Saturday, March 2, 2019

மாணவர்கள் தமது அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கான கால எல்லை, எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் நிறைவடையும்.

இந்த முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு, தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிக்கும் கால எல்லை எதிர்வரும் 31ஆம் திகதியுடன் நிறைவடையவிருப்பதாக, ஆட் பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் முதல் ஆட்பதிவுத் திணைக்களம் தேசிய அடையாள அட்டைக்கான புகைப்படத்தை இணையத் தளத்தின் ஊடாக பெற்றுக் கொள்ளவுள்ளது. ஆட்பதிவு திணைக்களம் இதற்காக இரண்டாயிரம் புகைப்பட நிறுவனங்களை பதிவு செய்துள்ளது. பரீட்சார்த்திகளும் புகைப்படங்களை மேற்படி பதிவு செய்யப்பட்ட புகைப்பட நிறுவனங்களில் மாத்திரம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று, ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

புகைப்பட நிறுவனங்கள் இந்தப் புகைப்படங்களை இணையத்தளத்தின் ஊடாக திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த புகைப்படங்களை பெற்றுக் கொள்வோர், புகைப்பட நிறுவனத்தினால் வழங்கப்படும் பற்றுச்சீட்டை தமது பாடசாலை அதிபரினால் உறுதி செய்து, தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பத்துடன் ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என, ஆட் பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com