Tuesday, February 19, 2019

வெளிநாட்டவர்களின் வருகையில் அதிகரிப்பு

நாட்டில் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட குழப்ப நிலைமை காரணமாக சடுதியாக குறைவடைந்திருந்த வெளிநாட்டவர்களின் வருகை, மீண்டும் அதிகரித்துள்ளது.

ஜனவரி மாதம் இலங்கை வந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் சுமார் இரண்டு இலட்சத்து 40 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளார்கள். இம்முறைவந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 44 ஆயிரமாகும். இது இரண்டுசதவீதத்திற்கு மேலான வளர்ச்சி என்று அவதானிக்கப்பட்டுள்ளது. இவர்களில் இந்தியாவிலிருந்து கூடுதலான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை கண்டறிப்பட்டுள்ளது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com