Wednesday, February 6, 2019

மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட 25 பேர் தொடர்பில், பாதுகாப்பு மற்றும் வௌிவிவகார அமைச்சுடன் இணைந்து விசாரணைகள்.

மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட 25 பேர் தொடர்பில், பாதுகாப்பு மற்றும் வௌிவிவகார அமைச்சுடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுக்கத் தீர்மானம்

கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலக கோஷ்டித் தலைவருமான மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட 25 பேர் தொடர்பில், மேலதிக விசாரணைகளை பாதுகாப்பு அமைச்சு மற்றும் வௌிவிவகார அமைச்சுடன் இணைந்து முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

டுபாயிலுள்ள பிரபல நட்சத்திர விடுதியில் நடைபெற்ற மாகதுரே மதூஷின் பிள்ளையின் பிறந்தநாள் வைபவத்தில் சுமார் 25 பேர் வரை கைதாகியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 5 பேர், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என்று கூறப்படுகின்றது. இவர்களில் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் கஞ்சி பானை இம்றான், கெசல்வத்தே தினுக்க உள்ளிட்டவர்களும் கைதாகியுள்ளனர். இலங்கையின் பிரபல பாடகர் அமல் பெரேரா, மற்றும் அவருடைய மகன் போன்றோரும், நடிகர் ஒருவரும் இவர்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com