கல்வி கற்ற இளைஞர்களால் மட்டுமே, தமிழ் சமூகத்தை முன்னேற்ற முடியும் - எம்.உதயகுமார்
இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளானவர்கள். மேலும் சமூக ஒற்றுமையின்மை, குறுகிய நோக்கங்கள் போன்ற காரணங்களால், இன்னும் தமிழ் சமூகம் பின்தங்கிய நிலையிலேயே உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் குற்றம் சுமத்தியுள்ளார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே எம்.உதயகுமார் இதனை குறிப்பிட்டுள்ளார். இளைஞர்கள் சமூகத்தினை பொறுப்பேற்கும் காலம் வருகின்றபோதுதான் புதிய முன்னேற்றம் ஏற்படும்.
எனவே தமிழ் சமூகத்தை சிறந்த முறையில் கட்டியெழுப்ப, கல்வி கற்ற இளைஞர்களால் மட்டுமே முடியும்.
இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளானவர்கள். மேலும் சமூக ஒற்றுமையின்மை, குறுகிய நோக்கங்கள் போன்ற காரணங்களால், இன்னும் தமிழ் சமூகம் பின் தங்கிய நிலையிலேயே உள்ளது.
எனவே தமிழ் சமூகத்தை சிறந்த முறையில் கட்டியெழுப்ப, கல்வி கற்ற இளைஞர்களால் மட்டுமே முடியும்.
அந்த வகையில் ஒரு சமூகம் வாழ வேண்டுமானால் கல்வி, பொருளாதாரம், அரசியல், கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்கள், வாழ்வியல் முறைகள், அந்த இனத்தின் மொழி, அதன் வாழ்விடம் தொடர்பில் நாங்கள் கவனம் செலுத்தவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம். உதயகுமார் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment