ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய மாவட்ட தலைவர்கள் நியமனம்
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய மாவட்ட தலைவர்கள், கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
கொழும்பு மாவட்டத்தின் தலைவராக திலங்க சுமதிபால,கம்பஹா மாவட்டத்திற்கான தலைவராக லசந்த அழகியவண்ண, களுத்தறை மாவட்டத்திற்கான தலைவராக மஹிந்த சமரசிங்க, காலி மாவட்டத்திற்கான தலைவராக ஷான் விஜேலால் டி சில்வா, கண்டி மாவட்டத்திற்கான தலைவராக எஸ்.பி. திஸாநாயக்க, கேகாலை மாவட்டத்திற்கான தலைவராக ரஞ்சித் நியமிக்கப்பட்டனர்.
மேலும், விஜய தஹநாயக்க மாத்தறை மாவட்டத்திற்கான தலைவராகவும், மஹிந்த அமரவீர ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான தலைவராகவும், தயாசிறி ஜயசேகர குருநாகலுக்கான தலைவராகவும், பதுளை மாவட்டத்திற்கு நிமல் சிறிபால டி சில்வாவும், அனுராதபுரம் மாவட்டத்திற்கான தலைவராகவும் துமிந்த திசாநாயக்கவும், அம்பாறை மாவட்டத்திற்கு ஶ்ரீயானி விஜேவிக்ரமவும், யாழ். மாவட்டத்திற்கு அங்கஜன் இராமநாதனும், மாத்தளைக்கு லக்ஸ்மன் வசந்த பெரேராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் பொலன்னறுவை, புத்தளம் மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கான தலைவர்கள் இதன்போது நியமிக்கப்படவில்லை.
0 comments :
Post a Comment