Monday, February 25, 2019

40ஆவது கூட்டத்தொடர் இன்று - வடக்கில் முழு அடைப்பு - கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகவுள்ளதோடு, மார்ச் மாதம் 22ஆம் திகதிவரை இதன் அமர்வுகள் தொடர்ந்து இடம்பெறவுள்ளன.

இதில் இலங்கை தொடர்பாக கொண்டு வரப்படவுள்ள தீர்மான வரைவு தொடர்பான முதலாவது கலந்துரையாடல் மார்ச் 5ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன், மார்ச் 20ஆம் திகதி, இலங்கை தொடர்பான விவாதம் இடம்பெறும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பிரதான பொறுப்பை பிரித்தானியா வகிக்கவுள்ள நிலையில், இலங்கை தொடர்பான கூட்டுத் தீர்மானமொன்றையும் பிரித்தானியா சமர்ப்பிக்கவுள்ளது. இதில் மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் மீளமைப்பு ஆகிய விடயங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தப்படும்.

இதனிடையே காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் அழைப்பில், வட மாகாணத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம் தொடக்கியுள்ளது. வடக்கிலுள்ள பாடசாலைகள், அரச செயலகங்கள், தனியார் நிறுவனங்கள், வணிக நிலையங்கள் என்பன பூட்டப்பட்டுள்ளதோடு, போக்குவரத்துச் சேவை முற்றாக முடங்கியுள்ளதாக அங்கிருந்தது கிடைக்கும் தகவல்கள் தேர்விக்கின்றன.

இது இவ்வாறு இருக்க கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை காலை 10.00 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளனர். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அளித்திருந்த வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றத் தவறியுள்ளதை வெளிப்படுத்தியும், தமக்கு இன்னமும் நீதி வழங்கப்படாததைக் கண்டித்தும், இலங்கைக்கு இனிமேலும் கால அவகாசம் தேவையில்லை எனது தெரிவித்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த போராட்டத்திற்கு பல தரப்பில் இருந்தும் ஆதரவு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com