Tuesday, February 19, 2019

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ரத்து செய்ய வேண்டிய நேரம் இது- அமைச்சர் ரவி

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வோம் என பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியாளர்களை சந்தித்து கருத்துரைத்த அவர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ரத்து செய்ய வேண்டிய நேரம் இது எனக் கூறினார். அத்துடன் நாட்டின் அரசியலில் தீவிர மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும் கருத்து வெளியிட்டு உள்ளார்.

இதேவேளை, 71 ஆண்டுகால சுதந்திரத்தை நினைவூட்டுவதால், உண்மையான பொருளாதார சுதந்திரத்தை நாடு அனுபவித்து வருகிறதா ? என அமைச்சர் இதன்போது கேள்வி எழுப்பினார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com