Thursday, February 21, 2019

வட கிழக்கு இளைஞர்களுடன் ரகசிய சந்திப்பு நடத்தினாரா கோட்டா ? - ஏன் ? எதற்கு?

கோட்டாபய ராஜபக்ஷ, வடக்கு, கிழக்கிலுள்ள இளைஞர்கள் சிலருடன் கலந்துரையாடி உள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

கொழும்பில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் வெளிச்சம் என்ற அமைப்பின் செயற்பாடுகளை வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் தீவிரமாக முன்னெடுப்பதற்கான செயல் திட்டங்கள் குறித்தே விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் புதிய அரசியலமைப்பு, ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் மாவட்ட இணைப்பாளர்கள் மற்றும் தொகுதி மட்டத்திலான செயற்பாட்டாளர்களுக்கான நியமனமும் மார்ச் மாதமளவில் வழங்க தீர்மானிக்கபட்டுள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து கோட்டாபய ராஜபக்ஷ வடக்கு, கிழக்கு மாகாணங்களை குறிவைத்து செயற்படுகின்றார் என்று அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com