Tuesday, February 12, 2019

தமிழர்களை ஏமாற்றும் விதத்தில் மஹிந்த கருத்துரைத்தாலும் தமிழ் மக்கள் மிகவும் தெளிவாகவே இருக்கின்றனர் - பிரதமர்

மஹிந்த ராஜபக்ஷவால் தமிழர்களுக்கான தீர்வினை வழங்க முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அடித்துக் கூறியுள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே பிரதமர் இவ்வாறு கூறினார். ஆட்சியைப் பிடிப்பதற்காக மீண்டும் தமிழர்களை ஏமாற்றும் விதத்தில் மஹிந்த ராஜபக்ச கருத்துக்களை வெளியிட்டு வந்தாலும் தமிழ் மக்கள் மிகவும் தெளிவாகவே இருக்கின்றனர்.

தமது ஆட்சியின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைப் பல தடவைகள் பேச்சு மேசைக்கு அழைத்த மஹிந்த ராஜபக்ஷ, இறுதியில் அவர்களையும், ஒட்டு மொத்த தமிழர்களையும் ஏமாற்றி தமிழ் மக்களுக்கு துரோகம் செய்துள்ளார். இப்படி இருக்க எந்த முகத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் தமிழ் மக்களுடன் நேரடியாகப் பேசி தீர்வுத் திட்டத்தை மஹிந்த ராஜபக்ச முன்வைக்கப்போகின்றார் ? என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பி இருந்தார்.

புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழு விரைவில் கூடும். அதன்போது அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்கப்படும். எனவே, எத்தனைத் தடைகள் வந்தாலும், புதிய அரசியலமப்பினைத் தயாரிக்கும் முயற்சியைக் கைவிடப்போவதில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com