Thursday, February 28, 2019

புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பில், தீர்க்கமான பேச்சுவார்த்தை - கனக ஹேரத்

புதிய கூட்டணியொன்றை ஏற்படுத்துவது குறித்த தீர்க்கமான பேச்சுவார்த்தை ஒன்று, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கட்சியின் தவிசாளரும், பேராசிரியருமான ஜி.எல்.பீரிஸ் மற்றும் டளஸ் அழகப்பெரும உள்ளடங்கிய குழுவே இது குறித்த பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளது.

இலங்கையில் ஒரு பரந்த கூட்டணியை உருவாக்கும் பேச்சுவார்த்தைகள், தற்போது முன்னோக்கி நகர்கின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

குறித்த பேச்சுக்களை நடத்துவதற்கு பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், டளஸ் அழகப்பெரும மற்றும் ஜகத் வெல்லவத்த ஆகியோர் கொண்ட குழு நேற்று நியமிக்கப்பட்டதாக கனக ஹேரத் மேலும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com