Sunday, April 21, 2019

பொலிஸ் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தங்கள் தடை.

நாட்டில் இடம்பெற்றுள்ள குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து நாடுபூராகவும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலையை அடுத்து பாதுகாப்பு வழங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

மறு அறிவித்தல் வரை இவ் ஊரடங்கு அறிவித்தல் அமுலில் இருக்கும் என பொலிஸ் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

இதேநேரம் இலங்கையில் அனைத்து சமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் தொடர் வெடிப்பு சம்பவங்கள் ஏற்படுவை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் வட்ஸ்அப், வைபர் மற்றும் முகப்புத்தகம் ஆகியவை இவ்வாறு தடை விதிப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com