Thursday, January 31, 2019

மண்டுர் விதானையும் தச்சனின் மகளும் இணைத்து கசிப்பு-கஞ்சா விற்பனை. உதயகுமார் நித்திரை.

மண்டுர் துறையடி பிரதான வீதியில் வசித்துவரும் அரியன் என்ற பெயருடைய தச்சுத்தொழிலாளி ஒருவனின் மகளான வசந்தி என்பவள் நீண்ட காலமாக அப்பிரதேசத்தில் கசிப்பு , கஞ்சா , சட்டவிரோ மதுபாணம் மற்றும் போதைப் பொருட்களை விற்றுவருதாகவும், இதற்கு கிராம மக்கள் பெரும் எதிர்ப்பினை காண்பிக்கின்றபோதும் அவர்களால் அவ்வியாபாரத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை எனத் தெரியவருகின்றது.

இவ்வாறு கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி அவளால் வியாபாத்தை தொடர்ந்து மேற்கொள்ள முடிவதற்கான காரணம், மண்டுர் கோட்டைமுனை கிராம உத்தியோகித்தர் ஆனந்தன் என்பவன் வசந்தி என்பவளுக்கு தொடர்ந்து ஒத்தாசை புரிந்துவருவதே என மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர். இவ்விடயம் தொடர்பில் பிரதேச நலன்விரும்பிகள் தொடர்ச்சியாக முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்களுடாக வெளிப்படையாக குற்றஞ்சாட்டியுள்ளதுடன் தங்களது எதிர்ப்பையும் வெளிக்காட்டி வருகின்றனர்.

மேற்படி சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரத்தினால் கிராமத்திலுள்ள பல இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. கிராமத்தின் ஒழுக்க மற்றும் சமூகக்கட்டமைப்புகள் தொடர்பாக அக்கறையுடன் செயற்படவேண்டிய கிராம சேவை உத்தியோகித்தர் சட்டவிரோ செயற்பாட்டுக்கு பொறுப்புணர்சியற்று உதவுகின்றார் என்ற குற்றச்சாட்டு வெளிப்படையாக முன்வைக்கப்பட்டுள்ள நிலையிலும் மாவட்ட செயலாளர் உதயகுமார் குறித்த கிராம சேவை உத்தியோகித்தருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாவட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக வெல்லாவெளி பொலிஸார் வசந்திக்கு எதிராகவும் மாவட்ட செயலர் உதயகுமார் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிரதேச மக்கள் வலியுறுத்தி நிற்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com