Friday, November 29, 2013

பௌத்த சாசனத்தை பாதுகாக்க வேண்டும்!– சஜித் பிரேமதாச

பௌத்த சாசனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமேன ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
விகாரைகளை அமைக்க அரசாங்கம் நிதியில்லை எனக் கூறினால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

எனது தந்தையின் ஆட்சிக் காலத்தில் பௌத்த சாசன நிதியொன்று ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

மக்களை நலனைக் கருத்திற் கொண்டு அரசாங்கம் ஆட்சி நடாத்தவில்லை.

அம்பாந்தோட்டையில் கோடிக் கணக்கான ரூபா செலவில் துறைமுகம் அமைக்கப்பட்டது. எனினும், இந்தத் துறைமுகத்திற்கு கப்பல்கள் வருவதில்லை.

இந்தத் துறைமுகத்தின் ஊடாக எவருக்கும் தொழில் வாய்ப்புக்களும் கிடைக்கவில்லை.

தரகுப் பணம் கிடைக்காமல் விடும் என்ற காரணத்தினால் பல நல்ல திட்டங்களை ஆட்சியாளர்கள் முன்னெடுப்பதில்லை என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பாணந்துறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com