Monday, December 31, 2018

சிறிதரனின் கஞ்சிக்குள் மண்ணைத்தூவிய கிளிநொச்சி மக்கள்.

வன்னியில் வெள்ளபெருக்கினால் பாதிப்புற்று பாரமரிப்பு நிலையங்களில் தஞ்சம் அடைந்திருந்த மக்கள் சிறிதரனுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளனர்.

முகாம்களிலிருந்த மக்களை வைத்து பல்வேறு வழிகளில் அரசியல் லாபம் தேடிவந்த சிறிதரன் தனது திட்டங்கள் நிறைவேறும்வரை மக்களை தொடர்ந்தும் அம்முகாம்களில் தங்கவைத்துக்கொள்ளவே முயற்சித்துள்ளார்.

அவ்வாறு அவர்களை வைத்து அரசிடமும் புலம்பெயர் தமிழ் மக்களிடமும் நிவாரணத்தை பெற்று அதில் ஒரு தொகுதியை தனது பொக்கட்டினுள் போட்டுக்கொண்டு மிகுதியை மக்களுக்கு வழங்கும்போது சகலதும் தான்தான் என்ற படம் காட்டுவதே அவரது நோக்கமாக இருந்துள்ளது. ஆனாலும் மக்கள் சற்று வெயில் வந்தவுடன் முகாம்களை விட்டு வெளியேறி விட்டனர். இதைக்கண்ட சிறிதரன் படம் தோற்றுவிட்டதென பெரிதும் ஏமாற்றத்துடன் காணப்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் அம்மக்களை மேலும் ஒரிரு நாட்கள் தங்கியிருக்குமாறு தனது எடுபிடிகளான பிரதேச செயலர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களை கொண்டு பல்வேறு வழியில் முயற்சித்தபோதும், மக்கள் தாம் நிவாரணத்திற்காக முகாமுக்கு வரவில்லை, வெள்ளம் காரணமாக வந்தோம், வெயிலெறிக்கின்றது போகின்றோம் என முஞ்சயில் அறைந்தாற்போல் பதில் அளித்துள்ளனர்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com