Friday, May 8, 2020

கொரோனா தொற்றாளர்களாக இராணுவத்தினர் 404 பேர்... வைத்தியசாலைகளில் 575 பேர்...

கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா தொற்றாளர்கள் 27 பேர் வைத்தியசாலையில் அநுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 8 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.

தொற்றுநோயியல் பிரிவு இன்று வெளியிட்டுள்ள தினசரி அறிக்கையில் இது தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளின் எண்ணிக்கை 575 ஆகும். உறுதிப்படுத்தப்பட்ட 824 கொரோனா தொற்றாளர்களில் 240 பேர் முழுமையாக சுகமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். கொரோனா வைரசு என சந்தேகிக்கப்படும் 135 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடற்படையைச் சேர்ந்த கொரோனா தொற்றாளர்கள் எனக் கருதப்படுகின்ற கடற்படையைச் சேர்ந்த மொத்தம் 393 பேரும், ஏனைய படைகளைச் சேர்ந்த 11 பேரும் நோயாளர்களில் உள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com