கொரானோ தொற்றாளர்களை இனங்காண அதிகமதிகம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்! ரணில்
நேற்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், இலங்கையில் கொரானோ தொற்றாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால், கொரானோ பற்றி அறிந்துகொள்வதற்காக அதிகமதிகம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்காக தாங்கள் ஆவன செய்ய வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்தார் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள்.
தினமும் குறைந்தது 5000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இதற்காக தனியார் ஆய்வகங்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுமார் ஐந்து நாட்களாக, தேசிய அமைப்புகள் இந்த முறையில் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கோரிவருகின்றன. அத்துடன் நேற்றைய தினம் ஹேகொட விபஸ்ஸி தேரரும் அரசாங்கத்திடம் குறிப்பிட்ட அளவு ஆய்வுகூடங்கள் இல்லாமலிருந்தால் தனியார் ஆய்வுகூடங்களையும் பெற்றுக்கொள்ள ஆவன செய்ய வேண்டும் என்று ஒரு வலுவான கருத்தை முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment