Sunday, October 6, 2013

மதுவுக்கு முற்றுப்புள்ளி – மஹிந்த! மாணவருக்கு ஹெரோயின் – மகிந்தவின் எம்பிக்கள்!

மஹிந்த சிந்தனை மது அற்ற சமூகத்தை ஏற்படுத்த முயல்கின்றது. ஆனால், அரசாங்க எம்பிக்களோ சட்டத்தை மிதக்கவிட்டுவிட்டு ஹெரோயினையும் எத்தனோலையும் இறக்குமதி செய்கின்றனர் என்று ஐதேக எம்.பி. ரவி கருணாநாயக்க நேற்று கொழும்பில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார். எனினும் சம்பந்தப்பட்ட எம்பிக்களின் பெயரை வெளியிட மறுத்து விட்டார்.

பெருந்தொகையாக கொண்டு வரப்படும் இந்த ஆபத்தான பொருட்கள் இளைஞர்களுக்கு விற்பனை செய்யப்படுவதற்காகவே இறக்குமதி செய்யப்படுகின்றன. சட்ட முரணாகக் கொண்டு வரப்பட்ட சில கெண்டயினர்கள் அண்மையில் சுங்கப் பகுதியில் பிடி பட்டுள்ளன. விசாரணை நடைபெறுகின்றது. பொது மக்கள் விசாரணை முடிவை அறிய ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால், குற்றவாளிகளான ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் தப்பித்துக் கொண்டால் ஆச்சரியப்ப வேண்டியதில்லை என்று கருணாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com