Friday, January 3, 2014

யாழில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 200 மேற்பட்டோர் கைது!

யாழ் மாவட்டத்தில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இருநூற்றிப் பதினைந்து பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள தாக யாழ்ப்பாணம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எ . நிஹால் பெரரொ இன்று நடைபெற்ற ஊடகவியலா ளாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்தக்குற்றச் செயல்களில் யாழ் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் அடித்துக் காயப்படுத்திய சம்பவங்கள் சம்பந்தமாக 34 பேரும் குடிபோதையில் வாகனம் செலுத்திய 12 பேர் கத்தி வெட்டில் ஒருவர் அத்துமீறி வீட்டில் பிரவேசித்த 03 பேர் சட்டவிரோத மது விற்பனை சம்பந்தமாக 07 பேர் பொது இடத்தில் மது அருந்திய 02 பேர் சமாதானத்தை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்ட ஒருவர் சந்தேகத்தின் பெயரில் 02 பேர் பிடியானை சம்பந்தமாக 32 பேர், சந்தேகத்திற்க்கு இடமாக விதியில் நடமாடியவர்கள் நூற்றி இருபத்தியிரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள் .

இதேவேளை காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் பாரிய குற்றச் செயலகள் சம்பந்தமாக 04 பேர் சட்டவிரோதமான மது விற்பனை செய்த 02 பேர் பிடியானை பிறப்பிக்கப்பட்ட 11 பேர் சந்தேகத்தின் பெயரில் 11பேர் குடிபோதையில் வாகனம் செலுத்திய 06 பேர் மற்றும் ஏனையகுற்றங்கள் சம்பந்தமாக 93 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com