Thursday, January 2, 2014

தனியார் பேரூந்து மீது கல் வீச்சு!

முல்லைத்தீவிலிருந்து வவுனியா நோக்கிப் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற வவுனியா தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தில் பதிவுசெய்யப்பட்ட தனியார் பஸ் ஒன்று நேற்று பிற்பகல் 4.00 மணியளவில் இரணைமடு சந்திக்கருகில் இனந்தெரியாத சிலரின் கல்வீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

குறித்த தனயார் பேரூந்து பரந்தன் , புதுக்குடியிருப்பு ஊடாக முல்லைத்தீவிற்கான சேவையை மேற்கொண்டு இரணைமடு சந்தியை அண்மித்துக் கொண்டிருந்த போது இனந்தெரியாத நபர்களால் கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச்சம்பவம் தொடர்பாக பஸ்ஸின் சாரதி கருத்துத் தெரிவிக்கையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தம்மீது கற்பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸாரிடம் குறிப்பிடுகின்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com