Friday, July 3, 2020

நாடளாவிய ரீதியில் 1500 கிராம உத்தியோகத்தர்கள் வெற்றிடங்கள்

நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்களுக்கான 1500 வெற்றிடங்கள் காணப்படுவதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த வெற்றிடங்களுக்கு எதிர்வரும் நாட்களில் பரீட்சைகளை நடத்தி, தகுதி வாய்ந்தோரை தெரிவு செய்யவுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்தார்.

அவ்வாறு இல்லாவிட்டால், ஏற்கெனவே, நடைபெற்ற பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அதிக புள்ளிகளை பெற்றுக் கொண்ட விண்ணப்பதாரிகளை இணைத்துக் கொள்வதற்கு இயலும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பொதுத் தேர்தலின் பின்னர் இது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com