Thursday, December 17, 2015

மறந்துபோன மனிதர்கள் இவர்கள்…! by Selvaraja Rajasegar

போர் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையில், மோதலின்போது நிரந்தர காயங்களுக்கு உள்ளான தமிழ் மக்கள் இன்னும் உடல் ரீதியாக, உள ரீதியாக, பொருளாதார ரீதியாக கடுமையான போராட்டத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

போரில் காயமடைந்த இராணுவச் சிப்பாய்களுக்கு தொடர்ந்து சம்பளம், மருத்துவ வசதி, காயங்களுக்கேற்ப தொழில், அவர்களுக்கென்று பராமரிப்பு நிலையங்கள் என அரசினால் சலுகைகள் வழங்கப்படுகின்ற போதிலும், இவர்கள் காயமடைந்த அதே களத்தில் நிரந்தர காயங்களுக்கு உள்ளான தமிழ் மக்கள், முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளுக்கு எதுவித உதவியும் அரசால் வழங்கப்படுவதில்லை.

கடந்த செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேவையின் ஆணையாளரால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், போர் நடவடிக்கையின்போது காணாமல்போனோரின், உயிரிழந்தவர்களின் உறவுகளுக்கு, காயமடைந்தவர்களுக்கு நீதி வழங்கப்படவேண்டும் என்றும் – அவர்களுக்கு நஷ்டஈடு கொடுக்கப்படவேண்டும் என்றும் – குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், குறிப்பாக போரால் நிரந்தர காயங்களுக்கு உள்ளான சிவில் மக்கள் குறித்தோ அல்லது முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் குறித்தோ எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

சமூக சேவைகள் திணைக்களத்தின் படி வட மாகாணத்தில் நிரந்த காயங்களுக்கு உள்ளானவர்கள் 19,826 பேர் வாழ்ந்துவருகின்றனர்.

19,826 பேர்தான் வட மாகாணத்தில் இருக்கின்றனர் என திணைக்களம் தெரிவித்தாலும், இது இருமடங்காக இருக்கலாம் என்கிறது வவுனியாவில் இயங்கும் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனம்.

“கிட்டத்தட்ட நிரந்தர காயத்திற்குள்ளான 40,000 பேர் வட மாகாணத்தில் இருக்கின்ற அதேவேளை, அதில் 80 வீதமானோர் போரினால் காயத்திற்குள்ளானர்வர்கள்” என்று கூறுகிறார் வவுனியா வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் தலைவர் வெள்ளையன் சுப்ரமணியம்.

1990ஆம் ஆண்டு இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் ஒன்றில் வெள்ளையன் சுப்ரமணியம் கண்பார்வையை இழந்திருக்கிறார்.

போர் முடிவடைந்த காலப்பகுதியில் அதிகப்படியான உதவிகள் கிடைத்தபோதிலும் இப்போது சொல்லிக்கொள்ளும் படி அவ்வாறு கிடைப்பதில்லை என்கிறார் வெள்ளையன்.

இருந்தாலும் தங்களுக்கு கிடைக்கும் பணத்தை, பொருட்களைக் கொண்டு நேர்மையான முறையில் சேவை செய்து வருவதாகவும் கூறுகிறார் அவர்.

இருப்பினும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, யாழ்ப்பாணத்தில் இருக்கும் நிரந்தர காயத்திற்கு உள்ளானவர்கள் ஒருவேளை உணவுக்கே வழியில்லாம் கஷ்டப்பட்டுவருகின்றனர்.

ஒரு சிலர் வசதியோடு வாழ்ந்தாலும் அவர்கள் உளவியல் ரீதியாக மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இன்னும் சிலர், நல்லுள்ளம் கொண்டவர்களால் ஒரு தொகை பணம் செலுத்தி வாங்கிக்கொடுக்கப்பட்ட முச்சக்கரவண்டியின் மாதாந்த தவணைப் பணத்தை செலுத்த முடியாமல் செய்வதறியாது தடுமாறிக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் சிலர், தாங்கள் வருடக்கணக்கில் தங்கியிருக்கும் உறவினர்கள் வீடுகளில் இருந்து விரட்டியடிக்கப்படும் தருவாயில் இருக்கின்றனர்.

முன்னாள் போராளியான ஒருவர் – இடுப்புக்குக் கீழ் இயங்காதவர் – புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட்டவர், 5 வருடங்களுப் பின் ‘மாற்றம்’ அரசின் கீழ் இயங்கும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருக்கிறார்.

இன்னுமொரு முன்னாள் பெண் போராளி, அவருக்கும் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டுள்ளதால் இடுப்புகுக் கீழ் இயங்காது. தடுப்பிலிருந்து விடுதலையாகி வெளிநாட்டுக்குச் சென்றுள்ள கணவரின் தொலைப்பேசி இலக்கத்தைக் கேட்டு, அங்கவீனமானவர் என்று பார்க்காமல் இனந்தெரியாத மூவரால் தாக்கப்பட்டிருக்கிறார்.

ஆகவே, தெற்கில் போரில் காயமடைந்த இராணுவச் சிப்பாய்களுக்கு அனைத்து வசதிகளும் உரிமைகளும் வழங்கப்படுகின்றபோது, அதே போரில் காயமடைந்த தமிழ் மக்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை?

அவர்களும் இந்நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையில் அவர்களது உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும்; தேவைகளும் பூர்த்திசெய்யப்பட வேண்டும்.

மனித உரிமைகள் தினத்தை (டிசம்பர் மாதம் 10) முன்னிட்டு ‘மாற்றம்’ தளம் போரில் நிரந்தர காயங்களுக்கு உள்ளான சிலரின் குரல்களை இங்கு பதிவு செய்கிறது.



பதவியா, பொரளை, குருணாகல், மீண்டும் பதவியா, கண்டி, வவுனியா, கொழும்பு காசல், மீண்டும் பொரளைக்கு, ராகம…

சுமார் 3 வருடங்கள் மதிவாணன் தயாகினி சிகிச்சைக்காக இடம்பெயர்ந்த வைத்தியசாலைகளே மேல் குறிப்பிடப்பட்டிருக்கும் இடங்கள்.

2009ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்று கொண்டிருக்கும்போது தயாகினியின் கழுத்துப் பகுதியை துப்பாகி ரவை துளைத்துச் சென்றுள்ளது. அப்போது அவர் கர்ப்பமாக இருந்துள்ளார். பின்னர் மேல் குறிப்பிடப்பட்டுள்ள வைத்தியசாலைகளுக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக வரிசையாக அனுப்பப்பட்டிருக்கிறார்.

சிகிச்சைகள் முடிந்து திருகோணமலையிலும் பின்னர் யாழ்ப்பாணத்திலும் தயாகினி தனது கணவர் மதிவாணனுடன் குடியேறியிருக்கிறார். யாழ்ப்பாணம் சென்ற பின்னர்தான் பதிவு நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறார்.

“இன்டக்கு வரைக்கும் எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கல்ல. வீட்டுத்திட்டமோ, அரச உதவிகளோ அல்லது தனியார் நிறுவன உதவிகளோ எதுவும் கிடைக்கல்ல. போய் கேட்டா, யாழ்ப்பாணத்தில யுத்தம் நடக்கேல்ல, அதனால உதவிகள் செய்ய ஏழாது என்டு சொல்லினம்” என்று கூறுகிறார் தயாகினி.



“ஆனால், இந்த அரசாங்கம் மாறுனதிலிருந்து மருத்துவ கொடுப்பனவு என்டு சொல்லி மாதம் மூவாயிரம் டி.எஸ். ஒபிஸால தருவினம். அதவிட சமுர்த்தி முத்திரையும் இந்த வருஷம்தான் தந்தவ” என்கிறார் தயாகினி.

தயாகினியால் அவருடைய வேலைகளையே செய்துகொள்ள முடியாத நிலை. கணவன் மதிவாணன்தான் அவருடைய, மகனுடைய அனைத்து வேலைகளையும் செய்கிறார்.

“தொடர்ந்து என்னைப் பராமரிக்க வீட்டிலேயே ஒரு ஆள் தேவை. அவர் வெளி வேலை ஒன்டுக்கும் போறதில்ல. வயரின் வேலையும் செய்தவர். இப்ப வெளியால போக ஏலாத நிலமையால போறதில்ல. அப்படி வேலைக்குப் போனாலும் முழு நேரமும் இருந்து வேலை செய்ய முடியாது. காலையில எங்கட வேலைய முடிச்சி, மதியம் சாப்பாடு தாரத்துக்கு திருப்பி வரனும். திருப்பி இரவுக்கு வரனும். அதால வெளி வேலைக்கு ஒன்னும் போறதில்ல. என்ன விட்டுட்டும் போக ஏலாது. அதால போறதில்ல” என்று உருக்கமாக கூறுகிறார்.




“நாங்க இப்ப எங்கட அக்காட வீட்டுல ஒரு ரூம்லதான் இருக்கிறம். எங்களுக்குச் சொந்தமா வீடு இல்ல. காணியிருந்தும் வீடு கட்ட முடியாம இருக்கிறம். தற்காலிக வீடு கூட எங்களுக்குத் தரேல்ல. எங்களுக்கு இப்போதைக்கு டொய்லட் வசதியோட வீடொன்டுதான் அவசரமா தேவைப்படுது” என்று கூறுகிறார் தயாகினி.

பக்கத்து காணியில் அடுத்த வருடம் ஜனவரிக்கு குடியேறுவதற்காக நான்கு மரங்களை நாட்டி தகரங்கள் போட்டுள்ள கொட்டிலொன்றை மதிவாணன் காட்டுகிறார். தொடர்ந்து வீட்டாருக்கு கஷ்டத்தை கொடுக்காமல் தனியாகச் சென்று வாழ இருவரும் முடிவெடுத்து விட்டனர்.

“எங்கள மாதிரி யாழ். மாவட்டத்தில நிறைய பேர் இருக்கினம். எனக்குத் தெரிய 18, 19 பேர் இருக்கினம். அவைகளுக்கு இப்படி உதவியென்டு எதுவும் கிடைக்கிறதில்ல. அவைகளுக்கும் உதவி கிடைச்சா நல்லா இருக்கும்” – என்கிறார் தயாகினி.




நான்: காலையில என்ன சாப்பாடு?

நவீந்திரன்: மரவள்ளி,

நான்: மத்தியானம்?

நவிந்திரன்: ஒன்டுமில்ல…

இடம்: வட்டக்கச்சி, சம்புக்குளம்

முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு இடுப்புக்குக் கீழ் இயங்காத நிலையில் கட்டிலில் படுத்திருந்த நவீந்திரனுக்கும் எனக்குமான உரையாடலே மேலிருப்பது.

அனேகமானோரின் நிலை இதுதான்.

வைத்தியர் ஒருவரின் மூலமாக இரண்டு பிள்ளைகளின் தந்தையான நவீந்திரனுக்கு தவணை முறையில் செலுத்தக்கூடிய வகையில் ஆட்டோ ஒன்று கிடைத்திருக்கிறது. முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கென்று பிரத்தியேகமான முறையில் – கைகளைக் கொண்டு இயக்கக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட ஆட்டோவே இது. அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுதான் குடும்பத்தைக் கொண்டுநடத்துகிறார் நவீந்திரன். ஆனால், கடன் கொடுக்க வேண்டியிருந்ததாலும், தொடர்ந்து தனக்கு ஏற்பட்ட காய்ச்சலினாலும் ஆட்டோவுக்கான புத்தகத்தை அடகுவைத்துள்ளார் நவீந்திரன். மாதம் 13,000 கட்ட வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் தற்போது இருக்கிறார் அவர்.




“மாதம் 13,000 கட்டனும். இப்போ அரியஸா 60,000 கிட்ட வந்திருக்கு. சிலநேரம் அரியஸ்னால தூக்கினமோ தெரியாது. ஆட்டோ கைவிட்டுப் போயிருச்சென்டா வாழ்க்கையே சரி… அது இருக்கிறதாலதான் ஹொஸ்பிட்டலுக்கு எல்லாம் பொய்ட்டு வாறன். திருப்பி எடுக்கக்கூடிய வல்லமையும் எங்ககிட்ட இல்ல. சாப்பாடு இல்லையென்டா பிச்சை எடுத்தாவது சாப்பிடலாம். வருத்தமென்டா கிளிநொச்சிக்குதான் போகனும். ஆட்டோ இல்லாம கஷ்டம்” – என்று கூறுகிறார் நவீந்திரன்.

நவீந்திரனின் மனைவி, 6ஆம் தரத்தில் படிக்கும் மூத்த மகளுடன் உதவி பெறுவதற்காக உறவினர் வீடொன்றுக்கு சென்றிருப்பதாகக் கூறுகிறார் நவீந்திரன்.




“கோழியும் வளர்த்து பார்த்தனான்…. அடுத்தடுத்து விடக்கூடிய மாதிரி காசு இல்லதானே. ரெண்டு செட் வளர்த்தன். அதில வந்த காச கடனுக்கும், ஆட்டோ லீசிங்கிங்கும் கொடுத்து முடிஞ்சிருச்சி. கோழி வாங்கித்தந்தா வீட்டோட இருந்து பார்த்துக்கலாம்” என்கிறார் அவர்.

4ஆம் தரத்தில் படிக்கும் இளையவன் நவீந்திரனினுடன் அவருக்கு உதவியாக, துணையாக அருகிலேயே அமர்ந்திருக்கிறான்.



கிளிநொச்சியில் பிள்ளைகள் இருவருடன் இடுப்புக்குக் கீழ் இயங்காத நிலையில் சக்கர நாற்காலியின் துணையுடன் வாழ்ந்துவரும் முன்னாள் இளம் பெண் போராளி ஒருவரை சந்திக்கச் சென்றேன்.

2000ஆம் ஆண்டு முகமாலையில் இராணுவத்தினருடன் இடம்பெற்ற மோதலின்போது ஷெல் தாக்குதலுக்கு இலக்காகி இடது காலை இழந்தவர் இவர். அத்தோடு, முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டதால் இடுப்புக்குக்கீழ் இயங்காத நிலையில் சக்கர நாற்காலியிலேயே நிரந்தரமாக உட்கார்ந்து விட்டார்.

“தலையில் இருந்து உள்ளங்கால் வரை பீஸ் (இரும்புத் துண்டுகள்) இருக்கிறது. அதனால், மழை என்றாலும் வெயில் என்றாலும் அடிக்கடி உடல் ரீதியான பிரச்சினைகள். தலைவலி தொடங்கினால் கை, கால்கள் எல்லாம் வீங்கத் தொடங்கும். 6 வருஷமா படுக்கைப் புண் இருக்குது” என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த முன்னாள் போராளி.

கணவனுடன் இருக்கும் படங்கள் டிவியின் மேலும், உடைந்த சுவர்களிலும் தொங்கிக் கொண்டிருக்கிறது. கணவர் வீட்டில் இல்லையா என்று கேட்டேன்?

“அவர் வௌியில இருக்கார். அவரும் என்னைப் போல முன்னாள் போராளி ஒருவர்தான். இயக்கத்தில இருந்து விலத்தி வந்துதான் என்னைத் திருமணம் செய்தவர். இடம்பெயர்ந்து முகாமுக்கு வந்தபோது கணவர பிடிச்சுக்கொண்டு பொயிட்டினம். பிறகு சித்திரவதை செய்த பிறகுதான் விட்டினம். ஒரு நாள் அவர் வேலைக்குப் போய் திரும்பி வரல்ல. திடீரென்று காணாமல்போயிட்டார். அவரைத் தேடாத இடமில்ல. சில மாதங்களுக்குப் பிறகுதான் ஒஸ்ரேலியாவில இருக்கிறதா கோல் பண்ணார். பிறகு அங்கயும் கஷ்டமென்டு ப்ரெண்ட் ஒருத்தர்ட உதவியோட பிரான்ஸ் போயிட்டார். அங்க இதுவர அவருக்கு ‘கார்ட்’ கிடைக்கல்ல. இடைக்கிட காசு அனுப்புவார். அதுக்குப் பிறகு நானும் பிள்ளைகளும் அம்மாவும்தான் வாழ்ந்து வந்தோம். அம்மா இரத்தப் புற்றுநோய் வந்து 2012 மோசம் போயிட்டா. இப்ப நாங்க மூன்று பேருதான் இருக்கிறம்”.

கண்களில் கண்ணீர் வலியவில்லை. குரலில் நடுகமும் இல்லை. திடமாகப் பேசுகிறார்.

“2014.6.3ஆம் திகதி இனந்தெரியாத 3 பேர் வந்து கணவர்ட போன் நம்பர கேட்டு என்ன அடிச்சதோட, வீல் செயாரயும் வெளியில தள்ளிவிட்டு பொயிட்டினம். தலையில, கையில, கால்ல காயமென்டதால ஒரு மாசமா ஹொஸ்பிட்டல்ல இருந்தன். பொலிஸில, மனித உரிமைகள் ஆணைக்குழுவுல என்ரி போட்டனான். ஆனா இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கல்ல. இனந்தெரியாத ஆக்கள் என்டதால கண்டுபிடிக்க முடியாது என்று பொலிஸால சொல்லினம்”.

மகளை அழைத்து டிவியின் கீழ் இருக்கும் பையொன்றை எடுத்துவருமாறு கூறுகிறார். தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்த வெளியான பத்திரிகை, இணையத்தள செய்திகளின் பிரதிகள் அடங்கிய பை அது. 5, 6 தாள்களைத் தந்தார். இணையதளங்கள் முந்திக்கொண்டு செய்தி வெளியிட்டிருந்தன, “முன்னாள் பெண் போராளி மீது இனந்தெரியாதோர் தாக்குதல்”.

காயப்பட்ட நாளில் இருந்து அரசாங்கம் உதவி எதுவும் செய்யவில்லையா என்று கேட்க?

“நான் காயப்பட்டு 15 வருஷமாகிட்டு. அரசாங்கமோ, இல்ல வேறு யாரோ எந்த உதவியும் செய்யல்ல. இருந்த சமுர்த்தியையும் புதுசா வந்த அரசாங்கம் வெட்டிட்டது. வட மாகாண சபையால மாதத்துக்கு 1,500 ரூபா கொடுக்குறாங்க. அந்தக் காச மட்டும்தான் எடுத்துக் கொண்டு இருக்கிறன்.

“நாங்க ஏழாத ஆக்கள் என்டு யாரும் வந்து பார்க்கிறதில்ல. இவைக்கு கொமட் வசதி இருக்குதா? பாத்ரூம் வசதி இருக்குதா? கிணறு இருக்குதா? இருக்க வீடு இருக்குதா? என்டு யாரும் வந்து பார்க்கிறதில்ல. எந்த நிறுவனமும் வந்து பார்க்கல்ல. ஒரே ஒரு நாள் ஜி.எஸ். வந்தார். அதுவும், நாங்கள் என்ன மரக்கன்று வச்சிருக்கம், எவ்வளவு வருமானம் என்டு கேட்டுப் போனார். அவ்வளவுதான்”.



“நாங்களா உழைச்சாதான் சாப்பிடலாம். ஏழாதென்டு சொல்லி எந்த நிறுவனமும், எந்த அரசாங்கமும் உதவ வராது. கட்டில் கூட நான்தான் காசு குடுத்து வாங்கினன்”.

தான் யாரையும் நம்பியிருக்கவில்லை என்பது அவரது வார்த்தைகளால் தெரிகிறது. இடையிடையே வந்துபோகும் அம்மாவின், தந்தையின் உதவியுடன் அன்றாட தேவைக்கென்று தோட்டம் செய்வதாகக் கூறுகிறார் அவர். நான் சென்றிருந்த அன்றும் வயதான ஒருவர் அரைக் காற்சட்டையுடன் மண்வெட்டியுடன் தோட்டத்தில் நின்றிருந்ததைக் கண்டேன்.

தற்போது தான் பயன்படுத்திக் கொண்டிருக்கும் சக்கர நாற்காலியின் ஆயுட்காலம் முடிவடையும் தருவாயில் உள்ளதாகவும், அதன் பின்னர் தான் என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளார் என்றும் அவர் கூறுகிறார்.

“நான் தனியாத்தான் வீட்டு வேலைகள செய்றன், அதோட டவுனுக்குப் போகனும், ஹொஸ்பிட்டல் போகனும். உடுப்பு கழுவனும்… இதெல்லாம் இந்த வீல் செயார்ல இருந்து கொண்டுதான் செய்றன். இதுக்கும் காலம் சரி. ஒரு வருஷமாகப் போகுது. இதுதான் கடைசியென்டு தந்தவங்க. நானும் கிறீஸ் எல்லாம் போட்டு, ரேஸர் மாத்தி பாவிச்சிக் கொண்டுதான் இருக்கிறன். இது பழுதாப் போனா அடுத்தக்கட்டமா இன்னொரு வீல்செயார் கிடைக்குமா கிடைக்காதா என்டு கூட தெரியாது” என்கிறார் அவர்.



“நான் மருத்துவத்திலதான் தங்கியிருக்கிறன். அடிக்கடி ஹொஸ்பிட்டலுக்குப் போகனும். மினரல் வோட்டரதான் குடிக்கச் சொல்றாங்க. ஆனா அந்த வசதி ஒன்டும் எங்ளிட்ட இல்ல” என்கிறார் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு இடுப்புக்குக்கீழ் செயலிழந்த யோகராஜன்.

புதுக்குடியிருப்பைச் சேர்ந்த யோகராஜனுக்கு பாடசாலை செல்லும் வயதில் மூன்று பெண் பிள்ளைகள். முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கென்று பிரத்தியேகமான முறையில் – கைகளைக் கொண்டு இயக்கக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட ஆட்டோவை இவர் செலுத்தி வருகிறார். ஆட்டோ செலுத்தி அதில் கிடைக்கும் கொஞ்ச பணத்தைக் கொண்டு வாழ்ந்து வருகிறார்.

“2009 யுத்தம் நடந்த காலப்பகுதியில்தான் எனக்கு காயம் ஏற்பட்டது. முள்ளந்தண்டில் இன்னும் பீஸ் இருக்குது. அத எடுத்தா இன்னும் பாதிப்பு என்டு எடுக்காமல் இருக்கன். இது இருக்கிறதால நிறைய பிரச்சின. உடம்பு வலிக்கும், வீங்கும்” என்கிறார் யோகராஜன்.

அவரது மூன்று மகள்களும் வந்து என் பின்னால் நின்று சிரிக்க, யோகராஜன் பார்வையாலேயே அதட்டுகிறார்.



“வாழ்வாதார உதவியாக அரசாங்கம் 36,000 தந்தது. அத எவ்வளவு காலத்துக்குத்தான் வச்சுக் கொண்டு இருக்கிறது. அதோட, சித்திர மாதத்தில் இருந்து 3,000 கொடுப்பனவு தாராங்க. முதல்ல 4 மாதத்தையும் சேர்த்து தந்தாங்க. பிறகு ஒரு மாதத்துக்கான கொடுப்பனவ தந்தாங்க. மீதிய இன்னம் தரல்ல. ஆனா போய் சைன் வச்சிக்கொண்டுதான் இருக்கிறம்” என்று கூறுகிறார் அவர்.

அது கிடைக்கும் என்ற நம்பிக்கை அவரது வார்த்தைகளில் காணமுடியவில்லை. மூன்று மாதங்களாக அந்த உதவித் தொகை இல்லாமல் சமாளித்துவிட்டோம், இனி வந்தாலென்ன, வராவிட்டாலென்ன, சமாளித்துவிடலாம் என்று அவர் எண்ணுவது போல எனக்குத் தோன்றியது.

“நிரந்தரமாக ஒரு தொழில் இல்ல. ஓட்டோ ஓடுறன். கச்சான் விக்கிறன். அதுவும் சீஸனுக்குத்தான் விக்கலாம்” என்கிறார் எதிர்காலம் குறித்து நிச்சயமில்லாமல்.



I

“சீவல் தவிர, வேற தொழில் என்டா இவர் செய்யமாட்டார். கண்பார்வை தெரியாதுதானே” என்கிறார் முன்னாள் பெண் போராளியான நகுலேஷ்வரன் அருள்மீரா.

1997ஆம் ஆண்டும் இடம்பெற்ற மோதலின்போது இடது கையை இழந்துள்ள அருள்மீரா 2009ஆம் ஆண்டு இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வின் பின்னரே விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.

பிறவியிலேயே கண்பார்வையை இழந்த நகுலேஷ்வரனை அருள்மீரா திருமணம் செய்திருக்கிறார். இருவரும் 2014ஆம் ஆண்டு முதல் முள்ளியவலையில் உறவினர் ஒருவரின் வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள்.

“வீட்டுத்திட்டத்திற்கான காணி தந்திருக்கினம். வீடு கட்டித் தருவினம் என்டு சொல்லியிருக்கினம். ஆனா இன்னும் கிடைக்கல்ல. கிடைக்கும் என்டு நம்பிக்கொண்டிருக்கிறம்” என்கிறார் அருள்மீரா.



வாழ்கைய கொண்டு நடத்த என்ன செய்றீங்க என்று கேட்டேன், “பாக்கு சீவி கொடுக்கிறோம்” என்றார் நகுலேஷ்வரன். யார் சீவுவது? “நான்தான்” என்றார் அவர். கண்பார்வை தெரியாதவர் எப்படி என்று திகைத்துப் போனேன். நான் உட்கார்ந்திருந்த அறையின் ஓரத்தில் பெரிய பாக்கு வெட்டியொன்று பொருத்தப்பட்டிருந்த மேசையொன்று இருந்தது. அருள்மீராவைப் பார்த்து, “ரெண்டு பாக்கு எடுத்திட்டு வா” என்று கூறியவாறு சுவரை தடவிக்கொண்டு பாக்கு வெட்டி மேசையை நோக்கி நகர்ந்தார். கண் பார்வை உள்ள எங்களால் கூட அவ்வாறு பாக்கை சீவ முடியாது. அவ்வளவு நேர்த்தி.

இந்தத் தொழிலை எப்படி ஆரம்பித்தீர்கள் என்று அருள்மீராவிடம் கேட்டேன்?

“வெளிநாட்டில இருந்து ஒருத்தர் நாற்பதாயிரம் காசு தந்து உதவினார். அத கொண்டுதான் சின்னதா பாக்கு சீவல் வேலைய தொடங்கினம். பாக்கு சீவி ஒரு கிலோ குடுத்தா 40 ரூபா கிடைக்கும். இன்னும் கொஞ்சம் காசு உதவி கிடைச்சா இந்தத் தொழில நல்லா செய்துகொண்டு போகலாம்” என்கிறார் அருள்மீரா.



“அரசாங்கம் இதுவர எந்த உதவியும் செய்யல்ல. கூலி வேலையோ, கடற்தொழில் வேலையோ இவரால செய்ய முடியாது. சீவல தவிர இவரால வேற எதுவும் செய்யமுடியாது. வீட்டுலயே இருந்து இந்தத் தொழிலதான் செய்யலாம். இந்தத் தொழில செஞ்சு கொண்டு போக உதவினா நல்லா இருக்கும்” என்று உதவிகோருகிறார் அருள்மீரா.



“2009இல நான் அனுபவப்பட்ட மாதிரி வேறு யாரும் அனுபவப்பட்டிருக்க மாட்டாங்க. அப்படியொரு இக்கட்டான சூழ்நிலை. எங்க பார்த்தாலும் மனிதப் பிணங்கள். கொத்துக் கொத்தாக சனம் கொல்லப்பட்ட கிடந்தாங்க. அதையும் கடந்து வரும்போதுதான் எனக்கு துப்பாக்கிச் சூடு பட்டது. 2009.2.4ஆம் திகதிதான் நான் காயப்பட்டன்”.

இவ்வாறு கூறுகிறார் வட்டக்கச்சியைச் சேர்ந்த பிரபாகரன். பிரபாகரனுக்கு முள்ளந்தண்டில் பாதிப்பு ஏற்பட்டதால் நிரந்தரமாக சக்கர நாற்காலியில் உட்காரவேண்டி ஏற்பட்டுவிட்டது.

இருப்பினும், மன உறுதி மிக்கவர். தானாக அத்தனை வேலைகளையும் செய்துகொள்கிறார்.

“ஒரு கால் இல்லாதவர் எப்படியும் சமாளித்துக் கொள்வார். ஆனால், ஸ்பெஷலா முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட என்னைப் போன்றவர்கள் வீல் செயாரில் இருப்பதால் நிறைய கஷ்டத்த எதிர்கொள்றம். எங்களுக்கு இன்னொருத்தர்ட உதவி கட்டாயமா தேவைப்படுது. அரச கட்டடங்கள்ல, பஸ்ல எல்லாம் இன்னொருத்தர்ட உதவியோட ஏறவேண்டியிருக்கு. இது எனக்கு மனக்கஷ்டத்த தரக்கூடியதா இருக்கு.

உளவியல் ரீதியாக பிரபாகரன் பாதிக்கப்பட்டுள்ளதை உணர முடிகிறது. தனக்கு யாரிடமும் கையேந்த விருப்பமில்லை என்ற வார்த்தை அடிக்கடி அவர் வாயிலிருந்து வந்து கொண்டே இருந்தது.



“சாதாரணமான கூலி வேலைக்குப் போய் 1,000 ரூபா உழைக்கிறவர் கிட்ட கேட்டா, கஷ்டமென்டுதான் சொல்வார். 24 மணித்தியாலமும் இதுல இருக்கிற எங்களுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும். வாழ்வாதார ரீதியா முற்றுமுழுதா பாதிக்கப்படுறம்” என்று கூற எம்மிடம் பதில் இல்லை.

தான் போன்றவர்களுக்கு இருக்கும் திறமையை பரீட்சித்து தொழில் வழங்க அரசாங்கம் முன்வரவேண்டும் என்று கூறும் பிரபாகரன், ஆனால், தன்னை விட தகுதி குறைந்தவர்கள் அரச, தனியார் நிறுவனங்களில் கடமையாற்றுவதாகக் குற்றம் சாட்டுகிறார்.

“கொம்பியூட்டர் பக்கம் எல்லாம் நான் செய்வன். ஹார்ட்வெயார் புல்லா செய்வன், சொப்ட்வெயார் இன்ஸ்டொலேஷன் எல்லாம் செய்வன். எனக்கு உள்ள திறமைய செக் பண்ணலாம். வேலை செய்யாத கொம்யூட்டர தந்திட்டு திருத்தித் தரச்சொன்னா இரண்டு நிமிஷத்தில என்ன பிரச்சின என்டு கண்டுபிடிப்பன்” – ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் அவர்.



“இந்த அரசாங்கம் மாறியும் எந்தவித பயனும் எங்களுக்கு இல்லை. 2016ஆம் ஆண்டு வரவு-செலவு திட்டத்தில எங்களுக்கென்று ஏன் காசு ஒதுக்க முடியாது? வட மாகாண சபையால 1,500 ரூபா தாராங்க. அத வச்சிக்கொண்டு என்னத்த செய்யலாம்? அதக்கொண்டு சந்தைக்குப் போனா 100 ரூபா காசுதான் மிஞ்சும். ஏன் எங்கள மாதிரி ஆக்களுக்கு அரசாங்கத்தால உதவி செய்ய முடியாதா?”

“சாராரணமாக படை வீரர்களுக்கு 55,000 சம்பளம் கொடுக்குறாங்க. அதுக்காக அத அப்படியே எங்களுக்கு தா என்டு கேக்கல்ல. எங்களயும் இந்த நாட்டின் பிரஜைகளாக கருத்தில் கொண்டு வாழவிடுங்க” – பிரபாகரனின் இந்தக் கருத்தை ‘மாற்றம்’ அரசு செவிமடுக்குமா?



“எனக்கு மகன படிக்க வைக்கோனும் என்டு ஆசை இருக்குது. படிப்பென்டா சும்மா இல்லதானே, நிறைய செலவு வரும். எப்படியாவது கஷ்டப்பட்டு பிள்ளைய படிக்க வச்சி நல்ல உத்தியோகம் எடுத்துக் கொடுக்கோனும் என்பதுதான் என்ட ஆசை” முள்ளியவலையைச் சேர்ந்த நகுலேஸ்வரி தனது மகனின் எதிர்காலம் குறித்த தனது கனவை இவ்வாறு குறிப்பிடுகிறார்.

முன்னாள் போராளியான நகுலேஸ்வரி ஆயுதப் பயிற்சியின்போது தவறுதலாக இடம்பெற்ற வெடிவிபத்தில் இரண்டு கைகளையும் இழந்தவர்.

2009ஆம் ஆண்டு இராணுவத்தினரிடம் சரணடைந்து, புனர்வாழ்வின் பின் விடுதலையாகி 2011ஆம் திருமணம் செய்துள்ளார். ஒரு மகனுடன் வாழ்ந்துவரும் இவர்களுக்கு ஒரு சில உதவிகள் கிடைத்திருக்கின்றன. இருப்பினும் அவை முழுமையாக கிடைக்கப் பெறாததால் இக்கட்டான நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.



“மூன்று குடும்பங்கள் சேர்ந்து இந்த ஓட்டோவ வாங்கித் தந்தவ. உடனே நாங்க அறுபதினாயிரம் கட்டினனாங்கள். அதுக்குப் பிறகு மாதம் மாதம் ஏழாயிரம் கட்டிக் கொண்டிருக்கிறம். ஓட்டம் பெரிசா வாரதில்ல. பார்க்ல நிறுத்த பத்தாயிரம் வேணும். சாப்பிடறமோ இல்லையோ காசு கட்டியே ஆகனும். வீடும் கட்டி குறையாதான் இருக்கு” என்கிறார் நகுலேஸ்வரி.

நகுலேஸ்வரியால் ஒருவேலையும் செய்ய முடியாததால் அவருடைய கணவர்தான் அத்தனை வேலைகளையும் செய்து வருகிறார்.

“இவரு கூலி வேலை செஞ்சிதான் என்னயும் பிள்ளயையும் பார்த்து வரார். காலையில எழும்பி முற்றத்த கூட்டி, சட்டி பானை கழுவி, காலை – பகல் சாப்பாடு செஞ்சி வச்ச பிறகுதான் வேலைக்குப் போரார். ஒவ்வொரு நாளும் வேலைக்குப் போறதில்ல. சந்தர்ப்பம் கிடைக்காது. எங்களுக்கு எல்லா வேலையும் செய்து முடியும்போதே நேரம் போயிடும். இப்ப மழைக்காலம் என்டதால இன்னும் கஷ்டமாக இருக்கு” என்று கூறுகிறார் அவர்.

என்ன உதவி எதிர்பார்க்குறீங்க என்று கேட்டதற்கு?

“பசு மாடு எடுத்துத் தந்தா பால் கறந்து விக்கலாம். கோழி வாங்கித் தந்தா வளர்க்கலாம்” என்கிறார் நகுலேஸ்வரி.

மகன் படிக்கிறாரா என்று கேட்டேன்?

“எனக்கு மகன படிக்க வைக்ககோனும் என்டு ஆசை இருக்குது; ஒரு உத்தியோகம் செய்யவைக்க ஆசையா இருக்குது. இங்கிலீஸ் எல்லாம் படிக்க வைக்க ஆசை. எனக்கும் கூட இங்கிலீஸ் படிக்க, பேச ஆசை. எனக்கு இன்னும் படிக்க விருப்பம். ஆனா முடியாது. அதனால என்ட மகன இங்கிலீஸ் படிக்கவைக்கனும். படிப்பென்டா சும்மா இல்லதானே, நிறைய செலவு வரும். எப்படியாவது கஷ்டப்பட்டு பிள்ளைய படிக்க வச்சி நல்ல உத்தியோகம் எடுத்துக் கொடுக்கோனும் என்பதுதான் என்ட ஆசை” – நகுலேஸ்வரியின் கனவு கனவாக இல்லாமல் நனவாகட்டும்.




Read more...

டக்ளஸ் இந்தியா வந்தால் தரும அடிவிழுமாம்! காப்பாற்றட்டாம்! ஆடு நனையுதென ஓநாயாக அழுகின்றார் ராம்!

இந்தியாவில் சூளைமேட்டு பிரதேசத்தில் கொள்ளையடிக்கச் சென்றபோது ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட மற்றும் இலங்கை சிறுவன் ஒருவனை கடத்தி பெற்றோரிடம் கப்பம் கோரிய சம்பவங்கள் தொடர்பாக ஈபிடிபி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானத்தாவிற்கு எதிராக இந்திய நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது யாவரும் அறிந்ததே. தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ள இவ்வழக்கில் டக்ளஸை நேரடியாக சென்னை நீதிமன்றில் மன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் ராம் என்பவர் டக்ளஸ் களுத்துறை சிறையில் வாங்கிக்கட்டியதுபோல் இந்தியாவிற்கு வந்தால் சென்னையிலும் தருமஅடி வாங்க நேரிடுமென அச்சம் வெளியிட்டுள்ளதுடன் விடியோ கொண்பரஸ் மூலம் சாட்சியமளிக்க அவருக்கு அவகாசம் வழங்கவேண்டுமெனவும் பரிந்துரைத்துள்ளார்.

ராமின் கட்டுரையின் முழுவடிவம் :

சென்னையில் அடாது மழை பெய்தாலும் விடாது துரத்துகிறது தேவானந்தாவை சூளைமேடு திருdeva-chennaiநாவுகரசு கொலை வழக்கு. 1986ல் நடந்த சம்பவத்தின் பொலிஸ் தரப்பு சாட்சிகள் 18 பேரும் 2016 ஜனவரி 18ல் நீதிமன்றில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பும்படி கூடுதல் செசன் நீதிபதி சாந்தி உத்தரவிட்டுள்ளார். பலத்த வாத பிரதிவாதங்கள் கொண்டதே இந்த வழக்கு என்பது என் வாதம்.

நீதிமன்றத்தில் இருக்கும் விடயம் பற்றி எழுதுவது நீதிமன்ற அவமதிப்பு செயல் என கூறும், வாதிடும் எவரும் தகவல் அறியும் உரிமை பொது மக்களுக்கு உண்டு என்பதை மறுக்க முடியாது. அந்த வகையில் காலம் தாழ்த்திய நீதி கூட மறுக்கப்பட்ட நீதியாக தான் கொள்ளப்படும். இங்கு பாதிக்கப் பட்டவர் மட்டுமல்ல குற்றம் சுமத்தப்பட்டவரும் தனக்கான நீதி கிடைக்கவில்லை என கூறலாம்.

நடந்த சம்பவம் பற்றிய நினைவு, மற்றும் பதிவுகள் மாற்றத்துக்கு உட்படாத வகையில் வருடக் கணக்காக இருக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆதாரங்கள் அழிக்கப்பட்ட, புதிதாக இணைக்கப்பட்ட எத்தனையோ நிகழ்வுகள் நாம் அறிந்தவை. இலங்கையில் நடந்த ஒரு பிரபல அபின் எனும் போதை பொருள் வழக்கில் வாதாடிய வக்கீல், பிடிபட்டது பழப்புளி என வாதத்தால் நிரூபித்தார்.

பிடிபட்டது அபின். ஆனால் அதற்கு சீல் வைத்து பாதுகாத்த அதிகாரியை குழப்பியது வக்கீல். எப்படி ? மதுப் பிரியரான காவல்துறை அதிகாரிக்கு மது விருந்து வக்கீலின் கையாளால் கொடுக்கப்பட்டது. நிறை போதையில் இருந்தவரிடம் பிரபல வக்கீல் ஆஜராவதால் நீ தோற்று விடுவாய், அந்த பெட்டிக்குள் இருப்பது வெறும் பழப்புளி என புரளி கூற, தடுமாறிய அதிகாரி சீல் வைத்த பெட்டியை உடைத்தார்.

உள்ளே அபின் தான் இருந்தது. ஆனால் நீதிமன்றில் சீல் உடைக்கப்பட்டதை நிரூபித்து, காவல் துறை பழப் புளிக்கு பதிலாக அபினை வைத்து வேண்டுமென்றே தன் கட்சிக் காரருக்கு எதிராக சோடித்த வழக்கு என வக்கீல் வாதிட்டு விடுதலை பெற்று கொடுத்தார். இன்னொரு கொலை வழக்கில் பனை மரத்தில் இருந்த கள் முட்டியை தான் மாற்றும் போது எதிரி சுடுவதை பார்த்தேன் என சாட்சி கூறினார்.

சம்பவ இடத்தை பார்க்க போனபோது அங்கு பனை மரம் இருந்த அடையாளம் கூட இல்லாமல் அந்த இடம் வயலாக மாறி நன்கு உழுது நெல் விதைக்கப்பட்டிருந்தது. அயலவர்கள் அங்கு பனைமரம் இருக்கவில்லை காலா காலமாக அது விளை பூமிதான் என நீதிவானிடம் கூறினர். பணம் பாதாளம் வரை மட்டுமல்ல பனை மரம் வரை சென்றது கூட, அந்த கெட்டிக்கார வக்கீலின் புத்திசாலித்தனம்.

சூளைமேடு சம்பவத்தில் தேவானந்தா உடன் சேர்த்து 9 பேரின் மீது வழக்கு பதியப்பட்டு அவர்கள் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த சம்பவம் நடப்பதற்கு சிறிது காலம் முன்பு தான் தேவானந்தா யாழில் இருந்து சென்னை வந்திருந்தார். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினராகவும் இராணுவ தளபதியாகவும் அப்போது அவர் இருந்தார்.

ஆனால் உட்கட்சி முரண்பாடு உச்சநிலையில் இருந்ததால் அவரும் அவரது தோழர்களும் தனியான இடத்தில் தங்கி இருந்தனர். அப்போது தேவானந்தாவின் சகோதரர் நடவடிக்கை காரணமாக பொருள் கைமாற்றும் செயலில் ஏற்பட்ட, கொடுக்கல் வாங்கல் தகராறில் ஏற்பட்ட பிரச்சனை துப்பாக்கி சூடு நடத்தும் அளவிற்கு பெரிதானதால் இடையில் அகப்பட்ட திருநாவுகரசு என்பவர் பலியானார்.

இங்கு இரண்டு விடயங்கள் கவனிக்க படவேண்டியவை. ஒன்று சம்பவ இடத்திற்கு தேவானந்தா பின்பு தான் வந்தார். இரண்டாவது திருநாவுகரசை குறிவைத்து சூடு நடத்தப்படவில்லை. தம்மை பாதுகாக்க துப்பாக்கி சூடு நடத்தியிராவிட்டால் அங்கு கூடிய கூட்டம் தம்மை அடித்தே கொன்றிருக்கும் என பின்பு சரணடைந்தவர்கள் கூறினர். சென்னையில் தர்மஅடி கொடுக்க என்றே ஒரு கூட்டம் உள்ளது.

இந்த சம்பவத்தால் ஏற்பட்ட கொந்தளிப்பு ஆட்சியில் இருந்த எம் ஜி ஆர் அவர்களை நடவடிக்கை எடுக்க தூண்டியது. ஏற்கனவே அமெரிக்கரான அலன் தம்பதியினரை சி ஐ ஏ ஏஜண்டுகள் என யாழில் கடத்தி அவர்களை விடுவிக்க தமிழ் நாடு முதல்வரிடம் கோடிக்காணக்கான தங்கத்தை ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வைக்க, அந்த நேரம் அமெரிக்க உயர்மட்ட விஜயம் டெல்கியில் நிகழ இருந்ததால் இந்திரா காந்தி தலையிட்டு எம் ஜி ஆர் உத்தரவில் அலன் தம்பதி விடுவிக்க பட்டனர்.

ஏற்கனவே தன்னை நோண்டிய கடுப்பில் இருந்த எம் ஜி ஆர் தம்மீது என்ன நடவடிக்கை எடுப்பார் என்பதை ஊகித்த ஈ பி ஆர் எல் எப் தலைமை பீடம் தேவானந்தாவை இயக்கத்தில் இருந்து வெளியேற்றி விட்டதாக அறிவித்து தம்மை பாதுகாத்து கொண்டது. இயக்க உள்முரண்பாட்டுக்கு தேவானந்தாவின் தென்மராட்சி உட்பட பெருமாள் கோவில் சம்பவங்களும் காரணமாகும்.

அதையே சென்னையிலும் தொடர அது இயக்கத்தின் இருப்பு நிலைக்கு ஆபத்தாகும் என்பதனால், அவரை இயக்கத்தை விட்டு வெளியேற்றும் நிலை ஏற்ப்பட்டது. சென்னை மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த தேவானந்தா இலங்கை சிறுவன் ஒருவனை கப்பம் கேட்டு கடத்தியதாக கைது செய்யப்பட்டு மீண்டும் சென்னை மத்திய சிறையில் அடைக்கபட்டு சிறிது காலத்தில் பிணையில் வந்தார்.

1990ல் கொழும்பு திரும்பிய அவர் அதன் பின் இந்தியா சென்று திரும்பி உள்ளார். மகிந்த அரசின் மந்திரியாக அவர் டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த போது தான் அவர் மீதான சூளைமேடு பூதம் புகழேந்தி என்ற வழக்கறிஞரால் மீண்டும் வெளியே வந்தது. ஜாமீனில் வந்த தேவானந்தா வழக்கு தவணைகளுக்கு ஆஜராகாததால் அவர் மீது பிடிவிறாந்து பிற ப்பிக்கபட்டது.

தேடப்படும் நபர் பாரதப் பிரதமரை எவ்வாறு சந்திக்கலாம் என்ற கேள்விக்கு அவருக்கான அமைச்சர் என்ற ராஜதந்திர பாதுகாப்பு காரணமாக காட்டப்பட்டது. ஆனால் அதன் பின் தேவானாந்தாவின் இந்திய விஜயத்துக்கு கால்கட்டு போடப்பட்டது. தேவானந்தா தான் எங்கும் ஓடி ஒளிக்கவில்லை என்றும், தன் மீது பிறப்பிக்க பட்டுள்ள பிடிவிறாந்து நீக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்பட்டது.

மேலதிகமாக தன்னுடைய தனிப்பட்ட பாதுகாப்பு காரணமாக தன்னால் சென்னை நீதிமன்றில் ஆஜராக முடியாது என்றும் கொழும்பு இந்திய உயர்ஸ்தானிகர் பணிமனையில் இருந்து வீடியோ கான்பிரன்சிங் மூலம் தன்னை விசாரிக்கும் படியும் அவர் வைத்த கோரிக்கை ஏற்க்கப்பட்டது. ஆனால் அவை எதுவும் இடம் பெறாமல் கால இழுத்தடிப்பு ஏற்பட்டதை காரணம் காட்டியே இன்று அது தூசு தட்டப்படுகிறது.


இங்கு கவனிக்க வேண்டியது கொலை குற்றம் சாட்டப்பட்ட தேவானந்தா ஒரு இலங்கை பிரஜை. அவர் எவ்வாறு விசாரணை காலத்தில் விமான நிலையம் ஊடாக இந்தியாவில் இருந்து இலங்கை திரும்ப முடிந்தது. இலங்கை இந்திய ஒப்பந்தப்படி இலங்கையின் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற சம்பவங்களோடு தொடர்பு பட்டவர்களுக்கு தான் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கினார்.

தென்னிலங்கையில் லலித் அத்துலத் முதலியை கடத்தும் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஈ பி ஆர் எல் எப் இயக்க தலைவர் பத்மநாபா சட்டப்படி கொழும்பு செல்ல முடியாமல் போனது அதனால் தான். ஒரே ஒரு தடவை மட்டுமே அப்போது இந்திய அமைதி படை தளபதியாக இருந்த ஜெனரல் கல்கட் தன்னுடன் திருகோணமலையில் இருந்து நாபாவை கொழும்பு கூட்டி சென்றார். எனவே பொது மன்னிப்பு தேவானந்தாவுக்கு பொருந்தாது.

அதே வேளை அவர் தலைமறை வாகவும் இல்லை. 1990 முதல் அவர் பகிரங்கமாக இலங்கையில் செயல் படுகிறார். களுத்துறை சிறையில் கூட அவருக்கு ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல் சென்னையில் சர்வ சாதாராணமாக நடக்கலாம். குற்றம் சாட்டப் பட்டவரின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் சென்னை உயர் நீதி மன்றம் ஏற்கனவே கொடுத்த வீடியோ கான்பரன்சிங் மூலமான விசாரணையை தொடங்குவதே சாலச்சிறந்தது.

அன்று அவர் அமைச்சராக இருந்தவர். அதனால் பாதுகாப்பிற்காக அவ்வாறான ஒழுங்கிற்கு உத்தரவிடப்பட்டது ஆனால் இன்று அவர் பாராளுமன்ற உறுப்பினர் மட்டுமே எனவே அவருக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு தேவை இல்லை என வாதிட முடியாது. சென்னைக்கே உரித்தான தர்மஅடி கொடுக்கும் புண்ணியவான்களின் செயல்களில் இருந்து குற்றம் சாட்டப்பட்டவரை காப்பாற்றுவது சுலபமல்ல.

Read more...

Wednesday, December 16, 2015

ராஜபச்சவின் கிச்சின் கபினட்டில் முக்கிய அமைச்சரான மின்னல் ரங்காவின் புதிய புரளி.

மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தில் அங்கம் வகித்த தமிழ் அமைச்சர்கள் கை கட்டி, வாய் பொத்தி நின்றார்களே ஒழிய தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையையும் பெற்றுக் கொடுத்து இருக்கவில்லை என்று சக்தி ரி. வியின் மின்னல் நிகழ்ச்சி மூலம் பிரச்சாரம் செய்து வருகின்றார் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா.

குறிப்பாக அரசியல் கைதிகளின் விடுதலைக்கு மஹிந்தவின் தமிழ் அமைச்சர்கள் உருப்படியான நடவடிக்கை எடுத்து இருக்கவில்லை என்று இவர் பகிரங்கமாக குற்றம் சுமத்தி வருகின்றார்.

ஆனால் மற்றவர்களை விமர்சனம் செய்கின்றமைக்கு முன்பாக ஸ்ரீரங்கா சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால் மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கியவர் ரங்கா. நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் மஹிந்த ராஜபக்ஸவுக்கு மிக நெருக்கமானவராக காணப்பட்டார்.

இதனால்தான் மஹிந்த ராஜபக்ஸ அலரி மாளிகையில் இருந்த காலத்தை விட ஸ்ரீரங்கா அலரி மாளிகையில் இருந்த காலம் மிக அதிகம் என்று சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நக்கல் அடிக்கின்றமை வழக்கமாக இருந்தது.

ஸ்ரீரங்காவின் திருமணத்துக்கு சாட்சிக் கையொப்பம் இட்டவர் யார் தெரியுமா? சாட்சாத் மஹிந்த ராஜபக்ஸதான். அப்போது இடம்பெற்ற ஒரு சம்பவம் மிகவும் சுவாரஷியம் ஆனது. மஹிந்த ராஜபக்ஸ மறிக்க மறிக்க திருமண ஒப்பந்த பிரகடனத்தை சிங்களத்தில் வாசித்து முடித்து விசுவாசத்தை வெளிப்படுத்தினார் ரங்கா.

மஹிந்த ராஜபக்ஸவுக்கு வழங்கப்பட்டு இருந்த 500 சொகுசு வாகனங்களில் 03 வாகனங்கள் அலரி மாளிகையால் ரங்கா எம். பிக்கு வழங்கப்பட்டு இருந்தன. இப்புள்ளிவிபரத்தை ஜே. வி. பி எம். பிகள் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்கள். கான்செட்டிலும் இது பதிவானது.

மஹிந்த ராஜபக்ஸவின் வெளிநாட்டுப் பயணங்கள் பலவற்றின் போது ஸ்ரீரங்காவும், நாமல் ராஜபக்ஸவும் உடன் சென்றும் உள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஸவுக்கு மாத்திரம் அன்றி நாமல் ராஜபக்ஸவுக்கும், ராஜபக்ஸ குடும்பத்துக்கும் மிக வேண்டியவராக இவர் காணப்பட்டார். இதனால்தான் ரிசாத் பதியுதீன் மின்னல் ரங்காவின் கன்னத்தில் பளார் விட பதிலுக்கு ரிசாத் மீது தாக்குதல் நடத்தினார் நாமல். நாமலின் நாளைய இளைஞர் அமைப்பிலும் ரங்கா முக்கிய பிரமுகர்.

மஹிந்த ராஜபக்ஸவின் வீட்டுப் பிள்ளையாக ரங்கா விளங்கினார். ஒவ்வொரு அரசாங்கத்திலும் இரு அமைச்சரவை காணப்படும். ஒன்று வெளிப்படையாக தெரிகின்ற அமைச்சரவை. மற்றையது கிச்சின் கபினெட் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும். பெரும்பாலான முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் கிச்சின் அமைச்சரவையில்தான் எடுக்கப்படுவது வழக்கம்.

மஹிந்த ராஜபக்ஸவின் கிச்சின் அமைச்சரவையில் ரங்கா ஒரு முக்கிய அமைச்சராக இருந்தார். கிச்சின் அமைச்சராக இருந்துதான் ஏராளம் சலுகைகளை பெற்றுக் கொண்டார்.

மஹிந்த ராஜபக்ஸவின் அமைச்சரவை அமைச்சர்களாக இருந்த தமிழ் அமைச்சர்கள் செய்யத் தவறிய விடயங்களை கிச்சின் அமைச்சர் ரங்கா நிச்சயம் செய்து கொடுத்து இருக்கலாமே? அப்போது பேசாமடந்தையாக இருந்து விட்டு இப்போது இவர் மற்றவர்களை பேசித் திரிவது எவ்வகையில் நியாயம் என்று அரசியல் அவதானிகள் வினவுகின்றார்கள்.

ரங்கா கடந்த சுமார் 20 வருடங்களாக சக்தியின் மின்னலில் மின்னி வருகின்றார். ஆனால் இன்றுவரை தமிழ் ஒழுங்காக பேசத்தெரியாது. அஃறிணை உயர்திணை வரவே வராது. இவன் தமிழை கொல்கின்றான் என பலர் கிளிமகாராஜாவிற்கு முறையிட்டிருக்கின்றனர். அனால் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுத்ததாக இல்லை. அதற்கு காரணம் என்வென்பது வெளிப்படையான ரகசியம்.

இந்த வெளிப்படையான இரகசியத்தினாலேயே கிளிமகாராஜாவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்குமிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது என்பது அரசியல் வட்டத்திற்கு பரகசியம் என்றாலும் மக்களுக்கு தெரியாது.

ஐக்கிய தேசியக் கட்சியில் நுவரேலிய மாவட்த்தில் ரங்காவிற்கு சீட் கொடுக்குமாறு ரணிலை கேட்டார் கிளி மகாராஜா. ரணிலும் சீட்டை கொடுத்தார். அத்துடன் நின்றுவிடவில்லை கிளி. ரங்காவின் அம்மாவிற்கு தேசியப்பட்டியலில் இடம்கொடுக்கசொல்லியும் கேட்டாராம். கெட் லொஸ்ட் என்றாரம் ரணில். இப்போது விளங்குகின்றதா ஏன் ரங்காவை கிளியின் கொறசொட் என்று சிங்களத்தில் பாராளுமன்றில் கிண்டலடிப்பார்கள் என்று.

Read more...

31ஆவது வருடாந்த கலாபூசணம் அரச விருது வழங்கல் விழா-2015 . ந.அனந்தராஜ் அவர்கட்கு 2015 ஆம் ஆண்டுக்கான கலாபூசணம் விருது!

கலாசார அலுவல்கள் திணைக்களம், உள்நாட்டு அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஒன்றிணைந்து நடத்திய 31ஆவது, வருடாந்த கலாபூசணம் அரச விருது வழங்கல் விழா-2015 அண்மையில் மகாரகம இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஸ்ரீலங்கா யுத் மண்டபத்தில் கடந்த டிசெம்பர மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்றது.

கடந்த காலத்தில் கலைத்துறைக்கு உன்னதமான சேவையை ஆற்றிய கலைஞர்களைக் கௌரவிக்கும் முகமாக நடத்தப்பட்ட மேற்படி அரச வைபவத்தில் இலங்கை முழுவதும் இருந்து 70 தமிழ் கலைஞர்களுக்கும், 25 முஸ்லிம் கலைஞர்களுக்கும், 206 சிங்கள கலைஞர்களுக்குமாக 301 கலைஞர்கள் “கலாபூசணம்” விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

அந்த வகையில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இலக்கியப் பணி ஆற்றி, சிறுகதை, கல்வி, நாட்டார் இலக்கியம், அறிவியல், ஈழத் தமிழர்களின் போராட்ட வரலாறு மற்றும் முகாமைத்துவம், நூலகம், ஊடகத்துறை என 19 நூல்களையும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும், ஆய்வுக் கட்டுரை களையும், பத்துக்கும் மேற்பட்ட நாடகங்களிலும் நடித்து கலை இலக்கியத் துறைக்குச் சேவையாற்றிய வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ந.அனந்தராஜ் அவர்கள் 2015 ஆம் ஆண்டுக்கான கலாபூசணம் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

வல்வை.ந.அனந்தராஜ், ஆனந்தி, ஆனந்தன், அன்ன பூரணன், வல்வை ஆனந்தன் என்ற புனைபெயர்களில் இலக்கிய ஆக்கங்களைப் படைத்து வந்த திரு.ந.அனந்தராஜ் அவர்கள் ஒரு முதுமாணிப் பட்டதாரியும், இலங்கை அதிபர் சேவையையும், இலங்கைகல்வி நிர்வாகசேவையையும் சேர்ந்தவருமாவார். வடமாகாணக் கல்வி அமைச்சில் பிரதிக்கல்விப் பணிப்பாளராகவும், உலக வங்கியின் நிபுணத்வ ஆலோசகருமாகக் கடமையாற்றிய இவர் தற்போது, ஆறுதல் நிறுவனத்தின் நிபுணத்துவ ஆலோசகராகவும், யாழ் பல்கலைக் கழகத்தின் ஊடகத்துறை வருகை விரிவுரையாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.

ஏற்கனவே இவரது கலைச் சேவையைப் பாராட்டி வல்வை கவிக்குயில்கள் கலா மன்றத்தினர் “அழகிய கண்ணே” விருதினையும், வடமராட்சி வடக்குப் பிரதேச சபை “கலைப் பரிதி” விருதினையும், வடமாகாணக் கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு “முதலமைச்சர்” விருதினையும் வழங்கிக் கௌரவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.









Read more...

Monday, December 14, 2015

“முதியோர் இல்லங்களுக்கு மூடு விழா வைப்போம்” வருக! வருக!

தமிழ் மாமன்றம் நடாத்தும் இம் மாதத்திற்கான வாசிப்பும் அனுபவப்பகிர்வும் நிகழ்வு, எதிர்வரும் சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு, வவுனியா பொதுசனநூலக கேட்போர் கூடத்தில் இடம் பெறவுள்ளது. இக் கலந்துரையாடல் நிகழ்வில், சாதி, மதம், தேசியம் ஆகியவற்றின் அங்கிகளைக் கிழிந்தெறிந்து மானுடத்தின் நிர்வாணத்தை பகிரங்கப்படுத்துகின்ற, மிக அரிதாக காணக்கிடைக்கின்ற ஒரு புத்தகமும், 1997ஆம் ஆண்டிற்கான புக்கர் பரிசுபெற்ற நாவலும் ஆகிய அருந்ததி ராய் அவர்கள் எழுதிய முதல் புதினமான “The God of Small Things” இன் தமிழ் மொழி பெயர்ப்பான “ சின்ன விஷயங்களின் கடவுள்” எனும் ஜி.குப்புசாமி அவர்களால் மொழி பெயர்க்கப்பட்ட நாவல் ஜே. சாள்ஸ் அவர்களாலும்,

அருங்கவிஞர் ஆனந்தரவி அவர்களால் எழுதப்பட்ட, “முதியோர் இல்லங்களுக்கு மூடு விழா வைப்போம்” எனும் கவிதை தொகுதி தெ.மிதிலைமாறன் அவர்களாலும் பகிரப்படவிருக்கின்றன. முதியோர் இல்லங்களின் பெருக்கம், முதியோர்கள் கவனிக்கப்பட வேண்டிய விதம், முதியோர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் என்பவற்றை மையப்படுத்திய ஓர் கலந்துரையாடல் நிகழ்வாகவும், அந் நூலின் பகிர்வாகவும் இந் நிகழ்வு அமையவிருக்கின்றது.

நல்ல படைப்புக்களை அறிமுகம் செய்தல், அதனூடக எமது சமூகம் சார்ந்த பிரச்சனைகளை ஆராய்தல், வாசிப்புப் பழக்கத்தை இன்றைய இளம் தலைமுறையினரிடம் அதிகரிக்கச் செய்தல் போன்ற நல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, இவ் வாசிப்பும் அனுபவப்பகிர்வும் நிகழ்வானது, தொடர்ச்சியாக மாதம் இருமுறை வவுனியா பொது நூலகத்தில், தமிழ் மாமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இடம்பெறவிருக்கின்ற நிகழ்வுகளில், எழுத்தாளர்களை அழைத்து வந்த, அவர்களின் படைப்புக்கள் பற்றி கலந்துரையாட இருப்பதோடு, அவர்களின் எழுத்துலக அனுபவங்கள், இச் சமூகம் மீதான அவர்களின் பார்வைகள் என்ற ரீதியிலும், இலக்கியம் சார்ந்த படைப்புக்கள் தொடர்பான கலந்துரையாடல்களாகவும் நிகழ்வுகளை நடாத்துவதற்கு தமிழ் மாமன்றம் தீர்மானித்துள்ளதாகவும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

படைப்புகளை பகிர மற்றும் நுகர ஆர்வமுள்ள அனைவரும் எதிர்வரும் சனிக்கிழமை மற்றும் தொடர்ச்சியாக இடம் பெறுகின்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டு பயனடையுமாறு தமிழ்மாமன்றம் அழைக்கின்றது.








Read more...

Saturday, December 12, 2015

ஏகாதிபத்தியம், “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" மற்றும் முஸ்லீம்-விரோத விஷமப் பிரச்சாரம். Andre Damon‘

திங்களன்று, குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான பில்லியனர் டோனால்டு ட்ரம்ப், பாரிஸ் மற்றும் கலிபோர்னியாவின் சான் பெர்னார்டினோ பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து "அமெரிக்காவிற்குள் முஸ்லீம்கள் நுழைவதை மொத்தமாக முற்றிலுமாக நிறுத்துவதற்கு" அழைப்புவிடுத்தார். இது குடியரசு கட்சியின் முன்னணி பிரமுகர்களிடமிருந்து வரும் அதிகரித்தளவிலான பாசிசவாத மற்றும் வன்முறையான தொடர் முறையீடுகளில் சமீபத்தியது மட்டுமேயாகும்.

அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தின் ஏனைய அங்கத்தவர்களை விட மேலதிகமாக சென்றிருந்தாலும், ட்ரம்ப் இன் அழைப்பு, குடியரசு கட்சி செனட்டர் டெட் குரூஸ் உட்பட ஏனைய அரசியல்வாதிகளின் கருத்துக்கு இணைந்தவாறு தான் இருந்தது. சிரியாவிலிருந்து வரும் கிறிஸ்துவ அகதிகளுக்கு அல்லாமல், முஸ்லீம் அகதிகளுக்கு, தடைவிதிக்க வேண்டுமென கடந்த மாதம் டெட் குரூஸ் அழைப்புவிடுத்திருந்தார் மற்றும் லூசியானா கவர்னர் பாபி ஜின்தால் மசூதிகளைக் கண்காணிப்பில் வைக்க மாநில பொலிஸிற்கு உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தார்.

வெர்ஜினியாவின் ரோனொக் (Roanoke) ஜனநாயக கட்சி மேயர் டேவிட் போவர்ஸ், கடந்த மாதம் முழு ஒப்புதலோடு இரண்டாம் உலக போரின் போது சித்திரவதை முகாம்களில் இருந்த ஜப்பானிய அமெரிக்கர்களது நடமாட்டத்தைக் கட்டுப்படுத்திய அமெரிக்க வரலாறைக் கையெலெடுத்தார். “இப்போது ISIS மூலமாக அமெரிக்காவிற்கு வரும் பயங்கர அச்சுறுத்தல், அப்போதைய நமது எதிரிகளிடமிருந்து வந்ததைப் போல அதேயளவிற்கு நிஜமாகவும் தீவிரமாகவும் தெரிகிறது,” என்று போவர்ஸ் அறிவித்தார்.

அமெரிக்காவில் அத்தகைய பிற்போக்குத்தனமான அரசியல் முறையீடுகள் மேலெழுவது ஏனைய ஏகாதிபத்திய நாடுகளிலும் எதிரொலிக்கிறது. பிரிட்டனில், பிரதம மந்திரி டேவிட் கேமரூன், சிரியாவில் போருக்கு அனுமதியளிப்பதை எதிர்ப்பவர்களை "பயங்கரவாதத்தின் ஆதரவாளர்கள்" என்று முத்திரை குத்தினார். பிரான்சில், ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் அரசாங்கத்தால் நடைமுறையில் ஜனநாயக உரிமைகள் அழிக்கப்பட்டு, நவம்பர் 13 பாரிஸ் தாக்குதல்களை அடுத்து பீதி மற்றும் விஷமப் பிரச்சார சூழல் பெரிதாக்கப்பட்டதற்கு இடையே, மரீன் லு பென்னின் நவ-பாசிச தேசிய முன்னணி (FN) இந்த வார பிராந்திய தேர்தல்களில் பெரும்பான்மை வாக்கு விகிதங்களைப் பெற்றுள்ளது.

ஐரோப்பா எங்கிலும், சகல பிரதான சக்திகளும் சிரியாவில் அவற்றின் போர் விரிவாக்கும் திட்டங்களை நியாயப்படுத்த முயல்கையில், அகதிகள் நெருக்கடிக்கான விடையிறுப்பில் முஸ்லீம்-விரோத பேரினவாதம் திட்டமிட்டு தூண்டிவிடப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில், ட்ரம்ப் இன் கருத்துக்கள் சுய-நீதிமான்களாக கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகள் மற்றும் ஊடக பிரமுகர்களின் கோபத்தைச் சந்தித்துள்ளது, இவர்கள் அவரது கருத்துக்களால் அதிர்ச்சியடைந்திருப்பதாக கூறுகிறார்கள். யாரை இவர்கள் ஏமாற்றப் பார்க்கிறார்கள்? இந்த முட்டாள்தனமான பாசிசவாத பிதற்றல்கள், அன்றாடம் ஊடகத்தில் ஒருவர் கேட்கும் தொடர்ச்சியான விஷமப் பிரச்சாரத்தில் தான் நிறைய ஒன்றுதிரண்ட வடிவத்தில் வெளிப்படுகின்றன. ட்ரம்ப் மற்றும் CNN இன் வோல்ஃப் ப்ளிட்ஜர் போன்ற ஒருவருக்கும் இடையிலான வித்தியாசம் வெறுமனே மிகச் சிறியளவில் தான் உள்ளது. அவர் அழுகிய அரசியல் சூழலின் விளைபொருளாக உள்ளார்.

ஒபாமாவைப் பொறுத்த வரையில், அந்த ஜனாதிபதி ஞாயிறன்று அவரது தேசிய உரையில், முஸ்லீம்களை இலக்கில் வைக்க குடியரசு கட்சியினரின் அழைப்புகளுக்கு அவரையொரு விமர்சகராக காட்டிக்கொண்டார். எவ்வாறிருப்பினும் மத்திய கிழக்கில் ஓர் ஏகாதிபத்திய கொள்கையை தொடர்வதற்கு ஒபாமா நிர்வாகம் பொறுப்பாகிறது, அது ஒட்டுமொத்த நாடுகளையும் நாசமாக்கியுள்ளதுடன், அந்த நிகழ்வுபோக்கில் குறைந்தபட்சம் ஒரு மில்லியன் மக்களை, முக்கியமாக முஸ்லீம்களை, கொன்றுள்ளது.

உண்மையில் அதீத பிற்போக்குத்தனமான சக்திகள் கட்டவிழ்வது, ஏகாதிபத்தியத்தின் உள்பொதிந்த இயல்பினது ஓர் வெளிப்பாடாகும். லெனின் வலியுறுத்தியதைப் போல, ஏகாதிபத்தியம் "அனைத்து நிலைகளிலும் பிற்போக்குத்தனமாகும்.” முதலாம் உலக போரின் மத்தியில் அவர் எழுதுகையில், “ஜனநாயக-குடியரசுக்கும் மற்றும் பிற்போக்குத்தன-முடியாட்சி ஏகாதிபத்திய முதலாளித்துவத்திற்கும் இடையிலான வித்தியாசம், முற்றிலுமாக துடைத்தழிக்கப்படுகிறது, ஏனென்றால் அவை இரண்டுமே உயிர்வாழ்வை அழுகிப் போக செய்கின்றன,” என்றார். ஒட்டுண்ணித்தனம், நிதியியல் மோசடித்தனம், போர் மற்றும் கொள்ளையடிப்பதை அடிப்படையாக கொண்ட துர்நாற்றம் வீசும் சமகாலத்திய முதலாளித்துவ சமூகம், மீண்டுமொருமுறை இனவாத வீராவேஷ வடிவில் அரசியல் சாக்கடைகளை மென்று துப்பிக் கொண்டிருக்கிறது.

ஏகாதிபத்திய போர் எப்போதும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களையும் மற்றும் வெளிநாட்டவர் மீதான விரோதத்தை முடுக்கிவிடுவதையும் உள்ளடக்கியது என்ற உண்மையை 20 ஆம் நூற்றாண்டின் ஒட்டுமொத்த அனுபவமும் எடுத்துக்காட்டுகின்றன. உலகை ஜனநாயகத்திற்கான பாதுகாப்பான இடமாக ஆக்குவதற்காக என்ற பெயரில் உட்ரோவ் வில்சனால் கையிலெடுக்கப்பட்டு, முதலாம் உலக போரில் அமெரிக்கா சம்பந்தப்பட்டமை, Eugene V. Debs உட்பட சோசலிச தலைவர்களைச் சிறையில் அடைப்பதற்கும் மற்றும் தொழிலாளர்களை தான்தோன்றித்தனமாக கையாள்வதற்கும் உரிய நிலைமைகளைக் கொண்டு வந்தது, அதைத் தொடர்ந்து சோசலிச-விரோத பால்மர் (Palmer) வேட்டைகள் நடந்தன.

இரண்டாம் உலக போரின் போதும் மற்றும் அதற்கு இட்டுச் சென்ற காலத்திலும், பாசிசத்தின் மேலெழுச்சி மற்றும் நாஜி கட்சியின் "இறுதி தீர்வு" உட்பட சொல்லொணா பயங்கரங்கள் நிகழ்ந்தன. நாஜி கட்சியின் "இறுதி தீர்வு", 11 மில்லியன் மக்களின் படுகொலைக்கும் மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய யூத பிரிவுகளை நிர்மூலமாக்குவதற்கும் இட்டுச் சென்றது. அமெரிக்காவில், பிராங்ளின் ரூஸ்வெல்ட் நிர்வாகம் ஜப்பானிய அமெரிக்கர்களுக்கான தடுப்புக்காவல் முகாம்களையும் மற்றும் ஸ்மித் சட்டத்தின் கீழ் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் முன்னணி அங்கத்தவர்களைச் சிறையில் அடைப்பதையும் மேற்பார்வையிட்டது.

கொரிய போரின் காலகட்டம், தொழிற்கட்சிகள் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் இருந்த சோசலிஸ்டுகள் மீது மெக்கார்த்திய (McCarthyite) வேட்டையாடல்கள் மேலோங்கிய காலமாக இருந்தது. அல்ஜீரியாவில் பிரெஞ்சு காலனித்துவ போர் அந்நாட்டை உள்நாட்டு போருக்குள் கொண்டு வந்தது, அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களை படுகொலை செய்தமை மற்றும் அவசரகால நெருக்கடியைத் திணித்தமையும் அதில் உள்ளடங்கும். வியட்நாம் போரின்போது, அமெரிக்க உளவுத்துறை FBI அமெரிக்காவில் பாரியளவில் அரசியல் அமைப்புகளில் ஊடுருவியதுடன், பிளாக் பான்தெர்ஸ் இன் (Black Panthers) முன்னணி அங்கத்தவர்கள் உட்பட எதிர்கட்சி பிரமுகர்களின் படுகொலைகளை மேற்பார்வையிட்டது.

ஒவ்வொரு ஏகாதிபத்திய போரின் போதும், ஆளும் வர்க்கம் மிகவும் பிற்போக்குத்தனமான மற்றும் இனவாத உணர்வுகளை விதைக்க முயன்றுள்ளது. குறைந்தபட்சம் ஒரு மில்லியன் முஸ்லீம்கள் கொல்லப்படுவதற்கு இட்டுச் சென்ற "பயங்கரவாதத்திற்கு எதிரான போரும்", வித்தியாசமின்றி அவ்வாறு தான் உள்ளது, இதில் ஊடகங்களால் விட்டுக்கொடுப்பின்றி முன்னிலைப்படுத்தப்படும் ஓர் இனவாத விஷமப் பிரச்சார சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

போருக்கான உந்துதல் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலின் ஆழ்ந்த சமூக வேர்கள், புஷ் நிர்வாகம் மாறியமை அப்போக்கில் குறிப்பிடத்தக்க எந்த மாற்றத்திற்கும் இட்டுச் செல்லவில்லை என்ற உண்மையால் எடுத்துக்காட்டப்படுகிறது. உண்மையில் ஜனநாயக உரிமைகள் ஒபாமாவின் கீழ் தொடர்ந்து வழக்கிலிருந்து அழிக்கப்பட்டுள்ளன, இவரின் குறிப்பிட்ட பங்களிப்பு என்னவென்றால் அரசு-ஆதரவுடனான படுகொலையை அமெரிக்க வெளியுறவு கொள்கையின் ஒரு மத்திய மூடிமறைப்பாக அமைப்புரீதியில் ஆக்கியமையாகும்.

சமகாலத்திய தாராளவாதத்தின், அத்துடன் பல்வேறு போலி-இடது அமைப்புகளின் அரசியல் திராணியற்றத்தன்மை, அவை, போர் மற்றும் இராணுவவாதத்தை முன்னிலைப்படுத்தி ஆழமாக அவற்றிற்கு உடந்தையாய் இருக்கின்றன என்ற உண்மையின் விளைவாக உள்ளது.

தொடர்ச்சியாக சரமாரியான ஊடக பிரச்சாரத்திற்கு இடையிலும், ட்ரம்ப் மற்றும் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தால் ஆதரிக்கப்படும் கருத்துருக்களுக்கு அங்கே பரந்த அல்லது ஆழ்ந்து-வேரூன்றிய மக்கள் ஆதரவு கிடையாது. ஆனால் ஏகாதிபத்திய-எதிர்ப்பு மற்றும் ஜனநாயக உணர்வுகளின் ஒழுங்கமைந்த வெளிப்பாடானது, போர் மற்றும் அரசியல் பிற்போக்குத்தனத்தின் மூல ஆதாரமான முதலாளித்துவ அமைப்புமுறையை நோக்கி திரும்பிய ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் ஒன்றுதிரட்டலைச் சார்ந்துள்ளது.

Read more...

தீபத்தை நம்பி சுமந்திரன் அரசியல் நடத்துகிறாரா? அவர் எமது மக்களை நம்பியே அரசியலில் நிற்கிறார்! நக்கீரன்

தீபம் வார ஏட்டின் கனடா பதிப்பு கடந்த டிசெம்பர் 01 இல் ரொறன்ரோவில் வைத்து வெளியிடப்பட்டது. எனக்கு அழைப்பிதழ் வந்தும் அதில் கலந்து கொள்ளமுடியவில்லை. தீபம் வார ஏட்டின் பதிப்புகள் வேறு நாடுகளிலும் வெளிவருகின்றன. நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலின் போது வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக வெளிவரத் தொடங்கின. தீபம் என்ற தொலைக்காட்சியும் இருக்கிறது. நோர்வேயில் இருந்து இயங்கும் இந்த நிறுவனம் ஒரு பலமான ஊடகமாகும்.

தீபம் வார ஏட்டின் கனடா பதிப்பு வெளியிட்டு வைக்கப்பட்டது சிலரது அடிவயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. தூக்கத்தை கெடுத்துள்ளது. குறிப்பாக இங்கு வெளியாகும் கனடா உதயன் செய்திப் பிரிவு உதயன் முகநூலில் தீபம் வார ஏட்டைப்பற்றி ஒரு கற்பனை கலந்த செய்தியை வெளியிட்டு தனது வயிற்றெரிச்சலைக் கொட்டியுள்ளது.

மக்களாட்சி முறைமை உள்ள நாட்டில் ஊடகம் என்பது அதன் நான்கு தூண்களில் நான்காவது தூணாகக் கருதப்படுகிறது. ஊடகங்கள் ஆள்வோருக்கும் மக்களுக்கும் இடையில் ஒரு பாலமாக இருந்து கொண்டு அரசாங்கங்களை தட்டிக் கொடுக்க வேண்டிய இடங்களில் தட்டிக் கொடுத்தும் தட்டிக் கேட்க வேண்டிய சமயங்களில் தட்டிக் கேட்டும் வருகின்றன. கனடாவில் வெளிவரும் தேசியநீரோட்ட ஊடகங்கள் இந்தப் பணியை கன கச்சிதமாகச் செய்து வருகின்றன.

1974 ஆம் ஆண்டு வியட்நாம் போரின்போது பாஃன் தி கிம் என்ற வியட்நாம் சிறுமி ஒருத்தி உடலில் தீக்காயங்களோடு அம்மணமாக ஓடி வரும் காட்சி உலகத்தையே உறைய வைத்தது. அந்தப் புகைப்படம் போருக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டப் பேருதவி செய்தது.

இதே போல் 1989 ஆம் ஆண்டு யூன் 4 அன்று சீனத் தலைநகரில் உள்ள தினமன் சதுக்கத்தில் திரண்ட சனநாயகத்துக்கான இயக்க உறுப்பினர்களை அரசாங்கம் இராணுவத்தைக் கொண்டு அடக்கியது. முதல்நாள் இராணுவம் சுட்டதில் பலர் இறந்தனர். ஆனால் அடுத்த நாள் அதே சதுக்கத்தில் வரிசையாக வந்து கொண்டிருந்த தாங்கிகளின் அணிவகுப்பை ஒரு மனிதர் எதிர்நின்று தன்கையைக் காட்டித் தடுக்க முயற்சித்தார். அந்த மனிதரின் பெயர் தெரியவில்லை ஆனால் வெள்ளைச் சட்டை கருப்புக் கால்சட்டை அணிந்த அவரின் புகைப்படம் உலகம் முழுதும் சர்வாதிகாரத்துக்கு எதிரான சனநாயகத்தின் குறியீடாகப் பார்க்கப்பட்டது.

எனவே ஊடகங்கள் குதிரைக்குக் கடிவாளம் போல அரசுக்கு கடிவாளம் போடுகின்றன. ஊடகங்கள் வாயிலாக மக்கள் நல்லது கெட்டதை அறிந்து கொள்கிறார்கள். ஊடகங்கள் மக்களின் மனங்களை வளப்படுத்தி மக்களாட்சி முறைமை நலமாக இருப்பதற்கு உதவுகின்றன.

எனவே சனநாயக விழுமியங்களில் நம்பிக்கை உடையவர்கள் தீபம் ஏடு மட்டுமல்ல வேறு எந்த ஏடு வெளிவந்தாலும் அதனை வரவேற்பார்கள். ஆனால் உதயன் ஆசிரியர் மட்டும் தீபம் வார ஏடு வெளிவருதைக் கண்டு வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிறார். சுமந்திரன் மீது வசைபாடுகிறார். சேறு அள்ளி அப்புகிறார்.

"சுமந்திரனின் சூழ்ச்சி வலையில் சிக்கி கனடிய தமிழர்கள் அநியாயத்திற்கு துணைபோகாமல் இருக்க வேண்டும்" என்ற தலைப்பில் ஒரு செய்தியை முகநூலில் பதிவு செய்து இருக்கிறார். உதயன் வார ஏட்டிலும் அது வரக் கூடும். என்ன சூழ்ச்சி வலை? என்ன அநியாயம்?

"சுமந்திரன் என்ற சூழ்ச்சிமிகு அரசியல்வாதி இடைக்காலத்தில் அரசியலுக்கு வந்தாலும் தனது சூழ்ச்சி மிகு அரசியல் நகர்வுகளால் தாயகத்திலும் புலம்பெயர்ந்த மண்ணிலும் நாசகார அரசியல் நகர்வுகளை தொடர்கின்றார்" என லோகேந்திரலிங்கம் அபாயச் சங்கு ஊதுகிறார்! சிவப்புக்கொடி காட்டுகிறார்! தன்னை கனடிய தமிழர்களை தடுத்தாட்கொள்பவனாக (Preserver), அவர்களின் புரவலனாக (Protector) காட்டிக் கொள்ள ஆசைப்படுகிறார்.

லோகேந்திரலிங்கம் இன்னொரு இமாலயக் கண்டு பிடிப்பையும் கண்டுபிடித்துள்ளார். "முதல்வர் விக்கினேஸ்வன் அவர்களை பதவியிலிருந்து துாக்கி எறிந்து விட்டு இம்மானுவல் பாதிரியாரை அந்தப் பதவிக்கு கொண்டுவருவதே இந்த சூத்திரதாரி சுமந்திரனின் நோக்கமாகும் என்பது நன்கு புலனாகியுள்ளது" என்கிறார். எப்படி? "பாதிரியார் இம்மானுவல் அடிகளார் அங்கம் வகிக்கும் உலகத் தமிழர் பேரவைக்கு இலங்கையில் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியமை இதற்கு பின்னால் சூழ்ச்சிமிகு சுமந்திரன் கடுமையான உழைத்திருந்தார் என்பதும் நன்கு புலனாகியுள்ளது" என எழுதுகிறார். இல்லை தலையில் கைவைத்து குய்யோ முறையோ என்று புலம்புகிறார்.

இம்மானுவல் அடிகளாரை வட மாகாணத்தின் முதலமைச்சராக ஆக்க வேண்டும் என்றால் அவர் (1) இலங்கை குடியுரிமை பெற வேண்டும். (2) சரி இரடட்டைக் குடியுரிமை கிடைக்கும் என்று வைத்துக் கொண்டாலும் 2018 ஆம் ஆண்டுவரை காத்திருக்க வேண்டும். (3) கத்தோலிக்க பாதிரிமார்கள் அரசியலில் ஈடுபட முடியாது. (4) 1934 இல் பிறந்த அவருக்கு 2018 இல் அகவை 84 ஆகிவிடும்.

இதில் வேடிக்கை என்னவென்றால் விக்னேஸ்வரன் கொழும்புத் தமிழன், வாசுதேவா நாணயக்காராவின் சம்பந்தி என்று அர்ச்சித்தவர்கள்தான் அவரை விழுந்து விழுந்து இப்போது ஆதரிக்கிறார்கள். ஆலவட்டம் வீசுகிறார்கள். குடை பிடிக்கிறார்கள். பல்லக்குத் தூக்குகிறார்கள்.

சுமந்திரன் முதல்வர் விக்கினேஸ்வன் அவர்களை பதவியிலிருந்து துாக்கி எறிந்து விட்டு இம்மானுவல் பாதிரியாரை அந்தப் பதவிக்கு கொண்டுவருவதே இந்த சூத்திரதாரி சுமந்திரனின் நோக்கமாகும் என லோகேந்திரலிங்கம் எழுதுவது எல்லை மீறிய கற்பனை ஆகும். இந்தப் புளுகு கந்தபுராணத்தின் கடைசி ஒற்றையிலும் இல்லை.

உண்மை என்னவென்றால் லோகேந்திரலிங்கம் போன்றோர் சுமந்திரன் மீது சேறு அள்ளிப் பூசுவதற்குக் காரணம் அவரது சட்ட அறிவு, வாதத்திறமை, மும்மொழிப் புலமை போன்றவை பற்றிய அச்சமாகும். அவரது ஆளுமையைப் பார்த்து அழுக்காறு கொள்கிறார்கள்.

சென்ற தேர்தலில் பலர் சுமந்திரனை தோற்கடிக்க அசுரப் பிரயத்தனம் செய்தார்கள். அவரைக் குறிவைத்துத் தாக்கினார்கள். அவரைத் தோற்கடித்தால் தமிழரசுக் கட்சி கலகலத்துப் போகும் என மனப்பால் குடித்தார்கள்.

கனடாவில் மாற்றத்துக்கான குரல் என்ற ஒரு அமைப்பு கோடிக் கணக்கில் பணம் சேர்த்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அனுப்பி வைத்தது. இலவச தொலைபேசி அழைப்பு மட்டையை ஆயிரக் கணக்கில் வாங்கிக் கொடுத்தார்கள். தாயகத்தில் உள்ள அம்மா, அப்பா, மச்சான், மாமி, மாமா, பெரியம்மா, பெரியப்பா, சின்னம்மா சித்தப்பா என எல்லோரையும் கூப்பிட்டு சைக்கிளுக்குப் புள்ளடி போடுமாறு கேட்டார்கள். முடிவு? சுமந்திரன் 58,043 விருப்பு வாக்குகளைப் பெற்று யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் மூன்றாவது இடத்துக்கு வந்து வெற்றிபெற்றார். எமது மக்கள் அதிபுத்திசாலிகள். பணத்தை ததேமமு இடம் வாங்கிக் கொண்டு ததேகூ வாக்களித்தார்கள். ததேமமு 7 இல் 6 மாவட்டங்களில் படு தோல்வி. 8 ஆவது மாவட்டத்தில் 6 வாக்குகளால் கட்டுக்காசைக் காப்பாற்றியது.

மேலும் "இது இவ்வாறிருக்க, சூழ்ச்சிமிகு சுமந்திரனின் சதிகள் மிக்க அரசியல் மற்றும் பொருளாதார நகர்வுகள் தற்போது கனடாவிற்கும் நகர்ந்துள்ளது. இதில் ஒரு அம்சமாகவே சில நாட்களுக்கு முன்னர் இங்கு ஆரம்பிக்கப்பட்ட �தீபம்� வாரச் செய்திப் பத்திரிகை. இந்த தீபம் செய்திப்பத்திரிகை யாழ்ப்பாணத்தில் இலவசமாக ஆரம்பிக்க்பபட்டதே முதல்வர் விக்னேஸ்வரனுக்கு எதிரானதும் சுமந்திரனுக்கு ஆதரவானதுமான இயக்கத்தை அறிமுகம் செய்வதற்காகவே என்பது அரசியல் அவதானம் கொண்டவர்களுக்கு நன்கு புரியும்.

கனடாவில் முதல்வர் விக்னேஸ்வரனு்க்கு எதிரானதும் சூழ்ச்சிமிகு சுமந்திரனுக்கு ஆதரவானதுமான ஒரு அரசியல் பலத்தை உருவாக்கவே இந்த �தீபம்� இங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றே நாம் நம்புகின்றோம்" என எழுதுகிறார்.

தீபம் சுமந்திரனை ஆதரிப்பது என்ன பஞ்சமா பாதகமா? தீபம் சுமந்திரனை ஆதரித்தால் கனடா உதயன் விக்னேஸ்வரனை ஆதரித்து எழுதுவதுதானே? யார் வேண்டாம் என்றார்கள்?

உண்மையில் சுமந்திரனை "சூத்திரதாரி" "சூழ்ச்சிக்காரன்" "நாசகாரன்" "சதிகாரன்" "அநியாயக்காரன்" என்று அர்ச்சிப்பதன் மூலம் சுமந்திரன் அரசியலில் ஒரு சாணக்கியன், மார்க்கியவல்லி என அவருக்கு மறைமுகமான புகழாரம் சூட்டுகிறார் என்பது லோகேந்திரலிங்கத்துக்கு விளங்கவில்லை.

யாழ்ப்பாணத்தில் முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு எதிராகவும் அவரைப்பற்றிய தவறான செய்திகளைப் பரப்பும் செய்தி இதழாக தீபம் கொண்டுவரப்பட்டது உண்மையாம். அந்தத் தவறான செய்திகள் எவையெவை என்று பட்டியல் இட முடியுமா? தீபம் ஆதரித்த ஒரே காரணத்துக்காக ததேகூ தேர்தலில் வெற்றிவாகை சூடியது என்பது பிழையான வாதம். தவறான கணிப்பு.

2010 ஆம் ஆண்டு தொடக்கம் - தீபம் வார ஏடு இல்லாத காலத்தில் - ததேகூ ப்பு சந்தித்த ஒவ்வொரு தேர்தலிலும் தனது வாக்குப் பலத்தையும் செல்வாக்கையும் உயர்த்திக்கொண்டே வந்திருக்கிறது.

2010 ஆம் ஆண்டு நடந்த நடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ததேகூ பெற்ற வாக்கு விழுக்காடு 43.89. வன்னி தேர்தல் மாவட்டத்தில் பெற்ற வாக்கு விழுக்காடு 38.96.

2013 இல் நடந்த வட மாகாண சபைத் தேர்தலில் ததேகூ பெற்ற வாக்கு விழுக்காடு 78.48.

2015 இல் ஓகஸ்ட் மாதத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ததேகூ பெற்ற வாக்கு விழுக்காடு 75.82.

இதில் இருந்து என்ன தெரிகிறது? தீபம் ததேகூ ஆதரிக்கிறதா இல்லையா என்பதல்ல கேள்வி. தமிழ்மக்கள் யாரை நாடாளுமன்றம் அனுப்ப வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள்! இன்னும் ஒரு 25 ஆண்டுகளுக்கு வீட்டுக்கு நேரேதான் புள்ளடி போடுவார்கள்!

விக்னேஸ்வரன் மழைக்குத் தோன்றி மறையும் வானவில். இதுதான் அவர் முதலமைச்சராக இருப்பதன் தொடக்கமும் முடிவும்.

அரசியலானது தன்னை நுனிப்புல் மேயும் ஆடாக மாற்றிவிட்டதாகவும் எதையும் ஆர அமரச் சிந்தித்து ஆராய்ந்து அறிவை மேம்படுத்தக் கூடிய அவகாசத்தை தன்னிடமிருந்து பறித்தெடுத்து விட்டதாகவும் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒப்புதல் வாக்கு மூலம் அளிக்கிறார். அவரை அந்தப் பதவியில் ததேகூ அமர்த்தியதின் நோக்கம் போரினால் அழிந்து போன மக்களின் வாழ்வாதாரங்களை மீள் கட்டியெழுப்பி அவர்களின் அடிப்படைத் தேவைகளான உறைவிடம், உணவு, குடிதண்ணீர், மருத்துவம், கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றை பெற்றுக் கொடுப்பதே. ஆனால் அவர் அவற்றை விட்டு தேசிய அரசியலிலும் உலக அரசியலிலும் மூக்கை நுழைத்து வருகிறார். இதனால் போரினால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய தமிழ் மக்களுக்கு இரண்டகம் செய்கிறார்.

கனடா ஒரு மக்களாட்சி முறையைக் கொண்ட நாடு. ஊடக சுதந்திரம் இருக்கிற நாடு. இந்த நாட்டில் தொழில்செய்ய, ஒரு வாணிகத்தைத் தொடங்க ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது.

நிலாவைக் கண்டு திருடர்கள்தான் அச்சப்படுவார்கள். தீபம் ஒரு போட்டி வார ஏடு நினைப்பவர்கள்தான் அதன் வெளியீட்டைக் கண்டு அச்சம் கொள்ள வேண்டியதில்லை. முக்கியமாக கடந்த இருபது ஆண்டுகளாக வெற்றிகரமாக வெளிவரும் உதயன் வார ஏடு கிஞ்சித்தும் அஞ்சத் தேவையில்லை. ஏற்கனவே ரொறன்ரோவில் பத்து - பதினைந்து வார, திங்கள் ஏடுகள் வெளிவருகின்றன. தீபம் பத்தோடு பதினொன்று.

ரொறன்ரோவில் வெளிவரும் தீபத்தை நம்பி சுமந்திரன் அரசியல் நடத்துகிறார் என்பது பிழையான கணிப்பு. அவர் தீபம் உட்பட யாரை நம்பியும் அரசியல் செய்யவில்லை. அப்படி நினைப்பது சிறுபிள்ளைத்தனமானது. அவர் எமது மக்களை நம்பியே அரசியல் களத்தில் நிற்கிறார்!

இன்று எமக்குத் ஒரு சுமந்திரன் அல்ல! பத்து சுமந்திரன்கள் தேவை!

Read more...

Wednesday, December 9, 2015

பாலுக்கு பூனை காவலா? படங்களுடன் பீல்டில் குதித்துள்ளார் பீல்ட்மார்சல் சரத் பொன்சேகா.

இலங்கையில் இன்று பரவலாக பேசப்படுகின்றவிடயம் அவன்கார்ட் நிறுவனம் தொடர்பான விசாரணைகள். அவன்காட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி நிஷங்க சேனாதிபதி. இவர் இலங்கை இராணுவத்தின் முன்னாள் மேஜராவார். சேவையிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்ட அவர் பாதுகாப்பு சேவை நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து படிப்படியாக முன்னேறி இன்று உலகிலுள்ள கடல்பாதுகாப்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக விளங்குகின்றது.

இந்த அபார வளர்ச்சிக்கு முன்னாள் அரசாங்கத்தின் உதவி கிடைத்திருக்கின்றது என்றும் கடற்படையினருக்கு கிடைக்ககூடிய வருமானத்தை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கி பில்லியன்கணக்கான வருமானத்தை ராஜபச்சக்கள் பகிர்ந்து கொண்டனர் என்றும் குற்றச்சாட்டப்பட்டுள்ளதுடன் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிறுவன விடயத்தில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற மோசடிகள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபச்ச உட்பட நூற்றுக்கணக்கான அரசியல் பிரபலங்கள் மற்றும் முப்படைகளையும் சேர்ந்த அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றனர்.

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபச்ச மற்றும் காவல்துறைக்கு பொறுப்பான அமைச்சராக இருந்த திலக் மாரப்பென ஆகியோர் இந்நிறுவனத்திற்கு சார்பாக பாராளுமன்றில் பேசியிருந்தனர். இவர்களின் பேச்சு பலதரப்பின் விமர்சனத்திற்கு உள்ளானதை தொடர்ந்து திலக்மாரப்பென பதவியையும் ராஜினாம செய்து கொண்டார், ஆனால் நீதி அமைச்சரும் பதவி விலகவேண்டும் என பலர் அழுத்தம் கொடுத்தபோதும் அவர் அதை செய்யவில்லை எனபதுடன் தனக்கும் நிஷங்க சேனாதிபதிக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நிஷங்க சேனாதிபதிக்கும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்குமிடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிவிக்கும் பீல்ட்மாசல் சரத் பொன்சேகா, இவ்விருவரும் குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்றிருந்ததற்கான புகைப்படங்களை ஊடகவியாலாளர் மாநாடொன்றில் வெளியிட்டுள்ளார்.

படங்களை வெளியிட்டு அங்கு பேசிய பீல்டமாசல் பொன்சேகா, நிசங்க சேனாதிபதியுடன் நீதியமைச்சர் ராஜபக்சவிற்குள்ள தொடர்பு யாதென்று மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டுமென்றும் அவ்வாறு தெரியப்படுத்தாவிடத்து மேலும் பல அருவருக்கத்தக்க ஆதாரங்களை வெளியிடவேண்டிவருமென்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டிற்கு பாரிய நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ள குறிப்பிட்ட நபருக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளப்படுகின்றபோது அவரின் நெருங்கிய நண்பராக நீதியமைச்சர் இருந்தால் நீதிமன்று எவ்வாறு சுயாதீனமாக செயற்பட முடியும் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார் சரத் பொன்சேகா.

மேலும் விஜயதாச ராஜபச்ச அதிசுகபோக வாழ்கையை மேற்கொண்டு வருவதாகவும் அப்பணம் கிடைத்த வழியை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டுமென்றும் வேண்டுதல் விடுத்துள்ளார்.


Read more...

Sunday, December 6, 2015

சாவகர்.

இந்தச் சொல்லைப் பலர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். இவர்கள் இலங்கையின் வடபகுதியை ஆண்டவர்கள் என்று கருதப்படுகிறது இவர்கள் அடிப்படிடையில் யாவா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்பட்டாலும் அதற்கான சரியான காரணங்களும் கருத்துக்களும் இன்னமும் முன்வைக்கப்படவில்லை. யுhவாவைச் சேர்ந்தவர்கள் யாகவர் என்பது தமிழில் சாவகர் என்று அழைக்கப்பட்டிருக்கலாம்.

கி.பி 1247ல் சந்திரபானு என்ற சாவகன் தெற்கு நோக்கி சிங்கள அரசின் மேல் படை எடுத்ததாகவும் அப்போ அங்கே ஆண்டு கொண்டிருந்தவன் இரண்டாம் பராக்கிரமபாகு என்றும் கருதப்படுகிறது. இந்த சாவகனான சந்திரபானு பராக்கிரமபாகுவினால் விரட்டியடிக்கப்பட்ட போது அவன் வடக்கே வந்து ஆட்சியைக் கைப்பற்றியிருக்கலாம் என்று ஒரு சிங்கள ஆய்வாளர் கூறியிருந்தாலும் அது வெறும் ஊகமாகவே உள்ளது. அதற்கான ஆதாரத்தையோ தரவுகளையோ அவர் முன்வைக்கவில்லை.

வடக்கை- யாழ்பாணத்தை ஆண்ட ஆரியச்சக்கரவர்த்திகளில் ஒருவனான காலிங்க ஆரியச்சக்கரவர்த்திக்குப் பின்னர் அவன் மகன் குலோத்துங்கசிங்கை ஆரியன் அரியாசனம் ஏறியாலும் இக்காலகட்டத்தில் ஒரு சாகவன் ஆண்டதாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன. இவனுடன் வந்தவர்கள் குடியேறிய பகுதியே சாவகச்சேரி, சாவகன்சீமா, சாவகன்கோட்டை என்று இன்றும் அழைக்கப்படுகிறது.

இந்த சந்திரபானு என்ற சாகவன் பதவியா குருந்தனூர் போன்ற சிங்கள மாவட்டங்களிலிருந்த சிங்களவர்களைத் தன்பக்கம் திரட்டி இரண்டாவது தடவையாக பராக்கிரமபாகுவிற்கு எதிராகப் படை நடத்த முயன்றான் என்பதை சூழவம்சம் கூறுகிறது. இவன் சிங்கள இராட்சியத்திற்கு மேல் படை எடுப்பதற்கு முன்னர் மன்னர் சுந்தரபாண்டியன் சாவகன் சந்திரபானுவை வென்று திறை பெற்றுப்போனான். இது 1258ல் நடந்ததாகக் கருதப்படுகிறது.

சாவகமன்னன் பாண்டியனுக்கு சரியாகத் திறை செலுத்தாது இரண்டாம் பராக்கிரமபாகுபின் மேல் இரண்டாம் தடவையாகப் படையெடுத்துச் சென்றான். பராக்கிரமபாகுவிற்கு உதவுமாறும் சாகவனைத் தண்டிப்பதற்காகவும் பாண்டிய மன்னனான ஜடாவர்மன் வீரபாண்டியன் 1262ல் தன்படையை அனுப்பி சாவகமன்னனின் சிரம்கொய்தான். தன்வெற்றியைப் பொறிக்கும் முகமாக இரட்டை மீன் இலட்சணையை பாண்டியன் திருக்கோணமலையில் பொறித்துச் சொன்றான் என்று வரலாறுகள் கூறுகின்றன. இந்த இலட்சனையை திருகோணமலை கோட்டை வாயிலில் இன்றும் காணலாம்.

இதில் இருந்து நான் சிலவிடயங்களை ஊகித்துக் கொள்ளலாம். சிங்கையாரியர்கள் அடிப்படையில் யாழ்பாணத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர். இவர்கள் முழுமையான அரசவம்சத்தைச் சேர்ந்தவர்களாக எங்கும் கருதப்படவில்லை. இவர்கள் சத்திரியர்களுடன் இணைந்த பிராமணர்களாகவும். வெறும் சத்திரயர்களாகவுமே காணமுடிகிறது. சிங்கை ஆயரியர்கள் என்று தம்மை அழைத்துக் கொண்டாலும் அவர்களுக்கும் ஆரியர்களுக்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. பரராசசேகரன் செகராசசேகரன் சங்கிலியன் போன்றோர் சிங்கையாரிய வம்சாவளி என்றே கருதப்படுகிறது உ.ம் யாழ்பாண வைபவமாலை.

பராக்கிரமபாகு விஜயபாகு கஜபாகு சிங்கபாகு போன்ற அரசர்கள் சிங்களவர்களாகக் கருதப்பட்டாலும் அவர்களின் அனைத்து தொடர்புகளும் சிகிரியா வரலாறும் பாண்டியர் சேரர்களுடன் தொடர்புள்ளதாகவே உள்ளது. இந்த "பாகு" என்றபெயர் அடிப்படையில் இலங்கைக்கு உரியது அல்ல. இது தொண்டைநாடு கலிங்கத்தைச் சேர்ந்தது.

இந்தச் சந்திரபானு என்பவன் தாயிலாந்து எனும் தாமிரலிங்கநாட்டை ஆட்சி செய்தவனாகக் கருதப்படுகிறான். மகாவம்சத்தின் இன்னொரு குறிப்பின்படி இவன் தாமிரலிங்க நாட்டை ஆண்ட தமிழ்கொள்ளையன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பெயரில் அவன் தமிழனாகவே காணமுடிகிறது. இவன் கட்டிய கோவில் இன்றும் தாயிலாந்தில் உள்ளது.

இந்தச் சாவகர்கள் இலங்கையில் பலகாலம் ஆட்சி கொள்ளவில்லை எனினும் பயணிகளாக வந்து நாட்டின் ஒரு சிறுபகுதியையாவது கைப்பற்றி ஆண்டார்கள் என்பது சாமர்த்தியமே. யாவகர் இருந்த சேரியே சாவகச்சேரியாகும்.


நட்புடன் நோர்வே நக்கீரா

06.12.2015.

Read more...

அரசியல் கபடதாரிகளின் இறுதி அஸ்திரம்தான் „தேசப்பற்று" என்ற ஸ்ரீ ஜவகர்லால் நேரு வின் வாக்கியத்தை நினைவுகூர்ந்தார் மைத்திரி.

பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கடந்த நான்காம் திகதி நாடாளுமன்றத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இனவாதத்தை தூண்டுகின்ற இனவாதத்தையே அரசியல் முலதனமாக கொண்டுள்ள மூவினத்தையும் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கு ஸ்ரீ ஜவகர்லால் நேருவால் பாரளுமன்றில் பேசப்பட்டதாக தனது ஞாபகத்திலிருந்த மேற்படி வசனத்தை மிகவும் கடும் தொனியில் எடுத்துரைத்தார்

அங்கு பேசிய அவர் :

ஆயுதம் ஏந்திப் போராடிய புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 12 ஆயிரம் பேர் மஹிந்த ஆட்சியின்போது புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்டனர்.
கிழக்கு மாகாண தளபதியாக இருந்த கருணாவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உபதலைவர் பதவி வழங்கப்பட்டது. இவற்றை நான் தவறு என்று கூறவில்லை. முன்னாள் அரசின் இந்த அணுகுமுறை சரி என்றால், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளை விடுதலைசெய்வதற்கு எமது அரசு எடுத்துள்ள முடிவு எந்தவகையில் தவறாகும்?'' என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பினார்.

இந்த விடயத்தை எவரும் இனவாத கோணத்தில் பார்க்கக்கூடாது என்றும், அரசியல் கபடதாரிகளின் இறுதி அஸ்திரம்தான் 'தேசப்பற்று' என்றும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், வடக்கு இளைஞர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்துவதை தடுப்பதற்குரிய வழிவகைகளை செய்யவேண்டிய கடப்பாடு அரசுக்கு இருக்கிறது. நல்லிணக்கத்தை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதே இதற்குரிய சிறந்த வழியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய அவர் :

தேசிய பாதுகாப்பு, தேசிய நல்லிணக்கம் தொடர்பில் உரையாற்றுவதற்கு எதிர்பார்க்கின்றேன். போருக்கு அரசியல் தலைமை வழங்கிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். சகல இராணுவத்தினருக்கும் பாராட்டுகளைக் கூறிக்கொள்கின்றேன்.

போர் முடிவடைந்து ஆறு வருடங்களாகின்றன. 2009 மே 19ஆம் திகதிமுதல் 2015 ஜனவரி 8ஆம் திகதிவரை போருக்குப் பின்னர் முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. பௌதீக வாரங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டன. வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் போன்ற அபிவிருத்தித் திட்டங்கள் செய்யப்பட்டன. ஆனால், அபிவிருத்தியை மட்டும் வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்களின் உள்ளங்களை முன்னாள் அரசு புரிந்துகொள்ளவில்லை. மக்களிடையே சந்தேகம் நீக்கப்படவில்லை.

2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதிக்குப் பின்னர் இலங்கைக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பம் உரிய வகையில் பயன்படுத்தப்படவில்லை. நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு செயற்றிட்டம் வகுக்கப்படவில்லை.

ஜனாதிபதித் தேர்தலின்போது வடக்கு, கிழக்கு மக்கள் பெருவாரியாக எனக்கு வாக்களித்தனர். மட்டக்களப்பில் 81 சதவீதமும், வடக்கில் சகல மாவட்டங்களிலும் சராசரியாக 71 சதவீதம் வாக்குகளும் அளிக்கப்பட்டன. நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்காகவே எனக்கு ஆணை வழங்கப்பட்டது. இதன்படி நல்லிணக்க அமைச்சை நான் வைத்துள்ளேன். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தலைமையில் நல்லிணக்கம் தொடர்பான ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்காக சகல தரப்புடனும் பேச்சு நடத்தவேண்டியுள்ளது. மஹிந்த அரசு நியமித்த நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில், சகல தரப்புடனும் கலந்துரையாடப்படவேண்டும் என பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களுக்குப் பிணை வழங்கியது பற்றியும், புலம்பெயர் தமிழ் அமைப்புகள் எட்டு மீதான தடை நீக்கப்பட்டமை குறித்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்; புலிகள் அமைப்பு மீள தலைதூக்க இடமளிக்கப்படுகின்றது என்றெல்லாம் குறுகிற மனப்பான்மையுடன் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன் இனவாதம் பேசப்படுகின்றது.

இவ்வேளையில் இந்தியப் பிரதமர் நேரு கூறிய விடயமொன்று நினைவுக்கு வருகிறது. அதாவது, அரசியல் கபடதாரிகளின் இறுதி தஞ்சம தேசப்பற்றாகும் என்று அவர் கூறியிருந்தார். எனவே, இனவாத அரசியல் நடத்துபவர்களின் இன்றைய நிலை இதுதான். எங்களுக்கும் மக்களின் இரத்தத்தைக் குடிக்கும் வகையிலும், இனவாத கோணத்திலும் பேசத் தெரியும். ஆனால், அது நாட்டுக்கும், எமது எதிர்கால சந்ததியினருக்கும் நல்ல பெறுபேறுகளை வழங்கா. பாதக விளைவுகளையே ஏற்படுத்தும். இதைப் புரிந்து செயற்படவேண்டும்.

அதேவேளை, மீண்டும் ஒரு யுத்தம் ஏற்பட இடமளிக்கக்கூடாது. வடக்கு, கிழக்கு இளைஞர்கள் ஆயுதம் ஏந்தாமல் இருக்கும் வகையில் நல்லிணக்க நடவடிக்கைகளை முன்னெடுப்பது அரசின் கடப்படாகும். புலிகள் அமைப்பின் கிழக்குத் தளபதியாக இருந்த கருணாவுக்கு பிரதியமைச்சர் பதவி வழங்கப்பட்டு சுதந்திரக் கட்சியின் உபதலைவர் பதவியும் கொடுக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஆட்சியில் பிள்ளையானுக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது. கே.பிக்கு அரசு ஆதரவு இருந்தது. இவை தவறு என்று நான் சொல்லவில்லை. எனினும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்கும்போது ஏன் இனவாதம் பேசப்படுகின்றது. இவர்களை விடுதலைசெய்வதற்கு பிணை வழங்குவதற்கு அரசு எடுத்த முடிவு எப்படி தவறாகும்?

தேசிய பாதுகாப்பு தொடர்பில் அவதானமாகவே இருக்கிறோம். அதற்கு முக்கியத்துவம் கொடுப்போம். அரசு உளவுப்பிரிவு வழங்கிய அறிக்கைக்கமையவே புலம்பெயர் அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட்டது'' - என்றார்.

Read more...

அரசியல் எதிர்காலத்தை டக்ளஸ் கையில் ஒப்படைத்தார் மண்டையன் குழு சிறிதரன். வீடியோ

இந்திய இராணுவம் இலங்கையில் குடிகொண்டிருந்த காலத்தில் குடாநாட்டில் இடம்பெற்ற எண்ணற்ற கொலைகளுக்கு அதிபதிகளான மண்டையன் குழுவின் உறுப்பினராக தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் நுழைந்தவர் சிறிதரன். அண்மையில் ஐ.நா வில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட போர்குற்ற பிரேணையில் சிறிதரன் புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்புக்கு உதவினார் என்ற போர்குற்றச்சாட்டுக்கும் உள்ளாகியுள்ளார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் 04.12.2015 அன்று பாராளுமன்றில் இடம்பெற்ற விவாதங்களின்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் யாழ் பாராளுமன்ற உறுப்பிருமான டக்ளஸ் தேவானந்தா, பா.உ சிறிதரன் கிளிநொச்சியில் ஆசிரியராக மற்றும் அதிபராக கடமையாற்றிய காலகட்டங்களில் வன்னியின் சிறார்களை புலிகளமைப்புக்கு பலவந்தமாக பிடித்து கொடுத்தது மாத்திரமன்றி அச்சிறார்களை மீண்டும் புலிகளிடமிருந்து மீட்டுத்தருவதாக சிறார்களின் பெற்றோரிடம் கப்பம் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

பா.உ.டுக்ளஸ் தேவானந்தாவின் மேற்படி குற்றச்சாட்டுக்களை மறுத்துரைத்துள்ள பா.உ சிறிதரன், தான் அவ்வாறு சிறார்களை புலிகளமைப்புக்கு பலவந்தமாக இணைத்ததாக நிரூபித்தால் தனது அரசியல் வாழ்விலிருந்து முற்றாக ஒதுங்க தயாராகவுள்ளதாக அறிவித்துள்ளார்.

சிறிதரன் மீதான ஐநா வின் குற்றச்சாட்டுக்கு இலங்கைப்பாராளுன்றில் வலுச்சேர்த்த பா.உ டக்ளஸ் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் பெற்றோரின் சாட்சியங்களை ஒருங்கிணைத்து சிறிதரன் மேற்படி கொடிய குற்றத்தினை புரிந்தான் என நிரூபிப்பாரா?

அவ்வாறு நிரூபிக்கப்பட்டாலும் தமிழ் மக்களில் பெயரால் பாராளுமன்ற சுகபோகங்களை அனுபவிதத்து பழக்கப்பட்டுள்ள சிறிதரன் அரசியலிலிருந்து இலகுவில் வெளியேறிவிடுவாரா?

மேலும் வன்னிலே புலிகளுக்கு சிறார்களை பலவந்தமாக பிடித்து கொடுத்த சிறிதரன் யுத்தம் இறுதிக்கட்டத்தை அடைந்தபோது தான் பிடித்துக்கொடுத்த சிறார்கள் மாண்டு கொண்டிருக்கையில் வன்னியிலிருந்து கொழுப்புக்கு தப்பி சென்று சுகபோக வாழ்கை வாழ்ந்து கொண்டிருந்ததாகவும் பா.உ டக்ளஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.


Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com