Friday, November 9, 2018

வெளியே வந்தார் சந்திரிகா அம்மையார். சோபித தேரரின் உருவப்படத்தில் வீழ்ந்து அஞ்சலி.

இலங்கையின் அரசியல் நெருக்கடிகள் ஏற்ப்பட்டுள்ள இந்நிலையில் வெளியே வராமலிருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவை முதன் முறையாக பார்க்க முடிந்தது.

கொழும்பு புதியநகர மண்டபத்தில நேற்று நடைபெற்ற சோபித்த தேரரின் 3வது சிரார்த்த தின விழாவில் அவர் கலந்து கொண்டு தேரருக்கு தனது அஞ்சலியைச் செலுத்தினார்.

2014ம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் சுகாதார அமைச்சராக விளங்கிய மைத்திரிபால சிரிசேன, ஜனாதிபதி பொது வேட்பாளராக போட்டியிடுவார் என இதேமண்டபத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com