Tuesday, October 2, 2018

சிறையினுள் ஞானசாரரின் உயிருக்கு ஆபத்தாம்!

நீதிமன்றை அவமதித்த குற்றத்திற்காக 6 வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரரின் உயிருக்கு சிறையினுள் ஆபத்தேற்பட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்துமாறு பொதுபல சேனா அமைப்பைச் சேர்ந்த தேரர்கள் சிலர் சிறைச்சாலையின் ஆணையாளருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளனர்.

இக்கடிதத்தை நேற்றுக்காலை சிறைச்சாலைகள் ஆணையாளரிடம் கையளிக்க சென்றபோது முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவும் தேரர்களுடன் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


இதேநேரம் இன்று ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறுகோரி பொதுபலசேனா தேரர்கள் ஜனாதிபதி மாளிகைக்கு சென்று வேண்டுதல் ஒன்றை கொடுத்தனர்.

பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்கள், எதிர்வரும் காலங்களில் தேர்தல்கள் பல வருவதாகவும் ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படாதவிடத்து பௌத்த சிங்களவர்களை தேரருக்கு எதிரானவர்களுக்கு எதிராக திரட்டவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com