Monday, May 5, 2014

மின்சாரம் தாக்கி மட்டு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் அதிதீவிர சிகிச்சை பிரிவில்..

மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ் செழியன் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் தனது இல்லத்தில் வைத்து இன்று அதிகாலை மின்தாக்குதலுக்கு உள்ளானதாக உறவினர்கள் தெரிவித்துள்னர்.

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொன். செல்வராசா, சீ.யோகேஸ்வரன், மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உட்பட பலர் இவரை வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com