Saturday, January 30, 2016

கோத்தபாய, சிங்க ரத்தம் அமைப்பின் முடிக்குரிய இளவரசர் – உபுல் ஜோசப் பெர்னாண்டோ வின் அதிர்ச்சி தகவல்

தேசிய தலைமைத்துவத்திற்கு கோத்தபாய ராஜபக்‌ஷவைக் கொண்டு வருவதற்கான ஆபத்தான வேலைத் திட்டமொன்று தற்போது சிங்க ரத்தம் அமைப்பால் மேற்கொள்ளப்படுகிறது.

மிக விரைவில் கோத்தபாய, சிங்க ரத்தம் அமைப்பின் முடிக்குரிய இளவரசனாக மாறுவார் என சிலோன் ருடே இதழில் உபுல் ஜோசப் பெர்னாண்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

தலதா மாளிகைக்கு எதிராக அண்மையில் சிங்க லே அமைப்பால் வழிபாட்டு நிகழ்வொன்று ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. இந்த வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்கள் ஏந்திய தேசியக் கொடியில் நாட்டின் சிறுபான்மை இனத்தவரைக் குறிக்கும் குறியீடுகள் மறைக்கப்பட்டிருந்தன என ஊடகங்கள் அறிக்கை வெளியிட்டன.

இதற்கு முன்னர், தேசியக் கொடியில் சிறுபான்மை இனத்தவர்களின் அடையாளங்களை மறைத்த சம்பவமொன்று முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்‌ஷ, ஊழல் மோசடி ஆணைக்குழுவின் முன்னால் நிறுத்தப்பட்டபோது மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் நிகழ்ந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் சிறுபான்மை இனத்தவர்களைப் புறக்கணிக்கும் வகையில் தாம் ஏந்திய தேசியக் கொடிகளில் அவர்களது அடையாளங்களை மறைத்தனர்.

இது சிங்க ரத்தம் அமைப்பின் கொடி என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்றது.

உருமாற்றப்பட்ட தேசியக் கொடியைத் தமது கைகளில் ஏந்தியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களின் முன்னால் கோத்தபாய உரை நிகழ்த்தியிருந்தார். உருமாற்றப்பட்ட தேசியக் கொடி விவகாரம் தொடர்பாக கறுவாத்தோட்டம் காவற்துறையினர் கொழும்பு பிரதம நீதவானிடம் முறையிட்டனர்.

குறித்த சர்ச்சைக்குரிய தேசியக் கொடி தொடர்பான காணொளியை சமர்ப்பிக்குமாறு பிரதம நீதவான் காவற்துறையிடம் உத்தரவிட்டார்.

சர்ச்சைக்குரிய தேசியக் கொடியை எதிர்த்து பொதுமக்கள் கிளர்ந்தெழுந்த போதிலும் அரசாங்கம் இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது.

உருமாற்றப்பட்ட தேசியக் கொடியை தயாரித்தமை மற்றும் இவ்வாறான கொடியை ஏந்தியமை போன்ற குற்றங்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது.

சர்ச்சைக்குரிய தேசியக் கொடி தொடர்பாக கறுவாத்தோட்டம் காவற்துறையினரால் பிரதம நீதிவானிடம் முன்வைக்கப்பட்ட முறைப்பாடும் இன்னமும் விசாரணை செய்யப்படவில்லை.

உருமாற்றப்பட்ட தேசியக் கொடி மீண்டும் தற்போது சிங்க ரத்தம் அமைப்பால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சிறுபான்மை இனங்களின் அடையாளங்கள் நீக்கப்பட்ட தேசியக்கொடி மீண்டும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டுள்ளதானது கடந்த ஏப்ரலில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளமை தெளிவாகிறது.

ஆகவே, கோத்தபாயவுக்கும் சிங்க ரத்தம் அமைப்பிற்கும் இடையில் தொடர்பு காணப்படுகின்றமை இதன் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது.

மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலத்தில், கோத்தபாய மற்றும் பொதுபலசேனா அமைப்பிற்கும் இடையிலான தொடர்பானது உறுதிப்படுத்தப்பட்டது.

பொதுபல சேனாவால் ஒழுங்குபடுத்தப்பட்டு அதன் தலைவராக இருந்த புத்த பிக்கு ஒருவரின் தலைமையில் இடம்பெற்ற பிரதான நிகழ்வொன்றிற்கு கோத்தபாய ராஜபக்‌ஷ பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டமையானது கோத்தாவுக்கும் பொதுபல சேனவுக்கும் இடையில் எவ்வாறானதொரு தொடர்பு காணப்பட்டது என்பதற்கு போதியளவு சான்று பகர்கிறது.

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்‌ஷ, பொதுபல சேனா அமைப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறினார்.

இவர் பொதுபல சேனாவிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக களுத்துறையில் இடம்பெற்ற சமூக மோதல்களில் ஈடுபட்ட பொதுபல சேனாவைப் பாதுகாத்தார்.

மஹிந்தவின் கூட்டணியான ஹெல உறுமயவிற்கு பௌத்த சிங்கள சமூகத்திற்கு மத்தியில் காணப்பட்ட ஆதரவு குறைந்துள்ளதாகவும், இதனால் பொதுபல சேனாவிற்கு ஆதரவளித்து அதன் மூலம் பௌத்த சிங்களவர்களின் ஆதரவைத் தனதாக்கிக் கொள்ளலாம் எனவும் கோத்தபாய கருதினார்.

அந்த வேளையில், பௌத்த சிங்களவர்கள் தனக்கு ஆதரவாக இருப்பதாக கோத்தபாய புகழாரம் பாடினார்.

இவரது இந்தப் புகழாரமே மஹிந்த அரசாங்கத்திடமிருந்து ஹெல உறுமய விலகிக் கொள்ளத் தீர்மானித்ததற்கான காரணமாகும்.

2015 ஜனாதிபதி தேர்தலில் பௌத்த சிங்களவர்களின் பலத்தை மஹிந்தவிற்கு ஆதரவாகப் பயன்படுத்த முடியும் என கோத்தபாய திட்டமிட்ட போதிலும், மைத்திரியின் எதிரணியானது கோத்தாவின் கனவைச் சிதைத்தது.

கோத்தபாய தனது இலக்கை இன்னமும் கைவிடவில்லை என்பதற்கு சிங்க ரத்தம் அமைப்பின் எழுச்சி சான்றாக அமைகிறது.

மஹிந்தவிற்குப் பின்னர் சிறிலங்காவின் தலைவராகத் தான் வரவேண்டும் என்பதற்கான ஒரு அடித்தளமாக கோத்தபாயவால் பொதுபல சேனா வளர்க்கப்பட்டது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை உடைத்து புதியதொரு அரசியற் கட்சியை உருவாக்க வேண்டும் என்பதில் கோத்தபாய உறுதியாக நிற்கிறார்.

ஆனால் கோத்தபாயவின் நிலைப்பாட்டிற்கு மஹிந்த ஆதரவளிக்கவில்லை.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாகத் தான் ஒரு பலமான அரசியல்வாதியாக உருவாகுவது மிகவும் கடினமானது என்பது கோத்தபாயவுக்கு நன்கு தெரியும்.

அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலில் புதிய கட்சியில் போட்டியிடுவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மஹிந்த சார்பு அணியின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கு கோத்தபாய திட்டமிடலாம்.

தற்போதைய அரசியல் யாப்பின் பிரகாரம், மகிந்த மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது.

கோத்தபாய போன்றவர்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது.

இவர் மைத்திரி மற்றும் ரணிலுடன் தனித்தனியாக மிகவும் இரகசியமான முறையில் தொடர்பைப் பேணிவருகிறார்.

இவ்விரு தலைவர்களும் கோத்தபாயவைக் கைதுசெய்வதற்கான அனுமதியை வழங்கமாட்டார்கள்.

தனது கைதைத் தடுக்கும் முகமாக உச்சநீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவைக் கையளித்த முதலாவது நபர் கோத்தபாய ஆவார்.

இது தொடர்பாக முதலில் ரணில் விசாரணை செய்த போதிலும், பின்னர் கோத்தாவைக் கைது செய்வது தொடர்பாக ரணில் ஒரு வார்த்தையேனும் பேசவில்லை.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை வென்றெடுத்த போர்க் கதாநாயகனான கோத்தபாயவைக் கைதுசெய்வதற்கு ஒருபோதும் தான் அனுமதியளியேன் என நீதி அமைச்சரான விஜயதாச ராஜபக்‌ஷ நாடாளுமன்றில் அறிவித்திருந்தார்.

கோத்தபாயவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பாரியதொரு சர்ச்சையாக அவன்கார்ட் ஆயுத விவகாரம் அமைந்துள்ளது.

கோத்தபாய பாதுகாப்புச் செயலராகக் கடமையாற்றியபோது மேலதிக பாதுகாப்புச் செயலராகப் பதவி வகித்த தமயந்தி ஜெயரட்னவிடம் அவன்கார்ட் ஆயுத விவகாரம் தொடர்பாக விசாரணை செய்ய முற்பட்ட போதிலும் அவர் நாட்டை விட்டு வெளியேறினார்.

ஊழல் மோசடி ஆணைக்குழுவானது இவரைக் கைது செய்ய முற்பட்ட தருணத்தில் அவர் நாட்டை விட்டு வெளியேறினார்.

அவன்கார்ட் உடன்பாடானது கோத்தபாயவின் கட்டளையில் கீழேயே தமயந்தியால் நிறைவேற்றப்பட்டது.

கோத்தபாயவைப் பாதுகாப்பதற்கு அரசாங்கத்தால் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதை மேற்கூறிய விடயங்கள் தெளிவுபடுத்துகின்றன.

தேசிய தலைமைத்துவத்திற்கு கோத்தபாயவைக் கொண்டு வருவதற்கான பாரியதொரு ஆபத்தான நிகழ்ச்சி நிரல் தற்போது சிங்க ரத்தம் அமைப்பால் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த அமைப்பால் 2015 ஏப்ரலில் உருமாற்றப்பட்ட தேசியக் கொடி ஏந்தப்பட்டதை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.

தற்போது இது ஒரு அரசியல் அமைப்பாக மாறியுள்ளது. மிக விரைவில் கோத்தபாய, சிங்க லே அமைப்பின் முடிக்குரிய இளவரசராக மாறுவார்.

Read more...

இலங்கைக்கு எதிராக யுத்த குற்றச்சாட்டுக்கள் இல்லை. ஜனாதிபதி.

புலிகள் பயங்கரவாதிகள் அவா்கள் யுத்தம் தொடர்பான சட்டதிட்டங்களை கடைப்பிடிக்கவில்லை! ஜனாதிபதி குற்றச்சாட்டு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை என்றும் மனித உரிமைகள் மீறப்பட்டமை குறித்தே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

அல்​ஜஸீரா தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள நேர்காணலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைக் கூறியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை நிறைவேற்றுவதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.

எனினும் எமது நாட்டின் சுயாதீனத் தன்மைக்கு அமைவாகவே அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இதற்காக விஷேடமாக வௌிநாடுகளில் இருந்து தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக் கொள்ள முடியும், என்றாலும் வௌிநாட்டு நபர்களை இந்நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கான தேவை இருக்காது.

எமது நாட்டில் பக்கச்சார்பற்று சுயாதீனமாக செயற்படும் நீதிமன்றம் இருக்கின்றது. அதேபோல் பக்கச்சார்பற்று செயற்படும் வேறு நிறுவனங்களும் இருக்கின்றன.

எங்களுக்கு தேவையாக இருப்பது நாட்டுக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டில் இருந்து விடுபடுவதே.

ஆகவே அந்த விசாரணை நடவடிக்கைகளை தௌிவாகவும் சுயாதீனமானதாகவும் நியாயமான முறையிலும் முன்னெடுக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.

நாம் நீதிமன்றத்தை சுயாதீனப்படுத்தியுள்ளோம். அதனை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் சுதந்திரமாக செயற்படும் நிலமையயை ஏற்படுத்தியுள்ளோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

அத்துடன் தான் ஒருபோதும் திருடர்களையும் மோசடிக்காரர்களையும் பாதுகாக்க கூடியவன் அல்ல என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

மேலும் யுத்தத்தின் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக விடுதலைப் புலிகள் ஒருபோதும் செயற்படவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவம் சர்வதேச சட்டங்கள் மற்றும் இலங்கையின் சட்டங்களுக்கு அமைவாகவே செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன் போது தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கை இராணுவம் இந்த நியமங்களை மதித்து அனைத்து சந்தர்ப்பங்களிலும் நேர்மையாக செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், இராணுவத்தினரைச் சேர்ந்த எவரேனும் ஒருவர் இந்த நடவடிக்கைகளை மீறி தவறிழைக்கப்பட்டிருந்தால், அது தொடர்பில் விசாரணைப் பொறிமுறைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, தவறிழைத்தமை கண்டறியப்படுமாயின், அதனுடன் தொடர்புடையவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தாம் இதற்கு முன்னரும் தெளிவாக கூறியிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்

Read more...

யோசித உட்பட ராஜபக்ச குடும்பத்தினருக்கு நெருக்கமான ஐவருக்கு 14 நாள் விளக்கமறியல் உத்தரவு!


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்ற நீதிபதி தம்மிக்க ஹேமபால உத்தரவிட்டுள்ளார்.

யோஷித ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக ஒருங்கிணைப்பாளர் ரொஹான் வெலிவிட்ட, சிஎஸ்என் தொலைக்காட்சி நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி நிஷாந்த ரணதுங்க உள்ளிட்ட ஐவரை இன்று பிற்பகல் நிதிமோசடிப் பிரிவினரர், நிதிமோசடி குற்றச்சாட்டில் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்தபோதே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். கைது செய்யப்பட்டனர்.

சிஎஸ்என் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் நிதி மோசடிகள் குறித்து இன்று காலை கடற்படைத் தலைமையகத்தில் வைத்து யோசித்த ராஜபச்சவிடம் விசாரணையை மேற்கொண்ட நிதி குற்ற விசாரணைப்பிரிவினர் அவரை செய்து செய்தனர்.

அதேநேரம் குறித்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் உட்பட முக்கியஸ்தர்கள் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு வரவழைக்கப்பட்;டு விசாணையின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக ஒருங்கிணைப்பாளர் ரொஹான் வெலிவிட்டவும் அடங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் கடுவல நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது மகிந்த ராஜபக்ச , சிராந்தி ராஜபக்ச, கோட்டபாய ராஜபக்ச, பசில் ராஜபக்ச , நாமல் ராஜபச்ச என பலர் நீதிமன்ற வாசலில் கூடி நின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.













Read more...

அடுத்த சட்டமா அதிபர் யார் உப்புலா? ஜயந்தவா?

அரசாங்கத்தின் அடுத்த சட்டமா அதிபர் யார் என்பது தற்போதைய பேச்சுப் பொருளாகியுள்ளது. அதற்காக சிரேஷ்ட தரத்தில் இருப்பவர்கள் சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் கடமை நேர சட்டமா அதிபர் சுகந்த கம்லத் ஆகியோரே. எனினும் சுகந்த கம்லத்திற்கு எதிரான பிரதான குற்றச்சாட்டு, அவர் ராஜபக்‌ஷ குடும்பத்தின் விஷேடமாக பஷில் ராஜபக்‌ஷவின் நெருங்கிய நண்பர்.

அத்துடன் அவருடைய சகோதரரான சன்தீப்த கம்லத், முகாமைத்து பணிப்பாளராக பதவி வகிக்கும் குருநாகல் பொபய்கனே ஜிபி நிறுவனம் அமைந்துள்ள பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற பாரிய சுற்றுச்சூழல் பாதிப்புக்கு எதிராக சுகந்த கம்லத் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச் சூழல் நிறுவனங்கள் குற்றம் சுமத்துகின்றன.

சுகந்த கம்லத் சட்ட மா அதிபராக நியமிப்பதற்கு எதிராக பாரிய எதிர்ப்புக்களை தற்போது வௌியிட்டுக் கொண்டிருப்பவர் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்னவே. அவரை சட்ட மா அதிபராக நியமிப்பதற்கு பரிந்துரை செய்துள்ளவர் முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் தலைவராக இருக்கும் முன்னாள் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் உபுல் ஜயசூரிய. உபுல் ஜயசூரிய மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையில் நீண்ட காலமாக காணப்படுகின்ற விரிசல் நிலை காரணமாக அந்தப் பதவிக்கு அவரை நியமிப்பதில் பாரி இடையூறுகள் மேற்கொள்ளப்படுவதாக சட்ட துறையினரின் கருத்து.

இதன் காரணமாக 19வது அரசியலமைப்பு சீர்திருத்ததத்தின் படி அமைக்கப்பட்ட அரசியலமைப்பு சபைக்காக பெயர் ஒன்றை முன்வைக்க முடியாமல் ஜனாதிபதி பெரும் சங்கடத்துக்கு முகங்கொடுத்துள்ளார். எனினும் அரசியலமைப்பு சபை பதவிக்காக பரிந்துரை செய்யப்பட்டது, சட்ட மா அதிபர் திணைக்களத்தில் அடுத்ததாக உள்ள சிரேஷ்ட அதிகாரியின் பெயரே.

இந்த விடயத்தை நன்றாக தெரிந்தும் அமைச்சர் ராஜித சேனாரட்ன அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கூறியிருப்பதாவது, "சட்டமா அதிபர் பதிவிக்காக வௌியில் இருந்து ஒருவர் நியமிக்கப்படுவார்" என்று. அதனை நியாயப்படுத்துவதற்காக அமைச்சர் கூறியிருக்கின்றார், சட்ட மா அதிபர் திணைக்களம் மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தில் இருந்ததை விடவும் மிக மோசமாக மாறி இருக்கின்றது என்று. இது சட்ட மா அதிபர் திணைக்களத்தை மோசமாக குறிப்பிடுவதாகும்.

நிலைமை இவ்வாறு இருக்க, சட்ட மா அதிபர் திணைக்களத்தில் சுகந்த கம்லத்தை விடவும் கணிஷ்ட, பணி அடிப்படையில் மூன்றாம் தரத்தையும் தாண்டும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜயன்த ஜயசூரியவை இதற்காக நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு அரசாங்கத்துடன் நெருங்கிய சட்டத்தரணிகள் சிலர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

எனினும் ஜயன்த ஜயசூரியவின் ஆசை சட்ட மா அதிபர் பதவியையும் விட உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெறுவது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் இந்த மூவருள் ஒருவர் அடுத்த வாரத்திற்குள் சட்ட மா அதிபராக பதவியேற்கவுள்ளனர்.

Read more...

பட்டதாரிகளுக்கு 10,000.00 ரூபாய் ஊதியம் கொடுத்து மாகானத்திற்கு வெளியில் அனுப்பினால் எதிர்காலத்தில் பட்டதாரிகள் உருவாகுவது கேள்விக்குறியாக மாறும். ஷிப்லி பாறூக்


2016ம் ஆண்டிற்கான முதலாவது கிழக்குமாகாண சபை கூட்டத்தொடர் செவ்வாய்க்கிழமை (26.01.2016) அன்று திருகோணமலை பேரவைச் செயலகத்தில் சபை தவிசாளர் கௌரவ சந்திரதாச கலபதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த அமர்வில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் குறைந்த ஊதியத்துடன் வெளி மாகாணங்களில் நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பான விஷேட பிரேரணை ஒன்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களினால் முன்வைக்கப்பட்டது.

இவ் அமவர்வில் உரையாற்றிய அவர் கிழக்கு மாகாணத்தைச்சேர்ந்த பட்டதாரிகளுக்கான பயிற்சி நியமனத்தைப் பெற்றிருக்கின்ற அநேகமான பட்டதாரிகள் ரூபா 10,000.00 ஊதியத்துடன் மாகாணத்துக்கு வெளியே நியமிக்கப்பட்டுள்ளார்கள். இது இப்பட்டதாரிகளை பாரிய அசௌகரியங்களுக்கும் கஷ்டத்துக்கும் உள்ளாக்கியுள்ளது. கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் என்ற வகையில் அவர்களை உடனடியாக மாகாணத்துக்குள் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இச்சபையில் முன்மொழிந்தார்.

இலங்கையில் பல தசாப்தங்களாக எமது மாணவச் செல்வங்கள் இலவசமாக கல்வியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக இலங்கை அரசாங்கம் பல்கலைக்கழகங்கள் வரையும் இலவசக் கல்வியினை வழங்கிக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில் பன்னிரெண்டு ஆண்டுகள் பாடசாலைகளிலும் அதனைத் தொடர்ந்து 3,4,5 வருடங்கள் அவர்களுடைய பட்டப்படிப்புகளை பல்கலைக்கழகங்களிலும் முடித்துவிட்டு, மேலும் இரண்டு மூன்று வருடங்கள் தாமதத்தின் பின்பு அவர்கள் வேலைவாய்ப்பினைப் பெறுகின்றபோது பத்தாயிரம் ரூபாவினைக் கொடுத்து மாகாணத்துக்கு வெளியில் அதுவும் தூரப்பிரதேசங்களுக்கு அவர்களை அனுப்புகின்ற இந்தச்செயலானது எதிர்வரும் காலங்களில் பட்டப்படிப்பினை மேற்கொள்வது ஒரு கேள்விக்குறியானதொரு விடயமாக மாறும் என்பது என்னால் உறுதியாகச்சொல்ல முடியும். ஏனென்றால் தற்போது வளர்ந்து வருகின்ற இளம் சமூகம் வேகமாக பொருளாதாரத்திலும் வாழ்க்கையிலும் முன்னுக்கு வரவேண்டுமென்று நினைத்துக்கொண்டு பல கற்பனைகளுக்கு மத்தியில் தங்களுடைய கல்விகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆண் பிள்ளைகள் குறிப்பிட்ட காலத்துக்குள் தாங்கள் பொருளாதாரத்தினை ஈட்டி வாழ்க்கையினை வளப்படுத்திக்கொள்ள வேண்டுமென்று விரும்புகின்ற இந்தக்காலகட்டத்தில் இவ்வாறான தூர இடங்களுக்குப் பட்டதாரிகளை அதுவும் பத்தாயிரம் ரூபா ஊதியத்தினைக் கொடுத்து அவர்களை பயிலுனர்களாக ஒரு வருடத்துக்கு அமர்த்துவதென்பது நிச்சயமாக அவர்கள் மீது ஒரு பாரிய சுமையைச்சுமத்துகின்ற ஒரு விடயமாக நான் பார்க்கின்றேன். அந்த வகையில் கிழக்கு மாகாணத்திலிருந்து ஏறக்குறைய 500க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கொழும்பு, கண்டி என்று பல்வேறு இடங்களில் மாகாணத்திற்கு வெளியில் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். வளர்ந்து கொண்டிருக்கும் இந்த கல்விச் சமூகத்தில் அதிகமானவர்கள் பெண்களாகவே இருக்கின்றனர், பல்கலைக் கழகங்களில் 60 வீதத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உயர் கல்வி கற்கின்றனர்.

பெண்களை தூர இடங்களுக்கு நியமித்து அனுப்புகின்ற பொழுது அவர்களால் தொடர்ச்சியாக வேலைசெய்ய முடியாது போகின்றது. எங்களுக்கு பல அனுபவங்கள் இருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து திருகோணமலை மாவட்டத்திற்கு வேலைவாய்ப்பினைப் பெற்றுவருகின்றவர்கள் பெண்களாக இருந்தால் அவர்கள் 2 அல்லது 3 வருடங்களில் திருமணம்செய்து ஓரிரு வருடங்களில் கர்ப்பிணியாகின்றார்கள் அவ்வாறான சந்தர்ப்பங்களில் மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்கு போக்குவரத்து செய்யமுடியாது போன்ற காரணங்களை முன்வைத்து தற்காலிக இடமாற்றம் செய்து அவர்களின் பிரதேசங்களில் கடமை புரிகின்றனர், இலங்கை சட்டத்தின் பிரகாரம், அவர்களது மகப்பேற்றுக்கு பின்னர் 81 வேலை நாட்கள் அவர்களுக்கு விடுமுறை கிடைக்கின்றது. சிசுவொன்றினை பெற்றெடுத்தபின்பு மீண்டும் ஏறத்தாள 9 மாதங்கள் விடுமுறை முடித்து மீண்டும் கடமைக்கு வருவதற்கு அவர்களுடைய சிசு தடையாக அமைகின்றது.

இவ்வாறு பட்டதாரிகளாக உருவாகின்ற பெண்களுடன் ஒப்பிடும்பொழுது அவர்களுக்கு சமமாக ஆண்களும் உருவாக வேண்டும் என்ற தேவைப்பாடு இருக்கின்றது. இந்த தேவைப்பாட்டை தடுத்து நிறுத்துவதற்குரிய முக்கிய காரணி ஒரு பிள்ளை சாதாரண தரம் கற்கின்றபொழுது தனியார் கல்வி நிறுவனங்கள் கருத்தரங்கு நடாத்துகின்ற போர்வையில் சாதாரண தரம் கற்றபின்பு 2, 21/2 வருடங்கள் உயர்கல்வி கற்கவேண்டும் அதன்பின் கிட்டத்தட்ட 1வருடம் காத்திருந்து பல்கலைகழகத்திற்கு தெரிவாகி 3 அல்லது 5 வருடங்கள் பல்கலைகழகங்களில் கழிக்கவேண்டும் ஆகமொத்தத்தில் 6,7 வருடங்கள் செலவு செய்து பட்டப்படிப்பின் பின் ஒரு தொழிலை பெறுவதாக இருந்தால் மீண்டும் 2,3 வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்று அவர்களை தவறாக வழிகாட்டுகின்ற தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இவ்வாறான செயற்பாடுகள் சாதகமாக அமைவதுடன் மாணவர்கள் கல்வியை இடைநடுவில் கைவிட முற்படுவார்கள். அதிகமான பிள்ளைகள் சாதாரண தரத்தில் நல்ல பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்து உயர்தர கல்வியினை தொடராமல் விட்டுவிட்டு தனியார் கல்வி நிறுவனங்களில் 06 மாத குறுகிய காலப்பயிற்சிநெறி ஏதேனுமொன்றை முடித்துக்கொண்டு வளைகுடா நாடுகளுக்கு வேலைவாய்ப்பு பெற்று செல்கின்றனர். இதற்கு காரணம் என்ன? அவர்கள் ஒப்பிட்டு பார்க்கின்றனர் 8,9 வருடங்கள் முடிந்த பிற்பாடு ரூபா 10,000.00; சம்பளத்திற்கு வேலை செய்வதா அல்லது 06 மாத குறுகிய கால பயிற்சிநெறி ஏதேனுமொன்றை முடித்துக்கொண்டு ரூபா 100,000.00 சம்பளம் பெறக்கூடிய அந்த வேலைவாய்ப்பினை பெறுவதா என்ற வினாவிற்கு விடைகானும் முகமாக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு ஆண்கள் பெண்கள் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் உழைத்து வாழ வேண்டிய தேவைப்பாடும் கட்டாயமும் இம் மக்கள்மீது சுமத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒரு குடும்பத்தில் 2,3 பெண்பிள்ளைகள் இருப்பின் அக்குடும்பத்தில் உள்ள ஆண்பிள்ளை மீது பாரிய சுமைகள் சுமத்தப்படுகின்றன ஏனெனில் தனது பெண்சகோதரிகளுக்குரிய கடமைகளை மேற்கொள்ளவேண்டும் வீடுகட்ட வேண்டும் என்ற கடமைகள் வரும்போது அவன் தனது கல்வியினை இடைநடுவே நிறுத்திவிட்டு தனது குடும்பத்திற்காக தனது கல்வியினை தியாகம் செய்துவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்று கஷ்டப்படும் அந்த நிலைமையும், கல்வியிலே ஆண்பிள்ளைகள் இல்லாமல் போகின்றதோர் துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் கிழக்குமாகாணத்தில் மட்டுமல்ல அகில இலங்கை முழுவதும் உள்ள ஆண்பிள்ளைகள் தமது கல்வியினை இடைநடுவே நிறுத்தி விட்டு வெளிநாடுகளிலும், இங்குள்ள சிறிய சிறிய கூலிவேலைகள் அல்லது அவர்களுடைய கல்வி தகைமைக்குப்பதிலாக அவர்கள் பொருளாதாரத்தினை ஈட்டுகின்ற வேறுசெயற்பாடுகளில் ஈடுபடுவதனூடாக எதிர்காலத்தில் கல்வியை இழந்த சமூகமாக இலங்கை மாறக்கூடிய துர்ப்பாக்கிய நிலைமை இருக்கின்றது, ஆகவே இந்த செயற்பாடானது நிச்சயமாக வடக்கிலே வழங்கப்பட்ட அனைத்து பட்டதாரி பயிலுனர் வேலைவாய்ப்புக்களும் வடமாகாணத்திற்குள்ளேயே வழங்கப்பட்டிருக்கின்றது ஏன் கிழக்கு மாகாணத்திற்கு மாத்திரம் இவ்வாறானதோர் அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது என்ற விடயத்தினை உங்களிடம் கேட்கின்றேன். ஆகவே உடனடியாக முதலமைச்சரும், இங்குள்ள அமைச்சரவை வாரியமும் இதற்குரிய தீர்வொன்றை கண்டறிந்து, அவர்களின் கஷ்ட நிலைமையை கருத்திற்கொண்டு அவர்கள் பெப்ரவரி மாதம் 13ம் திகதிக்குமுன் பொறுப்புக்களை பாரமெடுக்குமுன் அவர்களை உடனடியாக மாகாணத்திற்குள் உள்வாங்கி அந்தந்த மாவட்டங்களில் நியமிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தனது பிரேரணையை முன்வைத்து உரையாற்றினார்.










Read more...

Thursday, January 28, 2016

அமெரிக்க இராணுவத்திற்கு தளங்கள் மற்றும் துறைமுகங்களை திறந்துவிடுவது குறித்த பேச்சுவார்த்தையில் இந்தியா. By Wasantha Rupasinghe

இந்திய செய்தி ஊடக அறிக்கைகளின்படி, பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) அரசாங்கம் அமெரிக்காவுடன் இராணுவ தளவாடங்கள் ஆதரவு உடன்பாடு (LSA) பற்றிய பேச்சுவார்த்தைகளை தொடங்கிவிட்டது. இது இறுதியாக்கப்படுமாயின், இந்திய துறைமுகங்கள், இராணுவம் மற்றும் விமானப்படை தளங்களை எரிபொருள் நிரப்புதல், மற்றொருவிதத்தில் அமெரிக்கா அதன் இராணுவத் தளங்களை படிநிலைப்படுத்துதல், ஆயத்தங்களுக்கு வாய்ப்பளித்திடல் என்ற வகையில் அமெரிக்கா வாடிக்கையாக பயன்படுத்திட ஏதுவாக இராணுவ தளவாடங்கள் ஆதரவு உடன்பாடு அனுமதிக்கும்.

இராணுவ தளவாடங்கள் ஆதரவு உடன்பாட்டின் கீழ், இந்திய இராணுவத்திற்கும் அமெரிக்காவிற்கு ஒத்த உரிமைகள் இருப்பதாக அமெரிக்கா உத்தரவாதம் அளிக்கும். என்று கருதப்படுகிறது. எனினும், இது பெரும்பாலும் ஒரு உயிரற்ற எழுத்தாகவே இருக்கும், அமெரிக்கா ஒரு ஆசிய மற்றும் பூகோள இராணுவ சக்தியாக உள்ளபோது, இந்திய இராணுவத்தின் எல்லை என்பது துணைக்கண்டம் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிவரைக்குமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான ஒரு அதிகாரபூர்வ இராணுவ கூட்டணியை நோக்கி இந்தியாவின் ஒரு மிகப் பெரிய மாற்றம் இருக்கும் என்பதை இராணுவ தளவாடங்கள் ஆதரவு உடன்பாட்டின் மீதான தொடக்க பேச்சுவார்த்தைகள் குறிக்கின்றன. சீனாவை பொருளாதார மற்றும் இராஜதந்திர ரீதியில் தனிமைப்படுத்தி அதனை இராணுவ ரீதியாக சுற்றிவளைக்கும் விதமான வாஷிங்டனின் உந்துதலுக்கு காரணமான, "ஆசியாவில் முன்னிலை" என்ற அமெரிக்காவின் கொள்கையுடன் ஏற்கனவே இந்தியா மிகத் தீவிரமாக ஒத்துழைத்து வருகிறது. தற்போது இந்தியாவின் வடக்கு அண்டை நாடான சீனாவிற்கு மிக நெருக்கமான வரம்பிற்குள் அமெரிக்க விமானங்கள் மற்றும் கப்பல்களைக் கொண்டுவரும் வகையில், இந்திய வசதிகளைப் அமெரிக்கா பயன்படுத்த அனுமதிக்க புது டெல்லி தயாராகிக்கொண்டிருக்கிறது.

ஜோர்ஜ் டபிள்யூ புஷ் நிர்வாகம் 2006ல் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசாங்கத்துடன் ஒரு மூலோபாய கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது என்பதால், இராணுவ தளவாடங்கள் ஆதரவு உடன்பாட்டில் கையெழுத்திட இந்தியாவை அமெரிக்கா வலியுறுத்திக்கொண்டே இருக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி இராணுவ தளவாடங்கள் ஆதரவு உடன்பாடு மீதான பேச்சுவார்த்தைகளை அமெரிக்காவுடன் நடத்திய போதும், இவ் உடன்பாடு இந்தியாவின் "மூலோபாய சுயாட்சி"க்கு ஆபத்து விளைவிக்கும் மற்றும் சீனாவை எரிச்சலூட்டும் போன்ற கவலைகளின் காரணமாக இறுதியில் கையெழுத்திடுவதில் இருந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி பின்வாங்கிற்று.

இந்திய வசதிகளை அமெரிக்க இராணுவம் பயன்படுத்திக்கொள்ள வெளிப்படையாக அனுமதிப்பது என்பது மிகுந்த உணர்திறன்கொண்ட மற்றும் சர்ச்சைக்குரிய பிரச்சினையாகும் என்ற காரணத்தினால், பா.ஜ.க. அரசாங்கம் இராணுவ தளவாடங்கள் ஆதரவு உடன்பாட்டினை ஊர்ஜிதப்படுத்துவது தொடர்பாக வாஷிங்டன் உடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பது பற்றி எவ்வித அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருப்பினும், செய்தி ஊடக அறிவிப்புகளை இந்திய அரசால் மறுக்கமுடியவில்லை. பெயர்குறிப்பிடப்படாத இந்திய பாதுகாப்புத் துறை மூத்த அதிகாரி ஒருவர் இப்பேரத்தில் சம்பந்தப்பட்டுள்ளார் என்பது மேற்கோள் செய்து காட்டப்பட்டுள்ளது, பாதுகாப்புத்துறை அமைச்சரின் டிசம்பர் 7 முதல் 10ம் தேதி வரையிலான அமெரிக்கப் பயணத்தின்போது இராணுவ தளவாடங்கள் ஆதரவு உடன்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது என டிசம்பர் 26ம் தேதிய சென்னை சார்ந்த ஹிந்து செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்தியா அதன் இராணுவ வசதிகளை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்வதற்கு வெளிப்படையாக ஒப்புதல் அளிப்பதன் பிரம்மாண்டமான முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டு காட்டும் ஒரு அறிக்கையில், புது டெல்லி அமெரிக்கா உடனான இராணுவ தளவாடங்கள் ஆதரவு உடன்பாடு மீதான ஒப்பந்தத்தை விரைவில் அடைத்துவிடுவதில் எந்தவொரு கடுமையான தடையையும் சந்திக்கவில்லை என்று இந்திய அதிகாரிகள் பார்ப்பதாக ஹிந்து செய்தி மேலும் கூறியது. "ஒரே ஒரு கவலை மட்டுமே உள்ளது" என்று அவர் பின்னர் அறிவித்தார். "போர் நிகழ்ந்தால் என்ன நடக்கும்?

அமெரிக்க இராணுவ நடவடிக்கைக்கு ஒருவேளை இந்தியா ஒத்துழைக்காமல் இருந்திருந்தால் இராணுவ தளவாடங்கள் ஆதரவு உடன்பாடு எப்படி பிரயோகிக்கப்படும் என்பதற்கான "விளக்கங்களை" இந்தியா அறிய முயல்வதாக அதிகாரி கூறினார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்புத் தன்மை பற்றி ஒருவேளை அவர் நினைத்ததைவிட அதிகமாக இருக்கலாம் என்றார், "நட்பு நாடுகளுடன் போருக்கான ஆதரவை நீட்டிக்க" சட்டபூர்வமாக கடமைப்பட்டிருக்க புது டெல்லி விரும்பவில்லை எனவும் அந்த பெயர் குறிப்பிடப்படாத அதிகாரி தெரிவித்தார்.

போர் நிகழுமானால் LSA விதிமுறைகளில் எவ்வித இடைநீக்கம் அல்லது திருத்தம் செய்யப்படாமல் அப்படியே மாற்றம் இல்லாமல் இருந்தால் மட்டுமே இந்தியா எனவும் மொழி விதிகளை உட்படுத்துவதன் மூலம் ஒரு "சமரசம்" காண வழிகாணலாம் எனவும் ஆலோசனை கூறினார்.

இம்மாதிரியான மொழியை உட்சேர்ப்பது என்பது இந்தியா "மூலோபாய சுயாட்சி" எனும் பாசாங்கினை பேணிவரும் அதேவேளையில் சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் மூலோபாய தாக்குதல்களில் இந்தியா தன்னை இன்னும் முழுமையாக ஒருங்கிணைத்துக் கொள்ளும் வகையில் இந்தியாவின் கொள்கையை கடைபிடிக்கும் வழியில் உள்ளது.

இது அமெரிக்கா உடனான இராணுவ-பாதுகாப்பு கூட்டினை மேம்படுத்துதல் குறித்த உள்நாட்டு எதிர்ப்பினை எதிர்கொள்ள உதவும். இந்திய தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினரிடையே அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக பரந்த விரோதப் போக்கு உள்ளது, அவர்கள் இதை போர் மற்றும் அடக்குமுறைகளுடன் சரியாக அடையாளம் கண்டு வைத்துள்ளனர். சீனா உடனான இந்தியாவின் உறவுகளில் ஏற்படும் தாக்கம் மற்றும் இந்தியாவை கடுமையாக மிரட்டுவது மற்றும் அச்சுறுத்துவது போன்ற நீண்டகால வரலாற்றை அமெரிக்கா கொண்டிருப்பது போன்ற இரண்டு காரணங்களினால் இந்திய அரசியல் மற்றும் இராணுவ ஸ்தாபகத்தின் பிரிவுகள் தங்களது சொந்தக் காரணங்களால் வாஷிங்டன் உடன் மிக நெருக்கமாக பிணைந்து செல்வதை எதிர்க்கின்றன.

அமெரிக்கா அதன் பங்கிற்கு, இராணுவ தளவாடங்கள் ஆதரவு உடன்பாட்டிற்கு இறுதி வடிவம் கொடுக்க ஆர்வமாக உள்ளது, மேலும் இந்திய இராணுவத்தினை அமெரிக்க ஆயுதங்கள் மற்றும் ஆயுத முறைகளை சார்ந்திருக்க செய்வது உட்பட பென்டகனுடன் எப்போதும் நெருங்கிய கூட்டை இந்திய இராணுவம் நிலையாகப் பெற்றுக்கொள்ளும் வகையிலான அமெரிக்காவின் நீண்டகால மூலோபாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக அமெரிக்கா இதனை பார்க்கிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு ஒரு பென்டகன் அதிகாரி அளித்த பேட்டியில், பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருப்பது குறித்து வாஷிங்டன் மகிழ்ச்சியுற்று இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். "பாரிக்கர் இராணுவ தளவாடங்கள் ஆதரவு உடன்பாட்டில் கையெழுத்திட வெளிப்படையாக இணக்கத்தை காட்டியுள்ளார்", மேலும் இந்தியாவுடன் ஒரு முழு இராணுவக் கூட்டினை மேம்படுத்துவதில் அமெரிக்கா "அடித்தளமாக" கருதும் இரண்டு தொடர்புள்ள ஒப்பந்தங்கள் "பின்தொடரும்" என்று அமெரிக்கா "நம்பிக்கை" வைத்துள்ளதாக எக்ஸ்பிரஸ் செய்தியானது அந்த அதிகாரியின் வார்த்தைகளின் சாரம்சத்தை வடித்துள்ளது.

மற்ற இரண்டு "அடித்தளமான ஒப்பந்தங்கள்" ஆக தகவல் தொடர்புகளுடன் இணைந்து செயலாற்றுதல் மற்றும் பாதுகாப்பு உடன்படிக்கை குறித்த ஒப்பந்தம் (CISMOA) மற்றும் புவிசார் ஒத்துழைப்பிற்கேற்ற அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு உடன்பாட்டு ஒப்பந்தம் (BECA) போன்றவை உள்ளன. இவ்வொப்பந்தங்கள் அமெரிக்க இராணுவக் கூட்டுக்களின் நிலைத்த அங்கங்களாக உள்ளன. இவை "தகவல் தொடர்புகளுடன் இணைந்து செயலாற்றுதல்" மற்றும் "பாதுகாப்பு" போன்ற உள்-இராணுவ வசதிகளை ஏற்படுத்துவது மற்றும் மேம்படுத்துவதற்காக என்று கருதப்படுகிறது.

அதே பாதுகாப்பு அதிகாரி ஹிந்துவுக்கு பேட்டியளித்திருப்பதன்படி, அவை "இந்தியாவின் மறைகுறியாக்கப்பட்ட அமைப்புக்களில் அமெரிக்காவின் அணுகுதலை அனுமதிக்கும்", இந்த நிபந்தனை இந்திய ஆயுதப் படைகள் "உடன்பாடின்மைகள்" குரல் எழுப்பும் நிலைக்கு காரணமாக அமைந்துவிட்டது.

2006-2014 வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசாங்கத்தின்போது பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஏ.கே.ஆன்டனி, தகவல் தொடர்புகளுடன் இணைந்து செயலாற்றுதல் மற்றும் பாதுகாப்பு உடன்படிக்கை குறித்த ஒப்பந்தம் (CISMOA) மற்றும் புவிசார் ஒத்துழைப்பிற்கேற்ற அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு உடன்பாட்டு ஒப்பந்தம் (BECA), அத்துடன் இராணுவ தளவாடங்கள் ஆதரவு உடன்பாடு (LSA) போன்றவற்றை இறுதியில் எதிர்க்கத் தொடங்கினார், அதற்கு காரணம்

"இவ்வொப்பந்தங்களில் இடப்படும் கையெழுத்துக்கள், இந்திய இராணுவ நிறுவல்களில் அமெரிக்க இராணுவத்தின் வில்லங்கமில்லா அணுகுதலை அனுமதிக்கும் மற்றும் கூர் உணர்ச்சியுடைய தரவுகளில் சமரசத்தை ஏற்படுத்தும்" என அவர் நம்புவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்தது.

இவற்றிலிருந்து தனியாக, இந்திய-அமெரிக்க பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக முன்முயற்சி (DTTI) யின் கீழ், பென்டகன் மற்றும் அமெரிக்க ஆயுத தயாரிப்பாளர்கள் உடனான இணை தயாரிப்பு மற்றும் இணை அபிவிருத்தி திட்டங்களில் நுழைய இந்தியாவை அமெரிக்கா வற்புறுத்தி வருகிறது.

இருப்பினும், அமெரிக்க அதிகாரிகள் அவர்களது இந்திய சமதரப்பினரிடம் CISMOA மற்றும் BECA வின் விதிமுறைகளை இந்தியா ஒத்துக்கொள்ளவில்லை என்றால், அது "ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில்" உயர் தொழில்நுட்ப ஆயுத முறைகளின் இணை தயாரிப்பு மற்றும் இணை அபிவிருத்தி விரிவாக்கத்திற்கு ஒரு தடையாக இருக்கும் என்பது நிரூபணமாகும் எனத் தெரிவித்துள்ளனர்.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசின்கீழ், அமெரிக்காவின் ஒரு "பூகோள மூலோபாய கூட்டாளி" ஆக இந்தியா மாறியதுடன் பென்டகனின் கூட்டு பயிற்சிகளில் இந்திய இராணுவம் அடிக்கடி பங்காளியாக மாறியது, மேலும் இந்தியாவின் மிகப்பெரிய ஆயுத விநியோகஸ்தராக ரஷ்யாவிற்கு பதிலாக அமெரிக்கா இடம்பெயர்ந்தது.

பா.ஜ.க.வின் 20 மாதகால ஆட்சி, அமெரிக்காவின் மிக முக்கியமான இந்திய-பசிபிக் நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உடனான இராணுவ-பாதுகாப்பு பிணைப்புக்களை உருவாக்குவது உட்பட, இந்தியாவை மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் வாஷிங்டன்னை நோக்கி சாய்த்துவிட்டது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் ஆண்டு குடியரசு தினவிழாக் கொண்டாட்டங்களில் மரியாதைக்குரிய விருந்தினராக பங்கேற்ற முதல் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா என ஆக்கினார். ஜனவரி 2015ல் ஒபாமாவின் டெல்லி வருகையின் முடிவின்போது, தென் சீனக் கடல் பகுதிகளில் அமெரிக்க மற்றும் அதன் நட்பு நாடுகள் மற்றும் சீனாவிற்கு இடையேயான மோதல்கள் குறித்த அமெரிக்காவின் வரைவு உட்பட வாஷிங்டனின் மகிழ்ச்சிக்கு ஏற்ப "ஆசிய-பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல் குறித்த அமெரிக்க-இந்திய கூட்டு மூலோபாய நோக்கு" பற்றி அவரும் மோடியும் அறிவித்தனர்.

செப்டம்பர் மாதத்தில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் அவரின் அமெரிக்க சமதரப்பினரான ஜோன் கெர்ரியும், ஐ.நா.வின் அமைதிகாக்கும் இயக்கங்களில் பங்கேற்க வந்திருக்கும் ஆபிரிக்க துருப்புக்களுக்கு "பயிற்சி மீது கவனம்" என்பதுடன் "அமைதிகாக்கும் திறன்வளர்ப்பு"க்கு அமெரிக்க மற்றும் இந்திய இராணுவங்கள் ஒத்துழைக்கும் என அறிவித்தனர். பேரழிவு நிவாரணங்கள் வழங்குவதில் இந்திய மற்றும் அமெரிக்க இராணுவங்களுக்கு இடையே தற்காலிக ஒத்துழைப்பு கடந்தகாலத்தில் இருந்தபோதும், ஒரு வெளிநாட்டு இராணுவ நடவடிக்கையில் முதல் முறையாக அவர்கள் இணையவிருப்பதாகவும், ஏகாதிபத்திய ஆதரவுபெற்ற ஐ.நா. அமைதிகாக்கும் இயக்கங்களில் இணைந்து பணியாற்றி அமெரிக்க-இந்திய இராணுவங்களை கண்காணிப்பு மற்றும் ஆயுதப்படைகளை ஈடுபடுத்துதல் போன்றவற்றில் பயன்படுத்திட இராணுவ படையினரை வழக்கப்படுத்தவேண்டும் என இந்த ஒப்பந்தம் பரிந்துரைக்கிறது.

முத்தரப்பு இந்திய-அமெரிக்க-ஜப்பானிய இராணுவ பாதுகாப்பு ஒத்துழைப்பினை மோடி அரசாங்கம் தழுவியிருத்தல் என்பது குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது, அதிலிருந்து முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம், சீனாவின் பலத்த எதிர்ப்பிற்குப் பின்னர் பின்வாங்கிவிட்டது.

கடந்த செப்டம்பரில், அமெரிக்க-ஜப்பான்-இந்திய முத்தரப்பு அமைச்சர்களுக்கான பேச்சுவார்த்தையின் ஆரம்ப கூட்டத்தில் கெர்ரி மற்றும் ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் ஃபுமியோ கிஷிடாவையும் சுஷ்மா சுவராஜ் சந்தித்தார். அதன்பின்னர் விரைவிலேயே, வருடாந்திர இந்தோ-அமெரிக்க "மலபார்" கடற்படை பயிற்சியில் மூன்றாவது நிரந்தர உறுப்பினராக ஜப்பான் இனிமேல் இருக்கும் என்பது வெளிப்பட்டது.

2008க்குப் பின்னர் அமெரிக்காவிற்கு பாரிக்கரின் பயணம் ஒரு முதலாவது இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சரின் பயணமாக இருந்தது. அதே காலகட்டத்தில், அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலர் இந்தியாவிற்கு ஆறு முறை பயணம் மேற்கொண்டிருந்தார், சீனாவுக்கு எதிரான பென்டகனின் ஆத்திரமூட்டல்கள் மற்றும் போர் திட்டமிடல்களில் இந்தியாவை ஒருங்கிணைக்க முனைவதற்கான குறியீடாகவே இது இருந்தது.

ஹவாயில் அமெரிக்க பசிபிக் படைத் தளத்தினை (PACOM) பார்வையிடுவதன் மூலம் பாரிக்கர் தனது அமெரிக்க பயணத்தினை தொடங்கியது, இரு நாடுகளுக்கிடையிலான இராணுவ-பாதுகாப்பு கூட்டுக்களை வலுப்படுத்துவதையே குறித்துக்காட்டியது. அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலர் ஆஷ்டன் கார்ட்டெர் தலைமையில், அமெரிக்காவின் அணு சக்தியில் இயங்கும் விமானம் தாங்கிக் கப்பல்களில் ஒன்றான யுஎஸ்எஸ் டிவைட் டி. ஐசனோவாவிற்கு பாரிக்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டது, இதுவரை யாரும் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலுக்கு பயணம் செய்யாத நிலையில், முதலாவது இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக அவர் பயணம் மேற்கொண்டார் என ஆகியது.

இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), அல்லது சி.பி.எம்., இராணுவ தளவாடங்கள் ஆதரவு உடன்பாடு மற்றும் இது தொடர்பான இரண்டு இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் மீது அமெரிக்கா உடனான பா.ஜ.க.வின் பேரங்கள் குறித்து கவலை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்திய முதலாளித்துவ வர்க்கத்தினருடன் முற்றிலும் ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய ஒரு கட்சி, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான இந்தியாவின் மூலோபாயக் கூட்டினை வடிவமைப்பது உட்பட. நான்கு ஆண்டுகளாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்திற்கு சி.பி.எம் உற்ற தூணாக இருந்தது. உழைக்கும் வர்க்கத்தினர் தலைமையில் ஏகாதிபத்தியம் மற்றும் ஏகாதிபத்தியப் போர் குறித்த புரட்சிகரமான எதிர்ப்பை வளர்க்கும் போராட்டங்களின் ஒரு அங்கமாக இல்லாமல், இந்திய ஆளும் மேற்தட்டுக்களின் தேசிய நலன்கள் குறித்த நிலைப்பாட்டில் இருந்துகொண்டு இராணுவ தளவாடங்கள் ஆதரவு உடன்பாட்டினை சி.பி.எம். எதிர்க்கிறது. "இந்தியாவின் இறையாண்மையை கட்டுப்படுத்தக்கூடிய, அதன் மூலோபாய சுயாட்சியை முடக்கக்கூடிய மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு இந்தியாவை ஒரு துணை இராணுவ கூட்டாக உருவாக்கும் வகையிலான இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டாம் என சி.பி.எம். இன் அங்கமான மக்கள் ஜனநாயகம் பா.ஜ.க. அரசாங்கத்தை வலியுறுத்துவதாக சமீபத்திய கட்டுரை ஒன்று தெரிவிக்கின்றது.

இதே போக்கில், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒரு முற்போக்கான எதிர் சக்தியாக இந்திய முதலாளித்துவம், ஐ.நா. மற்றும் ஒரு "பல்முனை உலகு" பணியாற்றிடமுடியும் என்று பிற்போக்குத் தனமான மாயையை சி.பி.எம். ஊக்குவிக்கிறது.

Read more...

ஞானசார தேரருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு! தொடர்ந்து என்னால் வழக்கை விசாரிக்க முடியாது நீதிபதி!

காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 25ம் திகதி இடம்பெற்ற வேளை, நீதிமன்ற வளாகத்தில் வைத்து சந்தியா எக்னலிகொடவை அச்சுறுத்தினார் மற்றும் நீதிமன்றை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டில் எதிர்வரும் 9ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசேர தேரர் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பிணைமனு ஹோமாகம நீதவான் ரங்க திஸாநாயக்க அவர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

பிணை மனுவை நிராகரித்த நீதிபதி நீதிமன்றை அவமதித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர் தொடர்பில் விடுக்கப்பட்ட பிணைமனுவில் போதிய நியாயங்கள் இல்லை என்றும் தெரிவித்து நிராகரித்துள்ளார்.

அத்துடன் இது விடயத்தில் தனது தலையில் துப்பாக்கியை வைத்து பிணை வழங்ககோரினாலும் அதை தான் செய்யப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளமை இன்று இலங்கையில் நீதிக்கு தலைவணங்கும் நீதிபதிகள் வாழக்கின்றார்கள் என்பதை புடம்போட்டுக்காட்டியுள்ளது.

மேலும் நீதிபதி அவர்கள் இவ்வழக்கினை தன்னால் தொடர்ந்து விசாரிக்க முடியாது என்றும் இது தொடர்பாக மேலிடத்திற்கு அறிவிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் திட்டமிட்டு வேண்டுமென்றே சிறைக்குச் சென்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் தென் மாகாணசபை உறுப்பினரும், தாய்நாட்டுக்கான படைவீரர்கள் அமைப்பின் அழைப்பாளருமான மேஜர் அஜித் பிரசன்ன குற்றம் சுமத்தியுள்ளார்.


சிங்கள ஊடகமொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேஜர் அஜித் பிரசன்ன மேலும் கூறுகையில்...

நீதிமன்றில் தவறுதலாக தொலைபேசி ஒலித்த போது ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவரை கைது செய்தால், பௌத்த பிக்குகளுக்கும் சட்டம் ஒரேவிதமாக அமுல்படுத்தப்பட வேண்டும்.

புத்தளம் நீதிமன்றம் மீது கல் வீசிய ரிசாட் பதியூதீனை கைது செய்யுமாறு உத்தரவிட்ட நீதவான் ரங்க திஸாநாயக்கவே, ஞானசார தேரரை கைது செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

பிரகித் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள படைவீரர்களுக்கு பிணை வழங்கப்பட வேண்டுமென போராடி வருகின்றேன்.

எனினும் இந்தப் போராட்டங்ளில் ஒரு நாளேனும் ஞானசார தேரர் பங்கேற்கவில்லை. இது தொடர்பில் ஒரு நாளும் அறிக்கை எதனையும் வெளியிடவில்லை.

இந்த நாட்களில் சிறைக்குச் செல்ல வேண்டிய மிகுந்த அவசியமொன்று ஞானசார தேரருக்கு காணப்பட்டது.

ஞானசார தேரர் திடீர் ஹீரோவாக மாறவே விரும்புகின்றார்.

உணர்வுகளுக்கு அடிமையாகிய சில சிங்கள பௌத்தர்களை ஆத்திரமூட்டி முஸ்லிம் கடைகளை எரித்து. சிலரைத் தாக்கி பிரச்சினை ஏறப்டுத்த முயற்சிக்கின்றார்.

இதன் மூலம் சிங்கள முஸ்லிம் கலவரத்தை உருவாக்கி, மக்கள் அதன் பின்னர் ஓடும் போது நாட்டை பிளவடையச் செய்யும் அரசியல் சாசனமொன்றை அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கக் கூடிய பின்னணியை உருவாக்கிக் கொள்ள முடியும்.

இது முழுக்க முழுக்க ஓர் சூழ்ச்சித் திட்டமாகும்.

இவர்கள் மஹிந்தவிற்கும் இதனையே செய்தார்கள். தற்போது சிங்க லே என்ற அமைப்பின் ஊடாக குழப்பம் விளைவிக்க முயற்சிக்கின்றர்கள்.

அரச சார்பற்ற நிறுவனங்களின் பணததைக் கொண்டே இவ்வாறான போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

இந்த சூழ்ச்சி திட்டங்களில் சிங்கள பௌத்தர்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது , உணர்வுகளுக்கு அடிமையாகி விசராட்டம் ஆடாது, சிந்தித்து செயற்பட வேண்டிய தருணமிது என மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.

Read more...

போர்குற்ற விசாரணகளை உள்நாட்டு நீதிபதிகளே மேற்கொள்வர். ராஜித திட்டவட்டம்

நாட்டில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பமானால் அவற்றை உள்நாட்டு நீதிபதிகளே விசாரிப்பர் என அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு கூறியுள்ள அவர் இதுவிடயத்தில் வெளிநாட்டு தொழிநுட்பம் மற்றும் உதவிகளை மட்டுமே பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு உதவி எனக் குறிப்பிடுவது, வெளிநாட்டு நீதிபதிகளின் பங்கேற்பு அல்ல என தெளிவாக கூறிய அவர், அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது உள்நாட்டு நீதிபதிகளின் உதவியுடன் மட்டுமே எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read more...

Saturday, January 23, 2016

சேரன் புலிவால் பிடித்த வரலாறு சொல்கின்றாா் அவுஸ்திரேலியாவிலிருந்து டாக்டா் நடேசன்.

இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு நடந்துள்ளது இனப்படுகொலைதான் என்பது எனது வாதம் - சேரன்:-

இந்த மக்கள் தீர்ப்பாயத்தில் இனப் படுகொலை தொடர்பான எனது கருத்துக்களையும் வாதங்களையும் முன்வைக்க வாய்ப்பு வழங்கியமைக்கு எனது மனமார்ந்த நன்றி. என்னுடைய வாதங்களின் மையப்பொருள், சமூகவியலாளர்களும் மானுடவியலாளர்களும், இனப்படுகொலை என்றால் என்ன எத்தகைய எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள்? இந்த எண்ணங்கள் எவ்வகையில் ஈழத் தமிழ் இனப்படுகொலையை 'இனப்படுகொலை' என வரையறை செய்ய உதவக்கூடும்? என்ற இரு கேள்விகளையும் ஒட்டியதாக அமைந்துள்ளது. மூன்று வெவ்வேறான, ஆனால் தமக்குள் இணகக் மான உறவுகளைக் கொண்டிருக்கும் தளங்களிலிருந்து என்னுடைய பார்வையையும் வாதங்களையும் முன்வைக்கிறேன்.

முதலாவது தளம் ஊடகவியலாளர் என்பது. 1984 – 1987 வரை முழுநேரப் பத்திரிகையாளனாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான Saturday Review என்ற ஆங்கில வார இதழில் பணிபுரிந்தேன். அதற்குப பிற்பாடு கொழும்பிலிருந்து வெளியாகிய 'சரிநிகர்' இதழில் பத்து ஆண்டுகள் பணி யாற்றியிருக்கிறேன். இந்தக் காலகட்டங்க ளில் ஏராளமான படுகொலைகள், மனித உரிமை மீறல்கள், சித்திரவதை என்பன பற்றி அறிக்கையிட்டிருக்கிறேன். ஏராளமான சாட்சியங்களையும் திரட்டியிருக்கிறேன். பல படுகொலைகளுக்கும் குண்டு வீச்சுக ளுக்கும் வேறு வகையான தாக்குதல்க ளுக்கும் நேரடியான சாட்சியாகவும் இருந்திருக்கிறேன்.


என்னுடைய இரண்டாவது தளம் பல்கலைக் கழகம், ஆய்வு, கல்வித் துறை சார்ந்தது. இப்போது கனடாவின் வின்ஸர்பல்கலைக் கழகத்தில் சமூகவியல், மானுடவியல், குற்ற வியல் துறையில் ஒரு பேராசிரியராக இருக்கிறேன். இனத்துவ முரண்பாடுகள், இனப்படுகொலை, புலம் பெயர்வு, உலகமயமாக்கம் என்பன எனது ஆய்வுத் துறைகள். இந்தத் துறைகளிலேயே எனது பல்கலைக்கழகக் கற்பித்தலும் அமைந்திருக்கிறது.

மூன்றாவது தளம், நான் ஒரு கவிஞன், நாடகாசிரியன் என்பது. என்னுடைய அனுபவங்களும் சிந்தனையும் எண்ணங்களும் ஆய்வுகளும் இந்த மூன்று தளஙக்ளையும் இடைவெட்டியதாகவே அமைகின்றன. 1956 – 2009 காலக்கட்டப் குதியில் ஈழதத்மிழர்கள் மீது நிகழத்தப்பட்ட வன்முறைகள் படுகொலைகள், பேரழிவு என்பன தொடர் பாகக் கணிசமான அளவு ஆதாரங்கள் இந்தத் தீர்ப்பாயத்தில் சமரப்பிக்கப்ட்டுள்ளன. அவற்றோடு ஐ.நா அவையின் சிறப்பு ஆறிக்கை, வடக்கு - கிழக்கு மனித உரிமைகள் அலுவலகம் (NESHOR) திரட்டி வெளியிட்டிருக்கும் தமிழினப் படுகொலைகள் பற்றிய நூல், அனைத்துலக மன்னிப்புச்சபை (Amnesty International) தொடர்ச்சியாகத் தொகுத்து வெளியிட்டுள்ள அறிக்கைகள்,Human Rights Watch, International Crisis Group அறிக்கைகள், சனல்-4 ஆவணப்படங்கள், இனப்படுகொலையில் தப்பிப் பிழைத்தோரின் வாக்குமூலங்கள் எனப் பெருமளவு ஆதாரங்கள் தீர்ப்பாயம் முன்னே உள்ளன. இத்தகைய ஆதாரங்களுக்கு அப்பால், எவ்வகையில் இந்த ஆதாரங்களை சமூகவியல், மானுடவியல் நோக்கில் நாங்கள் புரிநது கொண்டு விளக்கம் தரமுடியும் எனபது எனது அக்கறைகளுள் தலையாய ஒன்றாகும்.

சேரனின் வாதத்தில் ஓட்டைகள் - நடேசன்

ஓரு புலி எதிர்பாளராக இருந்த சேரன் , ஜெயபாலன் போன்றவர்கள் நோர்வேயின் தலையீட்டின் பின்பு புலிகள் நிரந்தரமானவர்கள் என எண்ணியதால் தமிழ் தேசியம்பேசியதோடு புலிவாலைப்பிடித்தார்கள். ஆனால் புலி வாலை மட்டும் இவர்களிடம் கொடுத்துவிட்டு இறந்துவிட்டது . ஆனால் புலியின் வாலைபிடித்தவர்கள் விடமுடியாது என்பது முரண்ணகை(Irony)

புலியின் பேரில் காசு உழைத்தவன், ஆயுதம் வாங்கியவன் எல்லாம் தங்கள் பிஸ்டத்தில் ஒட்டின தூசுபோல் தட்டிவிட்டு போய்விட்டார்கள். சேரன் , ஜெயபாலன் மூச்சு அடங்கும் வரையும் புலிவாலை விடமுடியாது. நல்ல கவிஞர்களாகிய இவர்களது நிலைமை மிகச் சோகமான விடயம்தான்.

சேரன் தன்னை வெளிப்படுத்தும் கட்டுரை -அதாவது அதிகாலை நேரத்தில் பெட்டையைத்தேடும் ஆண்மயில்போலத் தன்னை வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கையில் நடந்த போராட்டத்தை ஒரு தமிழ்பேசும் மக்களின் சமஉரிமைப்போராட்டமாக கொண்டு சென்றிருந்தால் போராட்டம் வென்றிருக்கும். வட கிழக்கு மாகாணத்து தமிழர்களது இனப்போராட்டமாக இதை மாற்றியபின் அரசாங்கம் தமிழர்கள் மேல் ஒடுக்குமுறையைப் பாவிப்பது நமக்குப் புரிந்திருக்கவேண்டும் .

இனப்படுகொலை (Genocide) என்பது மிகவும் சிக்கலான, பேரதிர்ச்சி தரும் ஒரு நிகழ்வு. இதனை வெறுமனே அனைத்துலகச் சட்டங்கள் (International Law) மூலம் மட்டுமே புரிந்து கொள்ள முயல்வதும் வரையறை செய்ய முற்படுவதும் சாத்தியமில்லை என்பது எனது வாதம் ஆகும். நடைமுறை, செயற்பாடு என்ற வகையில் இனப்படு கொலையாளரைக் குற்றக் கூண்டுக்குள் சிறைப்படுத்துவதற்குச் சட்டஙக்ளும் சட்டத்துறை சார்ந்த நுண்மையான நிபுணத்துவமும் அவசியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன் எனினும், 'இனப்படுகொலை என்பது என்ன?' என வரையறை செய்வதிலும் பல்வேறுபட்ட வடிவங்களில் இடம்பெறும் இனப் படுகொலைகளை இனங்கண்டு கொள்வதிலும் அனைத்துலகச் சட்டத்துறை போதுமானதலல்ல எமககு; சமூகவியல், மானுடவியல், மானுடப் பண்பியல் சார்ந்த அணுகுமுறைகளும் அவசியம் என்பதைப் பல சட்டவல்லுநர்களும் புலமையாளரும் மீள மீள வலியுறுத்துகின்றனர். 1948ல் உருவாகக் பப்பட்ட இனப்படுகொலை தொடர்பான ஜெனிவா உடன்படிக்கை (Geneva Convention) இன்றைய காலத்துக்கேற்ற வகையில் புதுமையும் மாற்றமும் பெறவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். அனைத்துலகச் சட்டங்களும் அவற்றின் எண்ணக்கருக்களும் மெல்ல மெல்லப் பரிணாமம் பெற்றுவருகின்றன என்பது உண்மை எனினும் உலக நிகழ்வுகளும் போரும் வன்முறையும் படுகொலைகளும் மிக விரைவாகப் பெருகிவிட்டன என்பதையும் நாம் கவனத்திலெடுக்க வேண்டும். இந்த வேகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் அனைத்துலகச் சட்டங்களும் சட்டப் பொறிமுறைகளும் மாற்றமும் வளர்ச்சியும் பெறவில்லை. இனப்படு கொலை தொடர்பாகவும் எமக்குப் புதிய வரைவிலக்கணங்களும் பார்வைகளும் மிக அவசியமாக உள்ளன.

எனவே, ஹெலன்பெயின் (1990) என்னும் அறிஞரின் கருத்துக்களை வழிமொழிந்து இனப்படுகொலை என்பதைப் பின்வருமாறு வரைவிலக்கணம் செய்ய விரும்புகிறேன்.'தொடர்ச்சியாகவும் திட்டமிடப்பட்ட முறையிலும் ஒரு மக்கள் கூட்டத்தை அல்லது இனக் குழுமத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் சமூகநிலை சார்ந்தும் உயிர்முறை சார்ந்தும் அழித்தொழிக்க முனைவது அல்லது அழித்தொழிப்பது இனப்படுகொலை ஆகும் என்பது பொருத்தமான எளிமையான அதேநேரம் சுருக்கமான வரைவிலக்கணமாக அமையமுடியும் என நான் கருதுகிறேன். இப்போது நடைமுறையிலிருக்கும் அனைத்துலகச் சட்டங்கள், அனைத்துலக நிறுவனங்கள், ஐக்கியநாடுகள் அவை, அனைத்துலக நாணய நிதியம் போன்ற அமைப்புக்கள் அனைததுமே 'நாடு – அரசு' (Nation – State) என்பதை மட்டுமே கருத்திலும் கவனத்திலும் நடைமுறையிலும் கொண்டவை நாடுகள் இல்லாத எந்தத் தேசிய இனம்/ இனக்குழுமம் / மக்கள் கூட்டத்துக்கு இத்தகைய அமைப்புக்களில் பிரதிநிதித்துவமும் கிடையாது, அவை பற்றிய அக்கறையும் இல்லை. நாடற்ற தேசியங்கள், இடமற்ற இனக்குழுமங்கள், பல நாடுகளுக்கிடையே சிக்குண்டு கிடக்கும் புவியியலில் சிதறிக் கிடக்கும் குர்தீஷ் மக்கள், காஷ்மீரீ மக்கள், தமிழர் போன்ற இனக் குழுமங்களுக்கு இப்போதுள்ள அனைததுலக நிறுவன அமைப்புக்களில் இடம் கிடையாது. நவீன இனப்படுகொலைகள் இத்தகைய மக்களை நோக்கித்தான் குறிவைக்கப்பட்டுள்ளன என்பதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

குறிப்பாகத் தன்னாட்சி அல்லது தனிநாடு அல்லது தமக்கெனச் சுயநிண்ய உரிமையைக் கோரும் மக்களை நோக்கியே இனப் படுகொலை ஏவப்பட்டுள்ளது என்பதை நாங் கள் அவதானிக்க முடியும். இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. அவற்றுள் சிலவற்றைக் குறிப்பிடுகிறேன். பிரேஸிலின் பூர்விகக் குடிகள் (1957 – 1968), திபேத் (1959லிருந்து இன் றுவரை), பயா/பரா போர், நைஜீரியா (1967 – 1970), பரகுவேயில் அச்சே பூர்விகக் குடிகள் (1968 – 1978), பங்களாதேஷ் / கிழக்குப்பாகிஸ்தான் (1971), குவாட்டமாலா(1968 – 1996), ஈழத்தமிழர்கள் (1983 –2009). படுகொலைகள்,

இனத்துவச் சுத்திகரிப்பு (Ethnic Cleaning) போன்ற சொற்கள் / சொற்றொடர்களின் பயன்பாட்டுக்கு இன்றைய அனைததுலகச் சட்டப் பொறிமுறைகளில் எந்த வகையான பயன்பாடும் இல்லை. இத்தகைய அநியாயங்களுக்கும் இனப்படு கொலைகளுக்கும் பொறுப்பாக இருப்பவை நாடுகளும் அரசுகளும்தான். இந்த நாடுகளும் அரசுகளும் சேர்ந்துதான் அனைத்துலகச் சட்டங்களையும் நீதி முறைமைகளையும் உருவாக்கியிருக்கிறார்கள். எனவே இவர்களிடமிருந்து, இனப் படுகொலையாளர்களிடமிருந்து எவ்வாறு முற்றான நீதியை எதிர்பார்க்க முடியும்? ஒன்றில் மறுப்பார்கள், அல்லது மறைப்பார்கள். அதுதான் அவர்கள் செய்வது. அனைத்துலகச் சட்டப் பொறிமுறைகள், நீதிமுறைமை என்பன ஆண்டுக்கணக்காக இழுபடக்கூடியவை அன்றே தீர்ப்பு வழங்கும் வலுவற்றவை. இதனால் இனப் படுகொலையாளர்களும் இனப்படு கொலை புரிந்த அரசுகளும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும், தடயங்களை அழிக்கவும் நிறைய வாய்ப்பு விரும்பியோ விரும்பாமலோ வழங்கப்படுகிறது என்பதை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இலங்கையில் 1915 முஸ்லிம் - சிங்கள கலவரம் வெடித்தது அது எதைக்காட்டுகிறது ? அப்பொழுது சிங்கள அரசா ஆட்சியில் இருந்தது...? இல்லையே.

இலங்கையில் இனமுரண்பாடுகளை இலகுவாக தூண்டமுடியும். இது பெரும்பாலான நாடுகளுக்குப் பொருந்தும் .பாகிஸ்தானில் அகமதியர், சியா என மதக்கலவரங்கள் ஏற்படுகிறது. இவைகள் நாளாந்தம் தொடருகின்றன். இந்தியாவில் மதம், இனம் என்ற வேறுபாட்டை விடுங்கள். நாளாந்தம் தலித் என்று போரட்டமும் கொலையும் நடக்கிறது. இவை எல்லாவற்றையும் எடுத்துப் பிரிவினைனக்கான ஆயுதப்போராட்டமாக நடத்தமுடியுமா? அப்படி நடந்தால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும்?

இலங்கையில் நடந்த தமிழ்- சிங்கள் இன வன்முறைகள் 58, 77, 83 என்பன கூர்ந்து பார்த்தால் அவை வித்தியாசமானவை
58ம் வருடத்தில் நடந்த கலவரத்தின் முதல் கொலை மட்டக்களப்பில் தொடங்கியது .அது உண்மையாக இரு இனத்தவருக்கும் இடையே நடந்த இனகலவரம். அரசாங்கம் உடனே நடவடிக்கை எடுக்கவில்லையென்றாலும் இராணுவமும் பொலிசும் பாரபட்சமற்று நடந்ததற்கு பல ஆதாரங்கள் உள்ளது .

77 ல் அரசாங்கத்தின் கையும் பொலிசும் கலகக்காரருக்கு ஆதரவாக இருந்தது . இராணுவம் பாரபட்சமாக இல்லாது நடுநிலையாக இருந்ததற்கு பல ஆதாரம் உளளது.

83 கலவரம் அரசாங்கத்தால் நடத் தப்பட்டது . இராணுவம் பொலிஸ் என்ற பாதுகாப்பு படைகள் சிங்கள காடையர்களுடன் சேர்ந்து தொழில்பட்டது.

இதிலிருந்து சேரன் சமூகவிஞ்ஞானியாக நடக்காமல் சாதாரண மனிதராக எல்லாவற்றையும் ஒரே மூடையில்போடுகிறார்.

உண்மையான விஞ்ஞானம் படித்தவர்கள் ஒவ்வொருசம்பவத்தையும் பிரித்து ஆராய்வார்கள். அதன்மூலம் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணமுடியும் என்பதால்.

இலங்கையில் தனிநாடு கேட்டுப் போரிடாத மலையகத் தமிழர்கள் மீது பெருமளவில் எதுவும் நடைபெறாதது மட்டுமல்ல மலைநாட்டு தமிழர்கள் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளதும் அவர்களது பாராளுமன்ற அங்கத்துவமும் அமைச்சரவையில் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதன்மூலம் அவர்கள் அரசில் பங்கு பெறுகிறார்கள். தங்களை முன்னே கொண்டு செல்கிறார்கள். தமிழர்கள் என்பதால் ஒடுக்கப்படவில்லை. இதன்மூலம் இனக்கொலை செய்த அரசாங்கம் என்ற சேரனின் குற்றச்சாட்டு காற்றில் பறக்கிறது.
தமிழ்பேசும் இஸ்லாமியர் சகலவிதத்திலும் உயர்வடைந்திருப்பதும் , சிறுபான்மையினரை தாக்கும் அரசாங்கம் என்ற குற்றசாட்டிலும் பலவீனத்தை காட்டுகிறது. நமக்கு புரிவது அரசாங்கத்தின் மீது போர்தொடுத்தவர்கள் வடகிழக்கு தமிழர்கள் என்பதே. அவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருப்பதை காட்டுகிறது.

நான் தமிழ் இனம் போராடக்கூடாது என சொல்லவில்லை . ஆனால் பின்விளைவுகளை புரியாத முட்டாளாக இருக்கவேண்டாம் என்பதே எனது கோரிக்கை. தோற்றதால் ஏற்பட்ட விளைவுகளை எண்ணவில்லை.

இந்தப் பின்னணியில் இரண்டு புதிய கருத் துருவங்களை அல்லது எண்ணக்கருக்களை நான் முன்வைக்க விரும்புகிறேன். இவற்றைப் பற்றி இனப்படுகொலை தொடர்பாகத் தொடர்ச்சியான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் அலெக்சாந்தர் லபான்ஹின்டன் (2002), இஸரேல் சார்ணி (1994)போன்றோர் நிறையவே எழுதியுள்ளனர். முதலாவது 'இனப்படுகொலைக்கான முன்னோடித் தயாரிப்பு' (Genocidal Priming) என்பது. இரண்டாவது இனப் படுகொலையை உள்நோக்கமாகக் கொண்ட கூட்டுப்படுகொலைகள் (Genocidal Massacres). இந்த இரண்டு வழிமுறைகளும் பின்னர் இனப் படுகொலைக்கு நேரடியாகவே இட்டுச் செல்கின்றன. இனப்படுகொலைக்கான முன்னோடித் தயாரிப்பு என்பது ஆண்டுக்கணக்காக மெல்ல மெல்ல இடம்பெற்று வருவது, மாற்று இனத்தவர்களின் குடியேற்றம் வெறுப்பு ஏற்படக் கூடிய வகையில் 'மற்றவர்'களைப் பற்றிக் கல்வியிலும் பாடப்புத்தகங்களிலும் வரலாற்றெழுதலிலும் சித்தரிப்பது, திட்டமிட்ட ஒடுக்குமுறை, பண்பாட்டு அழிப்பு என்பன இந்த வகையுள் அடங்கும்.

இலங்கை அரசு தொடர்ச்சியாகவும் திட்டமிட்டும் இத்தகைய நடவடிக்கைகளில் 1948 இலிருந்தே ஈடுபட்டு வந்தமை தொடர்பான ஆவணங்கள் தீர்ப்பாயத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 1956, 1958, 1977, 1983 ல் நடந்தேறிய ஈழத் தமிழருக்கு எதிரான 'கலவரங்கள்' இந்த வழிமுறையின் தர்க்கரீதியான விளைவுதான். இனப்படுகொலையை உள்நோக்கமாகக் கொண்ட கூட்டுப் படுகொலைகள் வெறுப்பின் அடிப்படையில் நிகழ்த்தப்படுபவை. விடுதலைப் போராளிகள் அரச படையினர் மீது தாக்குதல் தொடுத்தமைக்குப் பதிலடியாகப் பொதுமக்களை அழிப்பதும் ஊர்களை எரித்து அழிப்பதும் இலங்கையில் பரவலாக நிகழ்ந்தவை.

ஜுன் 1956 – டிசம்பர் 2008 காலப்பகுதியில் இனப் படுகொலையை உள்நோக்கமாகக் கொண்ட 145 கூட்டுப் படுகொலைகள் ஈழத்தமிழர் வாழும் பகுதிகளில் இடம் பெற்றுள்ளன. தமிழ் மக்களுக்கெதிரான 'கலவரங்களை'யும் போர் உச்சம் பெற்றிருந்த காலத்தில் இடம்பெற்ற கூட்டுப் படுகொலைகளையும் நான் இந்தப் பட்டியலில் சேர்க்கவில்லை. இந்தக் கூட்டுப் படுகொலைகளில் 41 படுகொலைகள், இடம்பெற்ற ஊர்களுக்கு நான்சென்று தப்பிப் பிழைத்தவர்களை நேர்காணல் செய்திருக்கிறேன். அல்லது அந்தப்படுகொலைகளைப் பற்றி ஊடகவியலாளனாக விவரமாக எழுதியிருக்கிறேன் அல்லது சில படுகொலைகளுக்குச் சாட்சியாகவும் இருந்திருக்கிறேன். இவை பற்றிய முழு விவரங்களையும் பட்டியலையும் தீர்ப்பாயத்திடம் வழங்கியிருக்கிறேன். இந்தக் கூட்டுப்படுகொலைகளில் 82 வயதுள்ள முதியவரிலிருந்து எடடு மாதக்குழந்தைகள்வரை அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல சந்தர்ப்பங்களில் தமிழர்களைத் தனியாகப் பிரித்து அழைத்துச்சென்று இலங்கைப் படையினர் அவர்களைப் படு கொலை செய்துள்ளனர். இதத் கைய படுகொலைகள் பற்றிய எந்தத் தகவலும் இலங்கையின் சிங்கள, ஆங்கில மொழிப்பத்திரிகைகளில் வெளிவந்ததில்லை. அப்படி வெளியாகி இருந்தாலும், 'பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்' என்ற வழமையான இலங்கை அரசின் உத்தயோகபூர்வமான அறிக்கையே வெளியாகும். 1982 இலிருந்து இன்றுவரை இலங்கையின் ஊடக நிலைமை பெருமளவுக்கு இதுதான்.

இனப்படுகொலை தொடர்பாகச் சில புதிய பார்வைகளை ருவாண்டாவில் டூட்ஸி மக்களின் இனப்படுகொலை தொடர்பாக நியமிக்கப்பட்ட அனைத்துலகத் தீர்ப்பாயம்(International Criminal Tribunal for Rwanda–ICTR) எமக்கு வழங்கியிருக்கிறது. இநதத் தீர்ப்பாயம்; 1994ல் நிறுவப்பட்டது. பாலியல் வன்கொடுமைகளும் வன்புணர்வும் (RAPE)இனப்படுகொலைக் கருவிகள் எனவும் குறிப்பிட்ட சில சூழல்களில் அவை இனப் படுகொலைதான் எனவும் ICTR தீர்ப்பு வழங்கியுள்ளது. இது தொடர்பாக, இந்தத் தீர்ப்பாயத்தின் மதியுரைஞரும் சமூகவியலாளரும் அனைத்துலகச் சட்டத்துறையில் புலமையாளருமான போல் ஜே.மக்கெனரெலல் அவர்கள் எழுதியுள்ள பல சிறப்புக் கட்டு ரைகளை நான் தீர்ப்பாயத்திடம் சமர்ப்பிக்க விரும்புகிறேன். ஈழ இனப் படுகொலையிலும் பாலியல் வன்கொடுமைகளும் வன்புணர்வும் ஏராளமாக நிகழந்துள்ளன என்பதற்கான ஆதாரங்கள் இப்போது குவியத் துவங்கியுள்ளன. இவற்றுட் பல இந்தத் தீர்ப்பாயத்துக்கு வழங்கப்பட்டுள்ளன. நண்பர் கொலம் மக்ரேயின் ஆவணப் படங்களில் காட்டப்பட்ட சில காட்சிகள் இத்தகைய ஆதாரங்களின் ஒரு சிறுதுளி மட்டுமே என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். மொத்தத்தில் இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு நடந்துள்ளது இனப்படுகொலைதான் என்பது எனது வாதம்.

இலங்கையில் உண்மையான இனப்படுகொலை எனும்(Genocide) வடமாகாணத்தில் இஸ்லாமிய மக்களுக்கு நடந்ததே இதில் அடங்கும்.. அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த இடத்தில் இருந்து ஒரு இரவில் வெளியேறறப்பட்டார்கள். அவர்களது சொத்துக்களை விடுதலைப்புலிகள் சுவிகரித்தனர் என்பன மிகவும் பாரதூரமான செயல்கள்.

கடைசி யுத்தத்தில் அப்பாவிகள் கொல்லப்பட்டதற்கு பல காரணங்கள் . இது உலகமெங்கும் நடக்கிறது. இரண்டுபக்கமும் கொலைசெய்திருக்கிறார்கள். நான் அறிந்தவரையில் கால்வாசிப்பங்கினர் விடுதலைப்புலிகளால் கொலைசெய்யப்பட்டார்கள் அவைகளை நியாயமாக விவாதிக்கமுடியும்.

புலிகள் குளோரின் ஷெல்களைப்பாவித்தபோது இராணுவம் மாஸ்க் அணிந்து போரிட்டது . அதேபோல்பொஸ்பரஸ் இராணுவம் பாவித்தற்கும் சாட்சிகள் உண்டு.

முக்கியமான தவறு புலிகளின்மேல் .

யாழ்ப்பாணத்தில் 95 ல் மக்களை வெளியேற்றியதும் கிழக்குமாகாணத்தில் போர்க்களத்தில் இருந்து மக்கள் வெளியேற்றத்தை தடுக்காத புலிகள் மக்களை தங்கள் பாதுகாப்புக் கவசங்களாக கொண்டு சென்றதை அக்காலத்தில் கண்டித்தவர்களில் நான் ஒருவன். இப்படியான அப்பாவிகளின் மரணத்தை எதிர்பார்த்தேன் ஆனால் சேரன் போன்றவர்கள் பலர் வாய் திறக்கவில்லை. காரணம் மக்களின் கொலைகளால் விடுதலைப்புலிகள் காப்பாற்றபடலாம் என எண்ணியிருக்கலாம். http://noelnadesan.com/2012/11/27/let-my-people-go-in-peace/

தனிப்பட்ட ரீதியில் ஒருவரை அவமதிப்பது எனது பழக்கமல்ல. ஆனால் வரலாறுகள் திரிப்பதை பார்த்துக் கொண்டிருக்கும் பொறுமையில்லை. அதுவும் இவ்வளவு குறுகிய காலத்தில்.

கட்டுரையில் கூறிய விடயங்களை எதிர்க்கும் நேரத்தில் இந்த கட்டுரையில் நோக்கும்போது வார்த்தைகளின் இடையே உட்செருகல் என்பன முக்கியம்.

தற்போது வடகிழக்குத் தமிழர்கள் சரியோ தவறோ ஒரு தலைமையைத் தேர்ந்தெடுத்து புதிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அங்கீகாரம் அளித்துள்ளார்கள். இந்த நிலையில் சேரனின் இந்தக்கட்டுரை வெளிநாட்டில் உள்ளவர்களை தற்போதய நிலையில்முக்கியத்துப்படுத்தும்நோக்கம் கொண்டது. தற்போதய தமிழ்த்தலைமையை கேள்விக்குள்ளாக்கும் நோக்கம்கொண்டது. வெளிநாட்டவர்களின் முக்கியத்துவம் உள்ளுர் மக்களுக்கு கேடுவிளைவிக்கும் என்பதை யுத்தகாலத்தில் பார்த்தேன். யுத்தம் நடக்கும்போது விடுதலைப்புலிகள் தலைமை யுத்த நிறுத்தத்தை விரும்பியபோது நோர்வேயில் இருந்த சில தமிழர்கள் யுத்தத்தை தொடர்து சிலநாட்கள் நடத்த கூறியதான ஒலிப்பதிவை பசில் ராஜபக்ஸ, அவரைச் சந்தித்த எமது குழுவிற்கு காட்டினார். இதற்கு என்னைவிட பலர் சாட்சியமானார்கள்.

இலங்கை தமிழ் அரசியலை பற்றி எழுதுவதை குறைத்த நான் சேரன் மட்டுமல்ல மற்றய வெளிநாட்டு தமிழர்களின் பேச்சுக்கள் தற்போதய தமிழ் தலைமைகளை சங்கடப்படுததுவதும் அதற்கப்பால் கேடுவிளைவிக்கும் என்பதாலே இந்த கட்டுரையை எழுதினேன்.

Read more...

Wednesday, January 20, 2016

ஐரோப்பாவில் அகதிகளுக்கு எதிரான இனவாத பிரச்சாரத்தில் சார்லி ஹெப்டோ இணைகிறது. By Alex Lantier

சிரியப் போரில் கோரமாக விலை கொடுக்கப்பட்ட மனித உயிர்களுக்கு அடையாளமாக கடந்த ஆண்டு துருக்கிய கடலில் மூழ்கி இறந்து கரை ஒதுங்கிய மூன்று வயது சிறுவன் அய்லன் குர்தி பற்றிய ஒரு கீழ்தரமான தாக்குதலுடன், பிரான்சின் கேலிச்சித்திர வாரயிதழ் சார்லி ஹெப்டோ ஐரோப்பாவில் மத்திய கிழக்கு அகதிகளுக்கு எதிராக அதிகரித்துவரும் இனவாத பிரச்சாரத்தில் இணைந்தது.

அவ்வார இதழ் பதிப்பாசிரியர் குழு மீது கடந்த ஜனவரியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் உயிர்பிழைத்த ஒரு கேலிசித்திர ஓவியரான ரிஸ், உலகெங்கிலுமான வாசகர்களை அதிர்ச்சியூட்டிய அந்த கேலிச் சித்திரத்தை வரைந்திருந்தார். ஜேர்மன் நகரான கொலோன் இல், புத்தாண்டுக்கு முதல் நாள், குற்றகரமான பாலியல் நடவடிக்கைகளது ஓர் அலையில் அகதிகள் சம்பந்தப்பட்டிருந்ததாக கூறும் சர்வதேச ஊடகப் பிரச்சார கூற்றுகளோடு இப்போது முடுக்கிவிடப்பட்டுள்ள விஷமப் பிரச்சாரத்தை அதற்கு சாதகமாக ஏற்றிருந்தது.

“அச்சிறுவன் அய்லன் வளர்ந்ததும் என்னவாகியிருப்பான்?” என்ற அடிக்குறிப்பு கேள்வியின் கீழ், ரிஸ், அந்த மூழ்கி இறந்த சிறுவன் எழுந்து நிற்பதைப் போல, வளர்ந்து வருவதைப் போல, பன்றியைப் போன்ற மூக்கு வளர்ந்திருப்பதைப் போல, பயந்து அலறிய ஒரு பொன்னிற தலைமயிர் உடைய பெண்ணை விரட்டுவதைப் போல பல கேலிப்படங்களை வரைந்து, “ஜேர்மனியில் ஒரு சிற்றின்ப வெறியன்" என்று அக்கேள்விக்கு பதிலும் அளித்திருந்தார்.

நாஜி பிரச்சார இதழ் Der Stürmer இன் பக்கங்களை தவிர வேறெதிலும் இடம்பெற்றிராத இனவாத மற்றும் யூதயின-விரோத தப்பபிப்பிராயங்களுக்கு அப்பட்டமாக முறையிடுவதாக இருந்த அது, சர்வதேச கண்டனங்களை ஈர்த்தது.

இப்போது கனடாவில் அகதியாக வாழ்ந்துவரும் அய்லன் இன் அத்தை டிமா குர்தி CBC செய்திகளுக்குக் கூறுகையில், அந்த கேலிச்சித்திரம் "அருவருப்பானது,” என்று கூறியதுடன், “எங்கள் குடும்பத்தின் வலியை மக்கள் மதிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். எங்களுக்கு அதுவொரு மிகப்பெரிய இழப்பு. அந்த துயரத்திற்குப் பின்னர் நாங்கள் இன்னும் அதேமாதிரியாக இல்லை. நாங்கள் சிறிது சிறிதாக அதை மறந்து எங்கள் வாழ்க்கைக்குள் நகர்ந்து வர முயன்று வருகிறோம். ஆனால் எங்களை மீண்டும் காயப்படுத்துவது, நியாயமானதில்லை,” என்றார்.

பிரான்சில் சோசலிஸ்ட் கட்சி (PS) பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாக்க என்ற வெளிவேடத்தில், "பயங்கரவாதத்திற்கு எதிரான போரை" சுற்றி “நானும் சார்லி" (Je suis charlie) என்ற கருத்துருவின் மீது தேச ஒற்றுமைக்கான (unité nationale) என்று ஒரு பிற்போக்குத்தனமான பிரச்சாரத்தைத் தொடங்க கடந்த ஆண்டின் அத்தாக்குதலை பற்றி இருந்தது, அப்போதே கூட பல வாசகர்கள் அந்த கேலிச்சித்திரத்திற்கு கண்டன கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

அத்தாக்குதல்கள் மீண்டும் மீண்டும் அவ்வாரயிதழை அவதூறுகளுடன் சம்பந்தப்படுத்தியதால் அதன் புதிய வாசகர்கள் அதிர்ச்சி அடைந்திருந்த நிலையில், அதற்குப் பிந்தைய உத்தியோகபூர்வ ஊக்குவிப்பின் காரணமாக சார்லி ஹெப்டோவின் வாசகர் எண்ணிக்கை நான்கு மடங்காக 200,000 க்கு உயர்ந்தது. வலதுசாரி நாளிதழ் Le Figaro பின்வருமாறு குறிப்பிட்டது: “முன்னர் இந்த மாதிரியான சிதைந்து போன மற்றும் வக்கிரமான நகைச்சுவையை விரும்பிய சுதந்திரவாதிகளோடு மட்டுப்பட்டு இருந்த சார்லி ஹெப்டோவின் வாசகர் எண்ணிக்கை, பரந்தளவிலான வாசகர்கள் உள்ளிணைவை அதிகரித்தது, அதை வெறுப்புணர்வுடன் கையாளுவது அவசியமில்லை” என்றது குறிப்பிட்டது.

“சார்லியின் முதல் பக்க கேலிச்சித்திரம் அருவருப்பாக உள்ளது, அருவருப்புத்தன்மையை ஊக்கப்படுத்துகிறது என்று நான் கூறினால் யாரும் அதிர்ச்சியடைய மாட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன்,” என்று Le Figaro வலைத் தளத்தில் ஒரு வாசகர் கருத்துரைத்திருந்தார்.

கருத்துரைத்திருந்த மற்றொருவர், அவ்வாரயிதழ் பணியாளரின் ஸ்ராலினிச, சமூக-ஜனநாயகவாத மற்றும் சுதந்திரவாத-அராஜகவாத அனுதாபங்களை சுட்டிக்காட்டி எழுதுகையில், “ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவருக்கும் ஆதரவு கரத்தை நீட்டும் முதலாளித்துவ வர்க்க, மரபுதவறிய, கம்யூனிஸ்ட்டுக்களால் நடத்தப்படும் ஒரு பிற்போக்குத்தனமான பத்திரிகையிலிருந்து நாம் அனுமானிக்கத்தக்க விளைவுகளைப் பெறுகிறோம்: அதாவது, அவதூறு செய்வதற்காக, பிரதிகளின் விற்பனையை தூண்டுவதற்காக, அத்துடன் போர்களைத் தொடங்கி வைப்பதற்காக, ஆரோக்கியமில்லாத மற்றும் இரசனையற்ற கேலிச் சித்திரங்களைப் பெறுகிறோம்.”

அகதிகளைப் பாலியல் பலாத்காரர்களாக காட்டுவதன் மூலமாக அவர்களைப் பாரியளவில் வெளியேற்றுவதை நியாயப்படுத்தும் ஒரு சர்வதேச பிரச்சாரத்தின் பாகமாக, ஓர் அப்பாவி குழந்தை மீதான சார்லி ஹெப்டோவின் தாக்குதல், “நானும் சார்லி" பிரச்சாரத்தை ஊக்குவித்த அல்லது அதை ஏற்றிருந்த சகல அமைப்புகளையும்—பிரான்ஸ் மற்றும் ஏனைய நேட்டோ நாடுகளது ஊடகங்களை, பிரான்சின் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தை, மற்றும் அதன் பல்வேறு அரசியல் துணை அமைப்புகளை—அம்பலப்படுத்துகிறது.

இது சார்லி ஹெப்டோ தாக்குதலுக்குச் சற்று பின்னர் உலக சோசலிச வலைத் தளத்தால் பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையை நிரூபணம் செய்கிறது. சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான ஏகாதிபத்திய ஆதரவிலான போருக்கு, வெளிநாட்டு இஸ்லாமியவாத போராளிகளை பயிற்றுவிக்கும் இஸ்லாமிய முகாம்களில் பயிற்சி பெற்ற போராட்டக்காரர்களது பத்திரிகையாளர்கள் மீதான பயங்கரவாத தாக்குதலை அக்கட்டுரை ஐயப்பாட்டிற்கு இடமின்றி கண்டித்த அதேவேளையில், அது சார்லி ஹெப்டோவை ஊக்குவிப்பவர்களது முற்றிலும் அரசியல் பாசாங்குத்தனத்தையும் எச்சரித்திருந்தது.

16 முதல் 19 ஆம் நூற்றாண்டுகளின் ஐரோப்பிய முடியாட்சிகளுக்கு எதிராக வரையப்பட்டிருந்த கேலிச்சித்திரங்களது சிறந்த பாரம்பரியங்களை சார்லி ஹெப்டோ பிரதிநிதித்துவம் செய்ததாக கூறிய ஊடகங்களின் கூற்றுகளை அக்கட்டுரை மறுத்தது. அத்தகைய முந்தைய நையாண்டி ஓவியர்கள் "ஒரு ஜனநாயக அறிவொளியின் பிரதிநிதிகளாக இருந்தனர், அவர்களின் நையாண்டி கற்பனையை அவர்கள் பிரபுத்துவ செல்வாக்கினது சக்தி வாய்ந்த மற்றும் ஊழல்மிகுந்த பாதுகாவலர்களுக்கு எதிராக திருப்பி இருந்தனர். ஆனால் சிறிதும் தயவுதாட்சண்யமின்றி முஸ்லீம்களை இழிபடுத்தும் சித்திரங்களில் சார்லி ஹெப்டோ ஏழைகளையும், அதிகாரமற்ற பலவீனர்களையும் ஏளனப்படுத்தி இருந்தது,” என்று WSWS குறிப்பிட்டது.

அந்த வாரயிதழின் அரசியல் பிரச்சாரத்தினது பிற்போக்குத்தனமான குணாம்சத்தை அக்கட்டுரை எச்சரித்தது: “சார்லி ஹெப்டோவினை பாதுகாக்கும் வழியில், அதன் கேலிச்சித்தரங்கள் அனைத்தும் "மிகவும் கேலிக்குரியவை" என்றும், அவை எந்த அரசியல் விளைவுகளையும் கொண்டிருக்கவில்லை என்றும் வாதிடுவது முற்றிலும் அர்த்தமற்றதாகும்., பிரெஞ்சு அரசாங்கம் ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கில் அதன் இராணுவ நிகழ்ச்சிநிரலை அதிகரிக்க ஆதரவைத் திரட்டுவதற்காக பெருமுயற்சி செய்து வருகிறது என்ற உண்மைக்கு அப்பாற்பட்டு, பிரான்சில் நவ-பாசிச தேசிய முன்னணியின் செல்வாக்கு வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த அரசியல் சூழலில், சார்லி ஹெப்டோ அரசியல்மயப்பட்ட முஸ்லீம்-விரோத உணர்வின் ஒரு வடிவம் வளர்வதற்கு உதவியுள்ளது, அது 1890களில் பிரான்சில் ஒரு பாரிய இயக்கமாக எழுச்சி கண்ட அரசியல்மயப்பட்ட யூத-எதிர்ப்புவாதத்திற்கு பெரிதும் குழப்பமான ஒற்றுமையை கொண்டுள்ளது.

"முஸ்லீம்களைக் குறித்து ஒரேமாதிரியாக எரிச்சலூட்டும் படங்களை நிரப்பிக் கொடுக்கும் கோரமான மற்றும் கொச்சையான கேலிச்சித்திரங்களை அது பயன்படுத்தியதில், ஜேர்மனியின் சார்பாக ஒரு யூத அதிகாரி உளவுவேலைகளில் ஈடுபட்டதாக பொய்யாக குற்றஞ்சாட்டப்பட்டதற்குப் பின்னர், 1894இல் வெடித்த பிரபல டெரெஃபஸ் விவகாரத்தின் (Dreyfus Affair) போது, பிரான்ஸை மூழ்கடித்திருந்த யூத-எதிர்ப்புவாத கிளர்ச்சிக்கு முட்டுக்கொடுப்பதில் ஒரு முக்கிய பங்காற்றிய மலிந்த இனவாத பிரசுரங்களையே சார்லி ஹெப்டோ நினைவுபடுத்துகிறது.”

சோசலிஸ்ட் கட்சி முன்னெடுத்த போலித்தனமான ஜனநாயக பாசாங்குத்தனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் இன்று சார்லி ஹெப்டோ தாக்குதல்கள் மற்றும் அதன் விளைவுகளுக்கு ஓராண்டுக்குப் பின்னர் மிகவும் வெளிப்படையாகி உள்ளன. “நானும் சார்லி" பிரச்சாரத்தைப் பற்றிய WSWS இன் ஆரம்ப எச்சரிக்கைகள் அதற்கடுத்து வந்த ஆண்டே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.. பிராந்திய தேர்தல்களில் பிரான்ஸ் எங்கிலும் நவ-பாசிசவாத தேசிய முன்னணி கடந்த ஆண்டு பரவி வளர்ந்ததைக் கண்டது, மேலும் நவம்பர் 13 பாரீஸ் பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னர் ஒரு நிரந்தர அவசரகால நெருக்கடிநிலையை நிறுவுவதற்கான சோசலிஸ்ட் கட்சியின் உந்துதலை, அடிப்படை ஜனநாயக உரிமைகளது அழிப்பை மற்றும் கூடுதலாக முஸ்லீம்-விரோத உணர்வு தூண்டிவிடப்பட்டதைக் கண்டது.

பயங்கரவாதம் சம்பந்தமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டவர்களின் பிரெஞ்சு குடியுரிமையைப் பறிக்கும் நகர்வுகளும் சோசலிஸ்ட் கட்சிக்குள் நடந்து வருகின்றன. மிக முக்கியமாக, சோசலிஸ்ட் கட்சி நிர்வாகிகள் அவர்களே இரண்டாண்டுகளுக்கும் குறைவான காலத்திற்கு முன்னர் குடியுரிமையை பறிப்பதைக் கண்டித்திருந்தனர், அப்போது அது சார்லி ஹெப்டோ தாக்குதல்களுக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்னர் தான் முன்மொழியப்பட்டிருந்தது. இரண்டாம் உலக போரின் போது ஆயிரக் கணக்கான பிரெஞ்சு யூதர்கள் ஐரோப்பாவில் நாஜி படுகொலை முகாம்களுக்கு அனுப்பப்படுவதற்கு முன்னதாக இழிவார்ந்தரீதியில் பிரெஞ்சு பாசிச அதிகாரிகளால் குடியுரிமை பறிக்கப்பட்டதுடன் இக்கொள்கை சம்பந்தப்பட்டுள்ளது..

“பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" மற்றும் பிரெஞ்சு பேரினவாதம் ஓராண்டாக தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்ட பின்னர், முன்னதாக சிந்தித்தும் பார்க்கவியலாது இருந்த கொள்கைகளை சட்டபூர்வமாக்குவதற்கான இயங்குமுறையாக இருந்ததை இந்த “நானும் சார்லி" பிரச்சாரம் நிரூபணம் செய்தது. ஓராண்டுக்கு முன்னதாக "நானும் சார்லி" அடையாளங்களை அணிந்து அணிவகுத்து சென்ற மில்லியன் கணக்கானவர்கள், பகுப்பாய்வின் இறுதியில், பிரான்சில் ஒரு பொலிஸ்-அரசு ஆட்சி நிறுவதற்கான ஓர் உந்துதலில் கூடுதல் உபரிகளாக கையாளப்பட்டிருந்தனர் என்பது இப்போது நன்கு முதிர்ந்து வெளிப்படுகிறது..

“நானும் சார்லி" என்ற மூடிமறைப்பின் கீழ் ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு கடுமையான தாக்குதலைத் தொடுப்பதற்கான சோசலிஸ்ட் கட்சியின் தகைமையும் அவ்வாரயிதழின் தன்மையும் ஒன்றையொன்று சார்ந்திருந்தன என்பதையே அய்லன் குர்தி மீதான சார்லி ஹெப்டோ தாக்குதல் எடுத்துக்காட்டுகிறது. அதன் பணியாளர்கள், சமூக பரிவாரங்கள் மற்றும் பிரதான வாசகர்களை சார்ந்துள்ள சுதந்திரவாத, முதலாளித்துவ வர்க்க மரபுதவறிய "கம்யூனிஸ்ட்களின்" அடுக்கு —அதாவது போலி-இடது என்று WSWS குறிப்பிடும் செல்வாக்கான நடுத்தர வர்க்க அடுக்கு— தசாப்த காலங்களில் முற்றிலுமாக உணர்ச்சி மரத்துப்போய், போருக்கு ஆதரவளித்து, முஸ்லீம்-விரோத உணர்வுகளால் மேலாதிக்கம் பெற்றுள்ளது.

இந்த அடுக்கு பாசிசவாத கொள்கைகளுக்கான ஒரு சமூக அடித்தளத்திற்குள் உருமாறியமை, சார்லி ஹெப்டோ உடன் சம்பந்தப்பட்ட உயிர்பிழைத்துள்ள மிக முக்கிய பிரமுகர்கள் சிலரது வாழ்க்கை வரலாற்றில் பிரதிபலிக்கிறது.

1968 பொது வேலைநிறுத்தத்தின் போது ஓர் உயர்நிலை பள்ளி மாணவர் தொழிற்சங்க தலைவரான மற்றும் இன்றைய புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சியின் முன்னோடி அமைப்பான பப்லோவாத கம்யூனிஸ்ட் கழகத்தின் முன்னாள் அங்கத்தவரான ரோமன் குப்பில், நகைச்சுவையாளர் Coluche இன் 1981 ஜனாதிபதி பிரச்சாரத்திற்கு ஒரு முக்கிய ஆலோசகராக இருந்தார், அப்பிரச்சாரத்தைச் சார்லி ஹெப்டோ உத்தியோகபூர்வமாக ஆதரித்தது. அவர் 1990 இன் போது யூகோஸ்லாவியாவில் நேட்டோ போர்களை, 2003 இல் பிரெஞ்சு அரசாங்கத்தாலேயே கூட எதிர்க்கப்பட்ட ஈராக்கில் சட்டவிரோத அமெரிக்க தலையீடு, மற்றும் லிபியாவில் 2011 நேட்டோ போரை ஆதரித்தார்.

சார்லி ஹெப்டோவில் வேலை செய்தவரும், இப்போது சோசலிஸ்ட் கட்சியின் குடியுரிமை பறிப்பு கொள்கையை ஆதரிப்பவருமான ஒரு பத்திரிகையாளரும் "மதசார்பின்மையை ஆதரிக்கும்" நடவடிக்கையாளருமான கரோலின் ஃபுரெஸ்ட், 2010 “Goutte d’Or பிராந்தியத்தில் பன்றி உணவு, திராட்சை மதுபான உணவு" ஆத்திரமூட்டலைப் பகிரங்கமாக ஆதரித்தார். இது தொழிலாள வர்க்க Goutte d’Or பகுதியில் வழிபாடு செய்துவந்த முஸ்லீம்களது அருகாமை பகுதியில் திராட்சை மதுபானம் குடிப்பது மற்றும் பன்றிஇறைச்சி உண்பது போன்ற நடவடிக்கைகள் மூலமாக அவர்களைத் தொந்தரவு செய்யும் நோக்கில், Identity Block and Secular Counterattack போன்ற குழுக்களை உள்ளடக்கிய தீவிர வலது குழுக்களால் தொடங்கப்பட்ட நடவடிக்கைகளாக இருந்தது.

இறந்துபோன மற்றும் நிராயுதபாணியான ஒரு சிறுவன் மீது சார்லி ஹெப்டோவின் சமீபத்திய அவதூறான தாக்குதல், ஜனநாயக உணர்வுகளின்றி இத்தகைய சக்திகள் இறுகிப் போயிருப்பதையும் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு அவர்களது விரோதங்களையும் நிரூபிக்கின்றன.

Read more...

காயங்களின் சாட்சி: ராஜன் ஹூலின் விழுந்த பனை. மகேந்திரன் திருவரங்கன்

மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் உRajan Hooleறுப்பினர் ராஜன் ஹூலினால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட Palmyrah Fallen: From Rajani to War’s End (விழுந்த பனை: ராஜனியில் (ராஜனி திராணகமவில்) இருந்து போரின் முடிவு வரை) என்ற நூல் கடந்த ஆண்டில் வெளிவந்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே 1985ஆம் ஆண்டில் இருந்து 1990ஆம் ஆண்டு வரை கணிதத் துறை விரிவுரையாளராக ராஜன் ஹூல் கடமையாற்றினார். மனித உரிமைப் பணிகளை யாழ்ப்பாணத்தில் இருந்து செய்ய முடியாத வகையில் அவருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட போது ராஜன் ஹூலும், மற்றொரு கணித விரிவுரையாளரான கோபாலசிங்கம் ஸ்ரீதரனும் தலைமறைவாகி இருந்து இலங்கையின் வடக்குக் கிழக்கிலும், ஏனைய பகுதிகளிலும் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை, அரசியல் ரீதியிலான ஆய்வுகளுடன் கலந்த வகையில், 2009 ஆம் ஆண்டு வரை பல்வேறு அறிக்கைகளின் ஊடாக வெளிக்கொண்டு வந்தனர். இலங்கையில் மனித உரிமைகளுக்காக இவர்கள் ஆற்றிய பணிக்காக 2007ஆம் ஆண்டு சர்வதேசப் புகழ் வாய்ந்த மார்ட்டின் என்னல்ஸ் விருது இவர்கள் இருவருக்கும் வழங்கப்பட்டது. 2011ஆம் ஆண்டில், 21 ஆண்டுகளின் பின்னர் ராஜன் ஹூல் மீண்டும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே கணிதம் கற்பிக்கும் பணியினை ஆரம்பித்தார். நான்கு வருடங்களின் பின்னர் கடந்த ஏப்ரல் மாதத்திலே அவர் விரிவுரையாளர் பணியில் இருந்து இளைப்பாறினார்.

புத்தகத்தின் தலையங்கம் ராஜனியில் இருந்து போரின் முடிவு வரை என்று இருந்தாலும், நூலிலே பேசப்பட்டுள்ள விடயங்கள் போரின் முடிவின் பின் அரசினாலும், இராணுவத்தினராலும், மேற்கொள்ளப்பட்ட பல மனித உரிமை மீறல்களை வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றன. போருக்குப் பின்னர் வடக்குக் கிழக்கில் நிகழும் இராணுவ மயமாக்கம், தமிழ் மக்களின் காணிகள் பறிக்கப்படுதல், 2011இல் இடம்பெற்ற கிறீஸ் பூதப் பிரச்சினை, 2012இல் பல்கலைக்கழக விடுதிகளிலே மாவீரர் வாரத்தின் போது நினைவுச்சுடர் ஏற்றியமைக்காக மாணவர்கள் மீது இராணுவம் மேற்கொண்ட தாக்குதல், மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஜெயக்குமாரியின் கைது போன்ற 2009இன் பின்னர் நாட்டின் வடகிழக்குப்பகுதியிலும் ஏனைய இடங்களிலும் இடம்பெற்ற பல்வேறு மீறல்களைப் பற்றியும் இந்த நூல் பேசுகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகளுக்கான ஆசிரியர்கள் அமைப்பின் மனித உரிமைப் பணிகள் புலிகள் அழிவுற்ற பின்னர் நின்றுவிட்டன என்று ஒரு சிலரால் வைக்கப்பட விமர்சனத்துக்கு விழுந்த பனை ஒரு வகையில் ஒரு பதிலாகவும் அமைகிறது!

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்துடன் இணைந்து மனித உரிமைப் பணிகளிலே ஈடுபட்டமைக்காகவும், மாற்று அரசியலுக்கான வெளிகளைப் பல்கலைக்கழகத்தில் உருவாக்குவதற்கு முயற்சித்தமைக்காகவும், 1990களில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் கடத்தப்பட்டு காணாமற் போகச் செய்யப்பட்ட துணிச்சல் மிக்க இரண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களான செல்வி தியாகராஜா மற்றும் ஜோர்ஜ் மனோகரன் ஆகியோருக்கு இந்த நூல் அர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நூலின் முதற்பக்கத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மனித உரிமைகளுக்கான ஆசிரியர்களின் சங்கத்தினால் 1989இல் வெளியிடப்பட்ட முறிந்த பனையின் ஆசிரியர்களில் ஒருவரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகளுக்கான ஆசிரியர் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவருமாகிய, 1989இல் படுகொலை செய்யப்பட்ட, ராஜனி திராணகமவின் நிறப் புகைப்படம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகளுக்கும், விடுதலைப் போராட்டங்களுக்கும் இடையிலான தத்துவார்த்த ரீதியிலான தொடர்புகளை விளக்குவதற்கு நூலின் அறிமுகப்பகுதி முற்படுகிறது. இந்த வகையிலே விடுதலைப் புலிகளின் தலைமையிலான தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கும், தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா தலைமையிலான நிறவெறிக்கு எதிரான போராட்டத்துக்கும் இடையில் ராஜன் ஹூல் அவதானிக்கும் வேறுபாடுகள் முக்கியமானவை.

பரந்துபட்ட விடுதலைப் பார்வையுடன் நெல்சன் மண்டேலா எவ்வாறு வெள்ளையர்களையும், கறுப்பினத்தவர் அல்லாதோரையும் நிறவெறிக்கு எதிரான போராட்டத்திலே பங்குபற்றுவதற்குத் தூண்டினார் என்பதனைக் கோடிட்டுக் காட்டும் அறிமுகப்பகுதி, அவ்வாறான ஒரு பரந்த பார்வை விடுதலைப் புலிகளிடம் இருந்திருக்கவில்லை என்பதனையும் அவர்களால் தமிழர்களின் உரிமைகள் ஒரு வகையில் மனித உரிமைகளே என்ற விடயத்தினை வெளிப்படுத்தும் வகையிலே செயற்பட முடியவில்லை என்பதனையும் சுட்டிக்காட்டுகிறது. இவ்வாறான போக்கு விடுதலைப் புலிகளிடம் மட்டுமல்ல அவர்களுக்கு முன்னர் வந்த தமிழ்த் தலைமைகளிடமும் சரி அவர்களின் பின்னர் வந்த தலைமைகளிடமும் சரி காணப்படவில்லை என்பதனை நாம் அவதானிக்க வேண்டும். சிறுபான்மையினர், நாடற்ற பிரசைகள் போன்றோருக்கும் தேச அரசுக்கும் இடையிலான தொடர்பினையும், இடைவெளியினையும் விளக்குவதற்கு ராஜன் ஹூல் நூலின் அறிமுகப் பகுதியிலே மேற்கொள்ளும் காட்டும் ஹன்னா அரென்ட் குறிப்பிட்டது போல, தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டமும் அரசு-தேசம்-நிலம் என்ற மும்மூலகங்களினை ஒன்றுக்கொன்று என்ற வகையில் தொடர்புபடுத்தி எவ்வாறு எமது இனத்துக்கென ஓர் அரசியல் கட்டமைப்பினை உருவாக்கலாம் என்பதாகவே இருந்தது. போருக்குப் பின்னரும் இதே மாதிரியான ஒரு சட்டகமே பெரும்பாலான தமிழ்த் தேசியத் தரப்புக்களின் மத்தியிலே தொடர்கிறது. தற்போது அரசுக்குப் பதிலாக நாம் சட்டகத்திலே மாகாணம்/ மாநிலத்தினை நிறுத்தி இருக்கிறோம்.

புத்தகத்தின் முன்பகுதியில் இடம்பெறும் சில அத்தியாயங்கள் ராஜனி திராணகமவின் படுகொலையினைப் பற்றியும் அதற்கான பின்னணி பற்றியும் விரிவாகக் குறிப்பிடுகின்றன. தனது கலாநிதிப்பட்ட ஆய்வினை முடித்துக் கொண்டு யாழ்ப்பாணம் திரும்பிய ராஜனி யுத்தம் மிக்க சூழலிலே தனது அரசியற் செயற்பாட்டினைப் பல்கலைக்கழகத்திலும் சமூகத்திலும் மிகவும் துணிச்சலுடன் மேற்கொண்டார் எனவும், இந்திய இராணுவத்தின் அடக்குமுறையின் போது அவர் தன்னுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்த மாணவர்களின் உரிமைகளுக்கும் பாதுகாப்புக்காகவும் கூட இந்திய இராணுவத்தினருடன் முரண்பட்டார் எனவும் நூலிலே குறிப்பிடப்பட்டிருக்கிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளினை அரசாங்கம் கொண்டு வருவதற்கு எடுத்த முயற்சிகளை ராஜனி விமர்சித்தார். பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட ஆசிரியர்களிலே பலர் தனியார் மருத்துவக் கல்லூரியிலே கல்வி கற்பதற்கு விரும்பியிருந்த போது ராஜனி தனியார் மருத்துவக் கல்லூரிகளை இடதுசாரிப் பார்வையிலே எதிர்த்தமை மருத்துவபீடத்திலே அவரைத் தனிமைப்படுத்தியது என நூலிலே குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜனி திராணகமவின் கொலையின் பின்னணியினை ஒரு துப்பறிவுக் கதை போல ராஜன் ஹூல் இந்தப் புத்தகத்திலே சொல்லியிருக்கிறார். கொலையாளி தன்னைச் சுட்ட போது, ராஜனி திராணகம “Why are you shooting me?” ("என்னை எதற்காக சுடுகிறீர்கள்?") எனக் கொலையாளியினை நோக்கிக் கேட்டதனை கேட்டதாகக் கொலை நடந்த இடத்திற்கு அண்மையில் வாழ்ந்த ஒரு பெண்மணி வழங்கிய வாக்குமூலமும், கொலை செய்தவர்களும் இதே விடயத்தினைக் கொலை செய்தபின் தமக்குள்ளே பேசிக்கொண்டதனைக் கேட்ட சிறுவன் ஒருவனின் வாக்குமூலமும் நூலிலே உள்ளடக்கப்பட்டுள்ளன. ராஜனித் திராணகமவின் மரணம் மனித உரிமை ஆர்வலர் ஒருவரின் கொலை மட்டுமல்ல. அது தமிழ்த் தேசத்துக்கு வேண்டப்படாதவர்கள் என்ற வகையிலும், துரோகிகள் என்ற வகையிலும், தமிழ்த் தேசத்தின் நலனுக்காகப் பலிகொடுக்கப்படக் கூடியவர்கள் என்ற வகையிலும் கொல்லப்பட்ட, கொலைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்காகப் பேசிய ஒருவரின் மரணம் என்பதனையும் நாம் இங்கு நிலைநிறுத்த வேண்டும்.

ராஜனியின் படுகொலையினைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியிலும் ஆbook cover 2சிரியர்கள் மத்தியிலும் மாற்றுக்கருத்துக்களைப் பேசியவர்கள் புலிகளால் அச்சுறுத்தப்பட்டமைக்கும், ஆசிரியர்களிலே சிலர் பல்கலைக்கழக மேடைகளிலே தீவிரவாதக் கருத்துக்களை விதைத்துப் புலிகளின் புத்தகங்களிலே நல்ல பெயரினைப் பெற முற்பட்டமைக்கும் நூலிலே குறிப்பிடப்படும் உதாரணங்கள் சான்றாக அமைகின்றன. திறந்த விவாதங்களினூடே அரசியற் கருத்துக்கள் உருவாகுவதற்கு வழிசெய்யக்கூடிய சுதந்திரமான சூழலினை வளர்த்தெடுக்க வேண்டிய பல்கலைக்கழக ஆசிரியர்களிற் சிலர் விரும்பியோ விரும்பாமலோ புலிகளின் ஜனநாயக விரோதப் பிரசாரங்களிற்கு முண்டுகொடுத்தனர். பல்கலைக்கழக ஆசிரியர் ஒருவர் பல்கலைக்கழகத்திலே இடம்பெற்ற கூட்டமொன்றிலே, மாற்றுக்கருத்துக்களுடன் செயற்பட்ட மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் கூறிய "இங்கு இன்னும் சில களைகள் இருக்கின்றன. அவற்றினை நாம் சகித்துக்கொள்ளப் போவதில்லை. இந்தக் களைகளும் பிடுங்கப்பட்டு வெளியகற்றப்படும்" என்ற வசனங்கள் நூலிலே மேற்கோள் இடப்பட்டுள்ளன. அதே போன்று, பல இளைஞர்களும் யுவதிகளும் புலிகளின் தடுப்பு நிலையங்களிலே சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட போது, புலிகளையும் அதன் தலைமையினையும் போற்றும் வகையில் நாடகம் ஒன்று யாழ் நகரிலே உள்ள பாடசாலை ஒன்றிலே மேடையேற்றப்பட்டது. அந்த நாடகத்தில் பொதிந்து போயிருந்த புலிகளின் தலைமையின் அதிகார மையத்தினைக் கொண்டாடும் அரசியலினை நாடகம் முடிவுற்ற பின் கேள்விக்குட்படுத்திய புகழ்பெற்ற கவிஞரும், அந்நாளிலே பல்கலைக்கழக மாணவியாக இருந்த செல்வி தியாகராஜா எவ்வாறு விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டார் என்பதனையும் நூல் விபரிக்கிறது. புத்திஜீவிகளினதும், கலைஞர்களதும், சமூகத் தலைவர்களதும், மதப் பெரியார்களதும் ஒரு பகுதியினர் யாழ்ப்பாணத்திலே 1990களிலே புலிகளின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு வழங்கினர். இந்த வகையிலே தமிழ்ச் சமூகம் சந்தித்த அழிவுகளுக்கு அந்த சமூகத்தின் உயர்தட்டுக்களினைச் சேர்ந்த சிவில் சமூகமும் ஒரு வகையிலே பங்களிப்புச் செய்துள்ளனர் என்பதற்கு இந்த நூல் சாட்சியாக இருக்கிறது.

போரின் இறுதியிலே முள்ளிவாய்க்காலிலே மக்கள் எதிர்கொண்ட துன்பங்களையும், வேதனைகளையும் விழுந்த பனை ஆவணப்படுத்துகிறது. கொத்துக் குண்டுகளும், வெள்ளைப் பொஸ்பரஸ் எனப்படும் எரி குண்டுகளும் மக்கள் நெருக்கமாக வாழ்ந்த பகுதிகளின் மீது இலங்கை இராணுவத்தினரால் வீசப்பட்டதனை சம்பந்தப்பட்ட மக்களின் அனுபவப் பகிர்வுகளின் மூலமாக நூல் வெளிக்கொணர்கிறது. அதே போல போரின் இறுதி மாதங்களிலே பலர் பலவந்தமாக விடுதலைப் புலிகள் இயக்கத்திலே இணைத்துக்கொள்ளப்பட்டமையினைப் பற்றி தமது போர்க்கால அனுபவங்களை நூலாசிரியருடன் பகிர்ந்து கொண்ட சிலர் குறிப்பிட்டுள்ளனர். இந்த உண்மைகள் யாவும் வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதிலே ராஜன் ஹூல் ஆணித்தரமாக இருக்கிறார் என்பதனை நூலிலே அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. இந்த உண்மைகள் வெளிக்கொணரப்படாமல் யுத்தத்திற்கு முடிவோ அல்லது சமாதானத்துக்கான ஆரம்பமோ இருக்கப் போவதில்லை என்று நூல் சொல்கிறது.

எவ்வளவு பேர் இறுதி யுத்தத்திலே இறந்தார்கள் என்பதற்கான சரியான புள்ளிவிபரங்கள் எமக்கு இன்னும் கிடைக்காத நிலையிலே சனத்தொகை வளர்ச்சி தொடர்பாகத் திணைக்களங்களால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகளிலே பெறப்பட்ட தரவுகளினைக் கொண்டும், கொல்லப்பட்ட மக்களின் மாதிரிகளின் அடிப்ப்டையிலும் யுத்தத்திலே எத்தனை பேர் இறந்தார்கள் அல்லது காணாமற் போயுள்ளார்கள் என்பதனைக் கண்டறிவதற்கான கணிதச் சூத்திரங்களை ராஜன் ஹூல் உருவாக்கியிருக்கிறார். அந்தச் சூத்திரங்களின் அடிப்படையில் போர் வலயத்திலே இருந்தோரில் 97, 900 ((விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் உள்ளடங்கலாக) பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும், இவர்களிலே இலங்கை அரச படைகளின் தாக்குதலில் இறந்திருக்கக் கூடிய பொதுமக்களின் எண்ணிக்கை 67, 600 ஆகவும், வன்னிக் குடும்பங்களைச் சேர்ந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 20, 000 ஆகவும், விடுதலைப் புலிகளின் துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் 3000 எனவும் இதர காரணங்களினால் காணமற் போனோர் அல்லது இறந்தோர் 7, 000 ஆகவும் இருக்கக் கூடும் என நூல் குறிப்பிடுகிறது.

தான் கருத்திற்கொண்ட சனத்தொகை மாதிரிகள் சில வேளைகளிலே குறைபாடுகள் உடையனவாக இருக்கக் கூடும் எனவும், எனவே இந்த கணிப்புக்கள் யாவும் பரிசோதனைக்குட்படுத்த வேண்டியவையே என ராஜன் ஹூல் குறிப்பிட்டாலும், உண்மைகளினை வெளிக்கொண்டு வருவதற்கான சூழலும், தகவல்களும் இல்லாத நிலையிலே, இவ்வாறான கணித ரீதியிலான ஒரு முயற்சியை ராஜன் ஹூல் மேற்கொண்டுள்ளமை மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒரு விடயமாக இருக்கிறது. நூலினை வாசிக்கும் எல்லோரினாலும் இந்தச் சூத்திரங்களைப் புரிந்து கொள்வது கடினமாக இருப்பினும், ஒரு கணிதத் துறைசார் வல்லுநர் என்ற வகையிலே ஹூல் இந்த முயற்சியினை மேற்கொண்டமை ஒரு பாதிக்கப்பட்ட சமூகத்தினது நீதிக்காக அவர் கொண்டுள்ள அக்கறையினை எமக்குக் கோடிட்டுக்காட்டுகிறது.

போருக்குப் பிந்தைய காலத்திலே இடம்பெறும் இராணுவ மயமாக்கத்தினை கடுமையாக விமர்சிக்கும் விழுந்த பனை, வடக்குக் கிழக்கின் நிருவாகத்தில் இராணுவத்தின் பங்குபற்றுதல் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்ற ராஜபக்ஷ அரசாங்கத்தின் நிலைப்பாடு, மக்களுக்குப் பாரிய கொடுமைகளைப் புரிந்த ஒரு இராணுவத்தின் தயவிலே மக்களை வாழ நிர்ப்பந்திப்பதாகக் குறிப்பிடுகிறது. ஒரு புறத்திலே மக்களினை மீள்குடியேற்றுவதாகச் சொல்லிக்கொள்ளும் அரசாங்கம் மறுபுறத்திலே கேப்பாபிலவு, முள்ளிக்குளம், வலிகாமம் வடக்கு, மற்றும் சம்பூர் போன்ற பகுதிகளில் வாழ்ந்த மக்கள் தமது நிலங்களுக்கு மீளச் செல்வதனை அனுமதிக்காமையினை ஒரு களவு என நூல் கூறுகிறது. வடபகுதியின் அரசியற் பொருளாதாரத்தினைப் பற்றி சிந்திக்கையிலே சிங்கள மயமாக்கலையும், இனத்துவ அடையாளங்களின் முக்கியத்துவத்தினையும் நாம் புறமொதுக்கிவிட முடியாது என்பதனை ராஜன் ஹூலின் நூலிலே குறிப்பிட்டப்படுள்ள உதாரணங்கள் எமக்கு வெளிப்படுத்துகின்றன. உதாரணமாக, 2010ஆம் ஆண்டில் இருந்து முல்லைத்தீவின் தெற்குப் பகுதியில் தமது விவசாய நிலங்களுக்குத் திரும்ப எண்ணிய தமிழர்களும், கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், நாயாறு ஆகிய பகுதிகளிலே மீன்பிடிக்கச் சென்ற தமிழர்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றி நூலில் இடம்பெற்றுள்ள “Mullaitivu: The Destructive Political Economy of Sinhalisation” ("முல்லைத்தீவு: சிங்கள மயமாக்கலின் அழிவினை ஏற்படுத்தும் அரசியற் பொருளாதாரம்") என்ற பகுதியிலே குறிப்பிடப்பட்டுள்ளது. 1984ஆம் ஆண்டின் முன்னர் இந்தப் பகுதியிலே மீன்பிடிப்பதற்குத் தமிழர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட போதிலும், இடம்பெயர்வு மற்றும் போரின் முடிவின் பின்னர் அவர்கள் மீளவும் மீன்பிடிப்பதற்கு அனுமதி கோரிய போது, அவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டாம் எனவும் தம்மால் அனுப்பபடும் சிங்கள மீனவர்களுக்கு அனுமதி வழங்கும்படியும் மீன்பிடி அமைச்சு உள்ளூர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியமை பற்றி நூல் குறிப்பிடுகிறது.

தமிழ் மக்களுக்கும், ஏனைய சிறுபான்மை இனத்தவருக்கும், மதத்தவருக்கும் எதிராக அரசு மேற்கொள்ளும் ஒடுக்குமுறைகளினை தீவிரமாக விமர்சனம் செய்யும் விழுந்த பனை, வடபகுதியில் நடைபெறும் ஒடுக்குமுறைகளுக்கு அரசு மாத்திரம் பொறுப்பல்ல என்பதனையும் எடுத்துக்காட்டுகிறது. எமது சமூகத்திலே நிலவும் சாதி மற்றும் சமய ரீதியிலான வேற்றுமைப்படுத்தல்களையும் இந்த நூல் உதாரணங்களுடன் ஆராய்கிறது. யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸின் காலத்தில் இருந்து யாழ்ப்பாணத்திலே மதச்சார்பற்ற அரசியல் வளர்ச்சி பெற்றதனையும், தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலைப் புலிகள் எனத் தேசிய விடுதலையினை முன்னெடுத்த பெரும்பாலான தரப்புக்களாலும், யாழ்ப்பல்கலைக்கழக சமூகத்தினராலும் இந்த மரபு பாதுகாக்கப்பட்டது என ராஜன் ஹூல் கூறுகிறார். எனினும், இந்த மரபு தற்போது பல்கலைக்கழகத்திலே அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதனை நூல் உதாரணங்களுடன் வெளிக்காட்டுகிறது. விவசாய மற்றும் பொறியியற்பீடங்கள் கிளிநொச்சியிலே அண்மையில் அமைக்கப்பட்ட போது திறப்பு விழாவுக்கு முதல் நாளிலே பிராமணர்களினால் பேய் ஓட்டும் வைபவம் ஒன்று அங்கு நிகழ்த்தப்பட்டமையினையும், திறப்பு விழா நிகழ்வுகளிலே 90 நிமிடங்களுக்கு இந்துச் சடங்குகள் செய்யப்பட்டமையினையும் நூல் உதாரணப்படுத்துகிறது. தமிழ் அரசியிலின் பிரதான நீரோட்டத்திலே முன்னர் தவிர்க்கப்பட்டு வந்த இவ்வாறான பிளவினை ஏற்படுத்தும் போக்குகள், இப்போது மேலெழுந்து வருவதனை நூல் கவலையுடன் பதிவுசெய்கிறது. இதே போன்று வடபகுதியின் கல்வித் துறையில் இடம்பெறும் சாதி வேற்றுமைப்படுத்தல்களைப் பற்றியும் நூல் பேசுகிறது. ஒடுக்கப்பட்ட சாதிப் பிரிவுகளைச் சேர்ந்த அதிபர் பதவிக்கான விண்ணப்பதாரிகள் திட்டமிட்ட முறையில் கல்வித் துறை நிருவாகிகளினால் புறக்கணிப்புச் செய்யப்பட்டமைக்கான உதாராணங்களும் சம்பவங்களும் நூலிலே குறிப்பிடப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்திலே சாதி வேறுபாடுகளின் தாக்கம் இன்னும் தொடர்கிறது என்பதற்கான ஒரு ஆவணமாகவும் இந்த நூலினை நாம் பார்க்க முடியும்.

நாட்டின் தேசிய இனப்பிரச்சினையின் காரணங்களையும், விளைவுகளையும் ஆராய்ந்து, போரின் அவலங்களினையும் அவற்றின் தொடர்ச்சியினையும், சமூகத்தின் ஆதிக்க சக்திகளினால் சமூகத்தில் ஒதுக்கப்பட்டோர் மீது இழைக்கப்படும் அநீதிகளையும் சமூகத்தின் மீதான ஆழமான கரிசனையுடன் வெளிக்கொண்டு வரும் விழுந்த பனை நூலினை வெளியிடுவதற்கும், நூலினைப் பற்றிய உரையாடல் ஒன்றினை மேற்கொள்ளுவதற்குமான நிகழ்வு ஒன்று கடந்த வருடம் ஏப்ரல் மாதத்திலே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல்கலைக்கழகத்தின் நிருவாகமும், தம்மைத் தமிழ்த் தேசியவாதத்தின் பாதுகாவலர்களாகக் காட்டிக்கொள்ள முற்பட்ட சில பல்கலைக்கழக ஆசிரியர்களும் இந்த நிகழ்வினை நிறுத்துவதற்கு முயற்சி செய்தனர். ஆனால் நாட்டில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் விளைவாகப் பல்கலைக்கழகங்களில் கல்விச் சுதந்திரத்தினைப் பேணும் வகையில் தற்போது ஏற்பட்டிருக்கும் சிறு ஜனநாயக வெளி காரணமாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலையீட்டினைத் தொடர்ந்து, இந்த நூல் வெளியீட்டு நிகழ்வு,கடந்த வருடம் ஏப்ரல் மாதத்திலே பல்கலைக்கழகத்திலே நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களின் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் பற்றி தீவிரமாக ஆய்வு செய்யும் ஒரு நூலாகவும், அந்தப் பிரச்சினைகளினை வரலாற்று ரீதியாக, பல் பரிமாண முறையில் நோக்கும் ஒரு நூலாகவும், பிரச்சினைகளின் போக்குகளையும், விளைவுகளையும் ஆவணப்படுத்தும் ஒரு நூலாகவும் விழுந்த பனை அமைகிறது. இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் உண்மைகளும், கருத்துக்களும், செய்திகளும் சமூகத்தின் எல்லாத் தரப்பினரையும் சென்றடையும் வகையில் இந்த நூலினைத் தமிழில் மொழிபெயர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

(மகேந்திரன் திருவரங்கன் இலங்கையில் உள்ள பொருளாதாரத்தினை ஜனநாயக மயமாக்குவதற்கான கூட்டு என்ற அமைப்பில் உறுப்பினராக இருக்கிறார்.)

Read more...

நியூசிலாந்தில் தைப்பொங்கல் விழா 2016 .

ஜனவரி 16 ம் திகதி ஆக்கிலாந்து மவுன்ரோஸ்கில் இன்ரமீடியற் பாடசாலை மைதானத்தில் New Zealand Sri Lanka forced migrants' support group இனரால் தைப்பொங்கல் விழா வெகு விமரிசையாக நடாத்தப்பட்டுள்ளது. இவ் அமைப்பு நியூசிலாந்தில் குடியேறும் தமிழ் அகதிகளுக்கு பலதரப்பட்ட மீள் குடியேற்ற உதவிகளை வழங்குகின்றது.

இவ் விழாவில் கௌரவ கௌரவ Phil Goff (Member of Parliament from labour party) , Priyanca Radhakrishnan (candidate for Mt.Roskill electorate for Labour Party) , Mr Venkat Raman (Chief Editor, Indian News Link) Mr Abann Kamyay Yor (General Manager Auckland Refugee Community Coalition) , Mr. Makasivam ஆகியோரும் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்புரை மற்றும் வாழ்த்துக்களையும் வழங்கி விழாவைச் சிறப்பித்தனர்.

பொங்கல் விருந்தோம்பல் நிகழ்வுடன் சிறுவர்களுக்கான மற்றும் தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களும் இடம்பெற்றதுடன் பரிசில்களுடன் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இவ் அமைப்பு 2008 ம் ஆண்டு நியூசீலாந்தில் தஞ்சம் கோரும் மற்றும் அகதிகளுக்கும் உதவவும் அவர்ளுக்கு நியூசீலாந்தில் மீள் குடியேற்றத்திற்கு உதவும் பொருட்டும் உருவாக்கப்பட்டதாகும்.
கடந்த 8 வருடங்களாக தையல் இ கேக் அலங்காராம் மற்றும் கணனிப் பயிற்சி நெறிகளை இலவசமாக வழங்குவதுடன் பயிற்சியின் நிறைவில் தகுதி வாய்ந்த சான்றிதல்களையும் அதற்கு வேண்டிய உபகரணங்களையும் இலவசமாக வழங்கி வருகின்றனர்.

அத்துடன் சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்குரிய பயிற்சி நெறி இ உளவியல் பயிற்சி நெறிகள் இசமையயல் கலை பறிற்சி நெறிகள் என்பவற்றுடன் குடிவரவு விண்ணப்பம் தொடர்பான ஆதரவு ஆவணங்களையும் இலவசமாக வழங்கி வருகின்றனர்.

மேலும் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வறிய குடும்பங்களுக்கு இதுவரை 500 மப ஆடைகளை அனுப்பி உதவியுள்ளதாகவும் அமைப்பின் தலைவர் குணசிங்கம் ஸ்ரீறஞ்சிதராஜா தெரிவித்தார்.







Read more...

Monday, January 18, 2016

மிருசுவில் கொலை கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் மூவருக்கு மரண தண்டனை! நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் ஒருவரைக் கொலை செய்து அவருடைய ஹைஏஸ் வாகனத்தைக் கொள்ளையடித்த குற்றவாளிகள் மூவருக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் கொலைக்குப் பயன்படுத்திய இரத்தம் தோய்ந்த உலக்கையை குடமியன் இராணுவ முகாமுக்கு எதிரில் உள்ள வயலில் வீசியெறிந்தபோது, அதனை தொலைநோக்கியொன்றின் மூலம் கண்ட இராணுவ சிப்பாய் ஒருவரின் உடனடி நடவடிக்கையையடுத்து, முதலாம் குற்றவாளி கைது செய்யப்பட்டார். அவர் பயணம் செய்த மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவத்தில் மிருசுவில் பகுதியைச் சேர்ந்த முருகேசு சத்தியநாதன் என்பவரைக் கொலை செய்துவிட்டு அவருக்குச் சொந்தமான ஹைஏஸ் வாகனம் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததாக பொலிசார் தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கில் முதலாம் குற்றவாளியாகிய சூரியகுமார் அஜந்தன் அல்லது அஜித்தன் இரண்டாம் குற்றவாளியாகிய விக்னராஜா செல்வேந்திரன், மூன்றாம் குற்றவாளியாகிய சிவதாசன் நிசாந்தன் அல்லது தினேஸ் என்ற மூன்று பேருக்கும் எதிராக சட்டமா அதிபரினால் கொலை மற்றும் கொள்ளைக் குற்றச்சாட்டுக்கள் கொண்ட குற்றப் பகர்வுப் பத்திரம் யாழ். மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மூன்று குற்றவாளிகளும் பொது எண்ணத்துடன் ஒன்றாகச் சேர்ந்து முருகேசு சத்தியநாதனை கொலை செய்தமையும், கொலை செய்யப்பட்டவரின் ஹை ஏஸ் வாகனத்தைக் கொள்ளையடித்தமையும் வழக்குத் தொடுநரினால் எண்பிக்கப்பட்டதையடுத்தே, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்.

இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டவரைக் கொலை செய்ததன் பின்னர், கொலைக்குப் பயன்படுத்திய உலக்கையை குடமியன் இராணுவ முகாமுக்கு முன்னால் உள்ள வயல்வெளியில் வீசியபோது, அந்த இராணுவ முகாமில் அப்போது கடமையில் இருந்த பள்ளியகுருகே என்ற இராணுவ சிப்பாய் தனது தொலைநோக்கியின் மூலம் கண்டதாக சாட்சியமளித்துள்ளார் என்பது முக்கியமானதாகும்.

கொலைச் சம்பவத்தையடுத்து, இந்த வழக்கின் முதலாம் குற்றவாளி மோட்டார் சைக்கிளிலும், இரண்டாம், மூன்றாம் குற்றவாளிகள் கொல்லப்பட்டவரின் உடைமையில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஹை ஏஸ் வாகனத்திலும் தப்பிச் செல்கையில், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட உலக்கையை வயல் வெளியில் வீசியதை இராணுவச் சிப்பாய் பள்ளியகுருகே கண்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணையின்போது மன்றில் சாட்சியமளித்த அவர் தெரிவித்தாவது,

ஏதோ பொருளை வயல் வெளியில் வீசிவிட்டு சென்ற வாகனங்களைத் தடுத்து நிறுத்துவதற்காக உடனடியாக வீதிக்கு ஓடிச் சென்றேன். ஆயினும் அந்த வாகனங்களைத் தடுத்து நிறுத்துவதற்கான எனது முயற்சி பலனளிக்கவில்லை. இரண்டு வாகனங்களும் மிக வேகமாக என்னைக் கடந்து சென்றன.

தப்பியோடிய மோட்டார் சைக்கிளையும், ஹை ஏஸ் வாகனத்தையும் தடுத்து நிறுத்துமாறு அறிவித்து அடுத்ததாக உள்ள சுட்டிபுரம் இராணுவ முகாமுக்கு வானொலி கருவி மூலம் தகவல் அனுப்பினேன்.

அப்போது ஹை ஏஸ் வாகனம் தன்னைக் கடந்து மிக வேகமாகச் சென்றுவிட்டதாகவும், ஆனால், மோட்டார் சைக்கிளைத் தடுத்து நிறுத்தி அதனைக் கைப்பற்றியதுடன். அதனை ஓட்டிச் சென்றவரைக் கைது செய்துள்ளதாகவும், என்னிடமிருந்து தகவலைப் பெற்ற சுட்டிபுரம் இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ கோப்ரல் என்னிடம் கூறினார்.

அதேநேரம், வயல் வெளியில் வீசப்பட்ட பொருள் என்ன என்பதைக் கண்டறிந்து வருமாறு வயல் வெளிக்கு அனுப்பப்பட்ட இரண்டு இராணுவத்தினர், இரத்த அடையாளத்தையும், இரத்தம் தோய்ந்த தலைமுடியையும் கொண்டிருந்த உலக்கையொன்றை கண்டெடுத்துக் கொண்டு வந்து கொடுத்தனர்.

இவ்வாறு சாட்சியமளித்த குடமியன் இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ சிப்பாய், நீதிமன்றத்தில் அந்த உலக்கையை அடையாளம் காட்டினார்.

விசாரணையின்போது, நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சுட்டிபுரம் இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ கோப்ரல், குடமியன் இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் வானொலி கருவி மூலம் வழங்கிய தகவலையடுத்து, அவர் குறிப்பிட்டிருந்த ஹை ஏஸ் வாகனத்தையும், மோட்டார் சைக்கிளையும் தடுத்து நிறுத்துவதற்காக வீதியை மூடுவதற்கு முயற்சித்தேன்.

ஆனால் அதற்கிடையில் அந்த வான் மிகவும் வேகமாகத் தப்பியோடிவிட்டது. ஆனால் மோட்டார் சைக்கிளைத் தடுத்து நிறுத்தி அதனை; கைப்பற்றியதுடன், அதனை ஓட்டிச் சென்றவரைக் கைது செய்தேன் என்று தனது சாட்சியத்தில் தெரிவித்ததுடன். நீதிமன்றத்தில் முதலாவது எதிரியாக நிறுத்தப்பட்டிருந்தவரையே தான் கைது செய்ததாக அடையாளம் காட்டினார்.

இந்த வழக்கில் இரண்டாம் குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை. அவர் தலைமறைவாகியுள்ளார்.

விசாரணைகளின்போது நீதிமன்றத்தில் சாட்சியமளித்த முதலாம் குற்றவாளியும், மூன்றாம் குற்றவாளியும், இந்தக் குற்றச் செயலை இரண்டாம் குற்றவாளிதான் செய்ததாகவும், வாகனம் தொடர்பான பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்டிருந்த வாக்குவதாம் காரணமாகவே, இரண்டாம் குற்றவாளி உலக்கையால் தாக்கியதுடன், அனைத்து குற்றங்களையும் அவரே செய்ததாகவும், இரண்டாம் குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில், நீதிமன்றத்தை ஏமாற்றும் வகையில் தெரிவித்தனர்.

அதேநேரம் கொலை நடந்தபோது அவ்விடத்தில் தாங்கள் நின்றதையும், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட உலக்கையை எடுத்துச் சென்று குடமியன் இராணுவ முகாமுக்கு எதிரில் உள்ள வயல்வெளியில் வீசியெறிந்ததையும் தமது சாட்சியத்தில் அவர்கள் இருவரும் ஒப்புக்கொண்டிருந்தனர்.

விசாரணைகளின் முடிவில், நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில் தெரிவித்ததாவது,

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மூன்று குற்றவாளிகளும் பொது எண்ணத்துடன் கொலையொன்றைச் செய்தமை, கொலை செய்ததன் பின்னர் இறந்தவரின் வீட்டுக் கதவை திட்டமிட்ட நோக்கத்துடன் பூட்டிவிட்டுச் சென்றமை, கொலைக்குப் பயன்படுத்திய உலக்கையை ஒழிப்பதற்கு மூவரும் சேர்ந்து நடவடிக்கை எடுத்தமை, இறந்தவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட வாகனம் இரண்டாம் குற்றவாளியிடம் இருந்தமை ஆகிய அனைத்துச் செயற்பாடுகளும் திட்டமிட்டுச் செயற்படுத்தப்பட்டன என்பது நிரூபணமாகியிருக்கின்றது.

எனவே, இந்த வழக்கின் முதலாம், இரண்டாம், மூன்றாம் குற்றவாளிகள் ஆகிய மூவரும் முதலாவது குற்றச்சாட்டாகிய கொலைக் குற்றச்சாட்டில் குற்றவாளிகளாகக் காணப்பட்டுள்ளனர். ஆகவே மூவருக்கும் மரண தண்டனை விதித்து இந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கின்றது.

அதேநேரம் இரண்டாவது குற்றச்சாட்டாகிய வாகனத்தைக் கொள்ளையடித்த குற்றமும் நிரூபிக்கப்பட்டிருப்பதனால், 5 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபா தண்டமும் விதிக்கப்படுகின்றது.

நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகியுள்ள இரண்டாம் குற்றவாளியை சர்வதேச பொலிசாரின் துணையுடன் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு இந்த நீதிமன்றம் கட்டளை பிறப்பிக்கின்றது.

இந்த குற்றவாளியைக் கண்டால் உடனடியாகக் கைது செய்யுமாறு கட்டுநாயக்க விமான நிலைய கட்டுப்பாட்டாளருக்கும் இந்த நீதிமன்றம் கட்டளை பிறப்பிக்கின்றது.

இந்த மரண தண்டனை தீர்ப்பு அளிக்கப்பட்ட போது, நீதிமன்றத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டன. அனைவரும் தலைகுனிந்த வண்ணம் எழுந்து நின்றனர். நீதிபதியும் எழுந்து நின்று தீர்ப்பை அறிவித்தார். அதனையடுத்து, தீர்ப்பில் கையெழுத்திட்ட பேனா முறித்து எறியப்பட்டது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு குற்றவாளிகளையும் கண்டி போகம்பறை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்வதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com