Thursday, February 28, 2019

19 க்கு எதிராக, தவறான கருத்துக்களை கட்டியெழுப்ப முயற்சி - முஜிபுர் ரஹ்மான்

இலங்கையின் 19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக, மக்கள் மத்தியில் தவறான பல கருத்துக்களை கட்டியெழுப்புவதற்கு, எதிர்க்கட்சி தயாராகி வருவதாக, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சியினர் இன்று இரண்டு பிரதான விடயங்களை கையில் எடுத்துச் செயற்படுகின்றனர். ஒன்று சட்ட மா அதிபர் திணைக்களம், மற்றையது நீதிமன்றம். நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இவை இரண்டும் சுயாதீனமாக செயற்பட்டு வரும் நிலையில் கடந்த ஆட்சியில் மோசடி மற்றும் குற்றச்செயலில் ஈடுபட்ட எதிர்த் தரப்பினர் இவற்றுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

மோசடிக்காரர்கள் அந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்துக் கொள்ளவே இவ்வாறான வழிமுறைகளை கையாண்டு வருகின்றனர். எனவே மக்கள் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com