Tuesday, December 18, 2018

2009 இன் பின்னர் இராணுவத்தினால் விடுவிக்கப்பட்டுள்ள காணிகளின் விபரம்.

வடகிழக்கில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இராணுத்திரின் பாவனைக்கும் மற்றும் பாதுகாப்பு வலயங்களாக பிரகடணம் செய்யப்பட்டிருந்த காணிகளில் 69754.59 ஏக்கர் காணிகள் 2009 ம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

2018 நவமபர் 25 வரை காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவை தனியார் மற்றும் அரச காணிகளாகவே காணப்பட்டன என இராணுவ உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 2009 ஆண்டு படையினரின் பாவனையிலிருந்த காணிகளின் விபரங்கள்

யாழ்ப்பானம்-25202.88
கிளிநொச்சி-25948.49
முல்லைதீவு-11911.18
மன்னார்-2302.30
வவுனியா-7331.47
திருகோணமலை-1859.65
மட்டக்களப்பு-1592.29
அம்பாறை-8375.58

இவற்றில் விடுவிக்கப்பட்ட காணிகளின் அளவு

யாழ்ப்பானம்-22496.09
கிளிநொச்சி-24396.29
முல்லைத்தீவு-7126.69
மன்னார்-885.74
வவுனியா-6525.24
திருகோணமலை-98.18
மட்டகளப்பு-1040.29
அம்பாறை-7460.82

ஏக்கர் காணிகளும் தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்படாத வகையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் 263.55 ஏக்கர் காணிகளை 2018.12.31 இற்கு முன்னர் யாழ்ப்பாண பாதுகாப்பு படைகளின் தலைமையத்தின் ஊடாக விடுவிக்கப்படும் எனவும் இராணுவ வட்டாரங்களில் இருந்து தகவல்கள் தெரிவிக்கபபடுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com