Saturday, February 14, 2015

இலங்கை தேர்தல் முடிவும் அதன் சர்வதேச தாக்கங்களும். Deepal Jayasekera

மஹிந்த இராஜபக்ஷவை வெளியேற்றி மைத்ரிபால சிறிசேன வெற்றி பெற்ற கடந்த வியாழக்கிழமை நடந்த இலங்கை தேர்தலின் முடிவுகள், இலங்கை மற்றும் தெற்காசியாவில் மட்டுமன்றி உலகம் பூராவும் தொழிலாள வர்க்கத்திற்கு எச்சரிக்கை மிகு தாக்கங்களை கொண்டுள்ளது.

முதலில் அது, சீனாவுடனான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராஜதந்திர, பொருளாதார மற்றும் இராணுவ ரீதியிலான மோதல்களிலும் மற்றும் அதற்கு எதிரான போர் தயாரிப்புகளிலும் ஆசியாவில் உள்ள நாடுகளை இழுத்துப் போடுவதற்கு வாஷிங்டன் இடைவிடாது மேற்கொள்ளும் முயற்சிகளை வெளிப்படுத்தியுள்ளது. இரண்டாவதாக, “ஜனநாயகம்” மற்றும் “மனித உரிமைகள்” என்ற மோசடியான பதாகைகளின் கீழ் ஏகாதிபத்திய சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு நேரடியாக வசதியளிக்கும் போலி-இடது போக்குகளின் அரசியல் பங்கையும் கோடிட்டுக் காட்டுகின்றது.

இராஜபக்ஷ அரசாங்கத்தில் இருந்து சிறிசேன வெளியேறியது முதல் வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி (யூஎன்பீ) மற்றும் ஏனைய ஒரு தொகை அரசியல் போக்குகளாலும் ஒரு பொது எதிர்க் கட்சி வேட்பாளராக அவர் அங்கீகரிக்கப்பட்டது வரையும் நடந்தது என்னவெனில், ஒரு அமெரிக்க அனுசரணையிலான ஆட்சி மாற்ற நடவடிக்கையே ஆகும். இதை சிருஷ்டிப்பதில், கிளிண்டன் மன்றத்தின் ஊடாக ஒபாமா நிர்வாகத்துடனும் அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கை நிறுவனங்களுடனும் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பகிரங்கமாக பெரும் பங்காற்றியுள்ளார்.

வாஷிங்டனின் நிலைப்பாட்டில் இருந்து பார்க்கும் போது, இராஜபக்ஷவின் குற்றங்கள், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டு போரின்போது பெருந்தொகையான தமிழ் பொது மக்கள் கொல்லப்பட்டமை அல்ல, மாறாக அவரது அரசாங்கம் சீனாவுடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள உறவுகளே ஆகும். சீன அரச நிறுவனங்களிடம் இருந்து அவர் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடுகளாக பெற்றுக்கொண்டுள்ளதோடு, அமெரிக்க மற்றும் இந்திய எதிர்ப்புகளை அலட்சியம் செய்து, இலங்கை துறைமுகங்களுக்குள் சீனாவின் நீர் மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர் கப்பல்கள் வருவதற்கு அனுமதித்ததன் மூலம் இந்து சமுத்திரத்தில் அதன் கடற்படை இருப்பை அதிகரிக்கும் பெய்ஜிங்கின் குறிக்கோளுக்கு உதவி செய்யத் தொடங்கினார்.

இராஜபக்ஷவை வெளியேற்றுவதற்கு அமெரிக்கா திரை மறைவில் மேற்கொண்ட பொறிமுறைகள் தேர்தல் தினத்தன்று வெளிப்படையாகின. இராஜபக்ஷவை தொலைபேசியில் அழைத்த அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஜோன் கெர்ரி, வாக்களிப்பு “வன்முறை மற்றும் அச்சுறுத்தல்கள் இன்றி இடம்பெற” வகை செய்யுமாறும், அவர் தோல்வியடைந்தால் “அமைதியாக ஆட்சி கையளிக்கப்படுவதை உறுதி செய்யுமாறும்” அறிவுறுத்தினார். இலங்கை அரச அதிகாரிகள் மற்றும் இராணுவத்துக்கான செய்தி மிகச் சரியானதாக இருந்தது. சிறிசேன வெற்றி பெறுவதை தடுப்பதற்கான எந்தவொரு முயற்சியும் ஏகாதிபத்திய தலையீட்டை எதிர்கொள்ளும் என்பதே அது.

கடந்த வெள்ளியன்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, வெற்றிகரமான ஆட்சி மாற்றத்தை வரவேற்றார். “ஐக்கிய அமெரிக்கா, சகல இலங்கையர்களுக்காவும் சமாதானம், ஜனநயாகம் மற்றும் சுபீட்சத்தை வளர்ப்பதற்காக ஜனாதிபதி சிறிசேனவுடன் செயற்பட எதிர்பார்க்கின்றது...” என வலியுறுத்தினார்.

சிறிசேன ஆட்சியில் இருத்தப்பட்டதால் ஒரு காலமும் இலங்கை தொழிலாள வர்க்கத்துக்கு சமாதானம், ஜனநாயகம் மற்றும் சுபீட்சம் கிடைக்கப் போவதில்லை. நாடு, சீனவுக்கு எதிரான அமெரிக்க சதி வலையின் இன்னொரு பகுதியாக மாறும். மோசமடைந்து வரும் உலகப் பொருளாதார சரிவு நிலைமையின் கீழ், 26 ஆண்டுகளாக உள்நாட்டு போரில் அமுல்படுத்தப்பட்டு வந்த மற்றும் இராஜபக்ஷவால் விரிவாக்கப்பட்ட ஒடுக்குமுறை சட்டங்கள் மீண்டும் நடைமுறையில் இருப்பதோடு வாழ்க்கைத் தரங்கள் மீது முன்னெப்போதும் இல்லாத கடும் தாக்குதல்களை முன்னெடுக்க அவை பயன்படுத்தப்படும்.

ஜனாதிபதியாக பதிவியேற்றபோது, வாஷிங்டனின் நிகழ்ச்சி நிரலுடன் அணிசேர்வதற்கான தனது தயார் நிலையை சிறிசேன சமிக்ஞை செய்தார். “உலகின் எல்லா நாடுகளுடனும் சினேகபூர்வமான உறவுகளை கட்டியெழுப்புவதன் பேரில் வெளிநாட்டு கொள்கையில் மாற்றம் செய்வதாக” அவர் சபதம் எடுத்தார். அமெரிக்காவின் ஆசியாவில் முன்னிலை கொள்கையின் சூழலில், இதன் அர்த்தம், பெய்ஜிங்கிடம் இருந்து விலகி வாஷிங்டன் மற்றும் பிராந்தியத்தில் அதன் பங்காளிகளான ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவின் பக்கம் திரும்புவதே ஆகும்.

அமெரிக்கத் தலையீடானது, ஆசியா மற்றும் உலகம் பூராவும் இத்தகைய நடவடிக்கைகளை பின்பற்றுகின்றது. 2010ல் சீனாவுடன் மோதிக்கொள்வதற்கு மாறாக நல்லிணக்கத்தை விரும்பியமைக்காக ஜப்பானிய பிரதமர் யுகியோ ஹடோயாமா மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட்டை அகற்றுவதில் வாஷிங்டன் தலையீடு செய்திருந்தது. இரு நாடுகளும் அமெரிக்கத் தலைமையிலான போர் தயாரிப்புகளில் இப்போது முன்னணியில் உள்ளன. அச்சுறுத்தல்கள் மற்றும் நிதி உதவிகள் மூலம் பர்மாவில் இராணுவ ஆட்சி இப்போது அமெரிக்காவின் வழிக்கு கொண்டுவரப்பட்டு, சீன முதலீடுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதோடு இராணுவ உறவுகளும் கீழறுக்கப்பட்டுள்ளன.

கடந்த பெப்பிரவரியில், அமெரிக்காவானது ஜேர்மனியின் ஆதரவுடன் உக்ரேனில் பாசிஸ்டுகள் தலைமையிலான ஒரு ஆட்சி கவிழ்ப்பு சதியை தூண்டி விட்டு ஒரு ஏகாதிபத்திய-சார்பு பொம்மை அரசாங்கத்தை நிறுவியுள்ளது. மாஸ்கோவிலும் தனக்குச் சார்பான அரசாங்கம் ஒன்றை உருவாக்கும் உச்சக்கட்ட இலக்குடன், ரஷ்யாவுடன் ஒரு மோதலை தூண்டிவிடுவதே இந்த சதியின் குறிக்கோளாகும். சீனாவின் வெளிப்படையான சாத்தியமான இராணுவ பங்காளியான ரஷ்யாவை மண்டியிடச் செய்வதற்கான முயற்சியானது, ஆசியாவில் முன்னிலை கொள்கையுடன் பிரிக்க முடியாததாகும். ஆசியாவில் அமெரிக்க செல்வாக்குக்கு சவால் விடவும் வாஷிங்டனின் பூகோள மேலாதிக்கத்துக்கு குழி பறிக்கவும் சீனாவை அனுமதிக்கும் கூட்டணிகள் மற்றும் பூவிசார் செல்வாக்குகளுக்கான சாத்தியங்களைக் கூட அமெரிக்கா விட்டு வைக்கப் போவதில்லை.

இலங்கை தேர்தல் முடிவானது, சீனா எல்லா முன்னரங்குகளிலும் முற்றுகையிடப்பட்டுள்ளது என அதன் அரசாங்கமும் இராணுவமும் செய்துள்ள மதிப்பீட்டை மேலும் பலப்படுத்துவதை மட்டுமே செய்துள்ளதுடன், ஒரு சிறிய சம்பவம் கூட ஒட்டு மொத்த யுத்தத்தை வெடிக்கச் செய்யக் கூடிய ஆபத்தை உயர்த்தியுள்ளது.

போலி இடதுகளான நவ சம சமாஜக் கட்சி, ஐக்கிய சோசலிசக் கட்சி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சியும் அமெரிக்க ஆட்சி மாற்ற நடவடிக்கைக்கான பொறுப்பை பங்கிட்டுக்கொண்டுள்ளன. உக்ரேனில் ஒரு ஏகாதிபத்திய சதியை “ஜனநாயகப் புரட்சி” என சர்வதேச போலி இடதுகள் பிரகடனப்படுத்தியது போலவே, இலங்கையிலும் அவர்கள் இராஜபக்ஷவின் “சர்வாதிகாரத்துக்கு” எதிரான “ஜனநயாகத்துக்கான” வேட்பாளர் என சிறிசேனவை சித்தரித்தனர்.

இந்த மூன்று கட்சிகளும் தமது சொந்த ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்திய போதிலும், அவர்கள் சிறிசேனவின் அமெரிக்க-சார்பு நிகழ்ச்சிநிரலையிட்டு மௌனமாக இருந்ததோடு அவரது அரசியல் வரலாறு பற்றி இலேசான விமர்சனத்தை மட்டுமே முன்வைத்தன. உள்நாட்டு யுத்தத்தின்போது இழைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமகள் மற்றும் ஜனாநயக உரிமைகள் மீதான கொடூரமான தாக்குதல்களுக்கு இராஜபக்ஷவை போலவே சிறிசேனவும் முழு பொறுப்பாளியாவார்.

ஜனாதிபதி சிறிசேனவின் கீழ் தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினர் எதிர்கொண்ட துன்பங்கள் தணிக்கப்படும் என்ற மாயையை விதைப்பதற்காக இந்த போலி இடது குழுக்கள் தமிழ் மற்றும் முஸ்லிம் முதலாளித்துவ தட்டுக்களுடனும் கூட இணைந்துகொண்டன. தொழிற்சங்கங்களுடன் சேர்ந்துகொண்ட அவர்கள், தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற வறியவர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற போலிக் கூற்றுக்களையும் முன்னிலைப்படுத்தினர். உழைக்கும் மக்கள், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக நிலவிய உண்மையான வெகுஜன அதிருப்தியை, சிறிசேன மற்றும் அவருக்கு ஒத்துழைத்த ஏகாதிபத்திய-சார்பு வலதுசாரி கட்சிகளின் பின்னால் திருப்பிவிடுவதற்கு இந்த குட்டி முதலாளித்துவ சக்திகள் உதவி செய்தன.

போலி இடதுகள், இலங்கையை “காலனியாக்க” முயற்சிக்கும் “ஏகாதிபத்திய சக்தியாக” சீனாவை பண்புமயப்படுத்துவதன் மூலம், அவர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் அணிசேர்வதற்கு எந்தளவுக்கு தயாராக உள்ளார்கள் என்பதைக் காணமுடியும். யதார்த்தத்தை மறுபக்கம் திருப்பி, சர்வதேச மூலதனத்துக்கான ஒரு மலிவு உழைப்புத் தளமாக இயங்கும் சீனாவை, சர்வதேச நிதி மூலதனத்தின் மையமான அமெரிக்காவுக்கு சமப்படுத்தி, பின்னர் சீன “விஸ்தரிப்புவாதம்” மற்றும் “ஆக்கிரமிப்பு” என கண்டனம் செய்வதானது வாஷிங்டனின் பாதையில் செல்வதாகும்.

இங்குதான் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோசக) தேர்தல் பிரச்சாரத்தின் முக்கியத்தும் உள்ளது. அது சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் தனது சொந்த வேட்பாளரான பாணி விஜேசிறிவர்தனவை தேர்தலில் நிறுத்தியது. சோசக மட்டுமே போர் ஆபத்து நெருங்கி வருவது குறித்து தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் எச்சரிக்க முயற்சித்ததோடு வாழ்க்கைத் தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது மேற்கொள்ளப்படும் சமூக எதிர்ப்-புரட்சிக்கு எதிராக ஒரு வேலைத் திட்டத்தை அபிவிருத்தி செய்தது. அது சிறிசேன மற்றும் இராஜபக்ஷ முகாங்கள் மற்றும் போலி-இடது போக்குகள் உட்பட முதலாளித்துவத்தின் அனைத்து பகுதியினரில் இருந்தும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்துக்காக போராடியது.

அடுத்து வரும் காலத்தில் தீர்க்கமான பிரச்சினை, தொழிலாள வர்க்கத்தினுள் சோசலிச மற்றும் சர்வதேசிய நனவை அபிவிருத்தி செய்வதும், ஆசியா மற்றும் உலகம் பூராவும் சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை கட்டியெழுப்புவதுமாகும். இதுவே, போர் மற்றும் ஏகாதிபத்திய ஒடுக்குமுறையின் தோற்றுவாயான முதலாளித்துவம் மற்றும் அது வேரூன்றியுள்ள தேசிய-அரச அமைப்பு முறைக்கும் முடிவு கட்டுவதற்காக ஒரு சக்திவாய்ந்த போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான அடிப்படையாகும்.

Read more...

ரணில் - மஹிந்த கூட்டு குறித்து மைத்திரி சந்தேகம்!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்தும் நோக்குடன் ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஸவுடன் கூட்டணி ஒன்றை ஏற்படுத்தி வருகிறார் என்ற நியாயமான சந்தேகம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் எழுந்துள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதியாக தெரிவாகி ஒரு மாதம் நிறைவுற்றுள்ள நிலையில் அரசாங்கம் ஊடக கண்காட்சி காட்டுகிறதே தவிர செயற்பாட்டில் ஒன்றும் நடக்கவில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதால் ஜனாதிபதிக்கு இந்த சந்தேகம் எழுந்துள்ளது.

கண்ணுக்கு தெரியும் அளவு கடந்த அரசாங்கத்தில் குற்றம் புரிந்தவர்கள் குறித்த சாட்சிகள் இருக்கும் போது அவர்கள் கைது செய்யப்படாமல் இருப்பதால் விருப்பமின்றியேனும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருந்து செயற்பட வேண்டுடிவரும் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் அமைதி, கிறிஸ்தவ விவகார மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக ஜோன் அமரதுங்கவை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமித்தமை ராஜபக்ஸக்களை பாதுகாக்கவா என்ற கேள்வி ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் இடையே எழுந்துள்ளன. இந்நிலை தொடர்ந்தால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை தவிர்க்க முடியாது என ஜனாதிகதி ஆலோசகர்கள் ஜனாதிபதியிடம் கூறுகின்றனர்.

இதேவேளை பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளை ஜனாதிபதி 12ம் திகதி சந்தித்தார். அதன்படி கடந்த அரசாங்கத்தில் ஊழல் மோசடி குற்றச்சாட்டில் சிக்கியவர்களை பொலிஸார் கைது செய்ய நடவடிக்கை எடுக்காவிடின் ஜோன் அமரதுங்க வசமுள்ள பொலிஸ் அதிகாரத்தை தனக்கு கீழ் கொண்டுவர ஜனாதிபதிக்கு நேரிடும் என்பது தெளிவாகப் புலப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

Wednesday, February 11, 2015

கணவரையும், மகள்களையும் ஒழுங்கா பார்த்துக்கோ.... மிஷல் ஒபாமாவுக்கு ஐ.எஸ். எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் ஒபாமாவைக் குடும்பத்துடன் கொல்லப் போவதாக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். சமீபத்தில் நியூஸ்வீக் பத்திரிக்கையின் டுவிட்டர் தளத்திற்குள் ஹேக் செய்து ஊடுருவியது ஐ.எஸ்.ஐ.எஸ். அதில் "துணிச்சலான முஜாஹிதீன்" என்ற தலைப்பில் மிரட்டல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :- பிரெஞ்ச் பத்திரிக்கை அலுவலகத்தை தாக்கியது போன்று ஒபாமா குடும்பத்தினர் மீதும் தாக்குதல் நடத்துவோம். ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பிற்கு எதிராக அமெரிக்கா துவங்கி உள்ள நடவடிக்கைக்கு பதிலடி கொடுப்பதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட உள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷல் பெயரைக் குறிப்பிட்டு அவர்கள் அனுப்பியுள்ள எச்சரிக்கை செய்தியில், ‘மிஷல் ஒபாமா...உனது மகள்கள் மற்றும் கணவரை பார்த்துக் கொள். இது அவர்களுக்கு ரத்த காதலர் தினமாக தான் இருக்கும்.

அமெரிக்காவும், அதன் செயற்கைகோள்களும் சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் எங்களின் சகோதரர்களை கொன்றுள்ளது. இதற்கு பதிலடியாக உங்கள் நாட்டின் சைபர் பாதுகாப்பை அதற்கு உள்ளிருந்தே தகர்ப்போம்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே போன்று அமெரிக்காவின் பல டுவிட்டர் மற்றும் யூட்யூப் அக்கவுன்டகளை இவர்கள் ஊடுருவி உள்ளதாக தெரிய வந்துள்ளது.

Read more...

Monday, February 9, 2015

புத்தி ஜீவிகள் என்ற பெயரில் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு எதிரான சதி பிசுபிசுப்பு

கிழக்குப்பல்கலைக்கழகத்தில் சுமார் 5000 மாணவர்களும் 200ற்கு மேற்பட்ட விரிவுரையாளர்களும் மற்றும் 250ற்கு மேற்பட்ட ஊழியர்களும் காணப்பட சுமார் 20 விரிவுரையாளர்கள் பல்கலைக்கழக சமூகத்தின் பேரால் சில உண்மைக்குப் புறம்பான கோசங்களை ஏந்தி பொதுமக்களை பிழையான வழிக்கு திசைதிருப்ப எத்தனிப்பது தொடர்பில் பொதுமக்கள் விழிப்படைய வேண்டியுள்ளது. பல்கலைக்கழக சமூகம் இவர்களது நடவடிக்கையை நிராகரித்த நிலையில் வீதியில் இறங்கியிருப்பது இன்னும் வேடிக்கையே பல்கலைக்கழகத்தில் பெருமளவிலான மாணவர்கள் இருக்க பல்கலைக்கழகத்தை சாராத பிரத்தியேக கல்வி நிலையங்களில் வருகை தந்த சில அப்பாவி மாணவர்களையும் ரியூசன் ஆசிரியர்களையும் ஒரு குறித்த அரசியல்வாதியின் கையாட்டகளையும் தங்கள் சுயநல போராட்டத்தில் ஈடுபடுத்தியது எந்தளவு தூரம் தர்மமாகும்? ஜனநாகமாகும்? இவர்கள் தானா படித்தவர்கள்?

பல்கலைக்கழக மாணவர்கள் கல்வி செயற்பாட்டில் அக்கறை காட்டாத(விரிவுரைகளுக்கு செல்லாத) விரிவுரையார்கள் ஊழல் கோசமிடுகிறார்கள்? ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிற கதையில்லையா? இது புத்தி ஜீவிகள் என்ற வகையில் மிகவும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய விடயமிது.

ஆர்ப்பாட்டத்தில் காணப்பட்ட சுலோகங்கள் இன்னும் வேடிக்கையானவையாகும். ஊழல், அராஜகம் என்று கூறப்பட்டாலும் கிழக்குப்பல்கலைக்கழக உபவேந்தருக்கான அடுத்த தவணைக்காலம் எதிர்வரும் மாதம் தொடங்க உள்ள நிலையில் உபவேந்தர் கதிரையை வைத்து நடாத்திய ஆர்ப்பாட்டம் என்பது தெளிவாகத் தெரிகிறது. இத்தகைய குழுவினர் மட்டக்களப்பு மாவட்டம் தொடர்பான அபிவிருத்தி அல்லது பொதுவான பிரச்சினைகளை மையப்படுத்தி இதுவரை காலமும் எந்தவொரு போராட்டத்தையும் முன்னெடுக்காத நிலையில் இவ்வாறான இன்றைய போராட்டத்தில் மாத்திரம் குரல் கொடுப்பது சிந்திக்க வேண்டிய விடயம். அதேவேளை இவ்வாறான குழுவினர் மாவட்ட பற்றாளர்களா? அல்லது தங்களது சுயலாபத்திற்காக குரல்கொடுப்பவர்களா? என்பதை பிரித்தறிய தெரியாத முட்டாள்கள் இல்லை மட்டக்களப்பு மக்கள் என்பதையும் இவர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம்.


பல்கலைக் கழக சமூகம்.

Read more...

சந்தர்ப்பங்களை கோட்டை விடும் தமிழ் தேசிய தலைமைகள்

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் கிடைக்கின்ற சந்தர்ப்பங்கள் மிக சரியாக பயன்படுத்தப்பட வேண்டும். அதே போல புதிய சந்தர்ப்பங்கள் உருவாக்கப்பட வேண்டும். ஆனால் தமிழ் தேசிய தலைமைகள் இரு விடயங்களையும் கோட்டை விட்டே வந்து இருக்கின்றன என்பது கடந்த கால வரலாறாகவும், நிகழ் கால நிதர்சனமாகவும் உள்ளது.

பிரச்சினைக்கு தீர்வு காணக் கூடிய அதிக அசுர பலத்தை தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே வழங்கி வந்திருக்கின்றனர். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு அரசியல் என்கிற பெயரில் தமிழ் மக்களின் நம்பிக்கைகளை நுட்பமாக சிதைத்தே வந்திருக்கின்றது.

இன்று நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இது தமிழர் வாழ்விலும் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பது எதிர்பார்ப்பு ஆகும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடனேயே புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சியின் அதிகார மையத்தில் அமர்த்தப்பட்டு உள்ளார். இவர் கடுமைப் போக்காளர் அல்லர். எதிர்க் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சிப் பீடம் ஏறிய இவரே இன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராகவும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவராகவும் உள்ளார்.

இதனால் எதிர்க்கின்ற கட்சிதான் எதிர்க் கட்சி என்கிற நிலை இன்று இல்லை. நீலம், பச்சை என்கிற வேறுபாடு இல்லாமல் போய் விட்டது. உண்மையில் எதிர்க் கட்சி இல்லாத தேசிய அரசாங்கம் மலர்ந்திருக்கின்றது என்றும் கூறலாம். எனவே தமிழர் பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுக் கொள்ள இது மகத்தான வாய்ப்பாக கிடைக்கப் பெற்று உள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு இச்சந்தர்ப்பத்தையாவது தவற விடாது பயன்படுத்த வேண்டும். நிறைவேற்று அதிகார முறை ஒழிக்கப்பட்டு, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, புதிய தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டால் மீண்டும் ஒரு முறை இவ்வாறான வாய்ப்பு கிடைக்கப் பெறவே மாட்டாது.

புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டபோது இதில் இணைய தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. தலைவர் இரா. சம்பந்தன், தேசியப் பட்டியல் எம். பி எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்வார்கள் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரசாங்கத்தில் பங்காளிகளாக இருக்க மாட்டார்கள் என்று அறிவித்து கெடுத்து கொண்டனர்.

ஆனால் யதார்த்தத்தில் இது அல்ல உண்மையான நிலை. அமைச்சரவையை விட அதிகாரம் மிக்க சபை ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் உருவாக்கப்பட்டு உள்ளது. நாட்டின் தேசிய விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தக் கூடிய சகல கட்சிகளின் தலைவர்களும் இதில் அங்கம் வகிக்கின்றார்கள். அரசாங்கத்தின் மிக முக்கிய விவகாரங்கள் இங்கு கலந்து ஆலோசிக்கப்பட்டே தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன.

இதன் பெயர் தேசிய நிறைவேற்று சபை. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் அங்கம் வகிக்கின்றார். எனவே அரசாங்கத்தில், அமைச்சரவையில் இல்லை என்று சொல்லி தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றவோ, தீர்வு முயற்சியில் இருந்து தப்பிக் கொள்ளவோ முடியாது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசநாயக்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியூதீன், ஜாதிக ஹெல உறுமயவின் சம்பிக்க ரணவக்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோரும் நிறைவேற்று சபையில் அங்கம் வகிக்கின்றனர்.

இனப் பிரச்சினைத் தீர்வுக்காக முன்பு உருவாக்கப்பட்ட சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் இன்னொரு வடிவம் போலவும் நிறைவேற்று சபை அமைகின்றது. சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவில் சேரப் போவது இல்லை என்று சொல்லி அடம் பிடித்தது போல் அல்லாது நிறைவேற்றுக் குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சேர்ந்து இருப்பது ஆரோக்கியமான விடயமாகும். ஆனால் இதன் மூலமான உச்ச நன்மைகளை தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு இதய சுத்தியுடன் செயற்பட தவறுகின்ற பட்சத்தில் இதுவும் தவற விடப்படுகின்ற வாய்ப்பாகவே வரலாற்றில் பதிவாகி விடும்.

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை உளுத்துப் போன தீர்வு முயற்சி என்று சொல்லி பொன்னான வாய்ப்பை முன்பு மண்ணாக்கினார்கள். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கூடுதல் அதிகாரங்களுடன் கூடிய தீர்வுப் பொதியை எரித்தார்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தீர்வு முயற்சியை எதிர்த்தார்கள்.

ஆனால் காலம் காலமாக சுமந்து வந்திருக்கின்ற பாரம்பரிய அரசியல் நிலைப்பாடுகள் சிலவற்றில் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு விலகிச் செல்வது போன்ற தோற்றப்பாடு பல விடயங்களில் இப்போது தெரிகின்றது. மாகாண சபை ஆட்சியில் ஈடுபாடு காட்டுகின்றனர். ஜனாதிபதியின் தேசிய நிறைவேற்று குழுவில் அங்கம் வகிக்கின்றனர். சுதந்திர தின வைபவத்தில் பங்கேற்று உள்ளனர். வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர். இவை எல்லாவற்றையும் தமிழ் மக்களின் நன்மைகளை உத்தேசித்தே செய்கின்றனர் என்று கூறுகின்றார்கள். இது உண்மையாக இருக்குமானால் கிடைத்து இருக்கின்ற புதிய சந்தர்ப்பத்தை தவற விடாது வேகமாகவும், விவேகமாகவும் செயற்பட்டு தமிழர் பிரச்சினைக்கு அர்ப்பணிப்புடன் தீர்வு காண தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சிக்க வேண்டும்.

நாம் எல்லோரும் சீட்டாட்டம் குறித்து பொதுவாக அறிவோம். திறமையான சீட்டாட்ட வீரர்கள் அருமையான சீட்டுக்கள் கிடைக்கப் பெறாத போதும், அற்பமான சீட்டுக்களே கிடைக்கப் பெறுகின்றபோதும் சாமர்த்தியமாகவும், நுட்பமாகவும். ஈடுபாட்டுடனும் விளையாடி வெற்றியை தட்டிக் கொள்வார்கள். திறமை அற்ற வீரர்கள் அருமையான, அபூர்வமான சீட்டுக்கள் கிடைக்கப் பெறுகின்றபோதும் சாமர்த்திய குறைவு, அலட்சியம் ஆகியவற்றால் வெற்றியை கோட்டை விட்டு விடுவார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் சீட்டாட்டத்தில் இப்போதாவது சாதுரியமாகவும், அர்ப்பணிப்புடனும் செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.

Read more...

Monday, February 2, 2015

யாழ்பாணத்தில் டக்ளஸ் கும்பலால் மேற்கொள்ளப்பட்டுவரும் மண் அகழ்வு தொடர்பில் அமெரிக்க அதிகாரிகளுக்கு காட்டினார் சகாதேவன்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவராக உள்ளார் சகாதேவன். இவர் கடந்த காலங்களில் யாழ்பாணத்தில் டக்ளஸ் கும்பலால் மேற்கொள்ளப்பட்டு வரும் மண் அகழ்வு தொடர்பில் தொடர் போராட்டங்களை நடாத்திவந்தார். டக்ளசின் ஊழல்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் துண்டுபிரசுரங்கள் ஊடாக அவர் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி டக்ளஸ் குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க வேண்டும் எனக் கோரிநின்றபோது டக்ளஸின் குண்டர்களால் சகாதேவன் தாக்கப்பட்டதுடன் கடந்த காலங்களில் அவருக்கு ஈபிடிபி அமைப்பினாரால் பெரும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டிருந்தது.

அச்சுறுத்தல் காரணமாக தலைமறைவாகியிருந்த சகாதேவன் தற்போது வெளியே வந்துள்ளதுடன் டக்களசின் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பில் அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான சிரேஸ்ட அதிகாரியிடம் முறையிட்டுள்ளார்.


இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்;

வடக்கில் கடந்த காலங்களில் குறிப்பிட்ட சில அரசியல் வாதிகளினால் தான் தோன்றித்தனமாக எவ்வித அனுமதியுமின்றி மண்ணகழ்வில் ஈடுபட்டுவந்தனர்.

இதன் மூலம் சிலர் இலாபமீட்டியிருந்தனர் எனினும் மண் அகழ்வுக்குள்ளான பிரதேசங்கள் தற்போது மிக மோசமான முறையில் சூழல் அழிவினை எதிர்நோக்கியுள்ளன.

குறிப்பாக நாகர்கோவில்,மணற்காடு போன்ற இடங்களில் காணப்பட்ட பல நூற்றுக்கணக்கான மண் திட்டுக்கள் காணமல் போயுள்ளன தற்போதும் இந்நிலை தொடர்ந்த வண்ணமேயுள்ளது.

இவ்வாறு அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள் தமது மக்களின் வழங்களை தாங்களே சூறையாடிவரும்
நிலையில் இங்கு நிலை கொண்டுள்ள இராணுவமும் எமது வழங்களினை சூறையாடி
வருகின்றது.

தொண்டமானாறு அக்கரையில் தனியார் காணிகளில் மணல் அகழ்வில் ஈடுபட்டு வருகின்றனர் இவை தொடர்பில் அண்மையில் யாழ் வந்த அமெரிக்க அரசியல் விவகாரங்களிற்கான பொறுப்பதிகாரியிடம் எமது இயக்கம் தெரியப் படுத்தியிருந்தது.

இது தொடர்பில் இனிவருங்காலங்களில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் கவனம் செலுத்தும் என உறுதியளித்துள்ளார் மேலும் இவ்வாறான சட்டவிரோத மணல் அகழ்வுகள் இனியும் தொடர்ந்தால் தம்மிடம் தெரியப்படுத்துமாறும் கூறியுள்ளார் .

தற்போது சாதகமான அரசியல் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் யாரும் அச்சுறுத்தல்கள் மூலம் மணற்கடத்தல்களில் ஈடுபட முடியாது அவ்வாறு ஈடுபட்டால் அது தொடர்பில் எமக்கு அறிவிக்கவும்.

தகுந்த தண்டனையினை அவர்களுக்கு எம் இயக்கம் பெற்றுக்கொடுக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.







Read more...

போலி ஆவணம் தயாரித்தி திஸ்ஸ அத்தநாயவிற்கு விளக்கமறியல்!

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஐதேக விலிருந்து வெளியேறி ஸ்ரீலசு கட்சியில் இணைந்து கொண்டதுடன் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தார்.

ஸ்ரீலசு கட்சியின் பொதுச் செயலாளர் பொதுக் கூட்டணிக்கு சென்றதை தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரான அத்தநாயக்கவை விலைக்கு வாங்கிய ஸ்ரீலசு கட்சியினர் நீங்கள் எமது பொதுச் செயலாளரை எடுத்தால் நாம் உங்கள் பொதுச் செயலாளரை எடுப்போம் என்று வீராப்பு பேசினர். அத்துடன் அத்தநாயக்கவுக்கு ஸ்ரீலசு கட்சியில் மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கியிருந்த சுகாதார அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.

இவற்றுக்கு பிரதியுபகாரமாக மஹிந்த சார்பில் தீவிர பிரச்சாரத்தில் இறங்கிய அத்தநாயக்க ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று இருப்பதாகவும் அவ்வொப்பந்தத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் மைத்திரபால சிறிசேனவும் கையொப்மிட்டுள்ளதாகவும் தெரிவித்ததுடன். அதன் பிரதியை தான் கட்சியிலிருந்து வெளியேறும்போது எடுத்து வந்துள்ளதாகவும் காண்பித்தார்.

அத்தநாயக்கவின் குற்றச்சாட்டை மறுத்த ரணில் , மைத்திரி ஆகியோர் குறித்த ஆவணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபரிடம் முறையிட்டனர். ஆவணங்கள் தொடர்பான நிபுணர்களால் குறித்த ஆவணம் பரிசீலணை செய்யப்பட்டபோது, அது போலியான ஆவணம் என்றும் மேற்படி இருவரதும் கைபொப்பங்களின் ஸ்கேன் பிரதிகளே குறித்த ஆவணத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அம்பலமானது.

இது தொடர்பில் தொடர்விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் திஸ்ஸ அத்தநாயக்கவை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்தபோது அவரை எதிர்வரும் 11ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

Read more...

Sunday, February 1, 2015

ராஜபக்சவின் கைக்கூலி குமார் குணரட்ணம் நாடுகடத்தப்படுகின்றான்.

ராஜபக்சவின் சர்வாதிகாரப்போக்கினை ஜேவிபி எதிர்த்ததை தொடர்ந்து தனது அரச பலத்தை பயன்படுத்தி அக்கட்சியை சின்னா பின்னமாக்கும் சதிகளை ராஜபக்ச மேற்கொண்டிருந்தமை யாவரும் அறிந்தது. ஜேவிபி யை பலவீனப்படுத்துமுகமாக முதலில் அக்கட்சியிலிருந்த விமல் வீரவன்சவை உடைத்த ராஜபக்ச தொடர்ந்தும் பலவீனப்படுத்தும் நோக்கில் குமார் குணரட்ணத்தினை பயன்படுத்தினார். ராஜபக்சவின் திட்டமிட்ட நிகழ்சி நிரலில் செயற்படும் ராஜபச்ச-குமாரர் குணரட்டணம் கூட்டு சதி வெளிவராமல் இருக்கும் பொருட்டு குமார் குணரட்ணம் கடத்தப்பட்டதாக நாடகம் ஒன்று அரங்கேறியிருந்ததும் பின்னர் குமார் குணரட்ணம் விடுவிக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டிருந்ததும் யாவரும் அறிந்தது.

இலங்கை பிரஜா உரிமை அற்ற ஒருவர் நாட்டினுள் அரசியலில் ஈடுபட முடியாது என நாடுகடத்தப்பட்டிருந்த முன்னணி சோசலிசக் கட்சியின் தலைவர் எனத் தன்னைக் கூறிக்கொள்ளும் அவுஸ்திரேலிய 'சுத்துமாத்து' குமார் குணரட்ணம் இலங்கையில் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சிங்கப்பூர் எயார் லைன்ஸுக்கு சொந்தமான SQ 468 விமானம் மூலம் இலங்கைக்கு வந்து சேர்ந்தார்.

ஜனாதிபதி தேர்தலில் முன்னணி சோசலிசக் கட்சியின் சார்பில் போட்டியிடும் அபேட்சகருக்கு சார்பாக பிரச்சாரம் செய்யவே தான் நாட்டுக்கு வந்துள்ளதாக குமார் குணரட்ணம் தெரிவித்திருந்தார். நாட்டில் அரசியலில் ஈடுபட முடியாது என நாடுகடத்தப்பட்டிருந்த குமார் மஹிந்த ஆட்சியில் உள்ளபோது, அதுவும் மஹிந்த தேர்தலில் வேட்பாளராக நிற்கின்றபோது முன்னிலை சோசலிசக் கட்சி ஒரு வேட்பாளரை நிறுத்தியிருந்தால் அந்த வேட்பாளர் நிட்சயமாக மஹிந்தவிற்கு போட்டியான வேட்பாளரே.

இந்நிலையில் முன்னிலை சோசலிசக் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்வதென்றால் மஹிந்தவிற்கு எதிராக பிரச்சாரம் செய்வது என்பது மறுகருத்து. நாட்டில் அரசியல் செய்ய முடியாது என நாடுகடத்தப்பட்டிருந்த குமார் குணரட்ணம் மஹிந்தவிற்கு எதிராக பிரச்சாரம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டார் என்றால் அதன் பின்னணியை ஆறறிவுள்ள அனைத்து ஜீவராசிகளாலும் உணரமுடியும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி மஹிந்தவிற்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கையில் அவர்களின் பிரச்சாரத்திற்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டு மஹிந்தவிற்கு குமார் குணரட்ணம் ஆதரவு தேடினார் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில் புதிய அரசாங்கம் குமார் குணரட்ணத்தை நாட்டிலிருந்து வெளியேற்ற முடிவு செய்துள்ளது.

லங்கா ஈ நியுஸ் இணையத்தளம் குமார் குணரட்ணத்தின் வருகை தொடர்பில் அத்தருணத்தில் இவ்வாறு அம்பலப்படுத்தியிருந்தது.

இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் முன்னணி சோசலிசக் கட்சியின் சார்பில் போட்டியிடும் அபேட்சகருக்கு சார்பாக பிரச்சாரம் செய்யவே இவர் வந்துள்ளதாக கூறப்பட்டாலும் உண்மை அதுவல்ல எனத் தெரியவருகிறது. பொது வேட்பாளர் மைத்ரீபால சிரிசேனவுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மு. காங்கிரசுக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம் உண்டு என்று சேறடிப்பு பிரச்சாரம் செய்து மகிந்தவுக்கு சிங்கள மக்கள் இடையே ஆதரவு திரட்டவே கொண்டுவரப்பட்டுள்ளார் எனத் தெரியவருகிறது.


முன்னாள் ஜேவிபி யான குமார் குணரட்னம் ஒரு அவுஸ்திரேலிய பிரஜை. இவர் இதற்கு முண்னர் இலங்கைக்கு வந்தது உல்லாசப் பயணி விசாவுடன் ஆகும். உல்லாசப் பயணி விசாவில் இருந்துகொண்டு அரசியல் செய்வது குடிவரவு குடியகல்வு சட்டத்தின்படி குற்றமென்பதால் இவர் இலங்கை அரசால் நாடுகடத்தப்பட்டார். இலங்கையில் விசா காலாவதியான பின்னரும் இலங்கையில் நின்ற காரனத்தினால் குடிவரவு குடியகல்வு திணைக்களம் இவருக்கு ரூ. 39,695 தண்டம் விதித்தது.

இவர் யார், இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஏன் வந்தார், ஏன் நாடுகடத்தப்பட்டார் என்பதன் விபரம் பின்வருமாறு.

இவர் ஜேவிபி இயக்கதின் முன்னாள் முக்கிய உறுப்பினராவார். 88, 89 ம் ஆண்டுகளில் இலன்கையில் ஜேவிபி இனரால் நடத்தப்பட்ட படுகொலை அரசியலில் முக்கிய பொறுப்பு வகித்த இவர் இலங்கையில் இருந்து தப்பியோடி அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்து அவுஸ்திரேலிய பிரஜையானார். ஜேவிபி இல் இருந்த காலத்தில் இவரை அவரது இயக்கத்தில் பலரும் 'குமார மாத்தையா' என்ற பெயரில்தான் அறிந்திருந்தனர். தமிழர்களுக்கு இவரைத் தெரியாது என்றே கூறலாம். இவர் தனது தந்தை தமிழ் என்பதை பெரிதாக வெளிப்படுத்துவதில்லை. இவரது தாயார் சிங்களப் பெண் ஆவார்.

குமார் குணரட்னம் கடந்த இரண்டு வருடங்களின் முன்னர் கோத்தாபய ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு ஜேவிபி இயக்கத்தை உடைத்து முண்னனி சோசலிசக் கட்சியை உருவாகினார். பின்னர் அந்தக் கட்சியின் தலைவர் எனக் கூறிக்கொண்டு மேடைகளில் ஜேவிபி க்கு எதிராக பிரச்சாரம் செய்தார். தான் அரசாங்கத்தின் கையாள் இல்லை எனக் காட்டுவதற்காக அந்தக் கட்சிக் கூட்டங்களில் சாடைமாடையாக மகிந்த அரசாங்கத்தையும் விமர்சித்தார். ஆனால் இவரை நம்பி ஜேவிபி யை விட்டு வந்த இளைஞர்கள் இவர் உண்மையிலேயே மகிந்த அரசிற்கு எதிராரனவர் என நம்பி தமது கூட்டங்களில் மகிந்த அரசை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தனர். நிலைமை கட்டுக்கடங்கிப் போவதற்கு முன்னரே கோத்தாபய இவரை நாடுகடத்த வகை செய்தார்.

அவ்வாறு நாடுகடத்தப்பட்டவர் இதுவரை காலமும் வெளிநாடுகளில் உள்ள தமிழர்களை சந்தித்து தான் முன்னணி சோசலிசக் கட்சியின் தலைவர் என்றும் தமிழர்களின் உரிமைக்காக தமது கட்சி போராடும் என்றும் கூறிவந்தார். ஜேவிபி இயக்கத்தின் மிக ஆரம்பகால உறுப்பினரும் தலமைப் பதவியில் மிக முக்கிய இடத்திலும் இருந்த இவர் கடந்த 35 வருடகால தமிழ் மக்கள் மீதான யுத்தத்தின் போது என்ன செய்தார், என்ன கருத்து வகித்தார் என்பதற்கு இவர் எந்த விளக்கமும் இதுவரை சொன்னதில்லை.

இவருக்கு இலங்கைக்கு போகமுடியாத சூழல் இருப்பதாகவே இவரும் இவரது கட்சியும் கடந்த இரு வருடங்களாக வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் கூறிவந்தனர். ஆனால் இப்போது திடீரென எந்த தடையும் இல்லாது இலங்கைக்கு சென்று பகிரங்கமாக அரசியலில் ஈடுபட அரசாங்கம் இவருக்கு இடமளித்துள்ளதன் மர்மம் என்ன என பல அரசியல் அவதானிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

அரசியல் காரணங்களுக்காக நாடுகடத்தப்பட்ட வெளிநாட்டுப் பிரஜையான ஒருவர் அரசாங்கத்தின் அனுமதியோ உத்தரவோ இன்றி மீண்டும் நாட்டுக்குள் வந்து வெளிப்படையாக அரசியலில் ஈடுபடுவது என்பது இயலாத காரியமாகும். எனவே இவரை அரசாங்கம்தான் கொண்டுவந்துள்ளது என்பது தெளிவு. இதற்காக இவருக்கு அவுஸ்திரேலிய டொலர் 5 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணமானது தற்போது சிங்கபூரில் நிற்கும் பா.உறுப்பினரும் ஜனாதிபதி மஹிந்தவின் நெருங்கிய ஆலோசகருமான சஜின் வாஸ் குணவர்தனவினால் கைமாற்றப்பட்டுள்ளது. கடந்த புதன் கிழமை இந்த கொடுக்கல் வாங்கல் நிகழ்ந்து முடிந்ததுமே இவரது கட்சி உறுபினரான அஜித் குமார என்பவர் கொழும்பு குடிவரவு குடியல்வு திணைக்களத்திற்கு சென்று இவரது முன்னைய தண்டப் பணமான ரூ. 39, 635 வை செலுத்தியுள்ளார்.

தற்போதும் உல்லாசப் பயண விசாவிலேயே இலங்கை வந்துள்ள இந்த சுத்து மாத்துப் பேர்வழியான குமார் குணரட்ணம் பகிரங்கமாக மேடைகளில் ஏறி அரசியல் செய்வது குடிவரவு குடியல்வு சட்டத்தின்படி குற்றமாகும். அப்படியானால் இவருக்கு அரசாங்கம் அவசர அவசரமாக இலங்கைப் பிரஜா உரிமை வழங்கியிருக்க வேண்டும். வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் பலர் அதிலும் குறிப்பாக தமிழ்ர்கள் இரட்டைப் பிரஜாஉரிமை கொரியும்கூட அவற்றை வழங்க மறுத்து வரும் மகிந்த அரசாங்கமானது திடீரென்று இந்தப் பேர்வழிக்கு மட்டும் விசேட சலுகை வழங்குவது ஏன் என்பது எந்த முட்டாளுக்கும் புரியும் என்பதில் சந்தேகமில்லை.


Read more...

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் அன்புக்குரியவரோடு பேச உதவும் அதி நவீன கருவி கண்டுபிடிப்பு!

கேன்சர் உட்பட பல உயிர்கொல்லி நோய்கள் இந்த உலகில் இருந்தாலும் உயிரை மட்டும் விட்டு வைத்து, தினம் தினம் நரக வேதனை தரும் நோய் பக்கவாதம். கை கால்கள் முடக்கப்பட்டு தான் உணர்வதை தன்னை நேசிப்பவர்களோடு பேசமுடியாத இவர்களின் வேதனை கற்பனை செய்தும் பார்க்க முடியாதது.

சமீபத்தில் இந்த பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிய ஆய்வறிக்கை ஒன்றை க்ளேர் வில்சன் என்பவர் நியூ சயின்டிஸ்ட் அறிவியல் பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளார். இதில் பல ஆச்சர்யமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுவரை, பக்கவாத நோயாளிகளின் எண்ண ஓட்டத்தை அறிந்து கொள்ள பெரிய அளவிலான எம்.ஆர்.ஐ. ஸ்கேனர் கருவிக்குள் அவர்களை நுழைக்க வேண்டும் என்ற நிலையே இருந்து வந்தது.

இந்நிலையில் லண்டனை சேர்ந்த ஆட்ரியன் ஓன் தலைமையிலான ஆய்வுக்குழுவும், ஆஸ்திரிய நிறுவனமான ஜிடெக் என்ற நிறுவனத்தின் ஆய்வுக் குழுவும் தனித்தனியாக மேற்கொண்ட ஆய்வுகளின் படி, நோயாளியின் கையில் ’வைப்ரேட்டிங் பேட்’ ஒன்றைக் கட்டுவதன் மூலம் அவர்களின் மூளையில் ஏற்படும் உணர்வுகளை அறிய முடியும் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இந்தக் கருவியை எங்கும் எளிதில் எடுத்துச் செல்லவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெல்ஜியத்தில் உள்ள லீக் பல்கலைக்கழகம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை வைத்து செய்த ஆய்வில் எத்தனை முறை உங்கள் கைகளில் வைப்ரேஷன் ஏற்பட்டது என்ற கேள்விக்கு நோயாளிகள் மனதில் நினைத்த பதிலை துல்லியமாக கணிக்க முடிந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆட்ரியன் ஓவியன் உணர்வற்ற நிலையில் உள்ள நிறைய பேரை ஆய்வு செய்ததில் ஐந்தில் ஒருவருக்கு டென்னிஸ் விளையாட வெண்டும் வீட்டில் நடக்க வேண்டும் என்று நினைப்பதை கண்டுபிடித்துள்ளார்.

செப்டம்பர் மாதம் மருத்துவர்கள் எதையும் உணர முடியாதவர் என்று நினைத்த 34 வயது கனடியர் ஒருவர் ஹிட்ச்காக் என்ற இயக்குனரின் படத்தை புரிந்து கொள்வதையும் நிரூபித்தார்.

நோயாளிகள் உணர்வற்ற நிலையில் இருப்பதாக தவறான முடிவெடுக்காமல் தடுக்க இந்த புதிய கருவி உதவும். உண்மை என்னவென்றால் அவர்களால் தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

Read more...

ஹக்கீமின் பாதையில் சென்று கிழக்கில் ஆட்சி அமைப்போம். த.தே.கூ

கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் விவகாரம் அரசியல் மட்டத்தில் அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் சபையின் ஆட்சியை தாம் அமைப்போம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஸ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இலங்கைநெற் இற்கு தெரிவித்தார்.

72 மணித்தியாலயங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீம் அறிவித்துள்ள நிலையில் தங்களால் அது எவ்வாறு சாத்தியம் எனக்கேட்டபோது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ரவுப் ஹக்கீம் செல்லும் அதே பாதையில் பயணித்து அவ்விடயத்தை சாதிக்கும் என திட்டவட்டமாக அவர் கூறினார்.

Read more...

கே.பி தொடர்பில் புலனாய்வுத்துறை இரகசிய அறிக்கை ஒன்றை தயாரிக்கின்றது.

புலிகளுக்கான ஆயுத விநியோகித்தராக செயற்பட்டு வந்த கே.பி எனப்படுகின்ற குமரன் பத்தநாதன் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்திருந்தது. கைது செய்யப்பட்ட கே.பி மீது அவர் மேற்கொண்ட தேச விரோத செயல்களுக்காக வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை என்றும் அவரை கைது செய்து குற்றத்திற்கான தண்டனை வழங்குமாறும் ஜேவிபி உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்தது. இம்மனுவினை விசாரணை செய்த நீதியரசர்கள் குழாம் கே.பி தொடர்பான அறிக்கையை எதிர்வரும் 5ம் திகதி மன்றுக்கு தெரிவிக்குமாறு ஆணையிட்டுள்ளது.

இந்நிலையில் கே.பி தொடர்பில் இரகசிய அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க இலங்கை புலனாய்வுத்துறை தயாராகி வருவதாக அறியக்கிடைக்கின்றது.

கடந்த அரசாங்கம் கே.பி யை நீதிமன்றில் ஆஜர் செய்யாமல் விடுதலை செய்தமைக்கான காரணங்கள் யாது என்றும் அவரால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள சாதகங்கள் யாது என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Read more...

அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலில் 4 அல்-கொய்தா தீவிரவாதிகள் பலி!

ஏமனில் நேற்று அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் அல்-கொய்தா தீவிரவாதிகள் என்று சந்தேகப்படும் 4 பேர் கொல்லப்பட்டனர்.
தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாஷிங்டன் அறிவித்ததை அடுத்து ஏமனில் இந்த வாரத்தில் நடைபெறும் இரண்டாவது தாக்குதல் சம்பவம் இது.

தீவிரவாதிகள் அதிகம் உள்ள ஷப்வாவின் தெற்கு மாகாணத்தில் நேற்று நடந்த இந்த தாக்குதலில் காரில் சென்ற 4 அல்-கொய்தா தீவிரவாதிகள் ஏவுகணை வீசி கொல்லப்பட்டனர்.

இதேபோன்று கடந்த திங்கள் அன்று ஷப்வா மாகாணம் மரிப்பிற்கிடையே உள்ள பாலைவனத்தில் காரில் சென்ற மூன்று அல்கொய்தா தீவிரவாதிகளை அமெரிக்க ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தி அழித்தது.

Read more...

கிழக்கின் புதிய முதல்வரை விரைவில் அறிவிப்போம்!

இலங்கையில் கிழக்கு மாகாணசபையின் ஆட்சியில் ஏற்படவுள்ள மாற்றத்தின் அடிப்படையில் அடுத்த ஓரிரு நாட்களில் புதிய முதலமைச்சரை தமது கட்சி அறிவிக்கும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

புதிதாக அமையவுள்ள ஆட்சியில் பங்கெடுக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய கட்சிகளுக்கு திறந்த மனதுடன் அழைப்பு விடுப்பதாகவும் அவர் கூறுகின்றார்.

அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே ரவூப் ஹக்கீம் இதனைத் தெரிவித்துள்ளார்.

2012ம் ஆண்டு கிழக்கு மாகாணசபை தேர்தலின்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தனித்து ஆட்சியமைக்க பெருன்பான்மை பலம் இல்லாதிருந்த நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை பெற்று ஆட்சியை அமைத்துக் கொண்டது.

அவ்வேளை 5 ஆண்டு ஆட்சியில் முதலமைச்சர் பதவியின் முதல் இரண்டரை ஆண்டுகள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் அடுத்த இரண்டரை ஆண்டுகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் என உடன்பாடு காணப்பட்டதாக முஸ்லிம் காங்கிரஸ் கூறுகின்றது.

அந்த உடன்பாட்டுக்கு அமைய, கிழக்கு முதலமைச்சர் பதவி முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமக்கு உறுதியளித்துள்ளதாக ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் இடம்பெறும் என்றும் தங்களின் அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணையவேண்டும் என்று விரும்புவதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கூறினார்.

மத்தியில் ஏற்பட்டுள்ள புதிய ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்திலும் ஆளுங்கட்சி பெரும்பான்மை பலத்தை இழந்த நிலையிலேயே புதிய அரசாங்கம் அமைப்பதற்கான முயற்சிகள் நடந்துவருகின்றன.

கிழக்கு மாகாணசபையில் கூடுதலான உறுப்பினர்களைக் கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்காக முஸ்லிம் காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

மூன்று தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் கிழக்கு முதலமைச்சர் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே இணக்கப்பாடு எட்டப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரான சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.

இந்நிலையில் ஏனைய கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துவருவதாகவும் அவர் கூறினார்.

(பிபிசி)

Read more...

Friday, January 30, 2015

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீடிக்கும். அத்துரலிய ரத்ன தேரர்.

இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆட்சி முறை நீடிக்கும் என்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதீதமான அதிகாரங்கள் நீக்கப்படும் என்றும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அத்துரலிய ரத்ன தேரர் இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். செவ்வியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கேள்வி பதில் தமிழில் .

கேள்வி- ராஜபக்ச அரசாங்கத்தை கவிழ்பதற்கான பேராட்டத்தில் முன்னனியில் நின்றவர் நீங்கள் தற்போது என்ன கருதுகிறீர்கள்?

பதில்- மக்கள் தற்போது சுதந்திரமாக இருக்கிறார்கள் என கருதுகிறேன், நாங்கள் மிகவும் கடினமான பணியை செய்தோம், அந்த அரசாங்கத்தை வீழ்த்துவது என்பது நினைத்துப்பார்க்கவே முடியாததாக காணப்பட்டது, பொதுமக்களின் வரிப்பணத்தையும், பொதுச் சொத்துக்களையும் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவது குறித்து அவர்கள் சிறிதளவும் கவலைப்படவில்லை, 400 பில்லியன் வரையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக அவர்கள் செலவு செய்திருப்பார்கள், சகல சக்திகளும் இணையாவிட்டால் இது சாத்தியமாகியிராது, ஐக்கிய தேசிய கட்சியால் இதனை தனித்து சாதித்திருக்க முடியாது.

கேள்வி- சமீபத்திய நியமனங்கள் குறித்து உங்களுக்கு திருப்தியா? ஜனாதிபதியின் சகோதரர் குமாரசிங்க ஸ்ரீலங்கா டெலிகோமின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார், மக்கள் குடும்ப ஆட்சி மீள திரும்புகின்றதா என்பது குறித்து அச்சமடையத் தொடங்கியுள்ளனரே?

பதில்- இது குறித்து நான் அறிந்திருக்கவில்லை, ஜனாதிபதிக்கு பல சகோதரர்கள் உள்ளனர், தனது குடும்பத்தவர் ஒருவரை அரச திணைக்களத்தின் தலைவராக நியமிப்பது சட்ட விராதமானதல்ல, அவருக்கு தகுதியிருந்தால் அது பிரச்சினையேயல்ல, அரச திணைக்களங்கள் முழுவதும் ஓரு குடும்பத்தின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்டால் தான் பிரச்சினை.

கேள்வி- 100 நாட்களுக்குள் இதனை செய்வர் சரியா? குறிப்பிட்ட நபருக்கு தகுதியிருந்தாலும் இவ்வாறான நியமனங்களை மேற்கொள்ள கூடாது என நீங்கள் கருதவில்லையா?

பதில்- இந்த தருணத்தில் இது குறித்து என்னால் கருத்து கூற முடியாது,100 நாட்களுக்குள் செய்து முடிக்க வேண்டிய கடினமான முக்கிய பணி அரசமைப்பில் மாற்றங்களே,நிறைவேற்று அதிகார முறையை நீக்குவது மற்றும் தேர்தல் முறைகளில் மாற்றங்களை கொண்டு வருவது குறித்து கட்சிகள் இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும், ஆகவே எங்கள் முன்னுரிமை என்பது அரசியலமைப்பு மாற்றங்கள், சுயாதீன ஆணைக் குழுக்களை ஏற்படுத்துவது தொடர்பானது, ஏனைய விடயங்களை புறக்கணிக்க வேண்டும் என நான் தெரிவிக்கவில்லை,அந்த விடயங்கள் தொடர்பாக தீர்மானம் எடுக்கும் சந்தர்ப்பம் பொதுதேர்தலில் மக்களுக்கு கிடைக்கும். தெரிவு செய்யப்படும் நாடாளு மன்ற உறுப்பினாகளை பொறுத்தே அனைத்தும் அமையலாம்.

கேள்வி- உயர் அரச அதிகாரிகளை நியமிக்கும்போது என்ன நடைமுறையை பின்பற்றவேண்டும்?

பதில்- அரசஅதிகாரிகள் குழாமிலிருந்து நியமிப்பதே வழமையான நடவடிக்கை, பொருத்தமில்லாதவர்கள் நியமிக்கப்பட்டால் அதனை நிறுத்தவேண்டும், மேலும் ஓய்வுபெற்றவர்களை நியமிப்பது, வெளியிலிருந்து நபர்களை கெர்ண்டுவருவது போன்றவற்றையும் நிறுத்த வேண்டும்,

கேள்வி- சில நியமனங்கள் குறித்து கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றனவே, ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ரூபவாஹினி தலைவர் தொடர்பாக-

பதில்- ரூபவாஹினியின் தலைவராக சேமாரட்ண திசநாயக்க நியமிக்கப்பட்டது ஏன் பொருத்தமற்றது என எனக்கு தெரியவில்லை, சிறந்த தகுதி வாய்ந்தவர்கள் எவராவது இருந்தால் அவர்கள் நியமிக்கப்படவேண்டும் என்பது உண்மையே, உரிய தகுதியுடன் எவராவது காணப்படலாம் அவர்கள் நியமிக்கப்படலாம், இவை தற்காலிக மூன்று மாத நியமனங்கள் என நான் கருதுகிறேன், திணைக்களமொன்றின் தலைவர் பதவியை விட அரசமைப்பு மாற்றங்களே எனக்கு முக்கியம்.

கேள்வி- இந்த நியமனங்கள் எல்லாம் தற்காலிகமானவை என்கிறீர்களா?

பதில்- நிச்சயமாக மூன்று மாதத்திற்கு பின்னர் இவை அனைத்தும் மாறக்கூடியவை, அமைச்சரவை பதவிகளும் தற்காலிகமானவை.

கேள்வி- ஜனவரி 21 ம்திகதி நாடாளுமன்றத்தில் அரசமைப்பு மாற்ற யோசனைகளை முன்வைப்பது என் தாமதமானது ஏன்?

பதில்- அரசமைப்பு மாற்றங்கள் குறித்து நீண்ட விவாதம் அவசியம் என நான் கருதுகிறேன், 100 நாள் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள திகதிகள் குறித்து இணக்கப்பாடு ஏற்படவில்லை, நீண்ட விவாதம் சிந்தனைக்கு பின்னர் இதனை செய்ய வேண்டும்,ஓரு மாத காலத்திற்குள் அரசமைப்பு சீர்திருத்த யோசனைகள் நாடாமன்றத்தில் சமர்ப்பிக்கப்ட வேண்டும்.

கேள்வி- ஆகவே அவை பிழையான திகதிகளா?

பதில்- நான் அப்படி தெரிவிக்கவில்லை, ஆனால் யதர்ர்த்தப+ர்வமான பிரச்சினைகள் உள்ளன. மக்கள் இவை அனைத்தையும் 100 நாட்களுக்குள் நிறைவேற்றினால் போதும் என நினைக்கிறார்கள், அவர்கள் எந்த திகதியில், என்ன நாளில் என்பது குறித்து கவலை அடையவில்லை. ஆகவே நாங்கள் பதட்டமடையதேவையில்லை.

கேள்வி - அரசமைப்பு மாற்றங்கள் குறித்து விவாதிக்கிறீர்களா? என்னவகையான நெருக்கடிகள் உள்ளன?

பதில்- பல பிரச்சினைகள் உள்ளன. நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறை ஒழிப்பிற்கும் ஓற்றையாட்சி முறைக்கும் இடையில்தொடர்புள்ளது. நீதிபதி பரின்த ரணசிங்கவின் தீர்ப்பில் இது தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஓற்றையாட்சி முறை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையுடன் தொடர்புபட்டுள்ளது.

இங்கு மூன்று விடயங்கள் உள்ளன. தேர்தல் முறையும் நிறைவேற்று அதிகார முறையும்கூட தொடர்பு பட்டுள்ளன. அது ஓரு தனி அலகு. கடந்த கால தேர்தல் முறையின் கீழ் தனியொரு கட்சி பெரும்பான்மை பெறக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது. எனினும் தற்போதைய முறையின் கீழ் இது கடினமான விடயம். பாராளுமன்றம் எப்போதும் ஸ்திமற்றதாகவே காணப்படும். நேபாளத்தை போல, ஆகவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதையும், தேர்தல் முறைகளில் மாற்றங்களை கொண்டு வருவதையும் ஒரே நேரத்தில் மேற் கொள்ள வேண்டும் நிறைவேற்ற அதிகார முறையும் மாகாணசபைகளும் ஒற்றையாட்சி முறையும் ஓன்றுடன் ஓன்று தொடர்புபட்டுள்ளன, நிறைவேற்று அதிகார முறை ஒழிப்பு இவற்றிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது, இவற்றை கருத்திலெடுத்தே நாங்கள் அரசமைப்பு மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும், விகிதாச்சாரா முறையில் சில சாதகமான விடயங்கள் உள்ளன. 5 வீத வாக்குகளை பெற்றால் சிறுபான்மை கட்சிகள் நாடாளுமன்றத்தில் ஆசனங்களை பெறலாம், ஜேவி.பி, ஜாதிஹஹெல உறுமய போன்ற கட்சிகளுக்கு கூட இதனால் சாதகத்தன்மையுள்ளது. இந்த முறையை நீக்கினால் அவர்களுக்கு இழப்பு ஏற்படலாம்.

ஆகவே முன்னைய தேர்தல் முறைக்கு செல்வது தொடர்பாக கட்சிகள் மத்தியில் இணக்கப்பாட்டை எட்ட முடியாது.

இந்த முறையின் பாதகமான விடயம் என்பது ஒருவர் முழு மாவட்டத்திலிருந்தும் வாக்குகளை பெற வேண்டும், இதற்கு பெருமளவு பணத்தை செலவிட வேண்டும், சில தொகுதிகள் பிரதிநிதித்துவம் செய்யப்படுவதில்லை. இதனால் உணர்வுகளை தூண்டும் முயற்சிகள் இடம் பெறுகின்றன, இதனால் நாங்கள் விகிதாச்சார முறையின் கீழ் காணப்படும் விருப்பு வாக்குகள் என்ற விடயத்தை அகற்ற வேண்டும்.

கேள்வி- நிறைவேற்று அதிகார முறையே ஏதேச்சாதிகாரத்திற்கு வழிவகுத்தது?

பதில்- இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை வரைவிலக்கணப் படுத்தப்பட்ட முறையே பிரச்சினைக்குரியது. அதன் பிரச்சினைகள் குறித்து நாங்கள் ஆராய வேண்டும், தீர்வுகளை காணவேண்டும், ஜனாதிபதி தான் நினைத்தால், நாடாளுமன்றத்தை கலைக்கலாம், அமைச்சரவை பதவிகளை வகிக்கலாம், அமைச்சரவையை மாற்றலாம், பிரதம நீதியரசரை நியமிக்கலாம், நாங்கள் இவற்றை நீக்க வேண்டும் . நாங்கள் இவற்றை நீக்குவது குறித்தே இணங்கினோம், நிறைவேற்று அதிகார முறையை முழுயைமாக நீக்குவது குறித்து அல்ல.

கேள்வி- ஆனால் ஜே.வி.பி போன்ற கட்சிகள் முழுமையான நீக்கதிற்காக குரல் கொடுக்கின்றனவே?

பதில்- கட்சிக்ள அவ்வாறு தெரிவிக்கலாம், வாக்களாளர்கள் மத்தியில் விகிதாச்சார முறை ஓழிக்கப்பட வேண்டும் என்ற விருப்பம் காணப்படுகின்றது, நாங்கள் அனைவருக்கும் பொதுவான ஓரு தீர்விற்கு வரவேண்டும், ஜனாதிபதி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சர்வஜன வாக்கெடுப்பிற்கு அவசியமற்ற மாற்றங்களை மேற் கொள்ளப் போவதாகவே உறுதியளித்தார். நிறைவேற்று அதிகார முறையை முற்றாக நீக்குவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம், ஆகவெ அதனை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை முற்றாக இல்லாமல் போகது.நீடிக்கும்.

கேள்வி- நிறைவேற்று அதிகார முறை நீடிக்குமா?

பதில்- ஆம் அதிலுள்ள தீய, ஆபத்தான அம்சங்கள் அகற்றப்பட்டு அது நீடிக்கும்.

கேள்வி – அரசமைப்பு மாற்றங்களை மேற் கொள்வதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என தெரிவிக்க முடியுமா? மைத்திரிபால நாடாளுமன்ற தேர்தல் விகிதாச்சார முறையின் கீழேயே இடம்பெறும என்றாரே?

பதில்- இதற்கான அழுத்தங்களை நாங்கள் கொடுக்கவேண்டும், இந்த நடவடிக்கை மக்கள் மீது கடும் பாதிப்புகளை ஏற்படுத்தகூடியது.

தேர்தல் சட்ட மாற்றங்களை முதலில் கொண்டுவர வேண்டும், நிறைவேற்று அதிகார முறையை விட மக்கள் அதனையே முதலில் எதிர்பார்க்கின்றனர்,

கேள்வி- வடகிழக்கு இனப்பிரச்சினை குறித்து உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன?

பதில்- நாங்கள் ஒருபோதும் அதனை இனப் பிரச்சினையாக கருதவில்லை, ஆனால் அந்த மக்கள் யுத்தம் காரணமாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளனர், நாட்டில் அதிகளவு போசாக்கின்மை நிலவும் மாவட்டம் கிளிநொச்சி, ஓருதேசமாக நாங்கள் இவற்றிற்கு தீர்வை காணவேண்டும், வேலை வாய்ப்பின்மை, மொழி, கல்வி போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வை காண வேண்டும்,

கேள்வி - தமிழ் மக்களின் இன அடையாளத்தை அங்கீகரிக்கின்றீர்களா?

பதில் - நாங்கள் சகல இனக்குழுக்களதும் அடையாளங்களை அங்கீகரிக்கின்றோம். அத்துடன் அதற்கு மதிப்பளிக்கின்றோம். உங்களுடைய அடையாளத்தை அங்கீகரிக்காமல் என்னால் வாழ முடியுமா?

கேள்வி - நீங்கள் இந்த அரசாங்கத்தின் திரையின் பின்னால் உள்ளீர்களா?

பதில் - நான் திரையின் பின்னால் உள்ளேனா அன்றில் திரையின் முன்னால் உள்ளேனா என்பது எனக்கு தெரியாது. ஆனால் செயற்பாட்டில் உள்ளேன்.

By Niranjala Ariyawansha

Chairman of Jathika Hela Urumaya (JHU), Athuraliye Rathana Thera, says that Parties must come to a consensus regarding the abolition of the executive President's powers and amending the election system. "Therefore, our priority is constitutional amendment and the establishment of independent commissions". Excerpts:


Q:
You were a pioneer in the struggle to defeat the Rajapaksa regime. You vowed to topple the previous regime and did it. What do you think now?
A: I think people feel free now. We did a very difficult task. It was unthinkable to defeat that regime. It was a powerful family rule. They had no ethics in the use of public funds and property for the election campaign. At least Rs 400 billion was spent for the election campaign. We would not have achieved this target if all forces did not join hands. United National Party (UNP)alone would never have done it.


Q:
Are you satisfied about the recent appointments to the various positions. For example, President's brother Kumarasinghe Sirisena was appointed as the Chairman of Sri Lanka Telecom. People have suspicions about the reemergence of a family rule.
A: In fact, I am not aware of it. President has many brothers and sisters. There is no law against appointing a blood relation to a position in a State venture. There is no problem if he has qualifications. If the entire public sector is subjected to family rule, it will be a problem.


Q:
Is it right to do it within the 100 days because these 100 days are crucial. Don't you think that appointments must not be done even though the person has qualifications?
A: I can't comment on this at the moment. The most difficult and highly crucial task of the 100 day programme is constitutional amendment. Parties must come to a consensus regarding the abolition of the executive President's powers and amending the election system. Therefore, our priority is constitutional amendment and the establishment of independent commissions. I don't say other matters must be ignored. But the people have the chance to take action regarding such things at the general election. Everything will depend on the election of the MPs.


Q:
What are the principles followed when appointing the senior public officials?
A: Normal method is appointing officials from the pool of public administrators. But it must be stopped if unsuitable persons are appointed. In the same way, the parachutists and the retired persons also must be avoided.


Q:
There are serious allegations against some appointments. For example, the appointment of
P.B. Abeykoon as President's Secretary and Dr. Somaratna Disanayaka as the Chairman of Sri Lanka Rupavahini Corporation, have been challenged. You could have appointed a better person with a broader vision as the Chairman of SLRC?
A: I don't know why Dr. Somaratna Disanayaka is not suitable. It is true that a better person must be appointed, if there is any. There is no argument against it. I don't have an idea that he is corrupt. There may be better qualified persons. One of them can be appointed next. I think these are temporary three-month appointments. For me, the constitutional amendment is more important than the position of chairman of an institution.


Q:
Do you mean all these appointments are temporary?
A: Definitely, all these will change after three months. These Ministerial portfolios are also temporary.


Q:
The constitutional amendment proposed to be tabled in the Parliament by January 21 was delayed. What is the reason?
A:  I think the constitutional amendment must be debated at length. The dates in the 100 day programme were not on consensus of all sections. We must do it with deep contemplation and debate. The constitutional amendment must be tabled in the Parliament within a month.


Q:
Were the dates false?
A: I don't say so. But there are practical problems. I don't think the people will demand the timetable. They want all these to happen within 100 days. Therefore, we must not panic. We must be thoughtful for errors not to occur.


Q:
Why did you make a timetable? People are hopeful of it?
A: The tasks are streamlined due to a timetable. People are prompted to work on schedule. You also question me because we set a timetable. It is a good way. The most important thing is passing the constitutional amendment within three months.


Q:
Is there a discussion about the constitutional amendment now? What are the problems that have arisen?
A: There are many problems. There is a problem about the unitary nature of the State with the abolition of executive presidency. It is clearly mentioned in a judgment delivered by Justice Parinda Ranasinghe. The unitary nature of State is linked to the executive presidency. There are three facts. The electoral system and the executive are also connected. It is a single unit. One party gets a clear majority when the elections are held under the old first-past-the-post system but achieving majority power is difficult under the proportionate representation system. Parliament is always unstable. Parliament can collapse often like in Nepal. We must not let the country suffer such instability. Therefore, the abolition of the executive presidency and the reforming of the electoral system must go hand in hand.


The unitary state was safeguarded with the Provincial Councils due to the executive President. Abolition of the executive presidency shakes these three aspects. We must amend the Constitution balancing all these. It is a challenge to form a stable government while abolishing a stable government. Proportional representation has positive characteristics. The most important aspect is that the minority parties can have parliamentary representation if they have 5% of the votes. The minor parties like JHU and JVP are advantaged due to this factor. If we abolish the executive presidency, the parties like JVP may lose that opportunity.
Therefore, we cannot build a consensus among parties to go back to the old first-past-the-post system. But we must make the amendment in a way stability is guaranteed in the Parliament.


The bad side of the proportional representation system is that one has to collect votes from the entire district. A large sum of money is needed for that. Some electorates do not get representation. Caste and creed divisions are roused. Therefore, we must abolish the preferential voting system under proportional representation.


Q:
The executive presidency led the country to authoritarianism?
A: The problem is in the way the executive presidency was defined in Sri Lanka. We have to discuss such problems of the executive presidency. We must find solutions to those problems. The President can dissolve the Parliament as he wishes. The President can hold Cabinet portfolios as he wishes. The President can reshuffle the Cabinet. The President can appoint judges to the Supreme Court. We must abolish these characteristics. We agreed to abolish these characteristics and not to abolish the executive presidency entirely.


Q:
But the parties like JVP demanded the abolition of executive presidency entirely.
A: Parties can say so. There is a demand among voters to abolish the preferential voting system. Some ask to abolish it completely. But we have to seek the middle path. Maithripala Sirisena promised in his manifesto not to go for amendments which need a referendum. Amendment of the executive presidency needs to be subjected to a referendum. Therefore, the executive presidency will not be abolished completely.


Q:
Will the executive presidency exist?
A: It will exist without the bad characteristics.


Q:
Can you say how long it will take to amend the Constitution? President Maithripala Sirisena has said that the parliamentary election will be held under the proportional representation system.
A: We must apply pressure on this. This is the move which has the highest effect on the people. The electoral amendment act must be first brought. People want it more than the abolition of executive presidency. We could have taken the legislative council separately and priority could be given to it. We must bring these amendments as early as possible.


Q:
The main slogan of the new government was bringing the wrongdoers to book. But people think it has not happened?
A: We cannot implement the law within a couple of weeks. Information is gathered now. An independent institution is being formed under the government. I hope several cases will be filed within the coming couple of weeks.


Q:
There is a complaint against the President of the Bribery or Corruption Commission also which has been filed by the JVP on 01 January 2014. Do you expect justice with regard to the complaints lodged in the Bribery or Corruption Commission in this context?
A: I think the President of the Bribery or Corruption cannot be removed.


Q:
Isn't there any methodology to remove him?
A: Actually I don't know about that methodology.


Q:
President Maithripala Sirisena promised to limit the Cabinet to 30 numbers. But 11 State Ministers have been appointed. What are these new positions?
A: State Ministers have responsibilities regarding the State departments. In fact, I have no objections against this. We can have a limit of 30. But the most important factor is getting the support of the entire Parliament for the constitutional amendment coming ahead. We need two-third majority support for that. We must build consensus when we form the Cabinet. We have to appease all sections. We must pass the constitutional amendment within three months. The number of Ministers of the Cabinet must be written in the Constitution. We believe the number must be less than 30. I personally think 25, is sufficient. We have to proceed with the present Parliament until these things are done. Therefore, we must not take the number of Ministers too seriously at this moment.
This is a national government of which the Cabinet is formed with the unity of the two major parties in mind. There can be some increase of number in the distribution of portfolios. But this is only for three months. We must say it to the people.


Q:
Can you guarantee that these appointments are only for three months?
A: Definitely, the number of the Cabinet portfolios will be 30 after the constitutional amendment. I take the responsibility for this statement. No one can surpass the limits stipulated by the Constitution. The future governments will not be national governments like this. This is a transition government. We cannot move forward with a conflict between the two major parties. No one can do the constitutional amendment alone. We need the majority support.


Q:
People suspect that the support gained from corrupt politicians may boomerang?
A: If so, we have to remove 25 to 30 corrupt MPs. Who will pass the constitutional amendment then? People must understand it. There are corrupt people everywhere and we must complain against them. We must not expect everything from public officials. We must protest against the inefficient officials. We always try to build up that tradition. We must apply pressure to remove the President of the Bribery or Corruption Commission. Media, social activists and people have responsibility in regard of this within these three months.
I will appear for the removal of the excess Ministers after the Constitution is passed. Then the entire country will know the number of Cabinet Ministers. If there is a conflict we can dissolve the Parliament. But we must amend the Constitution before that.


Q:
Whom should the people complain to regarding the corruption and frauds?
A: There are two institutions. One is Anti Corruption Commission and the other is the official institution comprised of the party leaders. Both have lawyers. The complaints must be submitted with the documentary proof. We must make 10-12 real complaints instead of filing a large number of complaints without proof.


Q:
People think it is wrong from the side of the government allowing some corrupt politicians to flee the country?
A: They can be brought back through Interpol when they are legally accused of corruption.


Q:
Will JHU contest future general election alone as a party?
A: We can contest from either the SLFP or the UNP. We also can form a third force merging with the JVP. But we have not discussed any of these moves yet.


Q:
Can the collapse of JHU have an impact on a future election?
A: What collapse? We are the winners. We are a group of highly respected leaders now. The entire country knows how we contributed to topple the Rajapaksa regime. A party may not collapse due to the change of a few individuals. We were further strengthened. If we collapsed we had to be defeated. A large number of people have joined the party. We are now engaged with the problems of the peasants, environmental issues and good governance etc. We are respected since we have represented these problems better than the traditional left parties.


Q:
JHU General Secretary Champika Ranawaka said in an interview with Ceylon Today, that all the parties must change their conventional hard stances. Is JHU ready to change its hard stance on Sinhala Buddhist nationalism?
A: We have never spoken of a Sinhala Buddhist base.


Q:
But it was the identity of the JHU.
A: That is true.


Q:
Isn't it the creation of your party?
A: No. The majority of the people of the country were in unrest since they thought the two major parties had surrendered to terrorism. That is why the war was dragging for 30 years. The polity wanted to raise the issue from the viewpoint of the Sinhala Buddhists. We represented it but the people thought we were a Sinhala Buddhist party. In this Presidential, election we proved that we are a broad minded party.


Q:
What is your policy?
A: Building this country is our policy. We must take the country to a broad national policy which all communities can support.


Q:
A section of the society takes you as racists. Will you be able to correct this idea for the sake of your aim?
A: That idea has almost been wiped out now. Nobody calls us racists now. Personally, I was never a racist. Opposing terrorism is not racism. I don't expect Champika Ranawaka or any other will act in a narrow racist perspective. Although we struggle to safeguard the major culture of the country, we do not act against other cultures. Our party will never do so. We have never thought of destroying another culture. But we have acted against the extremisms that are against the commonness of the polity.


Q:
What is the stand of the JHU regarding the ethnic problem of the people of the North and the East?
A: We have never seen an ethnic problem. We have not seen a separate ethnic problem of the people of the North and the East. But those people were affected economically due to the war. For instance, Kilinochchi is one of the districts which has highest ratio of malnutrition. We must provide solutions to these problems as a nation. We must also resolve issues like employment, language, administration and education.


Q:
Do you minimize the ethnic problem to mere economic issue?
A: Resolving of economic problems may reduce the emergence of nationalist issues. Certain groups read the economic problems in nationalist angles. For example, the JVP rose in late 1980s against Indo-Lanka Peace Accord. But the report of the Youth Unrest Commission points to rural poverty as the root cause for the revolt. Whatever the expression of the struggle, the economic difficulties of the people are at the core of the fight. There is the possibility for subduing the nationalist trends when the economic problems are resolved.


Q:
Do you recognize Tamil ethnic identity?
A: We recognize and respect the ethnic identity of any group. Can I exist without accepting your identity? No.


Q:
Are you satisfied about the path of the government?
A: The government is not ideal but we believe that we can achieve our targets.


Q:
Can people be hopeful about this government?
A: Constitutional amendment, relief and actions against corruption will take place during this probationary period. I think the most important thing people can expect from this government is the constitutional amendment. People can elect a new government after that. People can drop out the corrupt politicians. We must be hopeful of such government. We cannot build up national policies during this probationary period. The new government must build up permanent national policies for all sections.


Q:
Are you behind the screen of this government?
A: I don't know if I am behind the screen or before the screen but I am active.



Read more...

அரசியல் மாற்றத்தின் பிரதிபலிப்பே புதிய வரவு செலவுத் திட்டம். ஜேவிபி

தற்போதைய அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டம், நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் பிரதிபலிப்பு என, எனக் குறிப்பிட்டுள்ள மக்கள் விடுதலை முன்னணி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றிருந்தால் இவ்வாறான ஒரு இடைக்கால வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருக்க மாட்டாது எனவும் கூறியுள்ளது.

இன்று பத்தரமுல்லையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது,

வரிச்சுமை மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்த மக்கள் மாற்றம் ஒன்றை எதிர்பார்த்தனர்.

இந்த போராட்டத்தின் பிரதிபலிப்பாகவே தற்போது மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

சிரமங்களை எதிர்நோக்கி வந்த மக்களுக்கு சிறிய நிவாரணம் கிடைத்துள்ளது. இவற்றை விட மக்கள் அதிக நிவாரணத்தை எதிர்பார்க்கின்றனர். எனினும் கிடைத்துள்ள நிவாரணத்தை பார்த்து எம் போல் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் எனக் குறிப்பிட்டார்.

மேலும், இம்முறை இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, அத்தியவசியப் பொருட்களுக்கான விலை குறைப்பு, கெசினோ போன்றவற்றுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளமை குறித்தும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

மேலும் தனியார் ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வு வழங்குமாறு நிதி அமைச்சர் வரவு செலவுத்திட்டத்தில் கோரிக்கை முன்வைத்துள்ளமை குறித்தும் விஜித ஹேரத் இங்கு கருத்து வௌியிட்டார்.

அவர் கூறியதாவது,

தனியார் ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வு வழங்குமாறு நிதி அமைச்சர் கூறியுள்ளார். வரவு செலவுத்திட்டத்தில் இதற்காக நிதி ஒதுக்கப்படவில்லை. எனினும் இது குறித்து சட்டத்தை பயன்படுத்த முடியும்.

2005ம் ஆண்டு எமது தலையீட்டில் தனியார் ஊழியர்களுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்பட்டது.

2005/36 மசோதாவை நிறைவேற்றியதன் மூலம் இந்த சம்பள உயர்வு கிட்டியது. இதன்படி 2500 ரூபா சம்பள அதிகரிப்பை சட்ட ரீதியாக மேற்கொள்ள இரு வழிகள் உள்ளன.

அதுதான் 2005/36 சட்ட திருத்தத்தைக் கொண்டு வருவது அல்லது இது குறித்து புதிய சட்டத்தை அமைச்சரவையில் நிறைவேற்றுவது, எனக் குறிப்பிட்டார்.

இதேநேரம் புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் பொருளாதார கொள்கைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை என ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் நெருங்கிய போது கடந்த அரசாங்கமும் விலைக் குறைப்புக்கைள செய்ததாகவும், மக்கள் அதனை புரிந்து கொண்டு அரசாங்கத்தை தோற்கடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள சலுகைகள் மக்களின் வாழ்க்கைச் செலவை குறைக்கும் என்ற போதிலும், தெளிவான பொருளாதாரக் கொள்கைகள் தந்திரோபாயங்கள் வரவு செலவுத் திட்டத்தில் தென்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நோக்கில் இந்த வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நீண்ட கால குறுகிய கால பொருளாதாரக் கொள்கைகள் தந்திரோபயங்களை இந்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் காண முடியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read more...

ராகுல், சோனியாவை 'அம்பலப்படுத்திய' ஜெயந்தி நடராஜனின் கடிதம்

தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட தனக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நெருக்கடி கொடுத்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தவர் ஜெயந்தி நடராஜன். அமைச்சர் பதவியை தான் ராஜினாமா செய்த பிறகு கட்சியில் தான் புறக்கணிக்கப்படும் விதம், அதனால் தான் அடைந்துள்ள மன உளைச்சல், தான் குற்றமற்றவர் என்பவர் நிரூபிக்க முடியாமல் அடைந்துள்ள தவிப்பு ஆகியனவற்றை பதிவு செய்யும் வகையில் சோனியா காந்திக்கு ஜெயந்தி நடராஜன் மிகவும் காட்டமாக ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதம் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.

அக்கடிதத்தின் முக்கிய அம்சம்:

"காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியிடம் இருந்து தொடர்ச்சியாக எனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தடையில்லா சான்றிதழ் வழங்கும்படி நெருக்கடி அளிக்கப்பட்டது.

ராகுல் காந்தியாலும், கேபினட் அமைச்சர்கள் சிலராலும் தொடர்ந்து நெருக்கடி அளிக்கப்பட்டபோதும், மிகப்பெரிய திட்டங்களுக்கு தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக சலுகை அளிக்க மறுத்தேன். அவ்வகையில், ராகுல் காந்தியின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்தேன்.

எப்போது, ராகுல் காந்தி தனது நிலைப்பாட்டை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஆதரவாக இருப்பதில் இருந்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக மாற்றிக் கொண்டாரோ அதன் பிறகே, பொய்யான, உள்நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ஊடக பிரச்சாரங்களுக்கு நான் பலியாக நேர்ந்தது" என தெரிவித்துள்ளார்.

வேதாந்தாவும் - பழங்குடியினரும்

ஒடிசாவில் நியாம்கிரி மலையில் பாக்சைட் தாது வெட்டி எடுக்க சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தடையில்லா சான்றிதழ் கோரி வேதாந்தா நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. ஆனால், தனது சகாக்களிடமிருந்து நெருக்கடி, மேலிட அழுத்தம், கார்ப்பரேட் விமர்சனம் என பன்முனை தாக்குதலுக்கு ஆளானாலும், வேதாந்தா கோரிக்கையை நிராகரித்து பழங்குடிவாழ் மக்களின் நலனை பாதுகாக்க வேண்டும் என்பதில் தான் உறுதியாக இருந்ததாக ஜெயந்தி நடராஜன் கூறியுள்ளார்.

இதேபோல் அதானி நிறுவனத்திற்கான ஒரு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க, குஜராத் காங்கிரஸ்காரர் தீபக் பபாரியா என்பவருடன் பேசி உள்ளூர் என்.ஜி.ஓ.க்கள், மீனவ சமுதாயத்தினர் எப்படி சரிகட்டுவது என்பதை பார்க்குமாறு ராகுல் நெருக்கடி கொடுத்தார் எனவும் ஜெயந்தி கூறியுள்ளார்.

மேலும், "ஜி.வி.கே. பவர் பிராஜக்ட், லவாஸா திட்டம், நிர்மா சிமெண்ட் திட்டம் போன்ற சில தொழிற் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக நானே சுயமாக முடிவெடுக்க அதிகாரம் அளித்து எனக்கு நீங்களே (சோனியா காந்தி) கடிதம் எழுதியிருந்தீர்கள். அதை மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்" என மேற்கோள் காட்டியுள்ளார்.

மக்களவை தேர்தல் நடைபெறுவதற்கு சரியாக 100 நாட்களுக்கு முன்னதாக டிசம்பர் 2013-ல் ஜெயந்தி நடராஜன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அப்போது அவர் நானே தான் ராஜினாமா செய்கிறேன், எனக்கு எந்த நெருக்கடியும் இல்லை என கூறியிருந்தார்.

ஆனால், சோனியாவுக்கு இப்போது அவர் எழுதியுள்ள கடிதத்தில், "நான் ஏன் அமைச்சர் பதவியில் இருந்து திடீரென நீக்கப்பட்டேன் என்பதற்கான காரணம் இன்று வரை எனக்குத் தெரியாது" என குறிப்பிட்டுள்ளார்.

30 ஆண்டு காலமாக எனது களங்கமற்ற அரசியல் வாழ்க்கைக்கும், என் குடும்ப பெருமைக்கும் ஊறு விளைவிப்பதுபோல் ஊடகங்களில் என் மீது விமர்சனங்கள் எழ மேலிட நெருக்கடிக்கு நான் வளைந்து கொடுக்காததே காரணம் என அக்கடிதத்தில் ஜெயந்தி நடராஜன் கூறியுள்ளார்.

ஜெயந்தியின் கடிதத்திற்கு, சோனியா காந்தியிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை. தவிர, சோனியா காந்தியை நேரில் சந்தித்து தன் மீதான வீண் பழிகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும் என ஜெயந்தி பல முறை முயன்றும் அதற்கான சந்தர்ப்பமும் அமையவில்லை.

ஜெயந்தி நடராஜன் பதவி விலகுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் அதானி நிறுவனம் தொடர்பான முக்கியமான கோப்பு ஒன்று அவரது அலுவலகத்திலிருந்து காணாமல் போனது. பெருமுயற்சிக்குப் பின்னர் அதை ஜெயந்தி மீட்டார்.

இந்த சம்பவமும், மேற்கு தொடர்ச்சி மலைகள் தொடர்பாக கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்ததும் தனக்கு எதிரிகளை உருவாக்கியதாகவும் ஜெயந்தி நடராஜன் குறிப்பிட்டுள்ளார்.

மோடியை விமர்சிக்க நிர்ப்பந்தம்:

"துறை சார்ந்த அழுத்தங்கள் தவிர, இளம்பெண் வேவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நரேந்திர மோடியை விமர்சிக்குமாறும் எனக்கு அழுத்தம் தரப்பட்டது. நான் எப்போதுமே விமர்சனம் என்பது கொள்கை சார்ந்ததாக இருக்க வேண்டுமே தவிர தனிநபர் சார்ந்ததாக இருக்க வேண்டாம் என நினைப்பேன். ஆனால், என் கொள்கைக்கு எதிராக மோடியை விமர்சிக்க நிர்பந்திக்கப்பட்டேன்" என்றும் ஜெயந்தி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

ஶ்ரீசுக உறுப்பினர்கள் பலருக்கு வேட்பு மனு இல்லை!யாழில் வெற்றிலையா? வீணையா!

எதிர்வரும் ஏப்ரல் 24ம் திகதி பாராளுமன்று கலைக்கப்பட்டு புதிய பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இத்தேர்தலுக்கான தயார்ப்படுத்தல்களில் கட்சிகள் இறங்கியுள்ளது. நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் சகல கட்சிகளிலுருந்தும் பலருக்கு வாய்ப்புக்கள் அற்றுப்போகும் சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது.

இவ்வாய்புக்கள் அற்றுப்போகும் அபாயத்தை எதிர்நோக்கும் உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலேயே உள்ளனர். முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, நிஷாந்த முத்துஹெட்டிகம, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, அருந்திக்க பெர்ணான்டோ, கருணா அம்மான், துமிந்த சில்வா, ரோஹித்த அபேகுணவர்தன, சரண குணவர்தன ஆகியோர் முக்கியமான நபர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இவர்களுக்கு எதிராக ஊழல், மோசடிகள் உட்பட ஏனைய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதால், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

இதேநேரம் எதிர்வரும் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் வெற்றிலை சின்னத்தில் ஈபிடிபி போட்டியிட முடியாது செல்லலாம் என தெரிவிக்கப்படுகின்றது. யாழ் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தோர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஈபிடிபியை இணைத்துக்கொள்ளக்கூடாது என அழுத்தம் கொடுப்பதாகவும் அறியக்கிடைக்கின்றது.

மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள்ளும் இவ்விடயத்தில் குத்துக்குடையல்கள் ஆரம்பமாகியுள்ளது. தமிழரசுக் கட்சியினர் அதிக பட்சமான ஆசனங்களை நிரப்ப முயற்சிகளை மேற்கொள்வதாகவும் பங்காளிக்கட்சிகள் நாம் தனித்து போட்டியிடுவோம் என்ற மிரட்டலுக்கு ஆரம்பமாகியுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

இதேநேரம் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தன்னிடம் உறுதியளித்திருப்பதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதனை அறிந்த மோசடி பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு பெறுவதற்காக அமைச்சர் ராஜித சேனாரத்னவை பின் தொடர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more...

தலைமை நீதியரசராக கே. ஸ்ரீபவன் பதவியேற்றார்.

இலங்கையின் 44 வது தலைமை நீதியரசராக கே.ஸ்ரீபவன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க ஒய்வு பெற்றுள்ள நிலையிலேயே கே. ஸ்ரீபவன் புதிய தலைமை நீதியரசராக நியமனம் பெற்றுள்ளார்.

யாழ். இந்துக் கல்லூரியில் கல்வி பயின்ற கே. ஸ்ரீபவன் 1974 ம் ஆண்டு சட்டக் கல்லூரியில் இணைந்து கொண்டார். அதன் பின்னர் 1978 ம் ஆண்டு சட்டத்தரணியாக சத்தியபிரமாணம் செய்துகொண்ட ஸ்ரீபவன், 1979-ம் ஆண்டில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரசதரப்பு வழக்கறிஞராக இணைந்துகொண்டார்.

24 ஆண்டுகள் சட்டமா அதிபர் திணைக்களத்தில் கடமையாற்றிய ஸ்ரீபவன், 2002 ம் ஆண்டு மேன்முறையிட்டு நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.

2008-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதியரசராக பதவியேற்ற கே. ஸ்ரீபவன் 2013 ம் ஆண்டு பதில் தலைமை நீதியரசராகவும் பணியாற்றியிருந்தார்.

இலங்கையில் 1991-ம் ஆண்டில் 39-வது தலைமை நீதியரசராக ஹேர்பட் தம்பையா பணியாற்றியிருந்தார்.

அதற்கு முன்னதாக, 1984-ம் ஆண்டு முதல் 1988ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தலைமை நீதியரசராக பணியாற்றிய சுப்பையா சர்வானந்தா இந்தப் பதவியில் இருந்த முதல் தமிழர் ஆவார்.

43-வது தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பதவியகற்றும் தீர்மானம் சட்டமுரணானது என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தீர்ப்பு வழங்கிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழுவில் நீதியரசர் கே.ஸ்ரீபவன் அங்கம் வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



Read more...

பிராஸ் நாட்டு பத்திரிகைக்கு எதிராக குருநாகலில் ஆப்பாட்டம். பிராண்ஸ் தேசியக் கொடி எரிப்பு!

உலகளாவிய முஸ்லிம்களை நையாண்டி பண்ணி பிரான்ஸில் வெளிவரும் சார்லி ஹப்டோ பத்திரிகைக்கும் அதில் வெளியான கார்டூனுக்கு எதிராகவும் இன்று குருநால் நகரிலுள்ள பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் முன்னால் ஜும்ஆத் தொழுகைக்குப் பிற்பாடு; ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குருநாகல் பஸார் வாலிப சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மதங்களை நிந்திக்காதே, பிரான்ஸ் நாட்டுப் பொருட்களைத் தடை செய், ஊடக சுதந்திரத்தை இழிவு படுத்தாதே, அல்லாஹ். நபி (ஸல்) அவர்களை இழிபடுத்துபவர்களை நாசம் பண்ணிவிடு போன்ற பல வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கைகளில் ஏந்தி கோசமெழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மாவத்தகம பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கட்சித் தலைவர் முஹமட் ரிபாழ், நசார் ஹாஜியார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பிரான்ஸ் நாட்டுக்கு இது தொடர்பாக மகஜர் கையளிக்கவுள்ளதாகவும் பிரான்ஸ் கொடியை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீயிட்டுக் கொளுத்தினர்.

இக்பால் அலி












Read more...

Friday, January 23, 2015

டக்கிளசுக்கான பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டமை தொடர்பில் முதலைக்கண்ணீர் வடிக்கின்றார் விமல்வீரவன்ச.

முன்னைநாள் அமைச்சரும் ஈபிடிபி என்கின்ற ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான கே.என் டக்ளஸ் தேவானந்தாவிற்கான பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக முன்னைநாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல்வீரவன்ச கடந்த பாராளுமன்ற அமர்வில் கவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் பாராளுமன்றில் பேசிய வீரவன்ச கடந்த சுமார் முப்பது வருடகால யுத்தத்தில் சுமார் 24 வருடங்கள் (80 விழுக்காடு காலப்பகுதி) மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகளின் புலிகளுக்கு எதிரான போருக்கு தோழோடு தோழ் நின்று உழைந்த தலைவரது பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது என்றும் புதிய அரசின் இச்செயற்பாட்டினூடாக அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால் புதிய அரசு டக்ளஸ் தேவானந்தாவிற்கு புலிகளால் அச்சுறுத்தல் உள்ளதா என்பதை பரிசீலனை செய்யாது பாதுகாப்பினை வாபஸ்பெற்றுள்ளதா என்பதை அறியாது மேற்படி கவலையை வெளியிட்டுள்ளாரா அன்றில் தொடர்ந்தும் சிங்கள மக்களுக்கு புலிப்பீதியேற்றுவதற்காக நீலிக்கண்ணீர் வடித்துள்ளாரா என்பதே இங்கு எழுகின்ற கேள்வியாகும்.

ஈபிடிபி யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு இன்று பாதுகாப்பு அவசியமற்ற ஒன்றாகும் காரணம் தற்போது ஈபிடிபி அமைப்பின் அதிக தொகையினர் முன்னாள் புலிகளாகவுள்ளனர். இறுதி யுத்தத்தில் சரணடைந்த இவர்கள் இன்று ஈபிடிபி உறுப்பினர்களாகமாறியுள்ளதுடன் புலம்பெயர் தேசத்திலிருந்து யாழ்குடாநாட்டில் கால்பதித்துள்ள புலிகளும் டக்ளசின் வியாபாரச் சகாக்களாக மாறியுள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த பல ஈபிடிபி உறுப்பினர்கள் அவ்வமைப்பை விட்டு வெளியேறியுள்ளதுடன் அவர்கள் டக்ளசின் புலிகளுடனான கூட்டை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் டக்கிளசின் உயிருக்கு புலிகளால் எந்த ஆபத்தும் இல்லை. அதற்கும் மேலாக ஏதும் நிகழுமாயின் அது ஈபிடிபி யின் உள்வீட்டுப்பிரச்சினை.

இந்நிலையில் டக்ளசுக்கு பாதுகாப்பு வழங்குவதை விடுத்து புலிகளுடன் இரண்டரக்கலந்துள்ள டக்ளஸ் மீண்டும் மஹிந்தவை கொண்டுவருவதற்கு மேற்கொள்ளக்கூடிய தேசவிரோத செயல்கள் தொடர்பில் அவதானம் செலுத்துவது அவசியமானதாகும்.




Read more...

Thursday, January 22, 2015

துபாய் மாநகரில் அவசர உதவி பட்டன், பாதுகாப்பு கேமரா, திரையுடன் சூரிய ஒளியில் இயங்கும் ஸ்மார்ட் விளக்கு கம்பங்கள்!

துபாயில் “ஸ்மார்ட் கைடன்ஸ் பில்லர்” எனப்படும் “ஸ்மார்ட் விளக்கு கம்பங்கள்” சோதனை முயற்சியாக‌ விரைவில் நடப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. இந்த கம்பங்கள் சூரிய சக்தியினால் இயங்கக்கூடிய தெரு விளக்குகளுடன் அமைய உள்ளது. இந்த விளக்கு கம்பங்களில், கேமராவுடன் கூடிய ஒரு அவசர அழைப்பு பட்டன் இருக்கும் எனவும் இதன் மூலம் ஆபத்து காலங்களில் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க முடியும் எனவும் இண்டெர்செகின் மூத்த அதிகாரி தெரிவித்தார். துபாயில் உலக இண்டெர்செக் 2015 கண்காட்சி ஜனவரி 18 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. இண்டெர்செக் கண்காட்சி உலகின் மிகப்பெரிய பாதுகாப்பு தொடர்பான கண்காட்சியாகும். 54 நாடுகளில் இருந்து 1,237 நிறுவனங்களின் 2000 தயாரிப்புகள் காட்சிபடுத்தப்பட்டது . இண்டெர்செக் கண்காட்சியில் அனைவரின் பார்வைக்கு “ஸ்மார்ட் கைடன்ஸ் பில்லர்கள் வைக்கப்பட்டிருந்தது.

கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருக்கும் இந்த ஸ்மார்ட் கைடன்ஸ் பில்லரில் சூரிய சக்தியினால் இயங்கக்கூடிய விளக்கு, கண்காணிப்பு கேமரா, அவசர கால பட்டன், ஒரு எலக்ட்ரானிக் திரை ஆகியன இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியைப் பயன்படுத்தி அவசரகாலங்களில் ஏற்படும் ஆபத்துக்கள், சாலை விபத்துக்கள், தீ விபத்துக்கள்,போன்ற அவசர கால உதவிகளை பெறலாம் என தெரிவித்தனர். ஸ்மார்ட் கைடன்ஸ் பில்லர்கள் துபாய் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் துபாய் சிலிகான் ஒயாசிஸ் ஆணையம் (DSOA) அதன் கட்டுப்பாட்டு பகுதிகளில் சோதனை முறையில் நிறுவ உள்ளதாகவும், பிறகு நகர் முழுவதும் இத்திட்டம் விரிவு படுத்தப்படும் எனவும் இந்த ஆணையம் தெரிவித்திருக்கிறது.

இந்த முயற்சி DSOA ஃப்ரீ ஜோன் (Free Zone) பகுதியில் அமைய உள்ள ஸ்மார்ட் நகரின் துவக்கமாக அறிமுகபடுத்தப்படவுள்ளது, முதற்கட்டமாக 100 ஸ்மார்ட் கைடன்ஸ் பில்லர்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. இதன் மூலமாக 24/7 நேரடி வீடியோ மூலம் கட்டுப்பாட்டு அறைகளில் நிகழ்வுகள் கண்காணிக்கப்படும், அவசர காலத்தில் பட்டனை அழுத்திய உடன் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு அங்குள்ள அதிகாரிகளுடன் இணைக்கப்படும்.

இதன் மூலம் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு அந்த இடத்தில் என்ன நிகழ்கிறது, பேசுவது யார், என்ன பிரச்சனை என்று துல்லியமாக அறிந்து அதற்கேற்ப நடவடிக்கைகள், உதவிகள் எடுக்கப்படும் எனவும் கூறினர். இந்த ஸ்மார்ட் கைடன்ஸ் பில்லர்களில் உள்ள எலக்டிரானிக் திரை அவசர கால செய்தியை காட்டும், இதன் மூலமாக அனைத்து ஸ்மார்ட் கைடன்ஸ் பில்லர்களும் இந்த அவசர செய்தியை தெரியும்படி செய்து அனைவரையும் எச்சரிக்கவும், அவசர கால தகவல்களை மக்களுக்கு கொண்டு செல்லவும் இந்த வசதி பயன்படும்.

Read more...

Monday, January 19, 2015

ஏகாதிபத்திய போர், “பயங்கரவாதத்தின் மீதான போரும்” ஜனநாயகத்தின் முடிவும்! Chris Marsden

சார்லி ஹெப்டோ ஊழியர்களும் அதன்பின் பணயக் கைதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதில் அதிர்ச்சியடைந்திருப்போர் முற்றுமுழுதான ஊடகச் செய்திகளாலும் “உணர்ச்சியற்ற கொடூரம்” குறித்த பாசாங்கான கண்டனங்களாலும் தமது திறனாயும் தன்மைகள் மழுங்கடிக்கப்படுவதை அனுமதித்து விடக் கூடாது.

ஜனவரி 7 அன்றான பயங்கரவாதத் தாக்குதல் முதலாக, கொலைகளால் உருவாக்கப்பட்டிருக்கும் குழப்பம் மற்றும் நோக்குநிலைதவறிய நிலைகளைப் பயன்படுத்தி பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் அரசாங்கம் 10,000 துருப்புகளையும் ஆயிரக்கணக்கிலான போலிசாரையும் குவித்திருக்கிறது. “பயங்கரவாதத்திற்கு எதிரான, ஜிகாதியிசத்திற்கு எதிரான, தீவிரப்பட்ட இஸ்லாமிற்கு எதிரான” ஒரு போரில் பிரான்ஸ் ஈடுபட்டிருப்பதாக பிரதமர் மானுவல் வால்ஸ் அறிவித்திருக்கிறார். Le Monde தனது ஜனவரி 8 பதிப்பின் தலைப்புச் செய்திக்கு “பிரான்ஸின் செப்டம்பர் 11” என்று தலைப்பிட்டது.

வெளிநாடுகளில் நவகாலனித்துவ போர்களையும் சொந்த நாட்டில் ஒடுக்குமுறையையும் விரிவுபடுத்துவதற்காய் பாரிஸ் பயங்கரவாதத் தாக்குதல்கள் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்ற விடயம் ஈராக்கில் ISIS படைகளுக்கு எதிராக பிரெஞ்சு வான்வழித் தாக்குதல்களை விரிவுபடுத்துவதற்கு ஆதரவாக பிரான்சின் தேசிய சட்டமன்றத்தில் செவ்வாயன்று 488 க்கு 1 என்ற விகிதத்தில் வாக்குகள் பதிவானதில் அடிக்கோடிடப்பட்டுக் காட்டப்பட்டது.

கால்வாய்க்கு அப்பால் பிரிட்டனில், பிரதமர் டேவிட் கேமரூனின் அரசாங்கம் அரசுக் கண்காணிப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கும் இணைய மறைகுறியீட்டு (encryption), முறையை பயன்படுத்துவதற்கு தடைவிதிப்பது உள்ளிட கருத்து சுதந்திரம் மற்றும் அந்தரங்கத்திற்கான உரிமைகளை வெட்டிக் குறைப்பதற்கான புதிய நடவடிக்கைகளுக்கும் சூளுரைத்திருக்கிறது. ஐரோப்பிய எல்லைக் கட்டுப்பாடுகளை மறுஅறிமுகம் செய்வது உள்ளடங்கலான இதேபோன்ற கோரிக்கைகள் கண்டமெங்கிலும் அரசாங்கங்களால் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஒரு வாரத்துக்கு முன்பு 17 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கான பதிலிறுப்பாகத்தான் இத்தனை பெருமளவிலான நடவடிக்கைகள் அமுல்படுத்தப் பெறுகின்றன என்று கூறுவது நம்பக்கூடியதல்ல. அவர்கள் ஜனவரி 7 க்கு நீண்ட காலம் முன்பே தயாரிப்புகளில் இருந்தனர். “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற பேரில் முன்னதாக எடுக்கப்பட்டு வந்த ஜனநாயக-விரோத நடவடிக்கைகளது ஒரு பரந்த வரிசையின் மீது அவர்கள் மேலும் கட்டியெழுப்புகின்றனர்.

சர்வதேச வெளிப்பாடுகளிலும் சரி உள்நாட்டு வெளிப்பாடுகளிலும் சரி இந்தப் ”போரின்” நோக்கம் முக்கிய ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையில் உலகம் மறுபங்கீடு செய்யப்படுவதற்கான அரசியல்ரீதியான ஒரு காரணநியாயத்தை உருவாக்கியளிப்பதே ஆகும். “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்பது காலனித்துவ-மாதிரி மேலாதிக்கத்தை மறுஸ்தாபகம் செய்வதற்கும் உலக மக்களை நிதி மூலதனத்தின் உத்தரவுகளுக்காய் கீழ்ப்படியச் செய்வதற்குமான ஒரு போலிக் காரணமும் அதற்கான அரசியல் கட்டமைப்புமே ஆகும் என்பது 13 ஆண்டுகளுக்கும் அதிகமான காலத்திற்குப் பின்னர் தெள்ளத்தெளிவாகியிருக்கிறது.

மில்லியன் கணக்கான உயிர்களையும் சொல்லப்படாத மனித துயரத்தையும் காவு கொடுத்து எண்ணெய், எரிவாயு மற்றும் பிற புவிமூலோபாய வளங்களின் கட்டுப்பாட்டைப் பெறுவதற்கு வசதியான வகையிலான கைப்பாவை ஆட்சிகளை அமரவைப்பதற்காகவே ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா மற்றும் பிறவெங்கிலுமான இராணுவத் தலையீடுகள் நடத்தப்பட்டிருந்திருக்கின்றன. இந்த குருதிகொட்டும் மற்றும் ஒருதரப்பான மோதல்களின் பாதையில், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகள் நிராயுதபாணியான அப்பாவிப் பொதுமக்கள் மீது குண்டுமழை பொழிந்திருக்கின்றன, சித்திரவதை மற்றும் படுகொலைகளை நடத்தியிருக்கின்றன, அத்துடன் போர்க் குற்றங்களையும் இழைத்திருக்கின்றன. ஒட்டுமொத்த நாடுகளுமே நாசமாக்கப்பட்டிருக்கின்றன.

இத்தகைய நடவடிக்கைகளால், உள்நாட்டின் அரசியல் வாழ்வில் எத்தகையதொரு ஆழமான பாதிப்பையும் கொண்டிருக்காது என்பதை உண்மையாக எவரொருவரும் நம்பமாட்டார்கள். ஒரு பூகோளமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தில், மக்கள் இனரீதியாகவும் தேசியரீதியாகவும் பன்முகப்பட்டவர்களாகியிருக்கின்ற நிலையில், ஏகாதிபத்தியத்தின் குற்றங்களால் உருவாக்கப்பட்டிருக்கும் அவமதிப்பு எல்லைகள் இல்லாதுள்ளது. குறிப்பாக சிறுபான்மை மற்றும் புலம்பெயர் சமுதாயங்களுக்கு உள்ளிருக்கும் நிலைமையாக இதுவே இருக்கிறது. வேலைவாய்ப்பின்றி நிர்க்கதியான வறுமை நிலைமைகளை எதிர்நோக்கும் நிலையில் மில்லியன் கணக்கானோரை வைத்திருக்கும் நிலையில் தொழிலாளர்களது வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதல்களில் இவர்களே முக்கிய பாதிப்புக்குள்ளாகியவர்களாக ஆகியுள்ளனர்.

பழைய சமூக ஜனநாயக மற்றும் ஸ்ராலினிசக் கட்சிகள் பெரு வணிகத்தின் வெளிப்படையான கருவிகளாக ஆகியிருக்கின்றன, தொழிற்சங்கங்கள் நிர்வாகத்தின் கரங்களாகச் செயல்படுகின்றன, பல்வேறு போலி-இடது குழுக்களும் சோசலிசத்தை மறுத்து ஏகாதிபத்தியப் போர்களுக்கு ஆதரவாய் அணிவகுத்திருக்கின்றன என்ற உண்மையும் இந்த நச்சுக் கலவையுடன் சேர்ந்து கொள்கிறது.

இந்த சக்திகள், தொழிலாள வர்க்கத்தை ஆளும் உயரடுக்கினருக்கு எதிராக அணிதிரளுவதில் இருந்து தடுப்பதற்கும், அதற்கு ஒரு முற்போக்கான சோசலிச மாற்றினை வழங்க மறுப்பதற்கும் தம்மால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்ய தம்மை அர்ப்பணித்திருக்கின்றன. மிகவும் நோக்குநிலைதவறிய மற்றும் விரக்தியடைந்த பிரிவுகள் தாங்கள் முகம்கொடுக்கும் சமூக, அரசியல் மற்றும் கலாச்சார ஒடுக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான ஒரு வழியாக பயங்கரவாதத்தினை நோக்கி திருப்பப்படுவதற்கான நிலைமைகளை இது உருவாக்கியிருக்கிறது.

பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிற நாடுகளில் இருக்கக் கூடிய அரசு எந்திரங்கள் தமது ஒடுக்குமுறை ஆயுதக்கிடங்கை வலுப்படுத்துவதற்கு நியாயம் கற்பிக்கவும் உலகின் ஆதாரவளங்கள் மீது அவர்களது கட்டுப்பாட்டினை முன்னெடுக்கவும், தாமே பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு ஒத்திசைந்து செயல்பட்டிருக்கின்றன.

இந்தத் தாக்குதலை ஏற்புடையதாக்கவே இஸ்லாமிய-அச்சம் தூண்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. சார்லி ஹெப்டோ இந்தப் பிரச்சாரத்திற்கு ஆதரவான ஒரு ஆழ்ந்த பிற்போக்குத்தனமான பாத்திரத்தை நெடுங்காலமாய் ஆற்றி வந்திருப்பதோடு, முஸ்லீம்களையும் முகமது நபியையும் சிறுமைப்படுத்துகின்ற வெறுக்கத்தக்கவையும் முட்டாள்தனமானவையுமான கார்ட்டூன்களில் நிபுணத்துவம் படைத்த ஒரு முஸ்லீம்-விரோத வெறுப்புப் பத்திரிகையாக தன்னை ஸ்தாபித்திருக்கிறது. இனவாத கேலிச்சித்திரங்களின் ஒரு வரிசையையே இது வெளியிட்டிருக்கிறது.

மிகப் பயங்கரமான பதிப்பு என்றால் நவம்பர் 3, 2011 அன்றான “Charia Hebdo” ஐ சொல்லலாம். முகமதுவே “விருந்தினர்-ஆசிரியராக” வேலைசெய்து தந்ததாக சொல்லப்பட்ட இந்தப் பதிப்பு லிபியாவில் ஆட்சியை-மாற்றுகின்ற அமெரிக்கா தலைமையிலான நடவடிக்கையில் பிரான்ஸ் பங்கேற்றதற்குப் பின்னர் வெளியிடப்பட்டது.

முகமதுவின் இன்னுமொரு சிறுமைப்படுத்தும் கேலிச்சித்திரம் இடம்பெற்றிருக்கும் வகையில் இன்றைய நினைவுச்சின்னப் பதிப்பின் வெளியீடு, பிரெஞ்சு அரசின் ஒரு அரசியல் ஆத்திரமூட்டல் ஆகும். 3 மில்லியன் பிரதிகளை அச்சிடவும், அதனை 16 மொழிகளில் உலகளாவ விநியோகம் செய்யவும் சுமார் 1 மில்லியன் யூரோவின் அளவுக்கு இது நிதியாதாரம் அளித்திருக்கிறது. கூடுதலாய் மில்லியன் கணக்கான நிதிகளை கூகுள், கார்டியன் மீடியா குழுமம், Le Monde, Canal Plus, Mail International மற்றும் பிற ஊடக நிறுவனங்கள் பங்களிப்பு செய்திருக்கின்றன. இனவாத மற்றும் தேசியவாத மனோநிலையைக் கிளறி விடுவதற்கென வடிவமைக்கப்பட்டிருக்கக் கூடிய ஒரு மிகமிகப் பெரிய சித்தாந்த அமைப்பில் சார்லி ஹெப்டோ ஒரேயொரு சக்கரம் மட்டுமே ஆகும். தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான அதிர்ச்சித் துருப்புகளாக நிறுத்தப்படத்தக்க வகையிலான அதிவலது இயக்கங்களான பிரான்ஸில் தேசிய முன்னணி (FN), ஜேர்மனியில் பெஹிடா (Pegida), பிரிட்டனில் ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சி (UKIP) ஆகியவற்றிற்கு அத்தியாவசியமான விளைநிலத்தினை வழங்குவதே இதன் நோக்கமாக இருக்கிறது.

வெளிநாட்டிலான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போர்களும் அவற்றுடன் கரம்கோர்த்து தாயகத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக நடத்தப்பெறுகின்ற தாக்குதலும், ஜனநாயகத்துடன் இணக்கமுற முடியாதவை என்பதே முன்னெப்போதையும் விட வெளிப்படையாகவும் அடிக்கடியும் ஆகியிருக்கக் கூடிய இராணுவ/போலிஸ் நடவடிக்கைகளில் இருந்தும் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான இடைவிடாத தாக்குதலில் இருந்தும் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ள அடிப்படையான முடிவாகும். போலிஸ்-அரசு ஆட்சி வடிவங்களுக்கு திரும்புவதன் மிக வளர்ந்த வெளிப்பாடுகளில் பிரான்ஸ் ஒன்றே ஒன்று மட்டுமே ஆகும்.

ஒன்றுதிரட்டப்படுகின்ற மிகப் பரந்த ஒடுக்குமுறை எந்திரமானது, மக்களில் ஒரேயொரு பிரிவினருக்கு எதிராகத்தான் பயன்படுத்தப்படவிருப்பதாக நம்பினால் அது மிக அடிப்படையானதொரு அரசியல் பிழையாக இருக்கும். எங்கெங்கிலும் தொழிலாள வர்க்கம் முற்றான ஏழ்மை நிலைக்கு கீழிறக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது, ஏனென்றால் வேலைகள் அழிக்கப்படுகின்றன, ஊதியங்கள் வெட்டப்படுகின்றன, சுரண்டல் அதிகரிக்கிறது, உயிர்நாடியான சமூக வசதிகள் அழிக்கப்படுகின்றன. இது வர்க்கப் போராட்டம் ஒன்றின் வெடிப்புக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கிறது என்பதை ஆளும் வர்க்கம் மிக நன்றாக புரிந்து வைத்திருப்பதால், அதற்கேற்றவாறு தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது.

வர்க்கப் போராட்டத்தின் அடுத்த கட்டமானது மிருகத்தனமான அரசு ஒடுக்குறை நிலைமைகளின் கீழேயே உருவாக முடியும். தொழிலாளர்கள் ஒரு புரட்சிகர மோதலில், அதாவது அதிகாரத்திற்கான ஒரு போராட்டத்தில், தாங்கள் பங்குபற்ற வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்து அதன் அடிப்படையில் தமது போராட்டங்களை ஒழுங்கமைத்துக் கொள்வது கட்டாயமாகும்.

சுமார் கால் நூற்றாண்டு காலமாக உலக ஏகாதிபத்தியமானது, சோவியத் ஒன்றியத்தின் கலைப்பையும் ரஷ்யாவிலும் சீனாவிலும் முதலாளித்துவம் மறுஅறிமுகம் செய்யப்பட்டதையும் சாதகமாக்கி 1991 இல் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் முன்னவர் பிரகடனம் செய்தாரே அந்த “புதிய உலக ஒழுங்கை” கொண்டு வருவதற்காய் முனைந்து வந்திருக்கிறது. புஷ் உரைத்த ஒழுங்கு, உலகளாவிய முன்னேற்றம் என்ற மொழியால் மூடப்பட்டதாய் இருந்தது. 1991 வளைகுடாப் போரானது, “அமைதி மற்றும் பாதுகாப்பு, சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகிய மனிதகுலத்தின் உலகளாவிய அபிலாசைகளை சாதிக்கின்ற பொதுவான உயர்நோக்கத்தின் பொருட்டு பல்தரப்பட்ட நாடுகளும் ஒன்றாக ஈர்க்கப்படுவதான” ஒரு உலகத்திற்குக் கட்டியம் கூறுவதாக அவர் கூறினார்.

எதார்த்தமோ நாம் இன்று காணுவதாக இருக்கிறது. ஏகாதிபத்தியமானது மனிதகுலத்தை பின்னோக்கி இழுத்துச் சென்று ஒட்டுமொத்த உலகத்தையும் ஒரு உயிர்வாழும் கொடுங்கனவிற்குள் அமிழ்த்தியிருக்கிறது.

இதற்கான விடை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தலைமையின் கீழான சோசலிசத்துக்கான அரசியல் போராட்டத்திலேயே காணமுடியும். ஏகாதிபத்திய இராணுவவாதத்திற்கும் மற்றும் போருக்குமான எதிர்ப்பே முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தின் உச்சகட்டமாகும். அத்தாக்குதலுக்கு தலைமை கொடுப்பதற்கும், ஏகாதிபத்திய வன்முறை மற்றும் இராணுவவாதம் மறுஎழுச்சி காண்பதற்கு எதிரான புரட்சிகர எதிர்ப்பின் சர்வதேச மையமாக ஆவதற்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு உறுதிபூண்டுள்ளது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com