Wednesday, February 6, 2019

மன்னாரில் மீட்கப்பட்ட உலோகத் துண்டுகளையும் ஆய்வு செய்ய நடவடிக்கை

மன்னார் சதொச கட்டட வளாகத்திலுள்ள மனித எச்சங்களுடன் மீட்கப்பட்ட உலோகத் துண்டுகளையும், எதிர்வரும் காலங்களில் அரச இரசாயனப் பகுப்பாய்வாளருக்கு அனுப்பவுள்ளதாக, அகழ்வுப் பணிகளுக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நேற்றுவரை 138 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வுகளின் மூலம் இதுவரை 312 மனித எழும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில், 297 எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் 26 எழும்புக்கூடுகள் சிறுவர்களுடையது என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா நிறுவனத்தில் காபன் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ள மனித மாதிரிகள் தொடர்பான அறிக்கை, இந்த வாரத்திற்குள் கிடைக்கப்பெறும் எனவும் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com