Saturday, February 9, 2019

உண்மை நிரூபிக்கப்பட்டால், பதவியில் இருந்து விலக தயார் - சமல் ராஜபக்ஷ சூளுரை.

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை கூட்டம் தனது இல்லத்தில் இடம்பெற்றமையை நிரூபித்தால், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார்.

சமல் ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில், குறித்த கூட்டம் இடம்பெற்றதாக கோப் குழு அறிக்கை வெளியிட்டது. இதனை அடுத்து நாடாளுமன்றில் பெரும் அமளி துமளி ஏற்பட்டது.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற கோப் குழு அறிக்கை தொடர்பான, சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் போதே, இந்த பதற்றம் ஏற்பட்டது.

இதில் கலந்து கொண்டிருந்த இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை கூட்டம் முன்னாள் சபாநாயகர் சமால் ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றுள்ளதாக, கோப் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் நிறுவனத்தின் கூட்டம் சபாநாயகரின் வாசஸ்தலத்தில் நடத்த எந்த தேவையும் இல்லை. அப்படியாயின் யாருடைய தேவைக்கு இது நடத்தப்படுள்ளது? என்பதை உணர்ந்து கொள்ளலாம் என, ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டார்.

இதன்போது சபைக்கு வந்த முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, ஒழுங்கு பிரச்சினையை முன்வத்து, அவ்வாறு கூட்டம் நடத்தி தீர்மானங்கள் எடுத்திருப்பதை நிருபித்தால், தமது நாடாளுமன்ற பதவியை இராஜினாமா செய்வதாக குறிப்பிட்டார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான சுனில் ஹந்துன்னெத்தி, சமல் ராஜபக்ஷ மற்றும் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோருக்கிடையில், பெரும் வாக்குவாதங்கள் இடம்பெற்றதாக, நாடாளுமன்ற செய்திகள் தெரிவித்துள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com