Thursday, January 3, 2019

2018 போன்றே 2019 அமையும் - பசில் ராஜபக்சவின் எதிர்வுகூறல்!

சிறிலங்கா பொதுஜன பெரமுன, எந்த கட்சியுடனும் இணைவதற்கு தயாராக உள்ளதாக, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸ கூறியுள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர், ஊடகங்களிடம் கருத்துரைத்த போதே, பஷில் ராஜபக்ஸ இவ்வாறு குறிப்பிட்டார்.

2018 ஆம் ஆண்டு தேர்தலுக்கான காலமென பொதுஜன பெரமுன எதிர்வு கூறியது. அதேபோன்று தேர்தல் இடம்பெற்று நாங்கள் அமோக வெற்றியைப் பெற்றுக் கொண்டோம். அதே போன்று 2019 ஆம் ஆண்டும் தேர்தலுக்கான ஆண்டாகவே அமையப்போவதாகவும், இந்த ஆண்டிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மிகப்பெரும் வெற்றியடையும் என, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸ எதிர்வு கூறியுள்ளார்.

தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், மக்களுக்கு தேவையான ஒரு அரசாங்கத்தை அமைத்து, லஞ்சம், ஊழலை இல்லாதொழிப்பதுடன் சமாதானமாக பயணிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.,

இந்த ஆண்டும் அனைத்து மக்களும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கே ஆதரவளிப்பார்கள் என நம்மிக்கை வெளியிட்ட முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸ, அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி எமக்கே கிடைக்கும் எனவும் குறிப்பிட்டார். இந்த வெற்றி கூட்டணியில் பெரமுனவுடன் யார் வந்து இணைந்தாலும், அவர்களுடன் சேர்ந்து பயணிக்க, தாம் தயாராக உள்ளதாக முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com