நடிகையை பலாத்காரம் செய்துவிட்டு பணத்துடன் தப்பி ஓடிய சாமியார் கைது!
மும்பையில் இந்தி தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் 27 வயது நடிகையை பலாத்காரம் செய்துவிட்டு பணத்துடன் தப்பி ஓடிய சாமியாரை பொலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு ஆணையம் வீடுகள் கட்டி குலுக்கல் முறையில் நபர்களை தேர்வு செய்து வழங்கி வருகிறது. இந்த குலுக்கலில் வீடு ஒன்றை வெல்ல மும்பை இந்தி தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் 27 வயதுடைய நடிகை ஆசைப்பட்டுள்ளார்.
இதையடுத்து, இஸ்மாயில் ஆசிம் கான் என்ற சாமியாரை அந்த நடிகை அணுகியுள்ளார். சாமியார் இஸ்மாயில், பூஜை செய்கிறேன் என்று நடிகையின் வீட்டுக்கு சென்று காணிக்கையாக லட்சக்கணக்கில் கேட்டுள்ளார். வீடு கிடைக்கும் என்ற ஆசையில் நடிகையும் பணத்தை கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுகொண்ட அந்த சாமியார், நடிகையை பலாத்காரம் செய்துவிட்டு பணத்துடன் அங்கிருந்து தப்பியோடி இருக்கிறார்.
இதை தொடர்ந்து இந்தி நடிகை, பொலீசில் புகார் கொடுத்திருக்கிறார். அவரது புகாரின் அடிப்படையில் பொலீசார், சாமியார் இஸ்மாயில் ஆசிம் கானை கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாகிவிட்ட சாமியாரின் உதவியாளரை பொலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
0 comments :
Post a Comment