Tuesday, December 4, 2018

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மஹிந்தர் மேன்முறையீடு.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் புதிய அமைச்சர்களுக்கும் அமைச்சு பதவிகளை தொடர்வதற்கு மேன்முறையீட்டு நீதிமனறத்தால் விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ இந்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். இடைக்கால உத்தரவானது அரசியல் அமைப்பிற்கு முரணானது என சுட்டிக்காட்டியதோடு இவ்வாறான தீர்ப்பளிக்க மேன்முறையீட்டு நீதி மன்றத்திற்கு எவ்வித அதிகாரமும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

இம் மனுவில் இலங்கை தமிழரசுக கட்சிய, ஐக்கிய தேசிய கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

அத்தோடு அவர் நாட்டின் ஸ்திரமான அரசியல் சூழ்நிலைக்கு பொதுதேர்தல் ஒன்றின் போது மக்கள் மத்தியில் வெற்றியினை ஈட்டி கொடுக்கும் வகிபங்கு ஊடகத்திடமே உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com