Showing posts sorted by relevance for query VII. Sort by date Show all posts
Showing posts sorted by relevance for query VII. Sort by date Show all posts

Wednesday, April 7, 2010

பார்வை! -வம்சிகன்-

ஒற்றைப் பேனா
பல மொழி எழுதும்!

ஒற்றை நாக்கு
பல மொழி பேசும்!

வேரோடும் விழுதோடும்
விருட்சமாய் ஆகிவிடு!

தேரோடும் வீதியெனில்
ஊரோடு கூடி(விடு)யிழு!


காரமுள்ளுக் காடெல்லாம்
தடமழிந்து போகட்டும்!

ஊசிமல்லிப் பந்தல் மேலே
தென்றல் மெல்ல வீசட்டும்!

பிரிவில்லா மண் வாசம்
பேதமற்ற ஒரு தேசம்!

அறிவார்ந்த விஞ்ஞானம்
அதனுயர்வே நம் ஞானம்!


மனிதா நீ நதியாகு
மனதைக் கரையாய் உருவாக்கு!

ஓடும் வழியில் வயல் கண்டால்
ஓங்கி வளரும் பயிராகு!

கலங்கிய வன்னிக் கண்ணீரை
எதிர்காலம் விளைய உரமாக்கு!


பேதமில்லா நம் தேசம்
ஒரு தாய் பிள்ளை நம் பாசம்!

ஆதாம் ஏவாள் முதலென்றால்
உலகம் முழுதும் ஓரினமே!


புழுதியள்ளும் காற்றுக்குள்ளே
புதிதாய் மொழியைத் தேடியெடு!

அறிவியல் ஆளும் விஞ்ஞானம்
கரை வரை சேரப் பாடிவிடு!

இளைய தலைமுறை
விடியலைக் கூவட்டும்!

இலங்கைக்கென்றொரு
செய்மதி ஏவட்டும்!!


கவிதைகள் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது VII

Read more...

Friday, June 4, 2010

பள்ளி வாசல் -வம்சிகன்

இரண்டாயிரத்திப்பத்தாம் ஆண்டு
களித்தல் அடையாளம்
ஆயிரத்தியெழுனூற்றிப்பதின்மூன்றாம் ஆண்டு
சமன் அடையாளம்
இருனூற்றித்தொண்ணூற்றியேழு ஆண்டுகள்.

இத்தனை ஆண்டுகள்
பழமை தோய்ந்த
பள்ளிவாசலின்
சொந்தக்காரச் சமூகமொன்றைத்
துரத்தியடித்த
சமூகத்தின்
பேனாவொன்றின்
முனைக்கசிவு
இது.

தொல்பொருள்
அகழ்ந்து
பெருமை பேசும்
தமிழர்களே!
தலை குனியுங்கள்.
மனிதராகி நிமிருங்கள்.

இதயம்
இரத்த ஓட்டத்திற்கான
இயந்திரம் மட்டுமே.

மூளையிலிருந்து மட்டுமே
பிறக்கட்டும்
புதிய நதிகள்.

திரும்பியுலவவரும்
அத்தனை பிறை நிலவுகளும்
முகம் பார்க்கட்டும்
ஆனந்தமாய்.

நதியில்
நீந்தும் நிலவு
அழகானது.

இனி
நமது இலங்கைத் தேசத்தில்
இருக்கவேண்டியவை
பெருக்கல் அடையாளங்களும்
சமன் அடையாளங்களும்
அதற்குமப்பால்
பெறுபேறுகளும் மட்டுமே.

எல்லாம் வல்ல
அல்லாவே!
மன்னிப்பாயாக.
எம்பெருமானே!
இரட்சிப்பாயாக.

தேவபிதாவே!
எல்லோரும் இன்புற்றிருக்க.

நன்றியுடன் வம்சிகன். VII

Read more...

Friday, December 14, 2012

மருத்துவத் தாதி ஜெசிந்தா தூக்கிட்டுத் தற்கொலை செய்தமை நிரூபணம் !!

கேட் வில்லியம்ஸின் உடல் நிலை தொடர்பாக வானொலி ஒன்றிட்கு தகவல் வழங்கிய மனவருத்தத்தால் மருத்துவதாதி தற்கொலை செய்து கொண்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்து இளவரசியார் கேட் வில்லியம்ஸின் உடல் நிலை குறித்தும் சிகிச்சைகள் உட்பட சில தனிப்பட்ட விடயங்கள் குறித்தும் அறியாமையால் அவுஸ்திரேலிய வானொலி நிலையம் ஒன்றிட்குத் தகவல் வழங்கிய மனவருத்தத்தால் தாதி ஜெசிந்தா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது நீதி மன்றத்தில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக 3 கடிதங்களும் சிக்கியுள்ளன.

ஜெசிந்தா இளவரசி கேட் தொடர்பாக குறித்த அவுஸ்திரேலிய வானொலிக்குத் தகவல் அளிக்கக் காரணம் டிசம்பர் 4 ஆம் திகதி குறித்த வானொலி நிலையத்தைச் சேர்ந்த Michael Christian மற்றும் Mel Greig எனும் இரு அறிவிப்பாளர்கள் பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் சார்ள்ஸ் மற்றும் எலிசபெத் மகாராணியார் போன்ற குரலில் அவர்களைப் போன்றே பேசி இளவரசி கேட் இன் உடல் நலம் குறித்த தகவல்களைக் கேட்டதனால் ஆகும். மேலும் இத்தவறு குறித்து அறிய வந்த போது செய்வதறியாமல் அவர் வருத்தமுற்று தற்கொலை செய்துள்ளார்.

46 வயதாகும் ஜெசிந்தா திருமணமானவர் என்பதுடன் அவருக்கு இரு குழந்தைகளும் உள்ளனர். மேலும் அவர் இலண்டனில் உள்ள கிங் எட்வார்ட் VII வைத்தியசாலையில் பல வருடங்களாக நர்ஸாகக் கடமையாற்றி வந்தவர் ஆவார். இவர் குறித்த இந்த தொலைபேசி அழைப்பு வாயிலாக அரச குடும்பச் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததால் மனமுடைந்து தனது அறையில் வெள்ளிக்கிழமை 7 ஆம் திகதி தூக்கிட்டுத் தற்கொலை முயற்சி செய்தார்.

எனினும் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் பயனில்லாமல் மரணமடைந்தார். பிரேத பரிசோதனையில் போது இவரின் கழுத்து, மற்றும் மணிக்கட்டுப் பகுதிகளில் காயம் இருந்ததாகச் சொல்லப் பட்டுள்ளது.

இந்நிலையில் இவர் கைப்பட எழுதிய இரு நோட்டுக்கள் அவரின் அறையிலும் இன்னொன்று அவரின் உடைமைகளில் இருந்தும் மீட்கப்பட்டதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. எனினும் இதில் உள்ள விபரங்கள் குறித்து எதுவும் தெரிவிக்கப் படவில்லை.

இதேவேளை ஜெசிந்தா தகவல் அளித்த அவுஸ்திரேலிய வானொலி நிலையத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட இரு அறிவிப்பாளர்களும் இச்சம்பவத்தால் தமது இதயம் உடைந்து போய் விட்டது எனவும் இவ்வாறு நிகழும் என தாம் எதிர்பார்க்கவில்லை எனவும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுள்ளனர். மேலும் இவ்வானொலி நிலையம் இன்னும் ஒரு வருடத்துக்கு விளம்பரங்கள் மூலம் தான் சேகரிக்கும் பணத்தை ஜெசிந்தாவின் குடும்பத்துக்கு நஷ்ட ஈடாகக் கொடுக்க முன்வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Read more...

Thursday, May 19, 2011

தூக்கணாங்குருவிக்கூடு. -வம்சிகன்.-

அவுஸ்திரேலிய நேர வலயம்
பாய்ந்து பாய்ந்து ஓடி வந்தது.

ஆசிய நேர வலயம்
உழைத்துக் கழைத்து உள்ளே வந்தது.

மத்திய கிழக்கு நேர வலயம்
கறுப்புத் திரவத் தங்கத்தை மடியேந்தியபடி
அமைதியை யாசகம் கேட்டு வந்தது.

ஆப்பிரிக்க நேர வலயம்
அகழ்ந்த வைரத்தைத் தேடியபடி வந்தது.

ஐரோப்பிய நேர வலயம்
அட்லாண்டிக் குளத்தைத் தாண்டி வந்தது.

வட அமெரிக்க நேர வலயம்
முதுகுவலியில் நிமிரமுடியாமல் வந்தது.

வடதுருவ நேர வலயம்
உறைநிலை தளர்ந்து உருகியபடி வந்தது.

உலகம் சுற்றிச் சுழன்று
ஒரு புள்ளியில் நின்றது.

வீடு தனிமையில் அமிழ்ந்தது.

தொழிற்சாலைகள் மட்டும்
இயங்கியபடியே.

வீட்டுக்குள்ளேயே தொலைந்துபோன
மனிதர்
வெளியில்
எதைத் தேடுகின்றனர்?

வேலைநேர வேறுபாட்டால்
வலயங்களாய் மனிதர்கள்.

அமிழ்வது புரியாமல்
அகழ்வது ஏன்?

இரவு பகல்
வானவில்லைத் தூர எறிந்துவிட்டு
மின்னலை வலிந்து ஏந்திக்
இனியேனும்
பார்வையாகட்டும்.

May.18. 2011

VII

Read more...

Monday, April 13, 2009

வேர்ப் பலா.


நான்கு மதங்களின்
பகிர்தலின்
திரட்சியில் உயர்ந்த
சிவனொளிபாத மலையாய்
மனதைக் கொடு.

தென் கண்டியிலிருந்து
தேசத்தின்
மத்தியிலிருந்து
வடக்குக் கிழக்காய்
ஓடி
வாழ வைத்து
திருமலையில்
தரிப்புக் குறியிட்டு
வங்கக் கடலோடு சிரிக்கும்
மகாவலி கங்கையாய்
சிந்திக்கக் கற்றுக்கொடு.

அநுராதபுரத்தில்
பிறந்து
அருவி ஆறாக
நடந்து சென்று
பாக்கு நீரிணையில்
நனைகின்ற ஆறு போல்
மாற்றங்களோடு
இலங்கையராக
ஏழாவது
அறிவு கொடு.

நதிகளே நனைய
ஆசைப்பட்டுக்
கடலில் குளிக்கின்றன..
உலருகின்ற மனிதனை
ஏதோ ஒன்றில்
ஊறிப்போகச்
சொல்லிக் கொடு..

சிகிரியாக் கற்குன்றும்
ஓவியமுமாய்
உணர்ச்சியையும் உண்மையையும்
பிரித்தறியும்
திடமான
கலையுணர்வைக் கொடு..

பராக்கிரமபாகு சமுத்திரத்தின்
அளவினதாய்க்
கரை கொண்ட
நிதானம் கொடு..

யாரோ
உச்சிக்குப் போவதற்காய்ச்
சறுக்கிச் சறுக்கிக்
கூனிய
தேயிலைக் கூடைகளுக்கு
நிமிரக் கற்றுக் கொடு..

மீன் பாடும் வாவியாய்
இசையோடு
இசைவு கொடு..

வெருகல் ஆறுபோல்
வலி மறந்து
செழிப்பதற்கு
வரம்புகள்
சொல்லிக் கொடு..

இலகுவாக
உதிரும்
யாழ்ப்பாணத்துச்
செம்மண்ணைத்
திரட்சிப்படுத்தப்
புதிதாய் ஒரு
திரவம் கொடு..

மேகத்திற்குக்
கனக்குமென்று
மழையைப் பூமியில்
இறக்கி வைக்கும்
வன்னிக் காட்டுக்குள்
முட்டி நிற்கும்
கண்ணீர்
வழிந்தோட
எதேனும்
வழியோடு வா..

புத்தாண்டே
புதிய
ஒளியோடு வா.

-வம்சிகன்-
April -12- 2009 VII

Read more...

Monday, September 29, 2008

இலங்கை நெற்

இலங்கை நெற் - இது
எங்கள் நெற் !
இலங்கைத் தமிழனின் இதய நெற் !
இறக்கை விரித்து பறக்க முயலும்
இரும்புத் தமிழன் முயற்சி அறிந்து
உயற்ச்சி கிடைக்க உழைக்கும் நெற் !!

இனத்தின் அவலம் கதைத்துக் கதைத்தே
இழுத்தடிக்கும் புலித்தலைமை
புலம் பெயர்ந்த தமிழினத்தை
மடையரெண்டு நினைக்குதோ!

போர்முனையே வாழ்க்கையென்று
நாள் கடத்தும் நாடகம் - அதை
நேர்முனையில் செல்லும்
இலங்கை நெற்றில் அறிந்து கொள் !

கப்பம் கட்டித் தெப்பமாகித்
தேய்ந்து போன தமிழினம்- இறுதி
யுத்தம் என்று புலிப்பிடியில் சிக்கிச் சோகமானதே!
தமிழினத்தை வழிநடத்த வந்த - அறிவுச்
சுடரெல்லாம் புலிப்பாசிசத்தால்
வேட்டையாடும் வேள்வி இன்றும் தொடருதே! - இன
அடக்குமுறை இருந்ததனால்
அணியணியாய்க் கிளந்தெழுந்து
அரசியலை அதிரவைத்துத் - தமிழர்
தலையெழுத்தை மாற்றவைக்க .. ..
வாழ்விழந்து உறவிழந்து உயிர் - தியாகம்
செய்யத் துணிந்த எங்கள்
உறவுகளை அழித்தொழித்து - பிரபா கூட்டம்
எம் மனக் கோட்டைகளை தகர்க்குதே!

சரணடைந்த உறவுகளை சங்கறுத்து சீரழித்த
சதி காரர்களின் நாடகத்தை
முழுத் தமிழினமும் அறிந்துகொள்ள
வேகமாக விவேகத்தோடு
உண்மைகளைக் காட்டும் நெற் !! -உயிர்
அச்சத்தோடு அமைதியின்றி
ஊருவிட்டு ஊரு சென்று - தாய்
நாட்டை விட்டு நாடு சென்று
வாட்டத்தொடு வாழும் தமிழர் - வாழ்வில்
மாற்றம் மலர வேண்டி
மூவினமும் சேர்ந்து - முழுச்
சுதந்திரத்தை அனுபவித்து
சுற்றத்தோடு வட்டமிட்டு
வாழ்ந்த சூழல் தோன்றிடவே - சதித்
திட்டமெல்லாம் ஊடறுத்து
தகவல் சொல்லும் இந்த நெற்! - உண்மைத்
தகவல் தரும் தமிழன் நெற்!!
இலங்கை நெற் - இது
எங்கள் நெற் !!!

சகா தேவன் - VII

Read more...

Tuesday, March 30, 2010

ஒர் தமிழனின் புலம்பல்.- கலாநிதி. இராஜசிங்கம் நரேந்திரன்.

தமிழ் ஈழ மாயையில்
சிக்கியதால்….

தமிழர்-
மதியிழந்தனர்..
அறமிழந்தனர்..
கல்வியிழந்தனர்…
தனமிழந்தனர்…
தரமிழந்தனர்..

மானமிழந்தனர்..
பதியிழந்தனர்..
உயிரிழந்தனர்..
பாலரையிழந்தனர்..
தாரமிழந்தனர்..
தந்தையிழந்தனர்…
தாயையிழந்தனர்..
சகோதரனையிழந்தனர்…
துணையிழந்தனர்…
சுற்றமிழந்தனர்…
சூழலிழந்தனர்…

கதியிழந்தனர்…
நெறியிழந்தனர்…
நேர்மையிழந்தனர்…
கலையிழந்தனர்…
மறையிழந்தனர்…
பண்பிழந்தனர்….
தவமிழந்தனர்…
தானமிழந்தனர்..
நிலைகுலைந்தனர்…
ஆனால்……தமிழர்;
மறக்கக் கூடாத சரித்திரம் படைத்தனர்


விடுதலைக்காக
அடிமைகளாயினர்.

விடிவிற்காக…
இருட்டில் தள்ளப்பட்டனர்…
வழி தவறினர்.

பிள்ளைகள் கடத்தப்பட…
பெற்றோர் பதறினர்,
உற்றோர் வருந்தினர்;
தமிழர் தமிழனை தமிழின் பெயரால்
அழிப்பதை கண்டேங்கினர்;

போர் களத்தில்,
உயிர்க்கேடயம் ஆகினர்;
வாழ்விற்கும் சாவிற்க்கும்
இடையே விழிம்பில் பரிதவித்தனர்;

அழிவின் மத்தியில் ஆக்கம்
இறப்பின் மத்தியில் பிறப்பு
பாவத்தின் மத்தியில் புண்ணியம்
கோரத்தின் மத்தியில் கருணை
அகங்காரத்தின் மத்தியில் தெய்வீகம், கண்டனர்.

உயிரைப் பேணாக் கேவலம்;
பொய், பிரட்டு, சூது, வாது,
கொலை, கொள்ளை,
அகங்காரத்தின் கோரத்தாண்டவம்,
கண்டனர்.

மூத்தோர் இருக்க
இளையோர் மாண்டதை..
தம்முயிரைக்காக்க
காயமுற்றோரை கைவிட்டதை…
தம்முயிரின் மேலாக
மற்றயோரதை பேணியமையை
எதிரியின் கருணையை கண்டனர்.

இன்று,
அகதிகளாய்..
ஊனமுற்றோராய்…
விதவைகளாய்…
நடைபிணங்களாய்…
நாதியற்றோராய்….
கையேந்தி நிற்போராய்…
கைதியாய்….
இருக்கும் தமிழருக்கு
தீர்வு என்ன?

இது போதாதென்று
களம் இறங்கியுள்ளனர்
தமிழ் அரசியல் கழுகுகள்..
தேர்தல் பெயரில்
பிணந்தின்ன..

கடவுளே!
போதும் நாம் பட்டபாடு..
முதலில் காப்பாற்று எம்மை
இத்தமிழ் அரசியல் வாதிகளிடமிருந்து….

கவிதைகள் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.VII

Read more...

Monday, November 9, 2009

ஆட்லறிப் பாகங்கள் மீட்பு.

புதுக்குடியிருப்புக்கு மேற்கே புலிகளினால் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆட்லறிகளின் பாகங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளதாக பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. Tsks Force VII இனர் மேற்கொண்ட நடவடிக்கை ஒன்றின் போது நான்கு 152 மிமி ஆட்லறி துப்பாக்கிகளினதும், ஒரு 130 மிமி துப்பாக்கியினதும் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளாக அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

Wednesday, April 7, 2010

கானளதனளகமடகனடபளகனமத- ஏயெம்.ஹஸன் அலி

இன்று சித்திரை ஏழு - இன்றும்
இன்னும் நாளை மட்டும்
இருட்ட முன் நான்கு மணி வரை
இரப்பார் யாசகனாய்!

நாளை இருட்டி பின் வெளித்ததும்
நான் யாரோ நீர் யாரோ
நான் எம் பீ ஆகி விட்டிருப்பேன்
நாளை நீ எனக்கு - யாரோ ஆகி விட்டிருப்பாய்!

கொலைஞர் பயமிருந்தும்
கொட்டக் கொட்ட விழித்து
கொடி கட்டியும் போஸ்டர் ஒட்டியும்
கொள்கைக்காய் கூவியலைந்தோம்!

அரசியல் - சாக்கடையென்றார்
அதில் நெளியும் புழு இவரென்றார்
அத்தனையும் எதிர்த்தோம்
அந்தவொரு கொள்கைக்காய்!

இல்லையென்று அடம் பிடித்தேன்
இவர் தங்கமென்றும் நானுரைத்தேன்
இகத்தினில் இவர் மட்டும்
இல்லாதோர்க் கினியவர் என்றேன்!

பொய்யென்று நிரூபிப்பார் நாளை
பொறுமையோடு கொஞ்சமிரு
பொக்கட் நிரப்ப தொழில் செய்வார்
பொறுக்கி எடுத்த எம் வாக்குகளால்!

வக்கற்றுப் போய் - முதலில்லா
வறுமைக்குள் போன இவர்
வாக்கெனும் முதலீட்டை
வந்தெம்மிடம் பிச்செயெடுத்தார்!

தொழில் செய்ய தெரிந்தவர்
தொகைப்பணமோ கையிலில்லை
தொப்பி மாலை போட்டல்லோ
தொட்டி பட்டியெல்லாம் தெருநாயாய்...!

எமக்குச் சேவை செய்வாரென
எடுத்தியம்பி பின் அலைந்தோம்
எப்படி மாறி விட்டார்
எடுத்தெறிந்து குரைக்கின்றார்!

செய் நன்றி மறப்பார்
சொரணையற்று களவெடுப்பார்
செருப்பாய் உழைத்தோர்க்கும்
செருக்காய் பதிலிறுப்பார்!

இவர் கொஞ்சம் பறவாயில்லை
இன்னொரு ஜாதி உண்டு - இச்சாக்கடையில்
இவரை யா (நா) யென்றே தெரியாது
இழிச்ச வாயர்களாய் இலவச பிரவேசம்!

கூட்டிக் கொடுத்தாரோ - இல்லை
கூத்தியாள் கொடுத்தாளோ
கூட்டில் கல்லெறிய - குடிகார
கூட்டம் அமைத்தாரோ!

பாவமெங்கள் ஊராக்கள்
பாவியிவன் சொல் கேட்டு
பாழ் கிணற்றில் வீழ்ந்திட்டார்
பகடைதான் வரும் அஞ்சாறு வருஷமும்.

ஓதிப் படியா மண்டுவெல்லாம்
ஓட்டெடுத்து ஜெயிக்கையிலே
ஓவென்று புகழுள்ள – ஒரு சிலர்
ஒதுங்கி ஓளிவதேனோ!

மனம் நொந்து மனம் நொந்து
மாற்றானிடம் முறையிடுவேம் - அவர்
மா மனிதராய் மலர்ந்திடுவார்
'ம்... 'லெற்ஸ் தெ ரைம் ஆன்ஸர் என்று'


-ஏயெம்.ஹஸன் அலி
சவூதியிலிருந்து

கவிதைகள் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது VII

Read more...

Wednesday, April 13, 2011

உள்ஒளி - இனியவன் இஸாறுதீன் -

காற்பந்து போல

காலங்களோடு உருள்கிறது

வாழ்க்கை

கவலை மிகுந்த

இருட்டோடு விடிகிறது

பொழுது

எதிர்பார்ப்புகளைச் சுமந்துகொண்டு

நடக்கிறது

எதிர்காலம்

தன்னலத்தில்

முடிகிறது

பொதுநலம்

இனவாதத்தைப்

பரிந்துரைக்கிறது

மனிதநேயம்

ஆயுதஅழுக்கினால்

அசுத்தமானது

ஆறறிவு

மக்கள் உரிமையை

சூறையாடுகிறது

அரசியல்

அந்நியத்தை மட்டும்

துதிக்கிறது

ஆன்மீகம்

இரக்கநெய்யின்றி

இறுகிப் போனது

மாந்தர் இதயம்

தாய்மொழி தமிழில்தான்

சாதிக்க வேண்டும்

நாம் எதையும்

இனி வரும் புத்தாண்டுகள்

இல்லங்களைப் புதுப்பிப்பதை விட

உள்ளங்களைப் புதுப்பிக்கட்டும்
( 'மழை நதி கடல்' கவிதைநூல் ) VII

Read more...

Thursday, June 18, 2009

துடுப்பு முளைக்கும் கட்டுமரம். –வம்சிகன்-

ஆண்டுகள் பலவாய்க்
குறுகிக் கிடந்து
கடல்
அமைதியாய் இருந்த
பொழுதுகளிலும்
கரையில்
மோதிக்கொண்டேயிருந்த
சிக்கல் விழுந்த
வலைகள்
அவிழ்ந்து
அகண்டு
பாடு விரிக்கின்றன.

பறிக்கூடு கனக்கவும்
மனக்கூடு மிதக்கவும்
உரிமையுள்ள
சுதந்திரக் கடல் அனுமதிக்கட்டும்.

இலங்கைத்தீவின்
எந்தக் கரையிலும்
இந்த வலைகள்
நனைய வேண்டும்.
வீசுகின்ற கைகள்
இணைய வேண்டும்.

கரையோர மணலிலும்
கண்ணீரிலும்
துடுப்பு முளைத்த கட்டுமரம்
அடுத்த சந்ததியில்
பாய் மரமாய் வளர்ந்து
இலங்கையின்
எல்லாக் கரைகளையும்
இணைக்கட்டும்.

குடிசையின்
கை விளக்குகள்தான்
நாட்டின்
வெளிச்சக் கூடுகள்.
VII.

Read more...

Sunday, January 24, 2010

செந்நாரை.

ஆலமரம் அரசமரம்
ஆள ஒற்றைத் தேசம் வரும்.
நாலு மரம் நட்டுவைச்சா
நாளை ஒரு தோப்பு வரும்.


கோலமிட முற்றம் வரும்
கொண்ட சுற்றம் வாழ வரும்.
வாழை வைத்த தோப்புக்குள்ளே
வம்சமெல்லாம் உச்சம் வரும்.


சிகிரியாவின் சித்திரங்கள்
செந்தமிழில் பேச வரும்.
சீனன்குடா அலையசைந்தால்
சிங்களத்தின் ஓசை வரும்.


மட்டுநகர் வாவிக்குள்ளே
மீன்களுக்குப் பாட்டு வரும்.
மகாவலியில் நீர் நிறைந்தால்
திருமலையைக் கேட்டு வரும்.

கறை மறந்து பிறை நிலவு
யாழ் நரம்பை மீட்ட வரும்
கண்டியிலே மாளிகையில்
நாகதீபம் ஏற்ற வரும்.


நிரம்பாத குளம் நிரம்பி
நீண்ட நாள் இடர் உடையும்.
வரம்பெல்லாம் உருக்கிவிட்டு
வன்னியிலே பொன் விளையும்.


நமது நாடு இலங்கை.
நாம் தமிழ் பேசும் மனிதர்கள்.
புதிய அறிவியல் ஆய்வுகள்
எமது உரிமை.
இசை எமது ஆயுதம்.
யுத்தம் மட்டுமே எதிரி.



-வம்சிகன்.- VII

Read more...

Thursday, February 13, 2020

தமிழரசுக் கட்சி தவிசாளர் வேழமாலிகிதனின் ஊழல்களை அம்பலப்படுத்தியது கணக்காய்வு அலுவலகம்

கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் மீது தொடர்ச்சியாக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் பொது அமைப்புகள் சில பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் கவனத்திற்குகொண்டு சென்றும் அவரும் அதனை கண்டுகொள்ளாத நிலையில், வேளமாலிகிதனின் ஊழல்கள் மற்றும் முறைகேடுகளில் ஒன்றை இலங்கையின் தேசிய கணக்காய்வு அலுவலகம் அம்பலப்படுத்தியுள்ளது.

பணத்தை கொள்ளையடிக்கும் பிரதான நோக்குடன் தவிசாளர் இவ்வாறு சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் மீது அதிகளவு ஆதன வரி சுமையை சுமத்தி அதிகளவு பணத்தை பெற்றுவருவதன் பின்னணி இதுவெனவும் பொது மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது.

கிளிநொச்சி நகரில் பசுமைபூங்காவில் கரைச்சி பிரதேச சபையால் அமைக்கப்பட்டுள்ள தொங்கு பாலம் எவ்வித சட்டத்திட்டங்களுக்கும் உட்படாது அமைக்கப்பட்டுள்ளது என தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொங்கு பாலம் தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையின் பிரதி ஒன்றை கோரி கிளிநொச்சி உள்ளுராட்சி திணைக்களத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கோரப்பட்டதற்கு அமைவாக வழங்கப்பட்ட விசாரணை அறிக்கையின் மூலமே மேற்படி முறைகேடுகள் தெரியவந்துள்ளது.

கரைச்சி பிரதேச சபையால் பசுமை பூங்காவில் அமைக்கப்பட்ட தொங்கு பாலம் தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகதின் விசாரணை அறிக்கையில் பின்வரும் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

தொங்கு பாலத்தின் வேலைகள் நிறைவேற்றப்பட்டிருந்த போதும் 1989 ஆம் ஆண்டின் வர்த்தமானி அத்தியாயம் vii இன் 169-173 பிரிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைவாக செலவு மதிப்பீட்டுகள் எதுவும் மேற்கொள்ளப்படாது பாலம் அமைக்கப்பட்டுள்ளது. எனவும்

வட மாகாண சபையின் 2017 பெப்ரவரி 15 ஆம் திகதிNP/09/FRM/CIR2017 இலக்க மாகாண நிதி சுற்றுநிருபம் PF/06/2015(1) பிரதேச சபைகள் பிரிவு பெறுகைகள் குழுவின் கீழ் ஆக குறைந்தது மூன்று கூறுவிலை கோரல் பெறப்பட்டிருக்க வேண்டும் ஆனால் தொங்கு பாலம் விடயத்தில் அவை எதுவும் நடைபெறவில்லை.


மேலும் 2019 -12 -30 திகதி கடித்தின் இறைமகன் ஒட்டுத் தொழிற்சாலை 2019 நவம்பர் 16 ஆம் திகதியிலிருந்து 2019 டிசபம்ர் 30 வரை கரைச்சி பிரதேச சபையுடன் எவ்வித வேலை உடன்படிக்கையும் இன்றி 18 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதிக்கு சபையின் வேண்டுகோளுக்கு அமைய தன்னால் வேலைகள் செய்யப்பட்டதாக எழுத்து மூலம் தெரிவித்துள்ளார்
அத்தோடு 1985 ஏப்ரல் 15 ஆம் திகதிய வர்த்தமானி அமைய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

திணைக்கள நடவடிக்கை அமைவாக மூலதன வேலை ஒன்றை மேற்கொள்ள வேண்டுமாயின் வருட பாதீட்டில் அது உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் கரைச்சி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் தொங்கு பாலம் உள்ளடக்கப்படவில்லை.

எனவே தொங்கு பாலம் அமைத்து முடிக்கும் வரை கரைச்சி பிரதேச சபையினரால் எந்த வித சட்ட நடைமுறைகளுக்கும் உட்படாது பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது பணத்தை கொள்ளையடிக்கும் ஒரேயொரு நோக்குடன் பிரதேச சபையின் தவிசாளர் இவ்வாறு நடந்துள்ளதாக குற்றம் சாட்டுப்பட்டுள்ளது

Read more...

Wednesday, November 18, 2009

அண்ணல் மகாத்மா தோழர் க.பத்மநாபா அவனியில் அவதரித்த நாள் இன்று 19.11.1951-19.11.2009

அகிம்சைக்கு என்றும்
அத்திவார தாங்கியாக
அமைந்த அறிவின் சிகரம்
அன்பின் தோழமையின் மைந்தன்
அண்ணல் மகாத்மாதோழர் பத்பநாபா
அவனியில் அவதரித்த நாள் இன்று

அரவணைக்கும் கரங்களுடன்
அதிசயமனிதனாக - உலகில்
அன்பை சுமந்து வலம் வந்த
அவதாரம் எங்கள் தோழன் நாபா
அவனியில் அவதரித்த நாள் இன்று

அரக்க குணம் படைத்துதோரையும்
அணைத்து முத்தமிட்டு
அறிவியல் கதைசொல்லும்
அத்திமலர்போல் எங்கள் தோழன் நாபா
அவனியில் அவதரித்த நாள் இன்று

அற்புத மனிதனாக மக்களிடம் இருந்து
அச்சத்தைவிரட்டியடித்து--மனங்களில்
அதிவீரத்தை தந்த புருசனவன்
அகராதியில் முதல் வார்த்தையாக
அமைந்த எங்கள் தோழன் நாபா
அவனியில் அவதரித்த நாள் இன்று

அசுரகுணம் படைத்தோரின் - வஞ்சகத்தின்
அதிசய துப்பாக்கிக்கு - அன்று
அப்பாவியாக இன்னுயிர் நீத்த
அருமை தோழனவன் என்றும்
அறம் பொருள் இன்பம் - இவை
அனைத்திற்கும் மறுநாமம்
அகிலத்தில் தோன்றிய தோழன் நாபா
அவனியில் அவதரித்த நாள் இன்று

அன்னை மடி(இந்தியா) பாசத்தின்
அணைப்பின்றி வராது ஓர்தீர்வு என்று
அறைகூவலுடன் கூறிய
அறிவுடைய நம்பி எங்கள் தோழன்
அவனியில் அவதரித்த நாள் இன்று

அல்லும் பகலும் மக்களை சுமந்து
அடிமை விலங்கினை உடைப்போம் என்று
அமர்ந்திருந்து ஆயிரமாயிரம் யுக்திகள் வகுத்து
அதீவீர பாண்டியனாக எங்கள் தோழன்
அவனியில் அவதரித்த நாள் இன்று

அணிவகுத்து நின்ற தோழர்களின்
அகத்தில் நல்ஆசானாக
அள்ளித்தந்த அரசியல் வார்த்தைகளினால்
அரும்பெரும் வடிவம் தந்த
அதிஉன்னதமான தோழன் எங்கள் நாபா
அவனியில் அவதரித்த நாள் இன்று

அமைதியாக நடைபோட்டு
அன்னை மண்ணில் ஆற்றிய தொண்டுகள்
அத்தனைக்கும் அதாரமாய் மக்கள் மனதில்
அன்பைமட்டும்போதித்து அழியாத இடம்பிடித்து
அகிலம் போற்றும் எங்கள் தோழன்
அண்ணல் மாகாத்மா பத்மநாபா
அவனியில் அவதரித்த நாள் இன்று

அரக்கன் இப்போ இல்லை தோழா
அதிசயம் ஆனால் இதுஉண்மை தோழா
அவமான சின்னம்அவன் பாசிசம் தோழா
அதிகாரம் எங்களுக்கு வேணாம் தோழா
அமைதிபோராட்டம் செய்வோம் தோழா
அருகே எங்கள் பக்கம் வாருங்கள் தோழா
அனைவரும் அவர்நாமம் சிந்தனை செய்வோம்

புரட்சிவேட்கை...தோழமையுடன் உங்கள் தோழர்கள் VII

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சுவீஸ் கிளை

Read more...

Tuesday, September 30, 2008

இதயம் விடிய உதயமாகும் இலங்கை நெற்!

அடியெடுத்த உன் கால்கள்
ஆறுபோல் ஓடட்டும்! - என்றும்
ஆறாமல் ஓடட்டும்
தடைகள் தாண்டி ஓடட்டும்!
தருமநெறி தழைத்திடவே
தரணியெங்கும் ஓடட்டும்!
இலங்கைநெற் இளநதியே - உன்கிளைகள்
இரக்கமில்லா பாறைகளை
பிளந்துடைத்து பாரெல்லாம் பரவட்டும்!
கட்டுரையாய் கவிதைகளாய்
செவ்விகளாய் செய்திகளாய்
உண்மைகளை உரசியிங்கே
ஓயாமல் ஓடட்டும்!
உன் சேவை தொடரட்டும்!
உன் உதயமதில் - எங்கள்
இதயங்கள் விடியட்டும்!
எங்கள் இதயங்கள் விடியட்டும்!!


கவிதா. VII

Read more...

Saturday, May 30, 2009

மதிச்சுவர். –வம்சிகன்-

முல்லைக் கடலில்
நிலவு குளிக்கும்.

தெறிக்கும் அலையின்
ஒவ்வொரு துளிக்குள்ளும்
ஒவ்வொரு நிலவு.

பார்க்கப் பார்க்க
வேதனை வடிந்து
கரைகள் நனையும்.

இறக்கி வைத்த
இழப்பெனும் பாறையை
காலம் அரிக்கும்
மணலாய்த் திரிக்கும்.

பிஞ்சுப் பாதங்கள்
தடங்கள் பதிக்கும்.

இனிவரும் இரவில்
இருளிருக்காது.

இனிவரும் பகலில்
நிழல் ஒழுகாது.

சுற்றாத பூமியில்
வாழ்வது கைவரும்.

இமயத்துக் காற்றைக்
கண்களாற் கண்டு
கைகளில் பிடித்ததாய்
சீனத்து வித்தைகள்
நம் வீதிகளிலும்
நடக்கும்.

இலங்கை முழுவதும்
நமக்கும் சொந்தம்.

இது
இன்னொரு சுதந்திரம்.
உணர்ந்தால் வசந்தம்.

இரு மொழி விழி வழி
இலங்கையாய்ப் பார்.

இதுவே
வீரிய இலங்கையின்
விளைநில வேர்.

VII


Read more...

Wednesday, January 13, 2010

ஊர்வலம் - இனியவன் இஸாறுதீன் -

ஊர்வலம் வருகிறது...
ஊர்வலம் வருகிறது....
அமைதிஊர்வலம் வருகிறது

ஊக்கமுள்ளோர்
உற்சாகமுள்ளோர்
கலந்துகொள்ளுங்கள்

ஊரை ஏய்ப்பவர்
ஊழல் செய்பவர்
ஒதுங்கிக்கொள்ளுங்கள்

இது
இனபேதமில்லாத இதயங்கள்
வழிநடத்தும்
அமைதிஊர்வலம்
சமூகங்களை ஒன்றுபடுத்தும்
சமாதான ஊர்வலம்

எல்லோருக்கும்
ஒரு முகம்
எல்லோருக்கும்
ஒரு குரல்

எந்த முகத்தையும்
தனியாய்
பார்க்க இயலாது
எந்தக் குரலையும்
தனியாய்
கேட்க இயலாது

இதோ
சர்வ இனங்களின்
சமாதான ஊர்வலம்

உலக மானுடத்தை
உயர்த்துதற்கும்
ஊன உள்ளங்களின்
உரிமை காப்பதற்கும்
ஊர்வலம் வருகிறது

இந்த ஊர்வலத்தில்
கலந்துகொண்டால்
கடந்தகாலக் கொடுங்கோல்களைச்
சுட்டிக்காட்டி
நிகழ்காலக் கொடுமைகளை
எடுத்துரைத்து
நம்பிக்கைமிக்க எதிர்காலத்திற்கு
வழி நடத்தும்

மோசக்காரர்களின்
முகத்திரை கிழிக்கும்
நீசக்காரர்களின்
அகக்கறை அழிக்கும்
ஆதிக்கக்காரர்களின்
ஆதிபத்தியத்தை ஒழிக்கும்

அந்நியம் செய்பவர்களே!
என்ன செய்கிறீர்கள்...
எங்கள் கோசம் கேட்டதா?
சமத்துவத்தொனியில்
சமரசம் பேசினோமே...
உள்ளத்தைத் தொட்டதா?

வறுமைப்பிணியை
விரட்டியடிக்கவும்
ஒருமைப்பாட்டின்
கரங்கள் கோர்க்கவும்
ஏற்றத்தாழ்வுகளை
இல்லாதொழிக்கவும்
ஊக்கமுள்ளோர்
உற்சாகமுள்ளோர்
கலந்துகொள்ளுங்கள்

அதோ...
அமைதிஊர்வலம் வருகிறது
எல்லோரும் வாருங்கள்

கவிதைகள் பகுதியில் பதிவுசெய்யப்பட்டுள்ளது VII

Read more...

Tuesday, February 10, 2009

வரம் வாங்கி வந்தாயோ? வன்னித்தமிழா!


வஞ்சனை கொண்டு வதைக்கவே வந்தாலும்
வந்தோரை வாழவைக்கும் வளமான வன்னிநிலம்!

கொடும்பகை கொண்டு கூடப்பிறந்தோரையும்
கொன்றொழித்த கொடியவன் கண்டும்
குமுறியழ நாதியற்று குரல்களும் மழுங்கி
ஊமையாய் உணர்விழந்து உறக்கமும் தாமிழந்து
உயிழந்த உடல்களாய் ஊசாடி வந்தவரை
ஓடவிட்டு புறமுதுகில் உதிரமதை ஓடவிட்ட பாதகனே..!

ஓயாது உறங்காது ஒருநாளும் தீராது
எம் பாவம் தொடருதென்றால் - அது
எங்கள் நிலம் இன்னும் உன்னைத் தாங்குவதால்.

சோறிட்ட கைகள் சுட்டதில் தான் துடிக்க
மாமா என்றழைத்த மழலைகள் ஐயோ என்றழைக்க
துப்பாக்கி வேட்டு வைத்த துஷடனே!!- நீ அழிவாய்
துயர்துடைக்க யாருமின்றி!

பாதுகாப்புக்கு நம்முயிர்கள் - உன்
பாதுகாப்புக்கு நம் உயிர்கள்
அரணமைத்து அதில் நீ.. ஆடிய ஆட்டமெல்லாம்
அடங்கியது கண்டோ.. ஆற்றாமல் நீயும்
ஆயிரம் துளைகளிட்டாய் - உதிர
ஆறுகளை ஓடவிட்டாய்!

இன்னும் என்ன வேண்டும்? எடுத்தியம்பு பாதகனே!
ஒன்றுமில்லை எங்களிடம் ஓட்டாண்டியாய் எங்கள் நிலம்

வன்னிநிலம் வாங்கிவந்த தீராத கொடுந்துயரம்
நீ அழிந்தால் தீரும், இல்லையென்றால் நீளும்..
நீ அழிந்தால் தீரும், இல்லையென்றால் நீளும்.. ..VII

- அபிமன்யு

Read more...

Friday, April 10, 2009

நிழலின் நிஐம். --வம்சிகன்--



தீர்வு ஒன்றுக்காய்
யுத்தம் தொடங்கிற்று.
எல்லாத் தீர்வையும்
யுத்தம் தின்றிற்று.

யுத்தச் சாத்தானின்
உயிர்ப்பு
இலாபத்தில் மட்டுமே
இயங்குவது.

எந்த
யுத்த முனையும்
புதிய
ஆயுதங்களின்
விளம்பரப் பலகையே.

சிங்கம் புலிச் சண்டையில்
இரண்டிற்கும்
நகத்தையும் பல்லையும்
வளராதபடி
சீவிவிட்டு
இலாபம் பார்த்தனர்.

பின்னர்
நகமும் பல்லும்
விற்று
இலாபம் பார்த்தனர்.

சிங்கமும் புலியும்
ஒன்றையொன்று
பார்க்கவே
மறந்தன.

முதற்பால்
வார்த்தவராலேயே
கடைசி ஆணி
அடிக்கப்படுகிறது.

உயிர்க்காதபடி
சாகட்டும்
யுத்தம்.

இனி
இலங்கை
மானும் மயிலும்
முயலும் அணிலும்
வாழும் காடு
உள்ளதாய் ஒரு
புதிய நாடு.



2009-04-08 VII



Read more...

Thursday, April 9, 2009

எங்களுக்கும் வ(லி)ழியிருக்கு.! -கிழக்கான் ஆதம்-


(வன்னியில் சிக்கியிருக்கும் ஒரு மானிட அவலையின் குரல் இது)


வெட்ட வெளிகளிலும்

சேரு சகதியிலும்

சுட்டெரிக்கும் வெயிலிலும்

சுருங்கிய வயிறுகளாய்

சிதறிய சொந்தங்களாய்

சின்னா பின்னமான

சிவப்பான

எங்கள் மண்னுடன் நாங்களும்.


உலகை காக்க ஐ.நா யிருக்கு

உயிர்களை காக்க உறவுகலிருக்கு

மரங்களையும் அந்த-

மிருகங்களையும் காக்கக்கூட

மானிட அமைப்புக்கலிருக்கு

எங்களை காக்க யாரிருக்கா?


புலத்தில் உறவுகளுக்குள் சண்டை

தளத்தில் உணர்வுகளால் சண்டை

விட்டுவிடாமல்

நாங்கள் பொத்தி பொத்தி

பிடித்துக் கொண்டிருக்கிறோம்

எங்கள் உயிர்களை மட்டும்.


அண்ணன் வருவான் அழைத்துச் செல்ல

அக்கா வருவாள் வாரியணைக்க

சித்தப்பன் வருவான் சிறகுடன் மீட்க

காத்திருக்கும் எங்கள்

பிஞ்சுகளுக்கு

தினம் வந்து மீட்பவர் எங்கள்

எம தர்மராஜர் மட்டும்தான்.


உண்ண உணவு வேண்டாம்

உடுக்க உடையும் வேண்டாம்

உரிமையும், உடமையும்

வேண்டாம்

எங்கள் உயிர்களும் எங்களுக்கு

வேண்டாம்

எங்கள் எச்சங்களை யாயினும்

கொஞ்சம் தப்பிக்க விடுங்களேன்.


புலிகளை நாங்கள்

சிறை செய்யவில்லை

சிதறடிக்கின்றனர் உயிருடன்.


அரசையும் நாங்கள்

அவமதிக்க வில்லை

மன்டியிடுகிறோம்

உயிர் பிழைப்பதற்காய்


புலம் பெயர் உறவுகள்

எங்கள் நிலை புரிந்தும்

செயற்படவில்லை மீட்சிக்காய்!


புழுதியில் துவண்டு

குருதியில் நனைந்து

குற்ருயிராய் எங்கள் சனங்கள்.


நீங்கள் விடுவிக்கவும் வேண்டாம்

நாங்கள் விடுதலை பெறவும் வேண்டாம்

எங்கள் விதியை சொல்லியழுது

எங்களுக்கு நாங்கள்

நாளை விடுவித்துக் கொள்ள

ஆழ விரிந்த ஆழகான கடலிருக்கு

எங்களுடன் அருகில் உடனிருக்கு


எங்களுக்கும் வ(லி)ழியிருக்கு...

VII

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com