Tuesday, April 9, 2019

பிரபாகரனின் பந்தினால் சிறுவன் யாழ் அவசர சிகிச்சைப் பிரிவில்.

யாழ் புத்தூர் பிரதேசத்தில் வெற்றுக்காணியொன்றினுள் காணப்பட்ட கிரனைட் ஒன்றை எறிந்து விளையாடிய சிறுவன் ஒருவன் யாழ் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பயன்பாடற்ற காணியொன்றினுள் காணப்பட்ட மேற்படி குண்டினை கண்டெடுத்த சிறுவன் அதனை எடுத்துவந்து புத்தூர் மேற்கு நிலாவரை பகுதியிலுள்ள தெருவொன்றில் எறித்து விளையாடும்போது குண்டு பாரிய சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில் சிறுவன் படுகாயமடைந்துள்ளான்.

காயங்களுடன் அச்சுவேலி வைத்தியாசாலையில் சேர்க்கப்பட்ட சிறுவன் உடனடியாக யாழ் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

30 வருடகால யுத்ததத்தில் பிரபாகரன் தமிழ் மக்களுக்கு விட்டுச் சென்றிருப்பது அழிவுகள் மாத்திரமே என்பது மீண்டும் மீண்டும் நிரூபனமாகின்றது. எமது எதிர்கால சந்ததியினர்கூட அச்சமற நடமாட முடியாத பூமியையே அவன் விட்டுச்சென்றுள்ளான் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com