Sunday, January 20, 2019

நடக்குமா? நடக்காதா? என சாஸ்திரம் பார்ப்பதை கைவிட்டு, புதிய அரசியலமைப்புக்காக, முழு மூச்சாக செயல்படுங்கள் - சுமந்திரன்.

முழு மூச்சாக செயல்பட்டு புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதே சாலச் சிறந்தது என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்றஉறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் அமைப்பை கொண்டு வருவதில் ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளேயே முரண்பாடுகள் நிலவுவதாக, அரச கரும மொழிகள், மற்றும் இந்து சமய  விவகார அமைச்சர் மனோ கணேசன் நேற்று கூறியிருந்தமை தொடர்பில், கருத்து வெளியிட்ட போதே, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு கூறினார்.

புதிய அரசியலமைப்பிற்கு அங்கே எதிர்ப்பு, இங்கே எதிர்ப்பு, அது நடக்குமா? நடக்காதா? என்று சாஸ்திரம் பார்க்காது, அதனை அடைய முழு மூச்சாக செயற்பட வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளே இருக்கின்ற எதிர்ப்பு என்று அமைச்சர் மனோ கணேசன் கூறுவது, வீணாக அரசியல் அமைப்பை தலையில் சுமந்து கொண்டு தேர்தலில் தோற்று விடுவோமோ? என்ற ஐக்கிய தேசிய கட்சிக்குள் இருக்கும் பயமே என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com