Tuesday, January 1, 2019

அரசியல் யாப்பு மாற்றத்திற்கோ, மூன்றில் இரண்டிற்கு இடமளியோம். திலங்க சுமதிபால

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை அமைத்துக் கெர்ள்வதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்கப்போவதில்லை என பாராளுமன்ற அமைச்சர் திலங்க சுமதிபால ஊடவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

'எதிர்கட்சி தலைமைத்துவத்தையும் எதிர்கட்சி காரியாலயத்தையும் இதுவரை எம்மிடம் ஒப்படைக்கவில்லை. இவ்வாறாக தமிழரசு கட்சியினர் செயற்படுவதை நாம் இலகுவாக நினைக்க முடியாது.

பாராளுமன்றத்தில் வெறும் 16 ஆசனங்களை மட்டும் கொண்டுள்ள சிறிய கட்சி ஒன்றிற்கு எதிர்கட்சி தலைமைத்துவத்தை வழங்க முயற்சிப்பது ஐக்கிய தேவிய கட்சியின் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மறுபுறத்தில் அரசியலமைப்பு சீர்திருத்தத்தை நிறைவேற்று முயற்சிக்கின்றனர். அதன்மூலம் பெடரல் முறைமையிலான அரசியலமைப்பு ஒன்றை ஏற்படுத்தி வடகிழக்கை இணைத்து அதிகாரங்களை பெற்று மீண்டும் ஈழம் என்ற இலக்கை அடையவே ஏற்பாடுகள் நடைப்பெறுகின்றன.

அத்துடன் சுமந்திரன் அவர்கள் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் கீர்த்திக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்தும் பேசிக் கொண்டிருக்கிறார். எவ்வாறெனினும் பாராளுமன்றத்தில் 2/3பெரும்பான்மையை பெற நாம் ஒரு போதும் இடமளிக்க போவதில்லை' என அவர் தெரிவித்திருந்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com