Sunday, May 10, 2020

பாடசாலைகளைத் திறப்பு தொடர்பிலான சுற்றறிக்கையை நாளை வெளியிடவுள்ள கல்வியமைச்சு!

மீண்டும் பாடசாலைகளைத் திறக்கும்போது, கொரோனா வைரஸிலிருந்து எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்த வழிமுறைகளைக் கொண்ட சுற்றறிக்கை நாளை (11) வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் செயலாளர், என்.எச்.எம் சித்ரானந்த கூறுகையில், மாகாண கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், அனைத்துப் பாடசாலைகளினதும் அதிபர்கள், மாகாண சுகாதாரத் திணைக்களங்களின் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு அந்தச் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவித்தார்.

பாடசாலை ஆரம்பிக்கப்படும் முதலாவது வாரத்தில் மாணவர்களின் பிள்ளைகள் அழைக்கப்பட்டு, ஒரு திட்டத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அது தொடர்பிலான விளக்கம் நாளை வெளியிடப்படவுள்ள அறிக்கையில் தெளிவுறுத்தப்பட்டு்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

சுற்றறிக்கையில் கிருமி நீக்கம், மாணவர்களுக்கான நீர் குழாய் இணைப்புகள் மற்றும் வகுப்பறையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை குறித்த வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com