Saturday, November 10, 2018

மஹிந்த தேசப்பிரியவின் முன்னுக்கு பின் முரணான கருத்து. அடிப்பாரா பல்டி?

பாராளுமன்று நேற்று கலைக்கப்பட்டதை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் கருத்தை அறியாமல், தேர்தல்கள் ஆணைக்குழு, நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்த முடியாது என்று லங்காஈநீயுஸ் இணையத்தளத்திற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்ததாக அவரது தம்பி சுனந்த தேசப்பிரிய தனது முகநூலில் பதிவிட்டிருந்தார்.

அதேவேளை, இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தின் கருத்தை நாடுவீர்களா என மகிந்த தேசப்பிரியவிடம் 'தி ஹிந்து' நாளிதழ் நேற்றிரவு கேள்வி எழுப்பிய போது, அது குறித்து கருத்து வெளியிட மறுத்திருந்தார்.

எனினும், அவர் '; தேர்தலுக்கான நாளைக் குறிக்கும் அதிகாரத்தை சிறிலங்கா அதிபர் கொண்டிருக்கிறார். தேர்தலை நடத்துவது குறித்த நிலைப்பாடு தொடர்பாக, ஆணைக்குழு கலந்துரையாடும்.' என்றும் அவர் கூறியுள்ளார்.

மறுபுறத்தில் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு நேற்றிரவு கருத்து வெளியிட்டிருந்த தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய:

'நாடாளுமன்ற கலைப்பு குறித்த அரசிதழ் வெளியானதும், தேர்தல்கள் ஆணைக்குழுவைக் கூட்ட வேண்டும்.

நாங்கள் தீயணைப்பு படைப்பிரிவு போல, எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும்.' என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com