Wednesday, December 25, 2019

வன்னியில் இராணுவ வீரர் இனந்தெரியாத கும்பலால் தாக்குதல் - துப்பாக்கியையும் கைப்பற்றியது

வவுனியாவில் உள்ள போகஸ்வெவ இராணுவ முகாமில் பணியாற்றும் இராணுவ வீரர் ஒருவர் தாக்கப்பட்டதால் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என போகஸ்வெவ பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இராணுவ வீரர் கடைமைக் காலம் முடிவடைந்ததும், தனது முகாமை நோக்கி வந்துகொண்டிருந்த வேளையிலேயே, இராணுவ வீரர் ஒரு கும்பலினால் சரமாரியாகத் தாக்கப்பட்டுள்ளார். அவரிடமிருந்த துப்பாக்கியும் பறித்தெடுக்கப்பட்டுள்ளது என விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

இராணுவ சிப்பாயின் கழுத்தில் பலத்த வெட்டுக்கள் ஏற்பட்டதால், இராணுவ வீரரால் உதவிகோரி சத்தமிட முடியவில்லை. மற்றொரு இராணுவ வீரர் சோதனைச் சாவடிக்குச் சென்று கொண்டிருந்தபோது ஆபத்தான நிலையில், இராணுவ வீரர் காணப்பட்டுள்ளார்.

ஆபத்தான நிலையில் இருந்த இராணுவ வீரர் வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுர இராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், வவுனியாவில் உள்ள போகஸ்வெவ இராணுவ முகாமில் ஒரு இராணுவ வீரர் தாக்கியவிட்டு, பறித்தெடுத்த துப்பாக்கி கெக்கிராவ பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க கூறுகிறார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com