Monday, May 18, 2020

கொரோனா வைரஸ் நோயாளர்களில் 538 பேர் குணமடைந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் நோயாளர்களில் 538 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

நேற்றைய தினத்தில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட புதிய நோயாளர் எவரும் அடையாளங் காணப்படவில்லையென்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.

நேற்றைய தினத்தில் இலங்கையில் பதிவான கொரேனா வைரசு நோயாளர்களில் 538 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்

இதுவரையில் இலங்கையில் பதிவான கொரோனா நேறயாளர்களின் எண்ணிக்கை 960 ஆகும்.

இதேபோன்று இதுவரையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நோயாளர்களில் 413 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 1081 ஆவதுடன் இத்தினத்தில் அடையாளங்காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 25 ஆகும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com