Friday, February 15, 2019

2020 இல், நாட்டை ஆளும் ஆளுமை, மொட்டு சின்னத்திற்கே உண்டு - ரொஷான் ரணசிங்க எதிர்வுகூறல்.

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், இலங்கையில் மொட்டு சின்னத்தின் ஜனாதிபதியே, நாட்டை ஆட்சி செய்வார் என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்க தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரொஷான் ரணசிங்க எதிர்வுகூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான முதலாவது அங்குரார்ப்பண கூட்டம் மட்டக்களப்பில் இன்றைய தினம் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பிரதி அமைப்பாளர் எஸ்.அமரசிங்க தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு, கருத்துரைத்த போதே, அவர் இதனை கூறினார்.

இந்த கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சில மாவட்ட அமைப்பாளர்கள் கலந்து கொண்டதுடன், பிரதேசசபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள் உளியிட்ட பலர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .

அடுத்து வரவுள்ள தேர்தல் எமது தரப்புக்கு சாதகமானதாக அமையும். மக்களும் எமக்கே தமது ஆதரவை வழங்க தயாராக உள்ளனர் என்று, ரொஷான் ரணசிங்க குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com