Wednesday, January 30, 2019

மே மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஒரே தினத்தில் தேர்தல் - ஜனாதிபதி விசேட பிரேரணை

நாட்டின் அனைத்து மாகாணங்களின் தேர்தல்களையும் எதிர்வரும் மே மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஒரே தினத்தில் நடாத்தப்பட வேண்டும் என்ற பிரேரணையொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக்கு முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் விசேட பிரேரணையாக இது நேற்றைய தினம் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆட்சிக் காலம் நிறைவடைந்துள்ள மற்றும் நிறைவடையவுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் மே மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் நடாத்துமாறும், இத்தேர்தல்களை பழைய முறைப்படி நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யுமாறும் ஜனாதிபதியின் பிரேரணையில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் ஜனாதிபதி முன்வைத்த விசேட பிரேரணை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com