Sunday, November 4, 2018

எதிர் கட்சியில் அமர்ந்திருந்து, ஆழும் கட்சிக்கு ஆதரவு வழக்கப்போகிறாராம் ரத்ன தேரர்.

இன்றைய நாட்டின் நிலவரங்களை அடிப்படையாகக் கொண்டு புதிய பிரதமரை நியமித்தது ஜனாதிபதி சரியானது என்றும் அத்தோடு ஜனாதிபதிக்கு காணப்படும் நிறைவேற்று அதிகாரங்களை கொண்டு பாராளுமன்றத்தை கலைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார் அதுரலிய ரத்ன தேரர்.

மேலும் அவர் கூறுகையில், மக்கள் பெரிதும் மாற்றத்தையே விரும்புகின்றார்கள். அவர்கள் விரும்பும் மாற்றத்தை முன்னைய அரசாங்கம் வழங்க தவறிவிட்டது. இதனால் நாட்டின் பொருளாதாரமும் ஏனைய துறைகளும் சீரற்ற நிலை காணப்படுகிறது.

நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டையும் பௌத்த மதத்தினையும் பாதிக்கும் வண்ணம் அரசியல் நடவடிக்கைகள் காணப்பட்டமையும் முன்னைய அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு காரணமாகியது.

மேலும் நாட்டின் தேசிய வளங்களை வெளிநாட்டவர்க்கு தாரை வார்த்து கொடுக்கும் செயற்பாடானது ஒரு பொழுதும் எம்மால் அனுமதிக்க முடியாது என ராஜகிரிய சதம் செவனயில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கூறியுள்ளார் ரத்ன தேரர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com