Tuesday, February 19, 2019

இராணுவத்தினரின் சுயகௌரவத்தை பாதுகாக்கும் வகையிலான ஜெனீவாத் தீர்மானமொன்றை கொண்டுவருவோம் - ஜி.எல். பீரிஸ்

இவ்வருட இறுதிக்குள் ஸ்தாபிக்கப்பட்டவுள்ள மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் ஊடாக, புதிய ஜெனிவாத் தீர்மானமொன்றைக் கொண்டுவர நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று கொழும்பில், இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா, மனித உரிமைகள் பேரவையின் 40 வது அமர்வு இம்மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதன்போது இலங்கை தொடர்பான விடயங்களை கலந்துரையாடுவதற்கு இதற்கு இலங்கை அரசாங்கமும் தயார் நிலையில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் இந்தச் செயற்பாடானது தேச துரோகமானது என்பதே எமது கருத்தாகும்.

கடந்த 2015, 2017 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய தேசியக் கட்சி, எந்தவொரு பின்விளையும் யோசிக்காமல்தான் சர்வதேசத்துக்கு வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. எனினும் அவற்றை நிறைவேற்றிக்கொள்ள இன்னும் அரசாங்கத்தால் முடியாதுள்ளது. இவ்வாறு அரசாங்கத்தினால் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இந்தப் பிரச்சினையால் இராணுவத்துக்குத் தான் தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது.

அது மாத்திரமன்றி இராணுவத்துக்கு எதிராக வழக்குகளைத் தொடுக்கவும் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த செயற்பாடுகளில் பின்னணியில் புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் செயல்படுகின்றதா? எனும் சந்தேகமும் எமக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் எல்லாம் எமது நாட்டுக்குப் பொருத்தம் இல்லாத ஒன்றாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வருட ஜெனிவாக் கூட்டத்தொடரின்போது சர்வதேச விசாரணைக்கு ஒருபோதும் அனுமதியளிக்கப் போவதில்லை என்றுத் தெரிவித்திருந்தார்.

இது இந்த அரசாங்கத்தில் நிறைவேற்றப்பட்ட ஜெனிவா பிரேரணையை விட முற்றிலும் மாறப்பட்டதாகும். தேசியம் மற்றும் இராணுவத்தினரின் சுயகௌரவம் மற்றும் உரிமைகளை பாதுகாக்கும் வகையிலேயே இந்த புதிய பிரேரணை அமையும். இதன் ஊடாக நாம் நல்லிணக்கத்துக்கு எதிராக செயற்படுகிறோம் என்று அர்த்தமில்லை என்று ஜி.எல். பீரிஸ் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com