடுகின்றது. இதுதான் விதுசாவின் கூற்று மட்டுமின்றி, தமிழினியின் மனநிலையும் கூட.

சாதாரணமான போராளிகள் இதே சூழலுக்குள்ளும், அதேநேரம் தங்கள் உறவுகளுடன் மீள உறவுகளை ஏற்படுத்திய போது, ஏற்பட்ட புதிய மனக் கிளர்ச்சி யுத்தமற்ற அன்பான மனித உறவுகள் கொண்ட இயல்பான நுகர்வு வாழ்க்கையைக் கோரியது.

இந்த பின்னணியில் யுத்தம் என்பது ஒட்டுமொத்தத்தில் வலிந்து திணிக்கப்பட்ட ஆயுதத்தையும் பணத்தையும் காதல் செய்த முட்டாள்களினதும் சுயநலமிகளினதும் விருப்பமே யுத்தமாகும்.

முடிவாக

தமிழினி பதிலளிக்கும் முன்பே அவரின் மரணம் முந்திவிட்டது. அவர் தன்னையொத்த பெண்கள் நிலை குறித்து முன்வைத்தவை, இன்றைய பெண்கள் எதிர்கொள்ளும் எதார்த்தம். இதற்கு எதிராக என்ன செய்யப் போகின்றோம் என்பதற்கு சமூகம் என்ற வகையில் அனைவரும் நடைமுறையில் பதிலளித்தாக வேண்டும்.


ரயாகரன்.

Read more...

Saturday, June 11, 2016

பிரிட்டன் வெளியேறுவதற்கான வெகுஜன வாக்கெடுப்பை செயலூக்கத்துடன் புறக்கணிக்க. By Chris Marsden

ஜூன் 23 வெகுஜன வாக்கெடுப்புக்கு மூன்று வாரங்களுக்கும் குறைவாக உள்ள நிலையில், இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் ஓர் அங்கத்துவ நாடாக இருக்க வேண்டுமா என்பதை அது தீர்மானிக்க உள்ளது. அந்த முடிவு, அக்கண்டம் முழுவதிலுமான தொழிலாளர்கள் மீது நீண்டகால அரசியல் விளைவுகளைக் கொண்டிருக்கும்.

பிரிட்டன் சோசலிச சமத்துவக் கட்சி அந்த வெகுஜன வாக்கெடுப்பை செயலூக்கத்துடன் புறக்கணிக்க (active boycott) அழைப்புவிடுக்கிறது.

“மக்கள்" தீர்மானிப்பதை அனுமதிக்கும் ஒரு வழியாக காட்டப்படும் அந்த வெகுஜன வாக்கெடுப்பு, யதார்த்தத்தில், பெரிதும் ஜனநாயக விரோதமானதாகும். அது உத்தியோகப்பூர்வமாக உள்ளடங்கி உள்ள இரண்டு பிரச்சாரங்களில் ஒன்றை தேர்ந்தெடுக்குமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இரண்டே இரண்டு விருப்பத்தெரிவுகளை மட்டுமே முன்வைக்கிறது. வணிக-சார்பான, சிக்கன நடவடிக்கைகள் சார்பான, இராணுவவாத, தொழிலாள-விரோத, புலம்பெயர்ந்தோர் விரோத சக்திகளால் தலைமை கொடுக்கப்படும் இவ்விரண்டு பிரச்சாரங்களும் பழமைவாத கட்சியின் எதிரெதிரான அணிகளால் தலைமை தாங்கப்படுகின்றன: ஒன்று பிரதம மந்திரி டேவிட் கேமரூன் தலைமையிலானது, மற்றொன்று இலண்டனின் முன்னாள் மேயர் போரிஸ் ஜோன்சன் தலைமையிலானது.

சோசலிச சமத்துவக் கட்சி சமரசமின்றி ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்க்கிறது. ஆனால் எமது எதிர்ப்பு வலதில் இருந்து கிடையாது, இடதில் இருந்தாகும்.

ஐரோப்பிய ஒன்றியம் என்பது தங்களுக்குள் சண்டையிடும் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக தந்திரங்கள் செய்யும், போட்டி நாடுகளது ஒரு கூட்டமைப்பினதும் மற்றும் நிதியியல் சந்தைகளினதும் கட்டளைகளுக்கு அக்கண்டத்தை அடிபணிய செய்யும் ஒரு இயங்குமுறையாகும். ஆகவே பிரிட்டன் அதிலேயே தங்கியிருக்கலாம் என்ற பிரச்சாரத்திற்கு உழைக்கும் மக்கள் அவர்களது ஆதரவை வழங்க முடியாது. அது பிரிட்டனின் பெருநிறுவன உயரடுக்கின் நலன்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பெருநிறுவன உயரடுக்குள், சர்வதேச அளவில் போட்டியிடுவதற்கான அவற்றின் தகைமைக்கும்—அனைத்திற்கும் மேலாக அக்கண்டத்தின் தொழிலாளர்கள் மீது கடுமையான சிக்கன நடவடிக்கைகளை திணிப்பதன் மூலமாக இதை செய்கின்றன—ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிராக இராணுவவாதம் மற்றும் போர் திட்டநிரல் ஒன்றை வெற்றிகரமாக பின்தொடர்வதற்கான நேட்டோவின் தகைமைக்கும் இன்றியமையாததாக ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவத்தைக் கருதுகின்றன.

அதேவேளையில் வெளியேறலாம் என்று எதிர்க்கும் பிரச்சாரம், வெளிநாட்டவர் விரோத போக்குடைய இங்கிலாந்து சுதந்திர கட்சி உட்பட பிரிட்டனின் மிக வலதுசாரி சக்திகளின் மேலாளுமையில் உள்ளது. “புரூசெல்ஸின் அதிகாரத்துவத்திற்கு" எதிரான இவற்றின் அணிதிரள்வு, இலண்டன் நகர பெரு வணிகங்கள் மற்றும் நிதியியல் ஒட்டுண்ணிகளது சர்வாதிகாரத்தின் மீதிருக்கும் சகல கட்டுப்பாடுகளையும் நீக்குவதற்கான முறையீடு என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. வெளியேறலாம் எனும் பிரச்சாரம், ஐரோப்பிய ஒன்றிய புலம்பெயர்வோரை வெளியேற்றுவதற்காக இங்கிலாந்து எல்லைகள் மீது "திரும்ப கட்டுப்பாட்டை" பெறுவதற்காக ஏறத்தாழ பிரத்யேக கோரிக்கைகளின் மீது ஒருமுகப்பட்டுள்ளது. அடுத்தடுத்து வந்த தொழிற் கட்சி மற்றும் பழமைவாத அரசாங்கங்களால் பல ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்ட தொழிலாள வர்க்க விரோத நடவடிக்கைகளால் சிதைக்கப்பட்ட அத்தியாவசிய சமூக சேவைகளின் பொறிவுக்கு, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறலாம் என்று கூறும் அணி புலம்பெயர்ந்தோரைக் குற்றஞ்சாட்டுகிறது.

மொத்த புலம்பெயர்வோரின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 100,000 க்கு குறைவாக குறைப்பதென்ற அவரது உறுதிமொழியை கேமரூன் பூர்த்தி செய்ய தவறியதற்காக அவருக்கு எதிராக இத்தகைய புலம்பெயர்ந்தோர்-விரோத வீராவேச பேச்சுக்கள் திரும்பாத வரையில், கேமரூனுக்கு அவரது முழு உடன்பாட்டை வெளிப்படுத்துவதைக் காட்டிலும் அதிகமாக வேறெதிலும் விருப்பமிருக்காது.

இந்த வெகுஜன வாக்கெடுப்பில் இந்த பிற்போக்குத்தனமான இரண்டு முகாம்களிடமிருந்தும், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை நனவுபூர்வமாக ஸ்தாபிப்பதற்கான சிறந்த நிலைமைகளை உருவாக்குவதற்காக நாம் செயலூக்கத்துடன் புறக்கணிக்குமாறு அழைப்புவிடுத்துள்ளோம்.

தொழிலாள வர்க்கத்திற்காக பேசுவோர் வேறு எவரும் இல்லை.

ஜெர்மி கோர்பின் கீழ் தொழிற் கட்சி, தொழிற்சங்க காங்கிரஸூடன் சேர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்திலேயே தங்கியிருக்கலாம் என்பதற்குப் பின்னால் அணிதிரண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் டோரி அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மீது கண்காணிப்பைக் கொண்டுள்ளது என்றும், அக்கண்டத்தின் ஏனைய "முற்போக்கான சக்திகளுடன்" கூட்டணி சேர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தைச் சீர்திருத்த முடியுமென்றும் அது வாதிடுகிறது.

கிரீஸில் சிரிசாவை மற்றும் பிரான்சில் பிரான்சுவா ஹோலாண்டின் சோசலிஸ்ட் கட்சியை, கோர்பின் அவரது கூட்டாளிகளாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் சிரிசா ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவத்தைப் பேணுவதற்கான ஒரு நிபந்தனையாக அதற்கு முன்பிருந்த கட்சிகளை விட அதிகமாக கடுமையான சமூக செலவு குறைப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதேவேளையில் ஹோலாண்ட் தொழிலாளர்-விரோத சட்டமசோதாவை திணித்துள்ளார், இது தூண்டிவிட்டுள்ள வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் ஓர் அலையை அவரது அரசாங்கம் மூர்க்கமான ஒடுக்குமுறை உடன் சந்திக்கிறது. கோர்பின் எப்போதேனும் ஆட்சிக்கு வந்தாலும், அவரும் அதையே தான் செய்வார்.

சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) மற்றும் சோசலிஸ்ட் கட்சி போன்ற போலி-இடது குழுக்கள் இடதிலிருந்து வெளியேறும் (Left Leave) விருப்பத்தெரிவை வழங்க கோருகின்றன. ஆனால் அவர்கள் முன்மொழியும் இந்த மாற்றீடானது, ஐரோப்பிய ஒன்றியம் உடைக்கப்பட வேண்டும் அதிலிருந்து எதிர்காலத்தில் வரும் தொழிற் கட்சி அரசாங்கம் ஒரு சில குறைந்தபட்ச சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த முடியும் என்ற வாதத்தை உள்ளடக்கி உள்ளது. இந்த பிழையான பிரமையைப் பின்தொடர்கையில், அவர்கள், தேசியவாதம் மற்றும் புலம்பெயர்ந்தோர் விரோத வார்த்தையாடல்களின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்புணர்வைச் சுரண்டுவதற்காகவே ஐரோப்பாவெங்கிலும் அதிதீவிர வலதின் தகைமை முன்னிறுத்தும் அச்சுறுத்தலை ஒவ்வொரு சூழலிலும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட பார்க்கிறார்கள்.

இந்த வாரம் தான், பிரான்சின் தேசிய முன்னணி தலைவர் மரீன் லு பென் RT க்கு ஒரு பேட்டி அளித்திருந்தார், அதில் அவர், “கூலிகளைக் குறைக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றிய தொழிலாளர் சந்தைக்குள்" வருகின்ற "பத்து மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோரை ஐரோப்பிய ஒன்றியம் ஆதரிக்கிறது,” என்றவர் குற்றம்கூறிக்கொண்டார். அவர் தொடர்ந்து கூறுகையில், “ஆகவே உண்மையில் அவர்கள், நீங்கள் அவ்வாறு விரும்பினால், தொழிலாள வர்க்கத்தைக் காட்டிக்கொடுக்கிறார்கள்,” என்றார்.

இதில் எதுவுமே Left Leave சேர்ந்தவர்களுக்கு சம்பந்தமில்லாததாக இருக்கின்றது.

“இனவாதிகளுக்கு வெகுஜன வாக்கெடுப்பை விட்டுக்கொடுக்க" அவர்களது மறுப்பைப் பிரகடனப்படுத்தி உள்ள சோசலிச தொழிலாளர் கட்சி அறிவிக்கையில், “ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதான விவாதத்தை, இனவாத டோரி கட்சியும் மற்றும் இங்கிலாந்து சுதந்திர கட்சியும் தான், முன்கொண்டு வந்துள்ளன. இதை இடது கொண்டு வரவில்லை. 'பிரிட்டனை வெளியேற்றுவதில்' அவர்கள் தான் மிகவும் பார்வைக்குத் தெரியும் முகமாக இருக்கிறார்கள், நாங்கள் இல்லை. இந்தளவிற்கு உண்மை தான், ஆனால் இதிலிருந்து அவர்கள் தான் ஆதாயமடைவார்கள் என்றாகாது. டோரிக்களின் ஐரோப்பிய ஒன்றிய பிளவுகளில் இருந்து இதுவரையில் மிகப் பெரியளவில் ஆதாயமடைந்திருப்பவர் ஜெர்மி கோர்பின் தான்… ஒருபுறம் கேமரூன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் முதலாளிமார்களுக்கும், மறுபுறம் Farage மற்றும் இனவாதிகளுக்கும் இடையே தேர்ந்தெடுக்குமாறு மக்களுக்குக் கூறுவது அபாயகரமான ஆக்கபூர்வமற்ற எதிர்நடவடிக்கையாகும்,” என்று அறிவிக்கிறது.

சோசலிச தொழிலாளர் கட்சியை பொறுத்த வரையில், தொழிலாளர்களுக்கு உண்மையைக் கூறுவதென்று வருகையில், அதாவது ஒரு வலது சாரியின் வெற்றி … வலது சாரியைப் பலப்படுத்துகிறது என்ற உண்மையைக் கூறுவது, அதற்கு எப்போதுமே "ஆக்கபூர்வமற்ற எதிர்நடவடிக்கையாக" ஆகிவிடுகிறது. மேலும் கோர்பின், அவர் கட்சிக்குள்ளேயே கூட, வலதுசாரிக்கு எதிராக அவர் போராட போவதில்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளார் என்பதுடன், ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவத்திற்கு ஆதரவை அறிவித்துள்ளார்.

இந்த வெகுஜன வாக்கெடுப்பு, முதலாளித்துவ தேசியவாதமா அல்லது சோசலிச சர்வதேசியவாதமா என்று முன்னோக்கு மற்றும் நிலைநோக்கு மீதான அடிப்படை கேள்விகளை எழுப்புகிறது.

சோசலிச சமத்துவக் கட்சி, ஐரோப்பிய ஒன்றிய உடைவைப் பொருளாதார தேசியவாதம் மற்றும் புலம்பெயர்வோர்-எதிர்ப்பு வெளிநாட்டவர் விரோதத்தின் அடிப்படையில் அறிவுறுத்தவில்லை. அக்கண்டத்தை தேசியவாத அடிப்படையில் உடைப்பதில் இருந்து அல்லாமல், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதில் உள்ளடங்கி உள்ள அரசாங்கங்களுக்கு எதிராக ஒரு பொதுவான போராட்டத்தை அபிவிருத்தி செய்வதற்காக, தொழிலாளர்களும் இளைஞர்களும் ஒரு சுயாதீனமான வர்க்க முன்னோக்கின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்க்க வேண்டும் என்று நாம் கூறுகிறோம்.

ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு இடையே, ஒவ்வொரு இடத்திலும், சுதந்திர வர்த்தகம் வர்த்தக போருக்கும், பாதுகாப்பின்மை மற்றும் வேலைவாய்ப்பின்மை நிதியியல் பாதுகாப்புக்கும், சமூக செலவு குறைப்பு செல்வகொழிப்பிற்கும், மக்களின் சுதந்திர நகர்வு எல்லைகளில் முள்கம்பி வேலிகள் மற்றும் சிறைகூடங்களுக்கு ஒத்த தங்கும் கூடாரங்களுக்கும், ஜனநாயகமானது சர்வாதிகாரம் மற்றும் பாசிச வலதின் வளர்ச்சிக்கும் வழிவிட்டு வருகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பொறிவு, கடந்துவரவேண்டிய அதே தேசிய விரோதங்களின் ஒரு வெடிப்புக்கு வழி வகுத்து வருகிறது. தொழிலாள வர்க்க தலையீடு இல்லையென்றால், மனிதயினம் மீண்டும் ஒரு முறை உலக போர் பெருஞ்சுழலுக்குள் இழுக்கப்படுவதே இறுதி விளைவாக இருக்கும்.

ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்குள் ஒரு சோசலிச பிரிட்டனுக்கான போராட்டம் என்பது வெறுமனே ஒரு பிரச்சார கோஷம் கிடையாது, மாறாக ஒவ்வொரு நாட்டிலும் அதே வர்க்க எதிரியை மற்றும் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போர் என அதே பிரச்சினைகளை முகங்கொடுக்கும் தொழிலாளர்களுக்கான ஒரு அவசரமான அவசியமாகும். இத்தகைய அபாயங்களை முடிவுக்குக் கொண்டு வர, சமூகத்தின் மீதான நிதியியல் பிரபுத்துவத்தின் பிடியை முறித்து, எதிர்விரோத தேசிய அரசுகளாக உலகின் பிளவுகள் மற்றும் இலாபகர அமைப்புமுறை ஆகிய சமூகத்தின் மீதிருக்கும் விலங்குகளிலிருந்து பொருளாதாரம் சுதந்திரப்படுத்தப்பட வேண்டும்.

அத்தகையவொரு தாக்குதலைத் தொடுப்பதில் பிரிட்டிஷ் தொழிலாளர்கள் சக்தி வாய்ந்த கூட்டாளிகளைக் கொண்டுள்ளார்கள்.

பெரு வணிகங்கள் மற்றும் பெரும் செல்வந்தர்களுக்காக மட்டுமே பேசும் பெயரளவிற்கான இடது மற்றும் வலது இரண்டினது உத்தியோகபூர்வ அரசியல் கட்சிகளிடமிருந்து பாரியளவில் அன்னியப்பட்டதால் எரியூட்டப்பட்டு, பிரான்சில் பாரிய வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள், பெல்ஜியத்தில் ஒரு வேலைநிறுத்த அலை, கிரீஸில் சிரிசா அரசாங்கத்திற்கு எதிரான பொது வேலைநிறுத்தங்கள் என ஐரோப்பா எங்கிலும், தொழிலாள வர்க்கத்தின் கண்டந்தழுவிய பரந்த இயக்கம் ஒன்றின் ஆரம்ப கட்டங்களை நாம் பார்த்து வருகிறோம்.

இந்த வெகுஜன வாக்கெடுப்புக்கு முன்பும் சரி இதற்கு பின்பும் சரி, இந்த சர்வதேச அபிவிருத்திக்கு அரசியல் தலைமை வழங்க சோசலிச சமத்துவக் கட்சி இங்கிலாந்து தொழிலாளர்களது நிலைநோக்கை மாற்றும். சர்வதேச அளவிலான நமது தோழர்களுடன் இணைந்து, நாம் ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புதிய சோசலிச மற்றும் சர்வதேச தலைமையாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பிரிவுகளைக் கட்டியெழுப்புவதற்கான அடித்தளங்களை அமைப்போம்.

Read more...

கூலிக்கு மாரடிக்கும் இலங்கை ஊடகங்களின் அயோக்கியத்தனம் சிவா சுப்பிரமணியத்தின் மரணத்தில் சிறப்பாக வெளிச்சமானது.

- நயினை ந.ஜெயபாலன் -
நாய் பூனையின் சிலுமிசங்களைக் கூட செய்திகளாக்கி மக்களிடம் கொண்டு சேர்க்கும் இலங்கைத் தமிழ் ஊடகத்துறைக்கு சிவா சுப்பிரமணியம் ஒரு பொருட்டாகத் தெரியவில்லையோ?.

மூத்த, அறிவுசார்ந்த, முற்போக்கான, பகுப்பாய்வும் தர்க்கரீதியான தேடலுமுள்ள, புள்ளிவிபரங்களை விரல் நுனியில் வைத்திருந்த, சரியான சமூகப்பார்வையுள்ள, மும்மொழிப் பாண்டித்தியமும் ஆற்றலும் எனப் பல்திறன்களையும் தன்னுள்கொண்டு தகுதிமிக்க ஊடகவியலாளனாய் உரியபடி சமூகத்துக்குப் பயன் தந்தவர் சிவா சுப்பிரமணியம். இவரது அனுபவமுதிர்ச்சி, சோர்வின்மை, ஊடகத்துணிச்சல் என்பவற்றினூடாக ஊடகத்றைக்கோர் உதாரண புருசனாகத் திகழ்ந்;த ஒருவர்பற்றி இலங்கை ஊடகங்களால் பேசப்படாமல் போனது ஏன்?

சிங்களத்தை சொந்த மொழியாகக் கொண்ட இலக்கியப் படைப்பாளிகள் கூட பொருத்தமுள்ள சொல்லைத், தலைப்பைத் தேர்வுசெய்ய சிவாவை நாடுவார்கள் என்ற அளவுக்கு சிங்களம் மட்டுமல்ல மும்மொழியையும் எழுத்தால், பேச்சால் தன் கட்டுக்குள் வைத்திருந்த அரிய, கூரிய ஆளுமையாளன். இப்படியொரு பெறுமதியாளனின் இழப்பு ஒட்டுமொத்த இலங்கை ஊடகத்துறை, இலக்கியப்புலம், அறிந்தவர், அரசியல் பிரமுகர்கள் என்ற அனைத்துப் பரப்பிலும் கண்டுகொள்ளாமல் எழுதாமல் பாராமுகமாகவிடப்பட்டிருக்கிறார்! ஏன் இவர்பற்றி ஊடகங்களுக்குத் தெரியவில்லையா? இனி இவர் தேவையில்லையா?

ஊகம், திரிப்பு, காக்காபிடிப்பு, அடக்குமுறைகளுக்குத் துணைபோதல், மாற்றுக் கருத்துக்களை அழித்தல், நூலகத்தை எரித்தல் இவைகளுக்குத் துணை போபவர்களைப் பிரமுகர்களாகக்காட்டுவதும் அதன்மூலம் பணம் பண்ணுவதும் இலங்கைப் பத்திரிகா தர்மமாகவே இருந்துவருகிறது. இந்தவகையான பத்திரிகைகளும் தலமைகளும் விலாசமற்று, மதிப்பிழந்து அழிந்த வரலாறுகள் அறிந்தும் இன்னும் அதை உணர மறுக்கிறார்கள் ஊடகவர்த்தகர்கள். கோட்டு வாசலிலும், பொலிஸிலும் கற்பழிப்பு, கொலைச் செய்திகள் சேகரி;த்துப் பக்கங்கள் நிரப்புவதல்ல பத்திரிகைத் தொழில். சமூகத்தை நேர்மையோடும் பற்றோடும் நெறிப்படுத்துவதே ஊடகக்கடமை!

சிவா சுப்பிரமணியம் முற்போக்கான கருத்துக்களை, சமூக நடைமுறைக்குகந்த விடயங்களை, சமத்துவம் சார்ந்தவைகளை நேர்மையோடும், துணிச்சலோடும் முன்வைத்தார்! எனவே இவரை அறிந்திருப்பதும் வரவேற்பதும் இளைய பத்திரிகையாளருக்கும் மாணவசமூகத்துக்கும் பயனும் அவசியமும் ஆகும். அதைச் செய்ய இயலவில்லை! அப்படிச் சிவா போன்ற துணிவு, தகுதி இல்லையென்றால் எழுதுபவர்கள் எழுத்துத் தொழிலைக் கைவிடுங்கள் அதுவும் நல்லதுதான்.

யாழ்ப்பாணத்தில் பல்கலைக் கழகத்தின் வருகைக்கு அயராது உழைத்ததில் சிவாவின் பங்கு அதிகம். வரவிடாமல் தடுக்க உழைத்த பகுதியினர், பல்கலைக்கழகம் வந்தபின் காலத்துக்குக் காலம் மாணவர்களைத் தவறாகத் தூண்டிவிட்டு அரசியல் லாபம் தேடி அதிக பங்கு உழைக்கிறார்கள்.

இதுபோன்ற தீர்க்கதரிசனக் கருத்துகளோடு பல்கலைக்கழக ஆரம்பகாலத்தில் ஒரு பட்டிமன்றத்தில் கருத்து வைத்த சிவா பல்கலைகழக பட்டிமன்றமேடையால் இறங்கியதும் தமிழரசுக்கட்சி எம்.பி.தர்மலிங்கம் பெருந்தன்மையோடு சிவாவைப் பாராட்டினார். 'தம்பி உனது கருத்துக்களோடு நான் உடன்;படுகிறேன். ஆனால் நான் சார்ந்த அணிக்கு இதில் உடன்பாடில்லை. என்றபோதும் உன் கருத்துக்கள் வரலாறாகும்' என்றார்.. அப்டியொரு தூரநோக்கு அறிவுள்ள இடதுசாhரி சிவா.
பட்டங்களால் மட்டும் அறிவாற்றல் உருவாவதில்லை என்ற உண்மையை எனக்குணர்த்திய இரு தோழர்களை இவ்வாண்டின் கடந்த மாதம் நான் இழந்திருக்கிறேன். இவ்விரு இழப்புமே என்னுள் பாரிய பாதிப்பைத் தந்தவை. டாக்டர் கலாசபதிக்கு நிகரான ஆளுமையும் அறிவும் கொண்ட, நடமாடும் பல்கலைக்கழகம் என்று பேசப்பட்டவர் சிவா.சுப்பிரமணியம். எந்தத் துறைசார்ந்தும் எந்த நேரமும் அவரிடம் பதில் தேடலாம்.

இலக்கியமோ, அரசியலோ எழுத்தில் சுருக்கமும், நிதானமும், நேர்த்தியும் இவரது முத்திரைகள். இளவயது இடதுசாரி நட்பும், சிங்களத்தோழர்களின் ஈடுபாடும், மேடைப் பேச்சின் கனிவும், இலகுவான மொழிநடையில் சுருக்கமான மொழிபெயர்ப்பும் சிவாவிடம் போல் யாரிடமும் நான் பார்த்தது கிடையாது. தான் கற்றவற்றைப் புடமிட்டு மற்றவருக்குக் கற்றுக்கொடுப்பதில் அலாதிப்பிரியமுள்ளவர். இத்துணை ஆற்றல்களுக்கான அவரது ஊற்றுமூலம் எதுவென்றால்! மற்றவர் கருத்தையும் ஏற்று உள்வாங்கல், அயராத வாசிப்பு, கேள்வியுடன் கூடிய தேடல் இவைதான். வீட்டிலேயே ஒரு நூலகம் வைத்திருந்தார். தன் நேரங்களில் அதிக பக்கத்;தை அதனுள் புதைத்துவிடுவார்.

மூன்று தடவைகள் இலங்கை நிர்வாகசேவைப் பரீட்சையில் சித்தியடைந்தும் பதவிகிடையாமைக்கு சில பின்னணிக்காரணங்கள் இருந்திருக்கலாம். கிடைத்திருந்தால் இலங்கையின் வரலாறு ஒரு முற்போக்கான நிர்வாக அதிகாரியைச் சந்தித்திருக்கும். இதற்கு அவருக்கிருந்த அறிவு, மொழிப்புலமை, சமூகப்பார்வை இவை துணைபோயிருக்கும்.

இடதுசாரிகள் தம்மை அர்ப்பணிப்பதும், நேர்மை, தன்மானம் என்பவற்றில் உறுதியாக இருப்பதும் அவர்தம் சராசரி வாழ்வில் அவர்களை உயரவிடாத பின்னடைவுகளைச் சந்திக்கவைக்கிறது என்றாலும் அவர்கள் அதைநோக்கித் தளர்வதில்லை. அப்படியே சிவாவும்.

தினகரன் பத்திரிகையில் ஆசிரியராக இருந்துவிட்டுத் தொடர்ந்து இணைந்துபோக விருப்பமற்றுத் தானாகவே விலகினார். விலகியபோதும் எழுத்தைக் கைவிடவில்லை 2016, இவ்வாண்டு மே, கடந்த மாதம் இறுதிமூச்சை இழக்கும் வரை எழுதிக்கொண்டே இருந்தார்.

புதுயுகம், தேசாபிமானி இதழ்களிலும் தினக்குரல், கல்பனா, மல்லிகை, சிங்கள இதழ்கள், இல.முற்.போ. எழுத்தாளர் சங்கவெளியீடுகள் எனப் பலவற்;றை இவரது எழுத்துக்கள் அலங்கரித்தன.

இவர் எழுதிய 'இலங்கை அரசியல் வரலாறு ஒரு நோக்கு' என்ற புத்தகம் பல்கலைக்கழக மாணவர்களுக்கான சான்றாதார(குறிப்பு)க் கைநூலாகச் சிபார்சுபண்ணப்பட்டிருக்கிறது என்பதும் அவர்பற்றிய தகுதிக்கு சான்றுபகர்கிறது.

இவற்றோடு இலங்கைப் பாராளுமன்றக் கூட்டத்தொடர்களின் நிகழ்வுப்பதிவுகள் பாராளுமன்றம் தொடங்கிய காலத்திலிருந்து இறப்பதற்கு அண்மித்த நாட்கள் வரை இவர் தவறாமல் தொகுத்து வைத்திருந்தார் எனவும் அறியமுடிந்தது.

இன்னோரன்ன திறன்களோடு சர்வதேசத்தை, நாட்டை, மொழிகளை, சமூகங்களை, நேர்மையை அக்கறையோடு நேசித்த ஒரு மனிதனை சமூகத்துக்கு எடுத்துக்காட்டுவது என்பது எமக்கான சமூகக்கடமை! தினகரன் தவிர்ந்த இலங்கைப் பத்திகைகள், இணையங்கள் இக்கடமையிலிருந்து தவறிப்போயின. அதேவேளை புலம்பெயர் தேசங்களில் இயங்கும் இணையங்கள், ஊடகங்கள் ஒப்பீட்டளவில் இலங்கையைவிட அதிக அக்கறைகாட்டின!.
அந்த வகையில் புலம்பெயர் ஊடகங்கள் நன்றிக்குரியன!

Read more...

Sunday, May 29, 2016

ஒரு வருடத்தில் யாழ்ப்பாண கல்விநிலையை உயர்த்துவோம் – நீதிபதி இளஞ்செழியன்

நான் யாழ்ப்பாணத்திற்கு வரும் போது தண்டனைகள் தாம் சமூகத்தை திருத்தும் என நம்பிக் கொண்டு வந்தேன். ஏனெனில், முப்பது ஆண்டு கால யுத்தத்தின் அகோரம். மீண்டும் எங்களது சமுதாயம் மோசமான நிலைக்கு சென்றுவிடக் கூடாது. அதற்கு அனுமதிக்கவும் கூடாது. அதனைக் கட்டுப்படுத்துவதற்கு காலம் தான் பதில் சொல்லும் என்று சொல்லிக்கொண்டிருக்கவும் முடியாது.

திட்டமிட்டு, குறிக்கப்பட்ட காலவரையறைக்குள் யாழ்ப்பாணத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்ற அவாவில் தான் கல்முனையிலிருந்து யாழ். மேல்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்று வந்தேன். செய்கின்றேன், செய்துகொண்டிருப்பேன். செய்து முடிக்கும் வரையும் ஓய மாட்டேன். இதனை நான் உங்களுக்கு கூறிவைக்க விரும்புகின்றேன்.

எந்த தடங்கல்கள் வந்தாலும், நான் நேர்ப் பாதையில் செல்கின்றேன். குறுக்குப் பாதையில் வரும் தடைகள் அத்தனையினையும் வெட்டிக்கொண்டு போவேன். எங்களது சமூகம் நீதி நியாயமாக வாழவேண்டும். அதற்கு நீதி நியாயமான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். சட்ட ஒழுங்கிற்கு கட்டுப்படும் சமுதாயத்தை உருவாக்க வேண்டும். இந்த கோணத்தில் எங்களது பணி அமைந்திருக்கின்றது.

பட்டம் பதவிகள் வீட்டை அலங்கரிப்பதற்கல்ல. இதை வைத்து சமூகத்தை எவ்வகையில் வழிகாட்ட முடியும் என சிந்தித்து, அந்த வகையில் நாம் அதனை கொண்டு செல்ல வேண்டும்.

விசேடமாக நான் கவலைப்படும் ஒன்று எங்களது மாணவர் சமுதாயம் பற்றியது. மாணவர் சமுதாயம் என்பது சிறுவர்களைக் கொண்டது. அவர்கள் அப்பாவிகள். அந்த அப்பாவிகள் தடம்புரண்டு போக நாம் விடக்கூடாது. நீங்கள் ஒவ்வொருவரும் அந்த மாணவர் சமுதாயத்தை திருத்த வேண்டும். அதில் நீங்கள் மூர்க்கமாக இருங்கள். என்னுடன் ஒத்துழையுங்கள். ஒரு வருடத்தில் நாங்கள் யாழ்ப்பாணத்தில் 1970 ஆண்டிருந்த கல்வி கலாசாரத்தை ஏற்படுத்துவோம்.

இதனை ஏன் நான் கூறுகின்றேன் என்றால், முப்பது ஆண்டு காலம் நாம் கல்வியை இழந்து விட்டோம். இனியும் இழப்பதற்கு தயாரில்லை. இழந்த கல்வியை நாம் மீண்டும் பெற வேண்டும். 70ம் ஆண்டு கொடிகட்டிப் பறந்தது யாழ். மாவட்டம். அனைத்து பல்கலைக்கழகங்களையும் நிரப்பியது யாழ்.மாவட்டம். இன்று யாழ்.மாவட்டத்தின் கல்வி நிலையை பாருங்கள். 21ஆவது இடத்திற்கு யாழ்.மாவட்டம் தள்ளப்பட்டுள்ளது. ஒரு வருடம் அனைவரும் ஒன்று சேர்வோம். நீதிமன்றம் ஒன்று சேரும். அனைத்து சமூக சேவையாளர்களும் ஒன்று சேருங்கள். ஆசிரியர், அதிபர்கள் ஒன்று சேருங்கள். ஒரு வருடத்தில் யாழ்ப்பாணத்தில் சிறந்த கல்வித் தரத்தை கொண்டுவந்து, சிறந்த ஒழுக்கப் படையை கொண்டு வந்து பல்கலைக்கழகங்களை நிரப்ப வேண்டும். அதற்கு உங்களது ஒத்துழைப்பு தேவை.

நீங்கள் வாள்வெட்டுக்காரர்களுக்கு பின்னால் போகத் தேவையில்லை. கொள்ளைடிப்பவர்களுக்கு பின்னால் போகத் தேவையில்லை. அவர்களை நான் பார்த்துக்கொள்ளுவேன். அவர்களை அடக்க வேண்டியது என்னுடைய கடமை. நீங்கள் அப்பாவி மாணவர்களை அடக்குங்கள். அவர்கள் பாவம் அவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலையால் வழிமாறி செல்ல விடக்கூடாது. அந்த மாணவர் சமுதாயத்திற்கு நாங்கள் வழிகாட்ட வேண்டும். மாணவர்களை சிறந்த கட்டமைப்பிற்குள் கொண்டு வர நீதிமன்றம் மட்டும் போதாது. போலிஸ் மட்டும் போதாது. அனைத்து தரப்பினரும் அதற்கு முன்வர வேண்டும்.

கடந்த இரண்டு கிழமையாக யாழ்ப்பாணத்தில் அமைதி நிலவுகின்றது. அமைதி கொண்டுவரப்பட்டது. மூன்று கிழமைக்கு முன்னர் ஒரு இரவு நீங்கள் தூங்க முடியாத நிலை இருந்தது. கொள்ளைகள், வாள் வெட்டுக்கள், சந்தி சண்டித்தனங்கள் அனைத்தையும் பத்து பதினைந்து நாட்களில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளோம். அந்த கட்டுப்பாடு நிலைக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து நாங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும். கடந்த பத்து நாட்களாக தாங்கள் அமைதியாக இருக்க முடிவதாக மக்கள் எங்களுக்கு அறிவித்துக் கொண்டிருக்கின்றார்கள் எங்களுக்கு சந்தோசமாக இருக்கின்றது.

நீதிபதி என்ற முறையில் நான் எனது கடமையைத் தான் செய்ய வந்துள்ளேன். நீதிபதி என்பவரது கடமை என்ன? சமூகத்தில் நல்லொழுக்கமுள்ள பிரஜைகளை உருவாக்கி, சட்டம் ஒழுங்கிற்கு கட்டுப்படும் சமுதாயத்தை உருவாக்கி, நீதியை நிலைநாட்ட வேண்டிய கடமைப்பாடு நீதிபதிக்கு உண்டு. அந்த வகையில் எனது கடமைகளை செய்கின்றேன். தண்டனை மட்டும்தான் சமுதாயத்தை திருத்தும் என்பது எனது வாதம். அதற்காக மாணவர் சமுதாயம் தண்டிக்கப்படக் கூடாது என்பதும் எனது வாதம். ஏனெனில் அவர்கள் சிறுவர்கள், அப்பாவிகள். பதினெட்டு வயதிற்கு குறைந்த அவர்களுக்கு பிரச்சினைகளின் பாரதூர தன்மைகள் விளங்காது.

எனது கைகள் நடுங்குகின்றன. ஒரு மாணவனை விளக்கமறியலுக்கோ, சிறைச்சாலைக்கோ அனுப்புவதற்கு எனது கரங்கள் மறுக்கின்றன. எனது இதயம் மறுக்கின்றது. மாணவர்களை விளக்கமறிலுக்கு அனுப்ப நான் தயங்குகின்றேன். சட்டத்தின் முன் யாவரும் சமன். எனினும் மாணவர்களின் நலன் எனக்குத் தேவை.

சிறந்த பெற்றோர்கள், சிறந்த கல்விமான்கள் இங்கு இருக்கின்றார்கள். நீங்கள் மாணவர் சமுதாயத்திற்கு வழிகாட்டுங்கள். வீதிகளில் மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் போதும், அவர்கள் பாடசாலையை விட்டு திரும்பும் போதும் போக்குவரத்து சட்டத்தை கடைப்பிடிக்கும் படி அவர்களுக்கு கூறுங்கள்.
தயவு செய்து உங்கள் பெண் பிள்ளைகளை கவனமாக பாதுகாக்க வேண்டும். அவர்கள் ரியூசனுக்கு செல்லும் போது அவர்களை கண்காணிக்க வேண்டும். ரியூசன் நடைபெறுகின்றதா? பிள்ளை பாடசாலைக்கு சென்றாவா என்பது குறித்தெல்லாம் பெற்றோராகிய நீங்கள் அவதானமாக இருக்க வேண்டும். சம்பவம் ஒன்று நடந்து முடிந்ததன் பின்பு வழக்கு விசாரணைகள் எல்லாம் இரண்டாவது விடயம். நடப்பதற்கு முன்னர் பாதுகாக்க வேண்டும். குற்றத்தை எப்படி தடுப்பது- குற்றச்செயலிலிருந்து மக்களை எப்படி பாதுகாப்பது என்பது தான் முதலில் எங்களுக்கு தேவையானது.

யாருமே பிறப்பால் கிரிமினல்கள் இல்லை. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை அவர்களை கிரிமினல்களாக்குகின்றது. அவ்வாறான சந்தர்ப்ப சூழ்நிலை அமைய நாம் இடமளிக்கக் கூடாது.
சந்திகளில் கூடுவதை நாம் நிறுத்த வேண்டும். ஐந்து பேருக்கு மேல் சந்திகளில் கூடி நின்றால் அது சட்டவிரோத கூட்டம். கைது செய்யப்பட்டால் இரண்டு வருட சிறைத் தண்டனை. பெண்பிள்ளையின் கையைப் பிடித்தால் ஐந்து வருடங்கள் சிறைத் தண்டனை. பெண்பிள்ளையை கடத்தினால் ஏழு வருட சிறைத்தண்டனை. பாலியல் வல்லுறவிற்கு இருபது வருட சிறைத் தண்டனை. கொலை செய்தால் மரண தண்டனை. இது சட்டப் புத்தகத்தில் எழுதப்பட்டுளளது. இதனை நாங்கள் நடைமுறைப்படுத்தியே ஆகவேண்டும்.

நான் யாழ். மாவட்டத்திற்கு வந்ததன் பின்னர் ஒன்பது மரணதண்டனைகளை விதித்துள்ளேன். இருபதிற்கு மேற்பட்டோருக்கு 10 வருடங்களுக்கு மேற்பட்ட சிறைத் தண்டனைகளை வழங்கியுள்ளேன். நடந்தவை கொலை, பாலியல் வல்லுறவு, ஆட்கடத்தல் போன்ற பாரிய குற்றங்கள். இதற்கெல்லாம் ஆலோசனைகள் கிடையாது. தண்டனைகள் மட்டுமே தீர்ப்பு. இவ்வாறான தண்டனைகள் மூலம் குறுகிய காலகட்டத்தில் யாழ்.மாவட்டத்தில் நல்லதொரு சமுதாயத்தை கட்டமைப்பது என்னுடைய கடமை. அதற்கு ஒத்துழைக்க வேண்டியது மக்களாகிய உங்களது கடமை.

நான் நேரான பாதையில் செல்கின்றேன் நீஙகள் என்னுடன் வாருங்கள். செய்வோம். இன்னும் ஒரு வருடத்தில் எங்களது கல்வி உச்சநிலையை அடைய வேண்டும்.

நான் படித்தது பரியோவான் கல்லூரியில். அங்கு ஒழுக்கத்தை சொல்லித் தந்தார்கள் வழிநடத்தினார்கள். படித்தேன், இன்று நீதிபதியாக வந்து நிற்கின்றேன். ஒவ்வொரு மாணவனுக்கு பின்னால் ஒரு ஆசிரியர் நிற்பார். ஒரு தந்தை நிற்பார். அவர்களுக்கு ஒழுக்கத்தையும் கவ்வியையும் சொல்லிக் கொடுங்கள். அவர்களை எதிர்கால நாயகர்களாக்குங்கள். இது உங்களுடைய கையிலுள்ளது.

இளைஞர்களை பெற்றெடுத்த பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளுக்கு ஆலோசனை வழங்குங்கள். சட்டத்தின் வரம்புகளை மீற வேண்டாம் என்று சொல்லுங்கள். ஒழுங்குகளை மீற வேண்டாம் என்று சொல்லுங்கள்.

சுதந்திரம் என்பது என்ன? உன்னுடைய விரலை எனது மூக்கு நுனிவரை கொண்டு வருவது உனது சுதந்திரம். மூக்கைத் தொட்டால் உனது மூக்கை உடைப்பது எனது சுதந்திரம். அது தான் தற்காப்பு சுதந்திரம். அதனை நீங்கள் பின்பற்றுங்கள். ஒவ்வெருவருக்கும் தற்காப்பு உரிமை உண்டு. அதனை நீதிமன்றில் வந்து சொன்னாலும் பயமில்லாமல் சொல்லுங்கள். என் கையை பிடித்தான் மூக்கை உடைத்தேன், என் தங்கையின் கையை பிடித்தான் அவனது மூக்கை உடைத்தேன் என பயமில்லாமல் சொல்லுங்கள். நீதிமன்றம் உங்களை விடுதலை செய்யும்.

ஏனெனில், அதுதான் தற்காப்பு உரிமை. சட்டப் புத்தகத்தில் உள்ளது. ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல், மரணம் விளைவிக்கும் சந்தர்ப்பத்தில் அவரை கொலை செய்யலாம். இதனை தற்காப்புரிமை என சட்டம் சொல்கிறது. என்னை ஒருவன் கொல்ல வருகின்றான் என்றால், நான் இரண்டு கைகளாலும் அவனை கும்பிட்டுக்கொண்டிருக்க மாட்டேன். எதிர்த் தாக்குதல் நடத்துவேன். அதனால் அவன் இறந்தால் அது எனது தற்காப்புரிமை. ஆகவே தற்காப்புரிமை எல்லோருக்கும் உள்ளது.

மாணவர்களுக்கு வழிகாட்டுங்கள். இளைஞர்களுக்கு வழிகாட்டுங்கள். ஒரு ஒழுக்கப் படையை அமையுங்கள். பாடசாலைகளில் ஒழுக்கப் படைகளை அமையுங்கள். நல்லதொரு கல்விச் சமுதாயத்தை உருவாக்குவோம். ஒரு வருடத்தில் எங்களது பல்கலைக்கழகங்கள் மாணவர்களால் நிரப்பப்பட வேண்டும். யாழ்.குடாநாடு சரித்திரம் படைக்கின்ற இடமாக மாற வேண்டும்.

வாள்வெட்டு, கொள்ளை, கடத்தல் சொல்லவே வெட்கமாக இருக்கின்றது.

வெளி மாவட்டங்களுக்கு நான் நீதிபதியாகப் போகின்றேன். தற்போதும் போகின்றேன். திருகோணமலை மாவட்டத்திற்கு நீதிபதியாக போகின்றேன். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு போகின்றன். இங்கெல்லாம் பதில் நீதிபதியாக போய் வருகின்றேன். அங்கு கேட்கின்றார்கள் யாழ்ப்பாணத்தில் என் இவ்வாறெல்லாம் நடக்கின்றது என்று. அது எப்படிப்பட்ட ஊர் அந்த ஊரில் ஏன் வாள்வெட்டு நடக்கிறது. அங்கு ஏன் போதைவஸ்து வந்தது. ஏன் சந்தியில் நின்று அடிபடுகின்றார்கள். யாழ்ப்பாணத்தின் பண்பாடு, கலாசாரம் எல்லாம் எங்கு போனது? இன்றும் நாங்கள் யாழ் நூலகத்தை ஆசியாவின் கல்விக்களஞ்சியம் என்று கூறிவருகின்றோம். பெருமைப்படுகின்றோம். அப்படிப்பட்ட யாழ்ப்பாணம் இன்று ஏன் இவ்வாறான பாதையில் செல்கின்றது? இதனைத் திருத்துங்கள் என அங்கு அவர்கள் என்னிடம் கேட்கின்றார்கள். நான் என்னால் இயன்றவரை செய்வேன்.

சட்டம், சமுதாயம், கலாச்சாரம், பாரம்பரியம் என்பவற்றை உள்ளடக்கி, என்னால் இயன்ற அனைத்து சேவைகளையும் நான் செய்வேன்.

ஐ.நா. விசேட அறிக்கையாளர்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்தார்கள். நீதித்துறையின் விசேட அறிக்கையாளர்கள், சித்திரவதை தொடர்பான விசேட அறிக்கையாளர்கள். அவர்கள் வந்த சமயம் யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவங்கள் உச்சக்கட்டத்திலிருந்தன. என்னைக் கேட்டார்கள் என்ன நடைபெறுகிறது என்று. என்னால் பதில் சொல்ல முடியவில்லை. நான் ஒரு நீதிபதியாக இருந்தும், என்னால் பதில் சொல்ல முடியவில்லை. எனது இயலாமை வெளிக்காட்டப்பட்டுவிடுமோ என பயந்தேன். பின்னர் கடும் நடவடிக்கை எடுத்தேன். தற்போது சட்டம் ஒழுங்கு ஓரளவிற்கு கட்டுப்பட்டிற்குள் வந்துள்ளது. தொண்ணூறு வீதமான மக்கள் நிம்மதியாக இருக்கின்றார்கள். அனைவரதும் ஒத்துழைப்பு எனக்குத் தேவை. நீதிபதியான நான் நீதிமன்றத்திற்குள்ளும் வெளியிலும் எனது கடமையை செய்வேன். யாழ்ப்பாணம், கிளிநொச்சி இரு மாவட்டங்களுக்கும் கடமை நீதிபதி நான்தான். அந்த வகையில் என்னால் இயன்றவற்றை செய்வேன்.

குடாநாடு அமைதியாக இருக்க வேண்டும். எங்களது பெண்கள் யாழ். வீதிகளில் இரவு 12 மணிக்கும் சுத்நதிரமாக நடமாடும் குரல்கள் எமக்கு கேட்க வேண்டும். அந்தப் பெண்கள் தாங்களுக்கு எவ்வித பாதகாப்பும் தேவையில்லை நாங்கள் சுதந்திரமாக இருக்கின்றோம் என்று கூறும் சமுதாய கட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். அந்த குரல்கள் கேட்கும் போது நான் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறுவேன்.

நான் எப்பொதும் நேசிப்பது மூன்று இனங்களும் வாழும் மாவட்டத்தில் நீதிபதியாக இருப்பதைத்தான். ஏனெனில், அங்குதான் பிரச்சினைகள் அதிகம். அந்த வகையில் வவுனியாவில் ஒன்பது வருடங்கள் இருந்தேன். திருகோணமலையில் நான்கு வருடங்கள் இருந்தேன். கல்முனையில் மூன்று வருடங்கள் இருந்தேன். இன்று 99 வீதத்திற்கும் அதிகமான தமிழர்கள் வாழும் தனித்தமிழ் மாவட்டத்தில் கடமையாற்றுகின்றேன். மகிழ்ச்சியாக இருக்கின்றது. இது நான் பிறந்த மாவட்டம். நான் பிறந்த இந்த மாவட்டத்திற்கு நான் ஒரு கடமையை செய்யக் கூடாதா? பிறந்த மண்ணிற்கு செய்யும் அந்த கடமை என்னை அழைக்கின்றது. அதனை நான் செய்கின்றேன். அதனை நாங்கள் அனைவரும் இணந்து செய்வோம்.

(யாழ்ப்பாணத்தில் சர்வோதயம் நிறுவனம் நடத்திய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு, யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் ஆற்றிய உரை)

Read more...

Tuesday, May 17, 2016

‘ராஜீவ்காந்தி கொலையின் நேரடி சாட்சி ‘போட்டோகிராபர் ஹரிபாபு உயிரோடு இருக்கிறார்!’ -ஆவணப்பட அதிர்ச்சி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டு 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. ‘படுகொலைக்குக் காரணமானவர்கள்’ என சி.பி.ஐயால் சொல்லப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர், தங்களது விடுதலையை எதிர்நோக்கிக் காத்துக் கிடக்கிறார்கள்.

ராஜீவ்காந்தி படுகொலையின் மிக முக்கிய ஆவணம் என ஜெயின், வர்மா கமிஷன் விசாரணைகளில் குறிப்பிடப்பட்டது சம்பவ இடத்தில் போட்டோகிராபர் ஹரிபாபு எடுத்த புகைப்படங்களைத்தான். சர்வதேச அரங்கையும் இந்தப் புகைப்படங்கள் உலுக்கியது. ” ஸ்ரீபெரும்புதூர் குண்டுவெடிப்பில் ஹரிபாபு இறந்துவிட்டாலும், அவர் எடுத்த புகைப்படங்களால்தான் குற்றவாளிகளை நெருங்க முடிந்தது” என பெருமைப்பட்டுக் கொண்டார் சி.பி.ஐ இயக்குநராக இருந்த கார்த்திகேயன்.

இந்நிலையில், ” போட்டோகிராபர் ஹரிபாபு இறந்துவிட்டார் என அதிகாரிகள் சொல்வது சுத்தப் பொய். அவர் உயிரோடுதான் இருக்கிறார். அவரை வேண்டுமென்றே அதிகாரிகள் தப்ப வைத்தார்கள். சம்பவ இடத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது அவருடைய கேமராவும் அல்ல. அத்தனையும் நாடகம்” என அதிர வைக்கிறார்கள் இரண்டு மருத்துவர்கள். தடய அறிவியல் ஆய்வு அறிக்கை, ஹரிபாபுவின் போஸ்ட்மார்ட்டம் அறிக்கை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் ஆவணங்கள் என எட்டு ஆண்டுகளாக இதற்காகப் பயணித்து, பல புது தகவல்களைக் கண்டறிந்திருக்கிறார்கள்.

வருகிற மே 21-ம் தேதி ராஜீவ்காந்தி படுகொலை தினத்தன்று ‘பைபாஸ்’ என்ற தலைப்பில், ஆவணப்படத்தை வெளியிட இருக்கிறார்கள். கோவையைச் சேர்ந்த மருத்துவர் ரமேஷ் மற்றும் கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தி ஆகிய இருவரும்தான், ஹரிபாபுவை நோக்கிக் காய்களை நகர்த்தியவர்கள்.

கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தியிடம் பேசினோம்…

ஹரிபாபுவை நோக்கிப் பயணிக்கும் யோசனை எப்படித் தோன்றியது?

” எங்களுக்குத் தொடக்கம் முதலே ராஜீவ்காந்தி படுகொலையின் தடய அறிவியல் அறிக்கை, போஸ்ட்மார்ட்டம் உள்ளிட்ட பல விஷயங்களில் சந்தேகம் இருந்தது. கோவையைச் சேர்ந்த என்னுடைய நண்பர் மருத்துவர் ரமேஷ், படுகொலை வழக்கின் ஆவணங்களைத் தேடும் முயற்சியில் இறங்கினார். ஜெயின் கமிஷன், வர்மா கமிஷன் ஆகிய இரண்டிலும், ‘குற்றத்தைப் பற்றிய விடை தெரிவதற்கு மிக முக்கியமான காரணம், ஹரிபாபு எடுத்த கேமராவும் படங்களும்தான் முழு வழக்கையும் முடிவுக்குக் கொண்டு வந்தது’ என்றது.

எங்களுடைய கேள்வியெல்லாம், ‘ஹரிபாபு இறந்துவிட்டார். ஆனால், அவருடைய கேமரா மட்டும் எப்படி பாதிப்படையாமல் போனது?’ என்பதுதான். ‘தாமரை பூ வடிவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது’ என்கிறது புலனாய்வு அறிக்கை. அப்படி வெடிக்கும்போது கேமரா பாதிப்படையாமல் இருக்காது என சந்தேகப்பட்டோம். அப்போது எங்களுடைய சந்தேகங்களுக்கு விடை கிடைக்கவில்லை. இதுதொடர்பான ஆவணங்களைப் பெறுவதற்கே மிகவும் கஷ்டப்பட்டோம்.

2008-ம் ஆண்டு ராஜீவ் படுகொலை வழக்கைக் கையாண்ட தடய அறிவியல் துறை பேராசிரியர் சந்திரசேகர், ‘ஃபர்ஸ்ட் ஹியூமன் பாம்’ என்ற புத்தகத்தை எழுதினார். அதில் பல கேள்விகளுக்கு விடை கிடைத்தன. ‘கேமரா எப்படி பாதிப்படையாமல் கிடைத்தது?’ என்ற கேள்விக்கு பதில் சொல்லும் சந்திரசேகர், ‘ பூகம்பம் நடக்கும்போது அதிர்ஷ்டவசமாக சிலர் இடிபாடுகளுக்கு நடுவிலும் பாதுகாப்பாக வெளிவந்திருக்கிறார்கள். அதைப் போலத்தான் கேமராவும் கிடைத்தது’ என்கிறார்.

ஆனால், ‘ கிரைம் சீன் இன்வெஸ்டிகேஷன்களில் இதுபோன்ற உவமைகள் எடுபடாது, சம்பவ இடத்தின் நிலவரத்தைப் பொறுத்து அறிவியல்ரீதியாகப் பேச வேண்டும்’ என அமெரிக்காவின் டாபெர்ட் வழக்கின் புலனாய்வு வழிமுறைகள் சொல்கிறது. டாபெர்ட் வழக்கின் புலனாய்வு முறைகளைச் சரியாகக் கையாண்டிருந்தால், இந்த வழக்கின் போக்கே திசைமாறியிருக்கும். அப்படி எதையும் புலனாய்வுத் துறை செய்யவில்லை. நாங்கள் டாபெர்ட் நடைமுறைகளைக் கையாண்டு விசாரணையைத் தொடங்கினோம்.”

ஹரிபாபு சாகவில்லை என்பதை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?

” ஹரிபாபுவின் போஸ்ட்மார்ட்டம் அறிக்கையைத் தேடினோம். அந்த அறிக்கையில், ‘இறந்த நபருக்கு சுன்னத் செய்யப்பட்டிருக்கிறது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘வன்னிய சமூகத்தைச் சேர்ந்த ஹரிபாபு எப்படி சுன்னத் செய்வார்?’ தவிர, ‘அந்த சடலத்தின் வயது 30’ என்கிறார்கள். ஹரிபாபுவுக்கு 22 வயதுதான் ஆகிறது. ராஜீவ் காந்தியை படம் எடுக்கும்போது, அவர் நடந்துவரும் கார்பெட்டின் இடதுபக்க மூலையில் இருந்திருக்கிறார் ஹரிபாபு. அங்கிருந்துதான் போட்டோ எடுத்தார். ஆனால், அவரது உடலை வலது பக்கம் இருந்து எடுத்ததாகச் சொல்கிறார்கள். குண்டு வெடித்தாலும் உடல் வலது பக்கம் வந்து விழுவதற்கு வாய்ப்பே இல்லை.

‘உங்கள் மகனின் உடல் இது’ என போலீஸார் சொன்னதைக் கேட்டு, அவரது அப்பா சுந்தரமணி உடலைக் கையெழுத்து போட்டு வாங்கியிருக்கிறார். ‘சடலத்தை எரிக்கக் கூடாது, புதைக்க வேண்டும்’ எனப் போலீஸார் கூறியிருக்கிறார்கள். ஆனாலும், ஹரிபாபு குடும்பத்தினர் அன்றைக்கே உடலை எரித்துவிட்டார்கள். மருத்துவர்கள் அந்த சடலத்தில் இருந்து தலையை வெட்டி எடுத்திருக்கிறார்கள். அவர் முகம் முற்றிலும் சிதைந்துவிட்டது எனச் சொல்கிறார்கள். சடலத்தில் இருந்து கை ரேகை மட்டும் எடுத்தவர்கள், டி.என்.ஏ சாம்பிள் எடுக்கவில்லை. மருத்துவர்களும், ‘ஏன் சுன்னத் செய்யப்பட்டிருக்கிறது?’ எனவும் கேள்வி எழுப்பவில்லை. ஹரிபாபுவின் அக்கா விஜய ரேவதி சொல்லும்போது, ‘கிரீம் கலர் சட்டை அணிந்திருந்தான்’ என்கிறார். ஆனால், போலீஸோ, ‘ பச்சை கலர் முழுக்கை சட்டை’ எனச் சொல்கிறார்கள். இதையெல்லாம் யாரும் கேள்வி எழுப்பவில்லை.”

அப்படியானால், போலீஸார் காட்டும் சடலம் யாருடையது?

” அதற்கும் எங்களுக்கு விடை கிடைத்தது. ஸ்ரீபெரும்புதூரில் சுலைமான் சேட் என்று ஒருவர் இருக்கிறார். அவர்தான் ராஜீவ்காந்தி நடந்து வரும்போது பூ தூவுவதற்காக இருவரை ஏற்பாடு செய்திருந்தார். அவர்கள் இருவரும் முஸ்லிம்கள். கண்டிப்பாக இந்த இருவரில் ஒருவரைத்தான் ஹரிபாபு எனக் காட்டியிருக்கிறார்கள் என்று எங்களுக்குத் தோன்றுகிறது. இரண்டு பூக்கூடைகள் சம்பவ இடத்தில் இருந்தது என புலனாய்வு அறிக்கை சொல்கிறது. சுப்ரமணியன் சுவாமியும் இரண்டு பூக்கூடை இருந்ததாகச் சொல்கிறார். ”

இந்த விவகாரத்தில் தவறு செய்தது யார்?

“கிரைம் சீன் இன்வெஸ்டிகேசன் என்பதே இந்த வழக்கில் முற்றிலும் மீறப்பட்டிருக்கிறது. முன்னுக்குப்பின் முரணான தகவல்களைச் சொல்கிறார் தடய அறிவியல் பேராசிரியர் சந்திரசேகர். சம்பவ இடத்திற்கு மறுநாள் காலை 11 மணிக்குப் போனதாகச் சொல்லியிருக்கிறார்.
இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்
மகாலட்சுமிக்கு ஸ்ம்ரிதி இரானியின் அடடே விளக்கம்!

ஆனால், கே.ராமசுந்தரம் என்ற ஃப்ரீலான்ஸ் நிருபர், தன்னுடைய பிளாக்கில், ‘மே 22-ம் தேதி எனக்குப் பேட்டி கொடுத்தார் சந்திரசேகர்.ராஜீவ்காந்தியின் ஷூ, மனித வெடிகுண்டு தனுவின் தலையில் இருந்த கனகாம்பரம், பச்சை கலர் சல்வார், ஆரஞ்ச் கலர் பாட்டம், வெடிகுண்டுக்கு பயன்படுத்திய சுவிட்ச் ஆகியவற்றைக் காட்டினார் சந்திரசேகர். நான் அதை வீடியோ எடுத்தேன். சம்பவ இடத்திற்கு முதல்நாள் இரவே சந்திரசேகர் போய்விட்டார்’ என எழுதியுள்ளார். இந்த வீடியோப் பதிவுகள் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் மற்றும் கனடாவின் டோரண்டோ ஸ்டார் ஆகியவற்றில் வெளியானது.”

இப்படிச் செய்ய வேண்டிய அவசியம் என்ன?

“இந்த வழக்கின் மிக முக்கியமான கேள்வி இது. சம்பவ இடத்தில் இருந்து காயத்தோடு ஹரிபாபுவை மீட்டவர்கள், அவரைத் தப்பியோட வைத்துவிட்டார்கள். இதற்குப் பின்னால் ஏராளமான மர்மங்கள் இருக்கின்றன.”

அப்படியானால், ஹரிபாபு இப்போது எங்கே இருக்கிறார்?

“அவர் இப்போது பக்கத்து மாநிலம் ஒன்றில் சாமியார் வேடத்தில் இருக்கிறார். அவரைத் தப்பவிட்டது யார்? என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு அவரிடம் விடை இருக்கிறது. அவரது குடும்பத்தினர் சென்னையில் குடியிருந்தார்கள். இப்போது வேறு இடத்திற்குப் போய்விட்டார்கள்.”

ஆவணப்படம் எப்போது வெளியாகும்?

” ராஜீவ்காந்தி படுகொலை தினத்தன்று வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம். தவறான நீதியால் ஏற்பட்ட விளைவுகளைச் சொல்லும் சிலப்பதிகாரக் கதை நடந்த பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறோம். ஒரு மணி நேரம் ஓடக் கூடிய படம் இது. வழக்கின் பல மர்மங்களை அவிழ்க்கும் மிக முக்கியமான ஆவணப்படமாகவும் இது இருக்கும்!” என விரிவாகப் பேசி முடித்தார் மருத்துவர் புகழேந்தி.

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கு பற்றிய விவாதம் வரும்போதெல்லாம், ‘உண்மைக் குற்றவாளிகள் அரசு பதவிகளில் அமர்ந்து கொண்டு உலா வருகிறார்கள். தவறே செய்யாதவர்கள் இளமையைத் தொலைத்துவிட்டு, நோயோடு சிறைகளில் வாடுகிறார்கள்’ என்பார்கள். அது உண்மைதானோ!?

– ஆ.விஜயானந்த்

(Vikatan)

Read more...

அல்பிரட் துரையப்பாவின் கொலை. ராஜன் கூல்

ஜூலை 83க்கான முன்னுதாரணங்களும் மற்றும் தண்டனை விலக்குக்கான அடித்தளமும்

அல்பிரட் துரையப்பா 1960 – 1965 வரை யாழ்ப்பாணத் தொகுதியின் சுயேச்சை பாராளுமன்ற Alfred-Duraiappahஉறுப்பினராக இருந்தார், மற்றும் பலமுறை மேயராகவும் பதவி வகித்த பிரபலமான மனிதர். பல தமிழ் தேசியவாதிகளால் இது நிராகரிக்கப்பட்ட போதிலும், உண்மை என்னவென்றால் எல்லா தோதல்களிலும் யாழ்ப்பாண தொகுதியில் வாக்குகள் அவர், தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழரசுக் கட்சி என்பனவற்றுக்கு இடையில் சமமாகப் பிரிபட்டு வந்துள்ளன. அரசியலில் சிறந்த உதாரணமாக அல்லது கொள்கைவாதியாக தன்னை பிரதிநிதிப் படுத்துவதற்காக அவர் விண்ணப்பம் செய்வதற்கான தேவை எதுவும் இருக்கவில்லை. அவர் தனது தொகுதி மக்களை தனிப்பட்ட முறையில் தனித்தனியாக நன்கு அறிவார், மற்றும் ஒவ்வொருவரும் அவரைத் தன் குடும்பத்தில் ஒருவராக உணரும் விதத்தில் நடக்க முயற்சித்தார். அவர் வீதிகளில் மக்களைச் சந்திக்கும்போது அவர்களுக்கு வாழத்துச் சொல்லி அவர்களது படிப்பு மற்றும் தனிப்பட்ட விடயங்கள் தொடர்பாக விசாரிப்பார். சாதாரண வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு வேண்டிய மக்களின் தேவைகளை அவர் பூர்த்தி செய்துவந்தார். வேலைகள், இடமாற்றம், சந்தைக் கட்டிடம், பொதுக் கழிப்பறைகள் மற்றும் தெரு விளக்குகள் போன்றவற்றை அவர் நிறைவேற்றி வந்தார். அவரது அரசியல் பாணிக்கு அரசாங்கத்தின் புரவலர்தன்மை பொருத்தமாக இருக்கும் என்பதினால் அவர் தன்னை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைத்துக் கொண்டார்.

யாழ்ப்பாணத் தொகுதிக்கு வெளியே தன்னைக் காட்டிக்கொள்ள முனைப்புக் காட்டியதில்லை, ஆனால் அந்த கௌரவமான தொகுதியில் தேசியவாதிகளான தமிழர் ஐக்கிய முன்னணிக்கு (தமிழரசுக் கட்சிக்கு) ஒரு வலிமையான சவாலாகத் திகழ்ந்தார். அவர் கணிசமானளவு வணிகர்கள், முஸ்லிம் மற்றும் சிங்கள சமூகத்தினரையும் மற்றும் நகரில் உள்ள வறிய மக்களையும் கொண்ட ஒரு வாக்கு வங்கியை தனதாக்கி வைத்திருந்தார். துரையப்பாவின் இந்த புகழ் தேசியவாதிகளுக்கு எரிச்சலை மூட்டியது. தேசத்தை பற்றிய சில தெளிவற்ற யோசனைகளை கடைப்பிடிப்பதற்காக, மக்கள் தங்கள் சாதாரண தேவைகள் மற்றும் வாழ்க்கையின் விருப்பங்கள் அனைத்தையும் தியாகம் செய்யத் தயாராக உள்ள ஒரு பொய்யான தோற்றம் உடைய யாழ்ப்பாணத்தின் உயர்வான ஒரு சமூகத்தின்மீது அவர்கள் அந்த தேசியவாதத்தை திணிக்க முற்பட்டார்கள். இந்த பாசாங்குத் தனத்தை துரையப்பா பகிரங்கப் படுத்தினார்.

1972ல் தமிழர் ஐக்கிய முன்னணி (தமிழரசுக்கட்சி) துரையப்பாவை துரோகி, மற்றும் சாவதற்கே லாயக்கானவர் என அழைத்து அவர்மீது திட்டமிட்ட தாக்குதல்களைத் தொடங்கியது. ஆரம்பத்தில் அது யாழ்ப்பாண தொகுதியை வெல்வதற்கான ஒரு சிறு சண்டை போலவே இருந்தது. ஆனால் அவர்கள் அதிகம் வலியுறுத்தியது போல, தாங்கள் நினைப்பதுதான் சரியானதும் மற்றும் இயற்கையானதும் அவரது முடிவும் அப்படியே நடக்கவேண்டும் என நம்பத் தொடங்கினார்கள். ஜனவரி 1974ல் நடைபெற்ற சர்வதேச தமிழராய்ச்சி மாநாடு துரையப்பாவை இழிவுபடுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாக இருந்தது.

இந்த தொடர் ஆராய்ச்சி மாநாடு புகழ்பெற்ற கல்விமானான பிதா. எக்ஸ். தனிநாயகம் என்னும் திறமையான தமிழ் கல்விமானால் நடத்தப்பட்டது. இந்த தொடரின் முதல் மாநாடு 1966ல் கோலலம்பூரில் நடந்தது மற்றும் அதை பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் தொடங்கி வைத்தார். மலேசிய அரசாங்கம் அதற்கு தாராளமான ஆதரவு வழங்கியது. 1974ம் ஆண்டு மாநாடு ஆரம்பத்தில் கொழும்பில் நடக்கும் என எதிர்பார்க்கப் பட்டது, ஆனால் அதன் அமைப்பாளர்கள் மாநாட்டை யாழ்ப்பாணத்துக்கு மாற்ற முடிவு செய்தார்கள்.

இந்த மாநாடு யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டதும், தமிழர் ஐக்கிய முன்னணி (ரி.யு.எப்) தவிர்க்க முடியாதபடி அதன்மூலம் அரசியல் மூலதனம் தேட ஆரம்பித்தது. (குறிப்பு:- தமிழரசுக் கட்சி (எப்.பி) ஒரு பெரிய கூட்டணியாக தமிழ் காங்கிரஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பனவற்றுடன் இணைந்து 14 மே 1972ல் தமிழர் ஐக்கிய முன்னணியை (ரி.யு.எப்) உருவாக்கியது. இந்த தமிழர் ஐக்கிய முன்னணி ஸ்ரீலங்காவில் இருந்து பிரிந்து செல்லும் கொள்கையை இணைத்துக் கொண்டபின் 14 மே 1976ல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியாக (ரி.யு.எல்.எப்) மாறியது. அப்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தாங்கள் பிரிவினையுடன் உடன்பட முடியாது என தெரிவித்து கூட்டணியில் இருந்து வெளியேறியது). எனினும் மாநாட்டை யாழ்ப்பாணத்துக்கு மாற்றுவதற்கு நல்ல பல காரணங்கள் இருந்தன மற்றும் ஏற்பாட்டாளர்கள் ரி.யு.எப் இனது திட்டப்படி நடந்தார்கள் என நம்புவதற்கான எந்தக் காரணமும் இருக்கவில்லை. ஆனால் அரசாங்கம் பதற்றமடைந்திருந்தது, மாநாட்டுக்காக ஸ்ரீலங்காவுக்கு வருகை தந்த நான்கு பிரதிநிதிகள் திருப்பி அனுப்பப் பட்டார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தில் இந்த நிகழ்வு பற்றி பொதுமக்களிடம் பெரிதான ஆர்வம் ஏற்பட்டிருந்தது. கல்வியல் சார்ந்த மாநாடு வீரசிங்கம் மண்டபத்தில் ஜனவரி 3ம் திகதி முதல் 9ம் திகதி வரை நடைபெற்றது. வெளிநாட்டு பிரதிநிதிகளின் பேச்சை மேலும் கேட்கவேண்டும் என மக்களிடமிருந்து அதிக வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டதால், இந்த பொது நிகழ்வு 10 ந்திகதி மாலை வரை நீட்டிக்கப்பட்டது.

கூட்டத்தை நடத்துவதற்கான காவல்துறையினரினரால் வழங்கப்பட்ட அனுமதி 9ந் திகதியுடன் முடிவடைந்ததால் மாநாட்டின் பிரதம ஏற்பாட்டாளர் கலாநிதி. மகாதோவாவுக்கும் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சந்திரசேகராவுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு கனவான் ஒப்பந்த புரிந்துணர்வின்படி 10 ந்திகதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதியான ஜனார்த்தனன் என்பவர் ஒரு பிரதிநிதியாக இல்லாதபடியால் அவர் கூட்டத்தில் பேசமாட்டார் என்கிற உத்தரவாதம் மகாதேவாவினால் வழங்கப்பட்டது. சில சாட்சிகள் தெரிவிப்பதின்படி ஜனார்த்தனன் அன்று மாலை 2ம் குறுக்குத் தெருவில் உள்ள ரி.யு.எப் இனது அலுவலகத்தில் அமிர்தலிங்கத்துடன் பேசிக்கொண்டிருந்தாராம். ஆனால் அவரது இருப்பின் சட்டபூர்வ தன்மை பற்றிய கேள்வி ஒன்றில் கிறீற்ஷர் அல்லது சன்சோனி ஆணைக்குழுக்களால் எழுப்பப்படவில்லை மற்றும் சன்சோனி தெரிவிப்பதன்படி, ஏ.எஸ்.பி சந்திரசேகரா முதல்நாள் ஜனார்த்தனனை எதிர்கொண்டு பொதுஇடத்தில் பேசக்கூடாது என எச்சரிக்கை செய்திருந்தாராம்.

மாநாட்டு அமைப்பாளர்கள் முதலில் இறுதிக் கூட்டத்தை திறந்த வெளி அரங்கில் நடத்துவதற்கு திட்டமிட்டார்கள், அதற்கான அனுமதியை யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பாவிடம் இருந்து பெறவேண்டி இருந்தது. ஆனால் 9ந்திகதி மழை பெய்திருந்ததால். அமைப்பாளர்கள் இறுதிக் கூட்டத்தை வீரசிங்கம் மண்டபத்திற்கு மாற்றுவதற்கு திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் 10 ம் திகதி சனக்கூட்டம் மண்டபத்திற்குள் நெரிசல் ஏற்படுத்தியதால் பலரும் மண்டபத்துக்கு வெளியில் நின்று உரைகளை செவிமடுக்க வேண்டியதாயிற்று. மழை வருவதற்கான அறிகுறிகள் இல்லாததால் அமைப்பாளர்கள் இறுதி நேரத்தில் திரும்பவும் திறந்தவெளி அரங்கிற்குச் செல்லத் தீர்மானித்தார்கள். அவர்கள் அதற்கான அனுமதியை பெறுவதற்காக மேயர் துரையப்பா மற்றும் மாநகரசபை ஆணையாளர் ஆகியோரை சந்திக்க முயற்சித்தார்கள், ஆனால் அது வெற்றியளிக்கவில்லை.

அமைப்பாளர்கள் விரைவாக மண்டபத்துக்கு வெளியே ஒரு தற்காலிக மேடையை தயாரித்தார்கள், ஆனால் அது வளாகத்துக்கு உள்ளே காங்கேசன் துறை வீதியையும் மற்றும் யாழ்ப்பாண முற்றவெளியையும் நோக்கும் வகையில் அமைந்திருந்தது. சுமார் 50,000 வரை மதிப்பிடத்தக்க மக்கள் வீதி ஓரங்களிலும் மற்றும் முற்றவெளி முதல் யாழ்ப்பாணக் கோட்டையின் அகழிவரையிலும் அமர்ந்திருந்தார்கள். நகர போக்கு வரத்துக்களை மணிக்கூண்டு கோபுர வீதி வழியாக பிரதான சாலையை நோக்கி திருப்பி அனுப்புவதில் பொலிசார் உதவி புரிந்தார்கள், அதன்படி மக்கள் கூட்டம் எதுவித இடையூறும் இன்றி பேச்சுக்களை கேட்க கூடியதாக இருந்தது. கூட்டம் தாமதமாக இரவு 8.00 மணியளவில் ஆரம்பமானது, மற்றும் தலைவர் கலாநிதி வித்தியானந்தன காவல்துறையினரின் உதவிகளுக்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். முதலாவது பேச்சாளராக தென்னிந்தியாவை சேர்ந்த பேராசிரியர் நைனா முகமது தனது பேச்சை தொடங்கி பார்வையாளரை தனது சொல் மந்திரத்தால் கட்டிப்போட்டார்.

சிறிது நேரத்துக்குப் பின்னர் எல்லோரும் ஆச்சரியப்படும்படி கலகத் தடுப்பு காவல்துறையினரின் ஒரு பகுதியினர் மணிக்கூட்டு கோபுர பக்கம் இருந்து வீரசிங்கம் மண்டபத்தின் மேற்குப் புறமாக தாக்குதலை மேற்கொண்டவாறு கூட்டத்தினரை ஒரு பக்கமாக ஒதுங்கும்படி கடுமையான தொனியில் கட்டளையிட்டவாறே கூட்டத்தினரை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். அமளி எற்பட்டு மின்சார கம்பி கீழே விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து ஏழு பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.

பீதியடைந்த கூட்டத்தினர் கலைந்தோடத் தொடங்கினர். இந்த துயரம் ஏற்பட அல்பிரட் துரையப்பா தான் காரணமாக இருந்தார் என்பதற்கு ஒரு துளி ஆதாரம்கூட இல்லை. ஆனால். அவர் அரசாங்கத்துடன் ஒத்துழைக்கும் நகரபிதாவாக இருந்தபடியால் இந்தச் சம்பவத்திற்காக அவர் பலிக்கடா ஆக்கப்பட்டார். அதே இரவில் ரி.யு.எப் ஆதரவாளர் என அடையாளம் காணப்பட்ட ஒரு மனிதரின் தலைமையின் கீழ் பிரதான வீதியில் அமைந்திருந்த ஸ்ரீ.ல.சு.க வின் அலுவலகம் அடித்து நொருக்கப்பட்டது.

வெகு விரைவாகவே இந்த துயரத்துக்கும் மற்றும் பொதுமக்களின் மரணத்துக்கும் துரையப்பாதான் பொறுப்பு எனக் குற்றம்சாட்டி திறமையான பிரச்சார நடவடிக்கை கட்டவிழ்த்து விடப்பட்டது. திரும்பவும் இது பிணங்களின் மேல் நடத்தப்படும் ஒரு அரசியல் நடவடிக்கையாக மாறியது. பின்னர் அது எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் புதிய உயரத்தை அடைந்தது. இந்த துயரத்துக்கு யாராவது பொறுப்பேற்க வேண்டுமானால் அது ரி.யு.எப் மற்றும் அமிர்தலிங்கம் ஆகியோரே அதற்கான பெரும் பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கும் என்பது தொடர்ந்து தெளிவாகியிருக்கும். ஜனார்த்தனன் இந்தியாவக்கு திரும்பிச்சென்று காவல்துறையினரால் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான சடலங்களை தான் கண்டதாக அறிவித்தார். ஸ்ரீலங்காவிலிருந்து வெளியாகும் பெரிய தமிழ் பத்திரிகையான வீரகேசரி தனது ஆசிரியத் தலையங்கத்தில் ஜனார்த்தனனின் பொறுப்பற்ற அறிக்கைக்காக கண்டனம் வெளியிட்டது.

அப்போது இருந்த அரசாங்கம் இதைப்பற்றி விசாரணை செய்வதற்கு ஒரு ஆணைக்குழுவை நியமித்து இந்த விடயத்தை தீர்த்து வைத்திருக்கலாம். ஆனால் திருமதி.பண்டாரநாயக்காவின் அரசாங்கம் அதையிட்டு ஒருவகை மனப்பயம் கொண்டிருந்ததால் அதைச் செய்ய மறுத்துவிட்டது. இந்த விடயம் நீதியரசர் ஓ.எல்.டி கிறெற்சர் தலைமையிலான மூன்று அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு அதிகாரபூர்வமற்ற ஆணைக்குழுவின் முன் சென்றது. இதுபற்றி எமது அடுத்த பகுதியில் எடுத்துக் கொள்வோம்.

சன்சோனி ஆணைக்குழுவின் அறிக்கையில் (பக்கம் 25, கீழே பார்க்க) திரு.ஜே.டி.எம் (மித்ர) ஆரியசிங்க, அப்போதைய யாழ்ப்பாண பொலிஸ் அத்தியட்சகர் திருமதி அமிர்தலிங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒரு பேச்சை மேற்கோள் காட்டி தெரிவித்திருப்பது. 9 பெப்ரவரி 1974ல் மேற்குறித்த காவல்துறையின் நடவடிக்கை;ககு எதிராக தமிழர் ஐக்கிய முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு ஹர்;த்தாலின்போது, முனியப்பர் கோவிலுக்கு முன்பாக கூடியிருந்த ஒரு கூட்டத்தினர் முன்பாக திருமதி அமிர்தலிங்கம் அவர்கள் பேசும்போது, 10 ஜனவரியில் இடம்பெற்ற மரணங்களுக்கு ஏ.எஸ்.பி சந்திரசேகர அவர்கள்தான் பொறுப்பான நபர் மற்றும் துரோகியான துரையப்பா அன்றைய சம்பவங்களுக்கு பின்னால் இருந்து செயற்பட்டவர் என்று சொன்னதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்களது அடுத்த பகுதியில் திரு. ஆரியசிங்கா பற்றி அதிகம் சொல்லவேண்டி உள்ளது, ஆனால் திருமதி.அமிர்தலிங்கம் சொன்னதாக சொல்லப்படுபவை அந்த நேரத்தில் ரி.யு.எல்.எப் இன் அரசியலுடன் ஒத்ததாக உள்ளது .(உதாரணம்: 24 மே 1972ல் புதிய குடியரசு அரசியலமைப்புக்கு எதிரான ஒரு கூட்டத்தில் காசி ஆனந்தன் பேசியது. சாட்சிகள் தெரிவிப்பதின்படி, இயற்கையாக மரணம் அடையக்கூடாது என்று பட்டியல் இடப்பட்டுள்ள துரோகிகள் மத்தியில் துரையப்பாவின் பெயரும் இருப்பதாகவும், ஆனால் அவரது மரணத்தின் தன்மை இளைய தலைமுறையினரால் தீhமானிக்கப்படும் என்றும் அவரால் குறிப்பிடப்பட்டது. செல்வநாயகமும் மற்றும் அமிர்தலிங்கமும் அப்போது அந்த மேடையில் அமர்ந்திருந்தார்கள்.) இங்கு குறிப்பிட்டுக் கூறவேண்டியது என்னவென்றால் டி கிறெற்சர் ஆணைக்குழுவின் விசாரணைகளின்போது துரையப்பாவின் பெயர் எழவேயில்லை, இந்த ஆணைக்குழுவின் முன் சாட்சிகளை அழைத்து வருவதில் ரி.யு.எப் முக்கிய பாத்திரத்தை வகித்திருந்தது, மற்றும் ஆணைக்குழுவில் இருந்த பிஷப் குலேந்திரன் தமிழரசுக் கட்சியின் (ரி.யு.எப்) பக்கம் சார்பானவர் என்பது யாவரும் நன்கறிந்தது. ஒரு மேயர் என்கிற வகையில் துரையப்பா, நிகழ்ச்சி நடைபெறும் இடமாக யாழ்ப்பாண நகரசபை மண்டபத்தை அமைப்பாளர்கள் தேர்ந்தெடுப்பதை விரும்பியிருந்த போதிலும், எந்த வழியிலும் அவர் விரோதமாகவோ அல்லது ஒத்துழைக்காமலோ இருந்தார் என்று பரிந்துரைப்பதற்கு ஏதுவாகஆதாரங்கள் எதுவும் இருக்கவில்லை.

அல்பிரட் துரையப்பாவை நோக்கி வெறுப்பை உருவாக்கும் தன்மை இப்படியாகத்தான் இருந்தது. தேசியவாத அனுதாபிகளாக இருந்தவர்களுக்கு இந்தப் பிரச்சாரத்தை உட்கொள்ளுவது சிறிது சிரமமாக இருந்தது மற்றும் இது எதை நோக்கிச் செல்கிறது என்று கேட்கவும் அவர்கள் தவறி விட்டார்கள். போர்க்குணத்தின் வாயிற்படியில் நின்ற இளைஞர்கள் மனதில் விதைக்கப்பட்டவை கொல்வதற்கு ஒரு தூண்டுதலாக அமைந்துவிட்டன.

வெள்ளிக்கிழமை மாலைவேளையில் அவரது வழமையான நிகழ்ச்சிப்படி, பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு இரண்டு தோழர்களுடன் காரில் வந்திறங்கியபோது, 27 ஜூலை 1975ல் துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டார். பிரபாகரன் அந்த கொலையாளிகள் கூட்டத்தின் மத்தியில் இருந்தார், அப்போது அவர் புலிகள் இயக்கத்தை அமைக்கும் ஆரம்ப நிலையில் இருந்தார். துரையப்பாவின் தோழர்களில் ஒருவர் இதுபற்றி ஆர்வமுடன் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

காத்திருந்த கொலையாளிகள் நான்கு கதவுகளுள்ள அந்த சீருந்து நிறுத்தப்பட்டதும் அதன் பயணிகள் பயன்படுத்தும் மூன்று வாயில்களையும் நோக்கிச் சென்றார்கள். அவர்களது நோக்கம் துரையப்பாவையும் அவரது இரண்டு தோழர்களையும் கொல்வதாக இருந்தது. தோழர்களில் ஒருவர் பின்கதவு வழியாக கீழே இறங்கியதும், ஒரு கட்டையான இளைஞன் ஒரு கைத்துப்பாக்கியை அவரை நோக்கி குறிபார்த்தவாறு நடுங்கியபடி நிற்பதைக் கண்டார். யோகநாதன் என்கிற அந்த தோழர், அந்த இளைஞனை ஒரு பக்கமாக தள்ளி நிலத்தில் வீழ்த்திவிட்டு அருகில் உள்ள குளிர்பானம் விற்கும் பெட்டிக் கடைக்குள் ஓடி ஒளிந்து கொண்டார். மற்றைய தோழரான ராஜரட்னம் காயமடைந்தார் ஆனால் சமாளித்துக்கொண்டு ஓடிவிட்டார்.

பதற்றம் அடைந்திருந்த கொலையாளிகள் துரையப்பாவின் சீருந்தை அதன் ஓட்டுனரான பற்குணம் என்பவருடன் சேர்த்து எடுத்துக்கொண்டு போனார்கள். பெட்டிக்கடைக்குள் மறைந்திருந்த யோகநாதனை நோக்கிச் செல்வதற்கு அவர்கள் முயற்சி மேற்கொள்ளவில்லை. கொலைகாரர்கள் அங்கிருந்து சென்றதும் பெட்டிக்கடை நடத்திய பெண் அவரை வெளியே வரும்படி அழைத்தாள். வெளியே வந்த அவர், துரையப்பா தண்ணீர் வேண்டிக் கதறுவதைக் கண்டார். செத்துக் கொண்டிருக்கும் அந்த மனிதரின் தலையை தனது மடியில் ஏந்தியவாறு அவரது வாய்க்குள் சிறிது காற்றூட்டப்பட்ட தண்ணீரை ஊற்றினார். அதன்பின் துரையப்பா தன் கடைசி மூச்சை விட்டார். பல வருடங்களுக்குப் பின்னா பிரபாகரனது படத்தை பார்த்த யோகநாதன் தன் முன்னே நடுங்கியபடி நின்ற அந்த இளைஞன் பிரபாகரன்தான் என அடையாளம் கண்டுகொண்டார், அத்துடன் அவரது ஆர்வலராகவும் மாறினார். அந்தக் குழுவில் இருந்த மற்றொரு அங்கத்தவரான கலாபதி பிரபாகரனைப் போலவே சமமான தோற்றத்தை கொண்டவர் என மற்றவர்கள் தெரிவித்தார்கள்.

யோகநாதனது அடையாளம் சரியாக இருந்தால், ஜூலை 1975ல் பிரபாகரனால் இன்னமும் படுகொலையை ஒரு ஆரோக்கியமான முறையில் மேற்கொள்வதற்கு முடியாமலிருந்தது என சுட்டிக்காட்ட முடிகிறது. ஆனால் அதிக நேரம் ஆவதற்குள்ளேயே சீருந்து ஓட்டுனரான பற்குணத்தின் கொலைக்கு அவர் ஒரு கருவியாக மாறியுள்ளார். அதன்மூலம் அவரது நகர்வுகளுக்கான திசை சரியாக அமைக்கப்பட்டுவிட்டது.

மேலும் ரி.யு.எல்.எப் (அப்போது ரி.யு.எப்) துரையப்பாவின் கொலையை நேரடியாக தூண்டி விட்டதுக்கான ஆதாரம் எதுவுமில்லை. ரி.யு.எல்.எப் ஒரு கைத்துப்பாக்கியை துரையப்பாவுக்கு நேரே குறிபார்த்து வைத்துவிட்டு அதன் விசையை யாராவது இழுக்கட்டும் என்று தெரிந்து கொண்டு வேறுபக்கம் பார்த்துக்கொண்டு நின்றார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். சில ரி.யு.எல்.எப் தலைவர்கள் இந்த போராளி இளைஞர்களுடன் தொடர்பு கொண்டிருந்தது எங்களுக்கு தெரியும், உள்ளக இரகசியமாக இருந்த இந்த விடயம் 1976ல் அமிர்தலிங்கம் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ மத்திய குழுவின் சந்திப்பின் பின்னர் ஓரளவு சாதாரணமாகியது. இதன் அடையாளம் என்னவென்றால் 1980 களின் ஆரம்பங்களில் பிரபாகரன் அமிர்தலிங்கத்தின் விசுவாசியாக இருந்துள்ளார் என்பதுதான். ஆனால் எல்.ரீ.ரீ.ஈயின் தீர்மானம் மேற்கொள்ளும் விடயத்தில் ரி.யு.எல்.எப் ஏதாவது பங்களிப்பை மேற்கொண்டது என்று இதனை அர்த்தம் கொள்ளல் ஆகாது.

ரி.யு.எல்.எப் இன் யாழ்ப்பாண மேயராக இருந்த திருமதி. யோகேஸ்வரன், 1998ல் எல்.ரீ.ரீ.ஈ யினால் கொல்லப்பட்டார். யாழ்ப்பாணத்தில் இருந்து பிரசுரமாகும் சஞ்சீவி எனும் பத்திரிகையில் ஒரு பத்தி எழுத்தாளர் பின்னாளில் எழுதியது, துரையப்பாவை கொலை செய்த பின்னர் பிரபாகரன் யாழ்ப்பாணத்தில் இருந்த தனது கணவரிடத்தில் வந்ததாகவும் தான் அவருக்கு தேனீர் கொடுத்து உபசரித்ததாகவும் திருமதி யோகேஸ்வரன் தன்னிடத்தில் தெரிவித்தார் என்று.

1977ல் யோகேஸ்வரன் ரி.யு.எல்.எப் இனது யாழ்ப்பாண தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானதுடன் மற்றும் போராளி இளைஞர்களுடன் நட்பாக இருந்ததும் அனைவரும் அறிந்ததே.

எனினும் இந்த பத்தி எழுத்தாளரின் கூற்றை அவநம்பிக்கையுடனேயே கணிக்கப்பட வேண்டும். பதற்ற நிலையில் உள்ள கொலைகாரர்கள் இந்த மாதிரி வேலைகளைச் செய்ய மாட்டார்கள், அதுவும் காவல்துறையினர் அவர்களுக்காக வலை விரித்துள்ள சமயத்தில். இந்தியாவுக்கு தப்பிச் செல்வதற்காக பிரபாகரன் யாழ்ப்பாண நகருக்கு வருவதற்குப் பதிலாக வட பகுதி கடற்கரைகளுக்குத்தான் சென்றிருப்பார். அவருடைய பாடசாலை நண்பருக்கு அவர் வழங்கிய அவரது சொந்த வாக்குமூலத்தின்படி அவர் செய்தது இதுதான். கடற்படையினரின் எச்சரிக்கை குறையும் வரை அவர் தொண்டமானாறு கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு ஆலமரத்தின் மீதேறி மூன்று நாட்கள் வரை அதன்மீது ஒளிந்திருந்தாராம். அதற்கு மேலும் அவர்கள் தப்பிச் செல்ல பயன்படுத்திய துரையப்பாவின் சீருந்தும் வடக்கு நோக்கியே ஓட்டிச் செல்லப்பட்டு வடபகுதிக் கரையில் உள்ள சேந்தாங்குளம் பகுதியில் கைவிடப் பட்டிருந்தது.

எனினும் தேசியவாதிகளின் கோரிக்கைகளுடன் உடன்பாடற்றவர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் மற்றும் துரையப்பாவின் வாழும் உரிமையை பலாத்தகாரமாக தட்டிப் பறித்தது என்பன தமிழ் அரசியலின் திசையை துயரத்தின் பக்கமாக திருப்பிவிட்டது. துரையப்பாவின் மரணத்தின் சோகம் கண்ணீர் பெருக்கெடுக்க வைத்தது. இன்று கண்ணீர் எதுவும் மிச்சமாக இல்லை.



Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com