Tuesday, May 27, 2014

எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்கள் மூவர் மலேசியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தல்

மலேசியாவில் கைதான எல்.ரி.ரி.ஈ அமைப்பின் மூன்று சந்தேக நபர்களை மலேசியா இலங்கைக்கு நாடுகடத்தவுள்ளதாக அந்த நாட்டின் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலும், ஏனைய நாடுகளிலும் உள்ள தமது தொடர்புகள் மூலம் இவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பை மீள உருவாக்க முயற்சித்ததாக, தனது பெயரை வெளியிடாத அந்த அதிகாரி பிபிசி சிங்கள சேவையிடம் கூறினார்.

பல நாடுகளில் தடை செய்யப்பட்ட புலிகள் அமைப்புக்கு நிதி சேகரிப்பது மற்றும் அதற்கான பரப்புரைகளை செய்வது ஆகிய நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் மலேசியாவில் உரிய விசா மற்றும் ஆவணங்கள் இல்லாமல் பல ஆண்டுகளாக தங்கியுள்ளதாக அவர் கூறுகிறார்.

1 comments :

Anonymous ,  May 27, 2014 at 5:23 AM  

இதெல்லாம் தேவை தானா?
இவ்வளவு காலமும் பிணங்களை, இழப்புக்களை, அவலங்களை காட்டி பணம் சம்பாதித்து பழகியவர்களுக்கு
இருப்பு கொள்ள முடியவில்லை. பிசாசுகளின் குணம் மாற மாட்டாது. இதுகளை விடக் கூடாது.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com