நீர்மூழ்கி கப்பலிலிருந்து ஏவுகணை சோதனை: வடகொரியா அதிபர் கிம் ஜாங்-உன் பாராட்டு
வடகொரியாவில் நீருக்கடியில் நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து நடத்திய ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதற்கு அந்நாட்டு அதிபர் கிம் ஜாங்-உன் பாராட்டு தெரிவித்துள்ளார். இதன்மூலம் தென்கொரியா, அமெரி்க்காவை தாக்குவதற்கான திறன் தங்களுக்கு இருப்பதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
அதேநேரம் வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனை என்பது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறிய செயல் என்று அமெரிக்காவும் பிரிட்டனும் தெரிவித்துள்ளன. மேலும் மேற்கொண்டு இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வடகொரியாவை வலியுறுத்தி உள்ளன.
ஜப்பான் கடல் பகுதியிலிருந்தபடி ஏவப்பட்ட அந்த ஏவுகணை வெறும் 30 கி.மீ. தூரம் மட்டுமே பறந்து சென்றதால், அது தோல்வியடைந்திருக்கும் என்று தென்கொரியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வடகொரிய அரசால் நடத்தப்படும் கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீர்மூழ்கி கப்பலிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை சோதனையை அதிபர் கிம் நேரில் பார்வையிட்டு உறுதி செய்தார். மேலும் தென்கொரியாவும் அமெரிக்காவும் தங்களுக்கு எதிராக செயல்பட்டால், அவற்றைத் தாக்கும் திறன் வடகொரியாவுக்கு இருக்கிறது என்றும் கிம் தெரிவித்தார்” என கூறப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment