Friday, January 3, 2014

இராணுவத்தினரின் பயன்பாட்டிலிருந்த 24 காணிகள் உரிமையாளரிடம் கையளிப்பு!

கிளிநொச்சியில் கடந்த காலங்களில் புலிகளின் முகாம்க ளாக இருந்து பின் கடந்த நான்கு வருடங்களாக இராணு வத்தினரின் பயன்பாட்டில் இருந்த 24 காணிகள் அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு கிளிநொச்சி யில் அமைந்துள்ள பொழுது போக்கு மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கிளிநொச்சி படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா, கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன், கரைச்சி பிரதேச செயலர் கோ.நாகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு காணி உரிமையாளர்களிடம் ஆவணங்களை கையளி த்தனர்.

அது மட்டும்லாது இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட வறியகுடும்பங்களைச் சேர்ந்த 20 பேருக்கு வாழ்வாதார உதவியாக பால் மாடுகளும் வழங்கப்பட்டன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com