Tuesday, February 26, 2019

கல்வியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் முக்கிய கவனத்திற்கு

அடுத்த மாதம் இறுதி வாரத்தில் கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சைகள்
ஆரம்பமாகும் என, ஆசிரியர் கல்விக் கல்லூரிகளுக்கான ஆணையாளர் கே.எம்.எச்.பண்டார அறிவித்துள்ளார்.

கல்வியியல் கல்லூரி அனுமதிக்காக விண்ணப்பிக்கப்பட்ட மாணவர்களின் விண்ணப்பங்களின் தகவல்கள், கணனியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். ஆகவே இந்த பதிவேற்ற பணிகள் நிறைவடைந்தவுடன் நேர் முகப் பரீட்சைக்கான அழைப்புக்கள் விடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்தத் தடவை முன்னெப்போதும் இல்லாத வகையில் எட்டாயிரம் மாணவர்கள் கல்வியியல் கல்லூரியில் கல்வி கற்கும் வாய்ப்பை பெறுகின்றார்கள்.

எதிர்வரும் மே மாதம் கல்வியியல் கல்லூரி பாட நெறிகளை ஆரம்பமாகவுள்ளன.

இதனிடையே, இம்முறை கல்வியியல் கல்லூரிகளுக்கு உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றிய இரு ஆண்டுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒரே தடவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com